1970 களில் நடக்கும் ஒரு மலைகிராமத்தில் நடக்கும் கதையாக படம் தொடங்குகிறது. படிப்பில்லாத தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், ஓர் அஞ்சல் நிலையம், ஒரு காவல்நிலையம் என்றிருக்கும் அந்த ஊருக்கு மாற்றலாகி வருகிறார் காவல்துறை ஆய்வாளர் இசக்கி கார்வண்ணன். ஒரு வழக்குகூட வராத அந்த காவல்நிலையத்துக்கு இந்த ஆய்வாளர் வந்த நேரத்தில் ஒரு கொலைவழக்கு வருகிறது.
அந்த ஊருக்கு பள்ளிக்கூடம் வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று அங்கு ஆசிரியராக பிரவீன் பழனிசாமி கொலை செய்யப்படுகிறார். கொலை வழக்கை விசாரிக்க தொடங்கும் இசக்கி கார்வண்ணன், பெண்களுக்கு எதிராக குற்றம் செய்பவர்களை முகமூடி அணிந்த ஐந்து பேர் கொண்ட குழு கொடூரமாக கொலை செய்து வருவதை கண்டுபிடிக்கிறார். அவரைக் கொன்றது யார்? என்கிற விசாரணையில் விரிகிறது படம்.
காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் இசக்கி கார்வண்ணன்,அந்த வேடத்துக்குரிய கம்பீரம் காட்ட முயன்றிருக்கிறார். என்கவுண்டர் சிறப்பு காவலராக சுட்டு தள்ளுகிறார். அபிநட்சத்திரா வேடமும் அவருடைய நடிப்பும் நன்று.சிறுவர்களுக்குப் பாடம் சொல்லித் தரும் நேரமும் ஆசிரியரிடம் சீறும் காட்சியும் சிறப்பு. படத்தில் பாடல்கள் இல்லை.
பின்னணி இசை ஓகே தான். நகைச்சுவைக்கென இருக்கும் காதல் சுகுமார்,அஞ்சல்காரர் சௌந்தர்,பள்ளி ஆசிரியர் பிரவீன் பழனிசாமி,காவலராக வரும் செல்வகுமார் ஆகியோரும் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களுக்குப் பொருந்தியிருக்கிறார்கள்.
மைனஸ்: சஸ்பென்ஸ் காட்சிகள் யூகிக்கக்கூடிய அளவில் இருந்தது…. மண் வாசனை சார்ந்த பாடல்களை வைத்திருக்கலாம்……
மொத்தத்தில் இந்த ‘ஆட்டி’ பெண்கள் விழிப்புணர்வு.

















