‘கலா பவஸ்ரீ கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில், ஜி.வி.எஸ் ராஜு தயாரிப்பில், இயக்குனர் அவினாஷ் பிரகாஷ் எழுதி இயக்கியிருப்பதோடு, ஒளிப்பதிவினையும் செய்திருக்கும் படம் தான் ‘நாங்கள்’
விமர்சனம்:
ஊட்டியில் தனியார் பள்ளி நடத்தி வருபவரான அப்துல் ரபே, கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்கிறார். அப்துல் ரபே வுக்கு கார்த்திக், கெளதம், துருவ் என மூன்று மகன்கள் இருக்கிறார்கள். தந்தையின் மிரட்டலுக்கு பயந்து வேலையாட்கள் போல நடந்து கொள்ளும் குழந்தைகள், ஒருகட்டத்தில் வெகுண்டு எழுகிறார்கள். கேரளாவில் உள்ள தாய் பிரார்த்தனாவிடம் செல்கிறார்கள். ஆனால் தாயின் கஷ்டத்தை உணர்ந்து மீண்டும் தந்தையிடம் திரும்புகிறார்கள். மகன்களின் எதிர்காலத்துக்காக சில முடிவுகளை தைரியமாக அப்துல் ரபே எடுக்கும்போது பிரார்த்தனா வந்து சேருகிறார். பிறகு அப்துல் ரபே என்ன செய்தார் என்பதே கதை…
கண்டிப்பான, மகன்களை அடிக்கும், மிரட்டும் தந்தையாக அப்துல் ரபே நடிப்பு மிரட்டுகிறது. மிதுன், ரித்திக், நிதின் ஆகியோரின் அப்பாவித்தனமான நடிப்பு எதார்த்தமாக இருக்கிறது. சோகமான காட்சிகளை மட்டும் கருப்பு-வெள்ளையில் காட்டி அவினாஷ் பிரகாஷ் ஒளிப்பதிவில் புதுமை செய்துள்ளார். பின்னணி இசை ஓகே. வளர்க்கும் நாயை அப்துல் ரபே அடிக்கும் போது சிறுவன் தந்தையிடம் கோபம் கொள்ளும் காட்சி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறது.
கதை ஒரே குழப்பமாக இருக்கிறது…. பல காட்சிகள் பொறுமையை சோதிக்கிறது…. இருட்டு வீடு ஏன்? என்று சிந்திக்க வைக்கிறது….
மொத்தத்தில் இந்த ‘நாங்கள்’ பொறுமை இருந்தால் பார்க்கலாம்.
RAJ KUMAR- CINEMA REPORTER