டென்னிஸ் மஞ்சுநாத் அவர்களின் இயக்கத்தில் செல்வராகவன், குஷி ரவி, ஆர் எஸ் சதீஷ், கெளசல்யா, மைம் கோபி, ஒய் ஜி மகேந்திரன், லிர்திகா, சேலம் தீபக் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “மனிதன் தெய்வமாகலாம்”.
விமர்சனம்:
சிறையில் தூக்கு தண்டனை கைதியாக இருக்கும் செல்வராகவனை காப்பாற்ற முயற்சிக்கும் எம்எல்ஏ ஒய்.ஜி.மகேந்திரன், அவரது முன்கதையை கேட்கிறார். பொன்வயல் கிராமத்தில் மனைவி குஷி ரவியுடன் எளிய வாழ்க்கை மேற்கொண்டு வருகிறார், செல்வராகவன். அவரது அக்கா கவுசல்யாவுக்கு அடாவடி ஆசாமி மைம் கோபி வட்டி பணம் கேட்டு குடைச்சல் கொடுக்க, கவுசல்யாவுக்கு உதவ சென்ற குஷி ரவியின் வாழ்க்கையில் மைம் கோபி விளையாட, சாதுவாக இருந்த செல்வராகவன் கையில் கத்தி எடுக்கிறார். பிறகு என்ன நடக்கிறது? தூக்கு தண்டனையில் இருந்து செல்வராகவன் தப்பித்தாரா? என்பது மீதி கதை….
கதைக்கான நாயகனாக செல்வராகவன் வாழ்ந்திருப்பது மகிழ்ச்சி. நாயகி குஷி ரவி கதைக்கு ஏற்ற நாயகியாக பொருந்தியிருந்தார். கெளசல்யாவின் கதாபாத்திரமும் வலுவானது தான். அதையும் சரியாகவே கையாண்டிருக்கிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த சதீஷும் இயல்பான நடிப்பைக் கொடுத்திருந்தார்.கே.ரவிவர்மாவின் ஒளிப்பதிவும், ஏ.கே.பிரியனின் பின்னணி இசையும் காட்சிகளை நகர்த்த உதவி செய்துள்ளன.
மைனஸ்: கதை பெரிய அளவில் ஈர்க்கவில்லை…. ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் தேவை….
‘மனிதன் தெய்வமாகலாம்’- தலைப்பு உண்மை, ஆனால் கதை சோர்வு.

















