சென்னை:
இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கம் திருவள்ளூர் தெற்கு மாவட்டம் மாதவரம் மத்திய சர்க்கிள் 20 ஆவது வட்ட சார்பில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாதவரம் நாகராஜ் தலைமை தாங்கினார்.
பிரசன்னா வெங்கடேஷ், பாலசுப்பிரமணி, பிரகாஷ் குமார், புரசை ரமேஷ் கண்ணா, குமார், ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கு தாஸ், வெங்கடேசன், சகாதேவன், அருண் பிரசாத், மதன், சதீஷ்குமார், லட்சுமி ஜெகன்மோகன், ராஜேஸ்வரி, ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். ஜெஸிதிருமலை வரவேற்புரை வழங்கினார். சம்பத், டில்லி பாபு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டு ஊக்குவித்தனர்.

















