சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் Y.G. மகேந்திரன், சுஹாசினி, மணிரத்தினம், சத்யராஜ், தலைவாசல் விஜய், சமுத்திரகனி,ராஜ் ஐயப்பன், ரம்யா பாண்டியன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சாருகேசி’

விமர்சனம்:

கதையின் நாயகனான ஓய் ஜி மகேந்திரா ஒரு பெரும் இசைப்பாடகர். அவருக்கு திடீரென அல்சைமர் எனும் மறதிநோய் ஏற்படுகிறது. அவரது மகனுக்கு ஓய் ஜி மகேந்திரா மீது பெரிய மரியாதை ஏதுமில்லை. ரம்யா பாண்டியனை காதலிக்கும் அவருக்கு கதையில் ஒரு இருக்கிறது. மேலும் அவருக்கும் ஓய் ஜி மகேந்திராவிற்கும் உள்ள பந்தத்தில் ஒரு ட்விஸ்டும் உண்டு. இச்சூழலில் அல்சைமர் நோயிலிருக்கும் ஓய் ஜி மகேந்திரா வாழ்வை பிறர் வாயிலாக நாம் அறிய முடிகிறது. முடிவில் நோய்மையிலிருந்து ஓய் ஜி மகேந்திரா மீண்டாரா? இல்லையா? என்பதே கதை..

ஓய் ஜி மகேந்திரா தனது தேர்ந்த அனுபவத்தை நடிப்பில் வார்த்துள்ளார். “வந்து போவதே நம் வேலை..வழி நடத்துவது அவன் லீலை” என்ற வரிகளை அவர் பாடுகையில் நமது ஜீவன் உருகிப்போய்விடுகிறது. சத்யராஜ் தனது அனுபவமிக்க நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளார். சுஹாசினி, தலைவாசல் விஜய், ராஜ் ஐயப்பன், ரம்யா பாண்டியன் ஆகியோர் தங்களது பாத்திரங்களை நேர்த்தியாக கையாள்ந்துள்ளனர்.

சிறப்பு தோற்றங்களில் வரும் சமுத்திரக்கனி, மதுவந்தி, ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் பங்களிப்பும் கதைக்கு வலுசேர்க்கிறது. தேவா நிச்சயமாக இப்படத்தில் தேனிசையை தந்துள்ளார். பா.விஜய் பாடல், வசனம் ரசிக்க வைக்கிறது.

மைனஸ்: சுரேஷ் கிருஷ்ணா கதை எழுதும் போது இன்னும் இந்த காலகட்டத்திற்கு ஏற்பே மைய கருத்தை சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

மொத்தத்தில் இந்த ‘சாருகேசி’ உயிருள்ள இசை வடிவம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here