சிதம்பரம் இயக்கத்தில் வெங்கட் கே. நாராயணா (KVN Productions) & ஷைலஜா தேசாய் ஃபென் (Thespian Films) தயாரிப்பில் ஃபர்ஸானா பலத்திங்கல், ஆதிஷேஷன், சினான், ஜீன் பால் லால், கிரிஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் ‘பாலன்’
விமர்சனம்:
படத்தின் ஆரம்பத்திலேயே நாயகி பர்சானா ஜெயிலில் இருந்து ரிலிஸ் ஆகிறார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார், இருவரும் வேலை தேடி தங்கள் அடையாளங்களை அழித்துக்கொண்டு ஒவ்வொரு இடமாக வேலைக்கு செல்கின்றனர். அப்படி செல்லும் இடமெல்லாம் பிரச்சனைகள் வர, வேறு வேறு இடம் என செல்கின்றனர். ஒரு வழியாக ஒரு பாட்டி ஒருவரை பார்த்துக்கொள்ளும் வேலை வருகிறது. பாட்டியின் மகன் வெளியூரில் இருக்க இவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. தன் மகனையும் பள்ளிக்கு அனுப்பி சில காலம் சந்தோஷமாக வாழ, அவரை தேடி ஒரு ஆபத்து மீண்டும் வர, அதே நேரத்தில் பாட்டியும் இறக்கிறார். அதன் பின் அந்த ஆபத்து என்ன ஆனது, நாயகி பர்சானா யார், அவருக்கு பின்னால் இருக்கும் மர்மம் என்ன? என்பதே கதை……
பெயரை மாற்றி மாற்றி ஊர் ஊராக சுற்றும் நாயகி பர்சானா எந்த ஒரு கலக்கமும் இல்லாமல் அவர் பேசும் பொய்கள் நடிப்பில் மிரட்டல், அட அவுங்க பெரியவங்க சொல்றத கேட்டு நடிப்பார்கள் என சொல்லலாம், பர்சனா மகனாக நடித்துள்ள சிறுவன் அவனும் அந்த பொய்களை உள்வாங்கி கொண்டு மற்றவர்களிடம் கொடுக்கும் ரியாக்ஸன் வார்த்தைகள் இல்லை விவரிக்க, சூப்பர்டா தம்பி. முதல் பாதியில் இருந்த மர்மம், பதட்டம் இரண்டாம் பாதியில் அப்படியே வேறு திசைக்கு கதை செல்ல, பல இடங்களில் ஒரு சிலருக்கு பொறுமையை சோதிக்கும், அப்படியிருந்தும் அந்த கிளைமேக்ஸ் டுவிஸ்ட் அட சொல்ல வைத்துவிடுகிறது. டெக்னிக்கலாக படத்தின் இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் டால் லெவல் தான்.
மைனஸ்: எடிட்டிங் பணியில் கூடுதல் கவனம் தேவை…
மொத்தத்தில் இந்த ‘பாலன்’ சிறந்த நடிப்பு சிறுவன்.

















