ஸ்​வின் கந்​த​சாமி இயக்​கி​யுள்ள ‘டபுள் ஆக்குபன்சி’ படத்​தில் சந்தோஷ், சம்​யுக்தா விஸ்​வ​நாத், ரேஷ்மா வெங்​கடேஷ், வினோத் கிஷண் உள்பட பலர் நடித்​துள்​ளனர். அவ்னி மூவீஸ் மற்​றும் பென்ஸ் மீடியா இணைந்து தயாரித்​துள்ள இப்​படம் கடந்த வாரம் வெளி​யானது.

இப்​படம் வரவேற்​பைப் பெற்​றதை அடுத்து வெற்றி விழா சென்னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினருடன் கிரியேட்​டிவ் தயாரிப்​பாளர் அனந்​திதா சுந்​தரும் கலந்​து​கொண்​டார். இயக்குநர் அஸ்​வின் கந்​த​சாமி கூறும்​போது, “இதில் நடித்​தவர்​கள் அர்ப்​பணிப்​புடன் சிறந்த நடிப்பை வழங்​கி​யுள்​ளனர்.

ரொமான்ஸ் காட்​சிகளில் சந்​தோஷின் நடிப்பு பாராட்​டப்​பட்​டது. சம்​யுக்தா விஸ்​வ​நாதனின் நடிப்​பு, படத்​தின் உணர்ச்சிப்பூர்வமான உச்​சக்​கட்​டக் காட்​சியை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்​றது. படத்​தில் நடித்த அனை​வரை​யும் நான் அதி​கம் சிரமப்​படுத்தி இருக்​கலாம். இருந்​தா​லும் முழு அர்ப்பணிப்​புடன் பணி​யாற்​றினர்.

இந்த வெற்றி அவர்​களுக்​கானது. ஒரு பார்​வை​யாளரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்​தது. கடும் மன அழுத்​தத்​தில் இருந்த அவர், தற்​செய​லாக இப்​படத்​தைப் பார்த்​த​தாக​வும், நீண்ட நாட்​களுக்​குப் பிறகு மனம்விட்டு சிரித்து மகிழ்ந்​த​தாக​வும் கூறி​னார். ஒரு படைப்​பாளி​யாக எனக்கு அதை​விடப் பெரிய வெற்றி எது​வும் இல்லை” என்​றார்.

படத்தின் தயாரிப்பாளர் நடிகை குஷ்பு பேசுகையில்:

என் மூத்த மகள் திருமண வேலைகளில் தீவரமாக இருக்கிறேன். என் கணவர் சுந்தர் சி. “புருஷன் பட வேலை, திருமண வேலைகளில் சுற்றி வருகிறார். அவராலும் இந்த விழாவுக்கு வர முடியவில்லை. என் இளைய மகள் இந்த பட வேலைகளை சரியாக செய்தார். அவந்திகாவை அனி என செல்லமாக அழைப்பார்கள். நான் பொம்மை என்பேன். என் பொம்மைக்கு வாழ்த்துகள். இந்த பட வேலைகளில் சிக்கல், பிரச்னை இருந்தது. அதை மீறி ஜெயித்தார். என் மூத்த மகள் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அடுத்து நாலு படங்களில் நடிக்கப்போகிறார். முன்பு ஒரு ஹீரோயின் காதல், திருமணம் என்பதை சொல்ல பதறுவார்கள். இப்போது எல்லாம் மாறிவிட்டது. ஒரு சின்ன படம் இந்தளவு வந்தது மகிழ்ச்சி. நாம் தயாரிக்கும் படம் மக்களை மகிழ்விக்கணும் அவர்கள் கொடுக்கும். பணத்துக்கு தகுந்ததாக இருக்கணும் என்று சுந்தர் சி சொல்வார். அதை நாங்கள் தொடர்வோம்” எனப் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here