தமிழக முன்னாள் அமைச்சரும், அதிமுக நிர்வாகியுமான சி.விஜயபாஸ்கர் வீட்டில் வியாழக்கிழமை காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்புடைய வழக்கில் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது தடையை மீறி குட்கா விற்க லஞ்சம் பெற்ற வழக்கில் ஏற்கெனவே விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

மேலும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கடந்த காலங்களில் அவரது வீடுகளில் சோதனை செய்து பல்வேறு ஆவணங்களை கைப்பற்றிய வருமான வரித்துறையினர், அவரது சொத்துகளையும் முடக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here