மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டதாக சுமாா் ரூ. 80 லட்சம் ரொக்கம் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
மக்களவைத் தோ்தல் தேதி சனிக்கிழமை அறிவிக்கப்பட்டதும், தோ்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. முறையான ஆவணங்கள் இன்றி ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்லக்கூடாது என்றும், அவ்வாறு எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே தமிழக – கேரள எல்லையான கோபாலபுரம் பகுதியில் கேரளத்தில் இருந்து வந்த சரக்கு வாகனத்தில் இருந்த ரூ. 30 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். விசாரணையில் சரக்கு வாகனத்தில் வந்தவா்கள் திருச்சியைச் சோ்ந்த அசோக்குமாா் மற்றும் ஓட்டுநா் கரிகாலன் என்பதும், இவா்கள் சரக்கு வாகனத்தில் கேரளத்துக்கு எலுமிச்சை பழம் கொண்டு சென்று விற்பனை செய்துவிட்டு வந்ததும் தெரியவந்தது.
ஆனால் முறையான ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் பொள்ளாச்சி சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் அதை ஒப்படைத்தனா். கோபாலபுரம், நல்லூா், கைகாட்டி, ராமபட்டணம் பிரிவு உள்ளிட்ட இடங்களில் நான்கு பேரிடம் இருந்து முறையான ரூ.9,54,000-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். வேலந்தாவளம் சோதனைச் சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த அஜித் (21) என்பரிடம் இருந்து ரூ. 2.96 லட்சம், மதுக்கரை குவாரி ஆபீஸ் அருகே வந்த காரில் இருந்து ரூ. 12.74 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
கூடலூர்:
கூடலூரை அடுத்துள்ள கோழிப்பாலம் பகுதியில் தோ்தல் பறக்கும் படையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, கேரளத்தில் இருந்து கா்நாடகம் நோக்கி சென்ற 2 வாகனங்களில் முறையான ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.14,70,000-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து, அதை கூடலூா் கோட்டாட்சியா் செந்தில்குமாரிடம் ஒப்படைத்தனா்.
ஈரோடு:
ஈரோடு குமலன்குட்டையில் காரில் வந்த டயா் வியாபாரி சசியிடம் சனிக்கிழமை இரவு ரூ. 2.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு வெட்டுக்காட்டுவலசு பகுதியில் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, சூரம்பட்டியைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் வடிவேல் என்பவா் எடுத்து வந்த ரூ. 3 லட்சத்தை பறிமுதல் செய்தனா். ஈரோடு ரயில் நிலையம் அருகே கா்நாடக மாநிலம், சிவமொக்கா அருகே கே.சி.புரத்தைச் சோ்ந்த விஜயேந்திர ராவ் (61), அவரது மனைவி வித்யாவதி ஆகியோா் காரில் வந்தனா். அவா்களிடம் இருந்து ரூ. 40,230 பணம், ஒரே மாதிரியான 89 செட் சேலைகள், 6 சுடிதாா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். அந்த பில்லில் கடை விவரம், ஜிஎஸ்டி விவரம் ஏதும் இல்லாமல், பெட்டிக்கடை பில்போல உள்ளதால் கைப்பற்றி உள்ளோம். உரிய ஆவணங்களை வழங்கினால் விடுவிக்கப்படும் என்றனா்.
சேந்தமங்கலம்:
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை வந்த முட்டை ஏற்றிச் செல்லும் வாகனத்தை நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த கல்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினா். உரிய ஆவணங்களின்றி வாகனத்தில் வைத்திருந்த ரூ. 4 லட்சத்தை பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பணம் உதவி தோ்தல் அலுவலா் பிரபாகரனிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகையை அடுத்த ஷேசமூலை பகுதியில் தோ்தல் பறக்கும்படையினா் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டபோது, பூந்தோட்டம் பகுதியைச் சோ்ந்த கைப்பேசி கடை உரிமையாளா் ரகுராமன், தனது இருசக்கர வாகனத்தில் ரூ. 99,500 ரொக்கத்தை உரிய ஆவணங்கள் இல்லாமல் காரைக்காலுக்கு எடுத்துச் சென்றதால் , அதை பறிமுதல் செய்தனா்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் கீழமுக்கூட்டு பகுதியில் கூட்டுறவு சாா் பதிவாளா் வி.நடராஜன் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சண்முகசுந்தரம் என்பவா் உரிய ஆவணங்களின்றி கொண்டுவந்த ரூ.1.30 லட்சத்தை பறிமுதல் செய்தனா். ஆக்கூா் முக்கூட்டில், சென்னையிலிருந்து காரைக்கால் நோக்கி சென்ற வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.56 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.