கோவை மாநகரில் இன்று 26ம் தேதி முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டும் என கோவை மாநகர போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று முதல் காவல்துறை, போக்குவரத்துத் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டுத் துறை ஆகிய துறைகளின் அலுவலர்களை ஒருங்கிணைத்து, பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில், அதிகப்படியான ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்கள் வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை சோதனையிட திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, பேருந்து, லாரி, கார் போன்ற வாகனங்களின் உரிமையாளர்கள் விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை தங்களது வாகனங்களிலிருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.