தமிழகத்தில் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித்  பஞ்சாப் மாநிலத்தில் நிரந்தர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் புதிய ஆளுநராக நாகலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநில ஆளுநரும், சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் இருந்து வந்த வி.பி.சிங் பட்னோரின் பதவிக்காலம் கடந்த மாதம் 20ம் தேதியுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து பஞ்சாப் மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டார். அத்துடன் சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் நிரந்தர ஆளுநராக பன்வாரிலால் புரோகித்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.  தமிழகத்தின் புதிய ஆளுநராக நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆர்.என்.ரவி. வகித்து வந்த நாகாலாந்து ஆளுநர் பணியினை அசாம் மாநில ஆளுநர்  ஜெக்தீஷ் முகி கூடுதலாக கவனிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here