பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகரில் செயல்பட்டு வந்த மனநல காப்பகத்தில் 22 வயது இளைஞர் வருண் கான் என்பவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 பேர்...
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வந்த நிலையில் தற்போது அது பூதாகரமாக வெடித்துள்ளது. அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராமதாஸ்,...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லல் இந்திராநகரைச் சேர்ந்தவர் பாக்கியம் (55). இவர் நேற்று (மே 30) காலை அப்பகுதியில் உள்ள தேசிய வங்கியில் ரூ.2.06 லட்சம் எடுத்தார். தொடர்ந்து அருகேயுள்ள உறவினர்...
சென்னை:
நிர்மல் சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் வி.கே. புரொடக்ஷன்ஸ் வழங்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தை வ. கெளதமன் இயக்கி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷ்குமாரும் பின்னணி இசைக்கு சாம்...
சென்னை:
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சு எழுத்து, தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டமான படைப்பான ‘கண்ணப்பா’ இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார், சரத்குமார் உள்ளிட்ட இந்தியா சினிமாவின்முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் இப்படத்தை முகேஷ் குமார் சிங் இயக்கியிருக்கிறார்.
வரும் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கண்ணப்பா’ திரைப்படத்தின்பிரத்யேக காட்சிகள் பத்திரிகையாளர்களுக்கு திரையிடும் நிகழ்வு இன்று (மே 30) சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், விஷ்ணு மஞ்சு, மதுபாலா, இயக்குநர் முகேஷ் குமார் சிங், படத்தொகுப்பாளர் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.
கண்ணப்பா படத்தின் பிரேத்யக காட்சிகளை பார்த்த பத்திரிகையாளர்கள் நடிகர் விஷ்ணு மஞ்சு உள்ளிட்ட படக்குழுவை வெகுவாக பாராட்டினார்கள். குறிப்பாக, நியூசிலாந்தில் படமாக்கப்பட்ட காட்சிகள், மிக பிரமாண்டமாக இருப்பதோடு, இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படத்திலும் காட்டாத லொக்கேஷன்களாக இருக்கிறது. முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் கதை சொல்லாமல், இதுபோன்ற லொக்கேஷன்களில் காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பது, நிச்சயம் ரசிகர்களை கவரும், என்று பத்திரிகையாளர்கள் பாராட்டினார்கள்.
நிகழ்ச்சியில் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேசுகையில்:
“அனைவருக்கும் வணக்கம், இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஷெல்டன், அவர் அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறார். நான் இரண்டாவது யூனிட்டாக பணியாற்றியிருக்கேன். ஏன் என்றால், என் சகோதரர் விஷ்ணுவுக்காக தான். அவர் தான் என்னை தெலுங்கு சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினார். அவருடைய ஐந்து படங்களுக்கு நான் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கேன், அவருக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன். ஷெல்டனுக்காக நான் பேசுகிறேன், அவர் நம்ம பணிக்கு ஏற்றபடி உடனடியாக மாறிவிட்டார். மிக வேகமாக வேலை செய்யக்கூடியவர். இப்படி ஒரு படத்தை விரைவாக முடிக்க முடிந்தது என்றால் அது ஷெல்டனால் தான், அவருக்கு என் வாழ்த்துகள். விஷ்ணு சார் இந்த படத்தின் மூலம் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். ஒரு நடிகராக மட்டும் இன்றி கதையாசிரியராகவும் அவர் அவதாரம் எடுத்திருக்கிறார், அவர் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இயக்குநர் முகேஷ் குமார் சிங்கிற்கு என் வாழ்த்துகள். நன்றி.” என்றார்.
படத்தொகுப்பாளர் ஆண்டனி பேசுகையில்:
“என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தை என்னிடம் ஒப்படைத்ததற்கு விஷ்ணு சாருக்கு நன்றி. முகேஷ் சாரும், விஷ்ணு சாரும் என் மீது நம்பிக்கை வைத்து என்னை தனி அறையில் விட்டுவிட்டார்கள். படத்தின் ரஸ் அனைத்தையும் கொடுத்து பணியாற்ற சொன்னார்கள், அந்த ரஸ் ஒரு படத்தோடது அல்ல, ஆறு படத்தோடது. மிக கஷ்ட்டமான பணியாக இருந்தது. ரொம்பவே நொந்து போயிட்டேன். ஆனால், படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மோகன் பாபு சாருக்கு நன்றி. இந்த படத்தின் மூலம் ஒரு குடும்பம் கிடைத்தது போல் இருக்கிறது. இந்த படம் பிரமாண்டமான படமாக இருக்கும் என்று எனக்கு தெரியும், உங்களுக்கு 27 ஆம் தேதி தெரியும், நன்றி.” என்றார்.
நடிகர் சம்பத்ராம் பேசுகையில்:
“நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை என்றாலும், என் சொந்த ஊர் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மாநெல்லூர் என்ற கிராமம் தான். எங்க தாத்தா, அப்பா பிறந்த ஊர் அது தான். என் பாட்டி ஊர் காளஹஸ்திரி அருகே இருக்கும் காட்டுப்பள்ளி என்ற ஊர். நாங்க விடுமுறை என்றால் அடிக்கடி அங்கே செல்வோம். அப்படி அங்கே போக வர இருந்ததால் எனக்கு தெலுங்கு தெரியும். என் அப்பாவுடைய நெருங்கிய நண்பர் ஸ்ரீனிவாசன். அவரது மகனும், நானும் மிக நெருங்கிய நண்பர். அவர் பெயர் கோலா ஆனந்த். அவர் இன்று அரசியல் கட்சி ஒன்றில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார், அவர் மூலம் தான் எனக்கு இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று சொல்வேன். 2022 ஆம் ஆண்டு காளஹஸ்திரி ரயில் நிலையம் அருகே மோகன் பாபு சாரின் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்தது. அப்போது ஆனந்த் என்னை அழைத்துச் சென்று மோகன் பாபு சாரிடம் அறிமுகப்படுத்தி, என் மாமா பையன் தமிழில் நடித்துக் கொண்டிருக்கிறார், தெலுங்கில் எதாவது வாய்ப்பு கொடுங்கள் என்று சொன்னார்.
அதன் பிறகு தான் விஷ்ணு சார் அறிமுகமான விஷ்ணு படத்தில் சிறிய கதாபாத்திரம் கொடுத்தார். முதல் முறையாக தெலுங்குப் படத்தில் நடித்தேன். பிறகு இந்த வேடம் மிக சிறியதாக இருக்கிறது, வேற...
சென்னை:
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் "தமிழ்நாடு மீன் வளத் திருவிழா 2025"-ஐ சென்னை தீவுத்திடலில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஜூன் 1 ஆம் தேதி வரை...
"பவர் ஸ்டார்" பவன் கல்யாண் நடிப்பில், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில், ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி அவர்களின் இசையில் உருவாகியுள்ள படம் "ஹரி ஹர வீர மல்லு" ஜூன் 12ம்...
சென்னை:
சென்னை வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனை, இதயம் சார்ந்த நுரையீரல் பிரச்சனைகளுக்கான அதிநவீன, சிறப்பு சிகிச்சையளிப்பதில் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறியிருக்கிறது. இம்மருத்துவமனை, நுரையீரல் தொடர்பான உயர் இரத்தஅழுத்தப் பிரச்சனைக்காக பிரத்தியேக மருத்துவ...
Chennai:
Malabar Group, India’s leading business conglomerate and the parent company of Malabar Gold & Diamonds, has allocated INR ₹150 crore in 2025-26 for scaling up its...