சென்னை:
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் “தமிழ்நாடு மீன் வளத் திருவிழா 2025”-ஐ சென்னை தீவுத்திடலில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த மீன் உணவுத்திருவிழாவில், 50 அரங்கங்கள் கொண்ட சென்னை கடல்மீன் உணவுகாட்சி கூடாரம், 15 அரங்கங்களுடனான மீன்வளம் மற்றும் வண்ணமீன்கள் காட்சிக்கூடாரம், 20 அரங்கங்களுடனான மீன் உணவுக்கூடங்கள், செயல்விளக்க கூட்ட அரங்கு ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, எம்.பி தயாநிதிமாறன், சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

















