சென்னையில் நேற்று மதியம் பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. இதனால் இன்று சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து நேற்றே அறிவித்தனர். தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது அடுத்த 06 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
அதன்பிறகு, இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 16 ஆம் தேதி ஆந்திரப் பிரதேச கடற்கரையில் மேற்கு மத்திய வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதைத் தொடர்ந்து, இது வடகிழக்கு திசையில் திரும்பி, நவம்பர் 17 ஆம் தேதி ஒடிசா கடற்கரையில் வடமேற்கு வங்காள விரிகுடாவை அடையும். இதனால் தமிழகத்திற்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.