கொரோனாவுக்கு தொடரும் பலி! 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
 
அதன்படி, தமிழகத்தில் இன்று 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 39 ஆயிரத்து 866 ஆக அதிகரித்துள்ளது.
 
சென்னையில் மட்டும் 145 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
தமிழகத்தில் தற்போது 4, 494 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 533 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 23 ஆயிரத்து 001 ஆக உயர்ந்துள்ளது.
 
ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 371 ஆக அதிகரித்துள்ளது.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here