தங்கம் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 8,770 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 25 ரூபாய் உயர்ந்து 8,770 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 200 ரூபாய் உயர்ந்து 70 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையும் இன்று கிராமிற்கு 2 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்று 108 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி, இன்று 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை தங்​கம் மற்​றும் வைர நகை வியா​பாரி​கள் சங்​கப் பொதுச்​செய​லா​ளர் எஸ்​.​சாந்​தகு​மார் கூறும்​போது:

“இறக்​கும​திப் பொருட்​களுக்கு அமெரிக்க அரசு அதிக வரி விதித்​தது, அமெரிக்கா – சீனா இடையே​யான வர்த்​தகப் போர் ஆகிய​வற்​றால் பங்​குச்​சந்தை சரிவடைந்​துள்​ளது. இதனால், முதலீட்​டாளர்​கள் பார்வை தங்​கத்​தின் மீது திரும்​பி​யுள்​ளது. எனவே, சர்​வ​தேச சந்​தை​யில் தங்​கத்​தின் விலை தொடர்ந்து உயர்​கிறது. இதன் தாக்​கத்​தால் இந்​தி​யா​விலும் தங்​கம் விலை உயர்​கிறது​” என்​றார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here