தூத்துக்குடி:

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா மற்றும் ஆலோசனை கூட்டம் தற்காலிக கட்சி அலுவலகத்தில் வைத்து நடந்தது. இக்கூட்டத்திற்கு பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் வக்கீல் சகாயராஜ் தலைமை வைத்தார். தமிழ்நாடு நாடார் பேரவையின் மாவட்ட செயலாளர் எஸ். பி மாரியப்பன் மாவட்ட தலைவர் எம். எஸ். டி ரவி சேகர் மாவட்ட பொருளாளர் மில்லை தேவராஜ் ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வருகிற 15ஆம் தேதி காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் என். ஆர். டி தனபாலன் தூத்துக்குடிக்கு வருகிறார். அது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் காமராஜர் பிறந்த நாளில் தூத்துக்குடிக்கு வருகை தரும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் என். ஆர்.டி. தனபாலன் அவர்களுக்கு தமிழ்நாடு நாடார் பேரவை பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கவும். பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவைக்கும் கட்சி அலுவலகம் வேண்டும் என்று தலைவர் அவர்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழகத்தில் கல் விற்பனையை அரசு சொசைட்டி மூலம் விற்பனை செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்றும் பதநீர் விற்பனை செய்யும் நபர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யக்கூடாது என்றும். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை விரட்ட வேண்டும் .

13 பேர்களின் உயிர்களைப் பலி வாங்கிய ஸ்டெர்லைட் மக்களுக்கு கேடு விளைவிக்கும் நாசக்கார ஸ்டெர்லைட்டை பெருந்தலைவர் மக்கள் கட்சி எதிர்க்கிறது. மேலும் விமான நிலையத்திற்கு கல்விக் கண்களைத் திறந்த காமராஜருடைய பெயர் சூட்ட வேண்டும் என்று கூட்டத்தில் ஒரு மனதாக உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் பொன்ரத்தினம், மாவட்ட அமைப்பு செயலாளர் ரமேஷ் பாபு, மாவட்ட பிரதிநிதி சசி, தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சப்தம், மாவட்ட மாணவரணி செயலாளர் அருண்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் மகேந்திரன், தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராஜ், மற்றும் நிர்வாகிகள் சாதிக், சசிகுமார், ஆகியோர்கள் கலந்து கொண்டனர். கூட்டத் திற்கான ஏற்பாடுகளை பெருந்தலைவர் மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வக்கீல் சகாயராஜ் செய்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here