சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வடக்கு ஒன்றிய திமுக மாவட்ட பிரதிநிதி ஆனையடி வயலை சேர்ந்த வெள்ளையன் என்ற சுப்பிரமணியன் வயது 45. இவர் தேவகோட்டை பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில்களை விற்பனை செய்ததற்காக நேற்று காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.