சென்னை தண்​டை​யார்​பேட்டை நேரு நகர் 11-வது தெருவை சேர்ந்​தவர் பிரபல ரவுடி பங்​காரு என்கிற அருண் (21). சி கேட்​டகிரி ரவுடி​யும் சரித்​திர பதிவேடு குற்​ற​வாளி​யு​மான அருண் மீது கொருக்​குப்​பேட்​டை, தண்​டை​யார்​பேட்டை உள்​ளிட்ட பல்​வேறு காவல் நிலை​யங்​களில் கொலை, கொலை முயற்​சி, அடிதடி உட்பட 10-க்கும் மேற்​பட்ட குற்ற வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளது.

கடந்த 6 மாதங்​களுக்கு முன்பு ரவுடி அருண் கொடுங்​கையூர் எழில் நகர் 9-வது தெரு​வில் உள்ள குடிசை மாற்று வாரிய குடி​யிருப்​பில் தாயுடன் குடியேறி​னார். இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் இரவு சுமார் 10 மணி​யள​வில் ரவுடி அருண் தனது காதலி தர்​ஷினி உடன் வீட்​டில் பேசிக் கொண்​டிருந்​தார்.

அப்​போது இருசக்கர வாக​னத்​தில் வந்த 6 பேர் கொண்ட கும்​பல் வீட்​டினுள் புகுந்து அருணை காதலி கண்​முன்னே வெட்டி கொலை செய்து விட்டு தப்​பிச் சென்​றனர். இதில் ரவுடி அருண் ரத்த வெள்​ளத்​தில் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார்.‌ இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காதலி தர்​ஷினி கதறி அழுததைப் பார்த்த அக்​கம் பக்​கத்​தினர் ஓடிவந்து அருணை மீட்டு ஸ்டான்லி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

இந்த சம்​பவம் குறித்து தகவல் அறிந்த கொடுங்​கையூர் போலீஸார் மருத்​து​வ​மனைக்கு விரைந்து சென்று கொலை​யான ரவுடி அருண் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர்.‌ ரவுடி அருண் கொலைக்​கான காரணம் என்ன, அவரை கொலை செய்தவர்கள் யார், முன்விரோதம் காரண​மாக இந்த கொலை நடை​பெற்​றதா என பல கோணங்​களில் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். மேலும் கொலை செய்த 6 பேர் கொண்ட கும்​பலை போலீ​ஸார் தீவிர​மாக தேடி வரு​கின்​றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here