சி இயக்கத்தில் ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்’ மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில், விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷான், சக்தி, பாடினி குமார், காவ்யா அனில், கருணாஸ், லிஜோமோல் ஜோஸ், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனீஷ்காந்த், ஜென்சன் திவாகர், பக்ஸ், வினோதினி வைத்தியநாதன், தாமரைச் செல்வி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம்  ‘நூறு சாமி ‘

விமர்சனம்: 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டாரத்தில் உள்ளது வலையம்பட்டு கிராமம். கிராமப்புற பின்னணியில் வாழும் செல்வி என்ற பெண், தனது இரு மகன்களையும் வளர்ப்பதற்காக தனது வாழ்க்கை ஆசைகளையே தியாகம் செய்கிறார். ஆண்டுகள் கடந்த பிறகு, அவருடைய வாழ்க்கைக்கு மீண்டும் ஒரு புதிய அர்த்தம் கிடைக்க வேண்டுமென்ற எண்ணம் உருவாகிறது. ஆனால் குடும்பம், உறவினர்கள் மற்றும் சமூகத்தின் எதிர்ப்புகள் அவரை சோதிக்கின்றன. அந்த சூழலில் ஒரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பம் வெற்றிபெறுகிறதா? என்பதே கதை…

விஜய் ஆண்டனி வழக்கமான ஹீரோ பாணியை தவிர்த்து அமைதியான கதாபாத்திரத்தில் தோன்றி கதைக்கு தேவையான ஆதாரமாக இருக்கிறார். கதையின் உணர்ச்சி அம்சங்களை தாங்கிச் செல்லும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுவாசிகா, பல காட்சிகளில் தனது இயல்பான நடிப்பால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறார். குறிப்பாக குடும்ப பாசம் மற்றும் மனவேதனைகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் அவரது நடிப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.

செல்வியின் மூத்த மகன் பாஸ்கராக அஜய் திஷானும், இளைய மகன் விவேக்காக சக்தியும் நடித்திருக்கிறார்கள். இருவருமே அவரவர் கதாபாத்திரத்தை நிறைவாய் செய்திருக்கிறார்கள். மூத்த மகனுக்கு உரிய பொறுப்பு, இளைய மகனுக்கு உரிய துடிப்பு என இருவரது கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

கதாநாயகன் என்ற லேபிள் இல்லாமல், கதைக்குள் ஒரு கதாபாத்திரமாக, விவசாயி ஏழுமலையாக, படத்தின் இரண்டாம் பாதியில் வருகிறார் விஜய் ஆண்டனி. இப்படியொரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்க முன் வந்ததற்காகவே அவரைப் பாராட்டலாம். கொஞ்சம் அப்பாவித்தனமும், நிறைய நல்ல குணங்களும் கொண்ட கிராமத்து மனிதனாக இயல்பாக நடித்து தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.

இயக்குநர் சசி, குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் மனிதர்களின் மனநிலைகளையும் மிகைப்படுத்தாமல் இயல்பாக சொல்ல முயற்சித்திருக்கிறார். கதையின் மையக் கருத்தை வணிக அம்சங்களுக்காக சமரசம் செய்யாமல் எடுத்துச் சென்றிருப்பது பாராட்டுக்குரியது.

மைனஸ்:  கதை மெதுவாக செல்கிறது…. கருத்தை இன்னும் தெளிவாக சொல்லியிருக்கலாம் ….

மொத்தத்தில் இந்த ‘நூறு சாமி’ பாசக்கார சாமி.    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here