Monday, May 12, 2025
Blog

‘நிழற்குடை’ விமர்சனம் RATING 2.9/5

தர்ஷன் பிலிம்ஸ் தயாரிப்பில் தேவயானி, விஜித் கண்மணி, இளவரசு, ராஜ்கபூர், மனோஜ் குமார், வடிவுக்கரசி, ஆகியோர் நடித்துள்ள படம் தான் ‘நிழற்குடை’

விமர்சனம்:

திரைப்படத்தின் ஆரம்பம் முதியோர் காப்பகத்தில் தொடங்குகிறது. முதியோர் இல்லம் நடத்துபவருக்கு முதல் அமைச்சரிடம் இருந்து ஒரு அழைப்பு வருகிறது. உங்கள் முதியோர் இல்லம் முதல் இடம் என்றும் அரசு அறிவித்த உதவித் தொகையும் கிடைக்கும் என்று முதல்வர் கூறுகிறார். பத்திரிகையாளர் சந்திப்பில் இதற்கு காரணம் தேவயானி தான் என்று உரிமையாளர் கூறுகிறார். இது ஒரு புறம் இருக்க, நிரஞ்சன் – லான்ஸி தம்பதிகளுக்கு இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து அமெரிக்காவிற்கு சென்று வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பது இலட்சியமாக இருக்கிறது. இதற்காக இருவரும் கடுமையாக உழைக்கிறார்கள். இதன் காரணமாக தங்களது பெண் பிள்ளையை பராமரிக்கும் தாதியராக இளம் பெண் ஒருவரை நியமிக்கிறார்கள். அந்த இளம் பெண் நிலாவை சரியாக பார்க்காமல் அசிங்க வேலையை செய்கிறாள். பிறகு தேவயானி கவனிக்க தொடங்குகிறார். சில நாட்களில் குழந்தை கடத்தப்படுகிறது. கடத்தியது யார்? அதன் பின்னணி என்ன என்பதே கதை….

அன்புக்கும் பாசத்திற்கும் ஏங்கும் ஒரு தாயின் கதை தான் படத்தின் கரு. சமூகத்தின் இன்றைய யதார்த்தத்தை திரையில் பிரதிபலிக்க வேண்டும் என்ற இயக்குநரின் நோக்கம் சரி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தேவயானி, தற்போதைய இளம் தலைமுறை தம்பதியினருக்கு பாடம் எடுக்கும் வகையில் நடித்திருக்கிறார். குழந்தை மீது அவர் காட்டும் அன்பும், அக்கறையும் பணம் சம்பாதிப்பது, வசதியாக வாழ்வது என்றே பயணிக்கும் பெற்றோர்களுகு சவுக்கடியாக உள்ளது. இளம் தம்பதியாக நடித்திருக்கும் விஜித் மற்றும் கண்மணி கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். இவர்களது குழந்தையாக நடித்திருக்கும் சிறுமி ஜி.வி.அஹானா அஸ்னி மற்றும் நிஹாரிகா இருவரது நடிப்பும் சிறப்பு.

கதையை இன்னும் அழுத்தமாக சொல்லி பதிய வைத்திருக்கலாம்…. பாடல்களில் கூடுதல் கவனம் வேண்டும்……

மொத்தத்தில் இந்த நிழற்குடையை ஒரு முறை பிடிக்கலாம்.

RAJKUMAR- CINEMA REPORTER

நீங்கள் காமெடி சூப்பர் ஸ்டாரா? என்று ரஜினி கேட்டார்…!- சந்தானம்

நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
 
‘டி டி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், மாறன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி , யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஏ.ஆர்.மோகன் கவனித்திருக்கிறார். காமெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படம் வரும் 16ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் நடைபெற்ற வெளியீட்டிற்கு முன் நிகழ்வில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 
 
இந்நிகழ்வில் இசையமைப்பாளர் ஆஃப்ரோ பேசுகையில், ”ஒவ்வொரு இன்டர்வியூவிலும் நான் எஸ் டி ஆரின் ரசிகன் என்று சொல்லியிருக்கிறேன். அவர் இந்த மேடையில் இருக்கும்போது நானும் இருப்பதை பெருமிதமாக நினைக்கிறேன். இதுவே என்னுடைய பெரிய இலக்கு என்றும் சொல்லலாம். 
 
இந்த குழுவுடன் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றுகிறேன். நிறைய சுயாதீன இசை கலைஞர்களுடன் பணியாற்றுவேன். இந்தப் படத்தில் கெளுத்தி என்ற சுயாதீன கலைஞர் பாடல் எழுதியிருக்கிறார். வங்கல் புள்ள விக்கி ஒரு பாடலை பாடியிருக்கிறார். இந்தப் பாடல்களை எல்லாம் கேட்டு ரசிப்பீர்கள் என நினைக்கிறேன். அடுத்த வாரம் படம் வெளியாகிறது. படத்தை பார்த்துவிட்டு ஆதரவு தாருங்கள்,” என்றார். 
 
