ஹீரோ பவிஷ் படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றிவிட்டு துபாய் தப்பி செல்வதாக போலிஸ் ஆபிசர் செல்வராகவன் பவிஷை கைது செய்து வைக்க, அங்க வந்த மாதர் சங்கம் பவிஷுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என போராட, பவிஷ் தன் கதையை செல்வராகவனிடம் சொல்கிறார்.
பவிஷ், நாக துர்காவை பார்த்துவுடன் காதல் அவருகாக என்ன வேண்டும்னாலும் செய்யலாம் என காதலித்து வருகிறார். நாக துர்காவோ பவிஷ் தகுதிக்கு மீறி செலவு வைக்கிறார். அவரும் கடன் வாங்கி தன் ஆசை காதலிகாக செலவு செய்கிறார். கடன்காரராகவும் மாறுகிறார்.
ஒரு கட்டத்தில் நாக துர்கா ஒரு சில காரணத்தால் உடனே திருமணம் செய்ய வேண்டும் என சொல்ல, அதற்குள் நாக துர்கா அம்மா வந்து பவிஷ் ஒரு கடன்காரர் இவர் எப்படி என் பெண்ணை பார்த்துகொள்வார் என பவிஷ் அப்பா கே எஸ் ரவிகுமார் போலிஸ் ஸ்டேஷனில் எல்லோர் முன்னிலையும் அசிங்கப்படுத்துகிறார்.
இதனால் மனமுடைந்து கே எஸ் ரவிகுமார் மற்றும் குடும்பமே பவிஷ் மீது கோபம் கொள்ள, அதே நேரத்தில் பவிஷ் வேலையும் போக, காதலால் தன் வாழ்க்கை சந்தோஷம் எல்லாம் போக, பவிஷ் வாழ்க்கை என்ன ஆனது, இவர்கள் காதல் என்ன ஆனது என்பதே மீதிக்கதை….
பவீஷ், நாக துர்கா என இருவரும் கதாபாத்திரத்திற்கு தங்களால் முடிந்த அளவுக்கு நியாயம் சேர்த்துள்ளார்கள். காதலிக்காக பர்ஸ் முழுவதும் கரைந்து, குடும்பம் சமூகம் என அசிங்கப்பட்டு அதிலிருந்து அவர் நாக துர்காவுக்கு போடும் கண்டிஷன் அப்போது அவர் செய்யும் சேட்டை என இந்த ஜென் தனுஷாகவே கண்முன் ஜொலிக்கிறார், சிறப்பாகவும் செய்துள்ளார்.
இந்த படம் காதல் மோதல் பிரிவு அதை தொடர்ந்து ஒரு ரிவெண்ச் என்பது போல் செல்கிறது, அதில் ஒரு சில இடங்கள் ரசிக்க வைத்தாலும் பல இடங்கள் சோதிக்கிறது தான். எந்த காலத்தில் இருக்கிறோம், இன்னும் பசங்களா காதலுகாக செலவு பண்றாங்க, பொண்ணுங்க செலவு வைக்கிறாங்க என்பது போல் 90ஸ் சினிமா வசனங்கள் வந்தால் பரவாயில்லை காட்சிகளும் அப்படியே உள்ளது.
மைனஸ்: கிளைமேக்ஸ் பெரிய அளவில் இல்லை…. கதை மனதை தொடும் அளவில் இல்லை…
மொத்தத்தில் இந்த ‘லவ் ஓ லவ்’ குழப்பமான காதல்.

