நடிகர் நிழல்கள் ரவி பேசுகையில், ”சந்தானத்தின் ரசிகர்களுக்கு என் முதல் நன்றி.  இந்தப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்ததற்காக தயாரிப்பாளர் ஆர்யா, கிஷோர், சந்தானம், பிரேம் ஆனந்த் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சினிமாவில் ஹீரோவாக நடித்து விட்டேன், வில்லனாக நடித்து விட்டேன், கேரக்டராகவும் நடித்துவிட்டேன், காமெடியாக நடிக்கவில்லையே என்று எண்ணியிருந்தேன். இயக்குநர் கார்த்திக் யோகியும் , நடிகர் சந்தானமும் இணைந்து ‘ டிக்கிலோனா’ திரைப்படத்தில் எனக்கு ஒரு நகைச்சுவை வேடத்தை வழங்கினார்கள்.  அதனைத் தொடர்ந்து ‘வடக்குப்பட்டி ராமசாமி ‘படத்தில் நல்லதொரு கேரக்டரை கொடுத்து நிழல்கள் ரவியை காமெடி நடிகராகவும் வெற்றி பெற செய்தார்கள். இதற்காக சந்தானத்திற்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 
 
இந்தப் படத்தில் மெக்டவல்ஸ் எனும் கப்பலில் கேப்டனாக பணி புரியும் கேரக்டரில் நடித்திருக்கிறேன். சினிமாவில் காமெடியை பார்த்து ரசிக்கிறோம் அல்லது அதை பற்றி விமர்சிக்கிறோம். ஆனால் உண்மையில் காமெடியாக நடிப்பது தான் கஷ்டமானது.  சந்தானம் அதை எளிதாக செய்கிறார் என்றால் அது கடவுளின் கொடை.  இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரான தீபக் குமார் பதேவின் தந்தையும் ஒளிப்பதிவாளர் தான். அவருடைய ஒளிப்பதிவில் நான் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். இந்த திரைப்படம் முழுவதும் கப்பலின் பின்னணியில் நடைபெறுகிறது. இதற்காக கலை இயக்குநர் மோகன் அற்புதமாக அரங்கங்களை வடிவமைத்திருந்தார்,” என்றார்.
 
நடிகை கீதிகா திவாரி பேசுகையில், ”இந்த படத்தில் பணியாற்றியதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. சினிமா மீதான சந்தானத்தின் ஈடுபாடு என்னை வியக்க வைத்தது.  படப்பிடிப்பு தளத்தில் அவருடைய அக்கறை வெளிப்பட்டது. 20 மணி நேரம் இடைவெளி இல்லாமல் படப்பிடிப்பு நடைபெற்ற போதும் உற்சாகம் குறையாமல் ஒட்டுமொத்த படக்குழுவையும் பணியாற்ற வைத்தார். இந்தத் திரைப்படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
 
நடிகை கஸ்தூரி பேசுகையில், ”இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக பெரிய முதலாளி ஆர்யாவிற்கும், சின்ன முதலாளி கிஷோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியின் ரசிகை. சந்தானம் சாருடன் ஏற்கனவே பணியாற்றி இருக்கிறேன். இருந்தாலும் இந்த படத்தில் பணியாற்றும் போது அவருடைய எளிமை, கடின உழைப்பை பார்த்து வியந்தேன். அவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ என்றும் சொல்வேன். 
 
நான் தொடக்க காலத்தில் கவர்ச்சியாக நடிப்பது தான் கஷ்டம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் காமெடியாக நடிப்பது தான் கஷ்டம் என்பதை இந்த படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன். இயக்குநர் பிரேம் ஆனந்த் என்னிடம் கதையை சொல்லும்போது நீங்கள் சந்தானத்திற்கு அம்மா என்றார், நான் பதறினேன். முதல் காட்சியில் மட்டும் தான் அம்மா, அதன் பிறகு படம் முழுவதும் அலப்பறை தான் என்றார். கதை கேட்கும் போது நான் எப்படி சிரித்தேனோ அதேபோல் தான் ரசிகர்கள் நீங்கள் திரையரங்கத்தில் படத்தை பார்க்கும் போதும் சிரிப்பீர்கள்.  இந்தப் படத்தில் நான் தான் கவர்ச்சி மாம். 
 
உள்ளொன்று வைத்து புறம் பேசாத, மனதில் தோன்றியதை பட்டென்று பேசும் எஸ் டி ஆரை எனக்கு மிகவும் பிடிக்கும்.  அவர் நேர்மையானவர். பெருந்தன்மையானவர். அவரைப்பற்றி வெளியில் நான்கு பேர் நான்கு விதமாக பேசினாலும், அவரைப்பற்றி அவரிடம் பழகியவர்களுக்கு மட்டும் தான் தெரியும். எனக்கு மனச்சோர்வாக இருக்கும்போது இப்படத்திற்காக பின்னணி பேச அழைப்பு விடுத்தார்கள். படத்தின் டப்பிங் பார்த்துவிட்டு எனக்கு சரியாகி விட்டது. மனச்சோர்வு பறந்து விட்டது. இந்தப் படத்தில் நிழல்கள் ரவி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரை வேற மாதிரி பார்த்து ரசிப்பீர்கள். இந்தக் கோடை விடுமுறைக்கு உங்களது கவலைகளை கழட்டி வைத்து விட்டு இந்த படத்தை பார்த்தால் உற்சாகம் அடைவீர்கள், சந்தோஷம் அடைவீர்கள்,” என்றார். 
 
இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த் பேசுகையில், ”என்னை இயக்குநராக இங்கு நிற்க வைத்திருக்கும் சந்தானத்திற்கும் , இயக்குநர் ராம் பாலாவிற்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உடன் இருப்பவர்களை உயர்த்தி விட்டு அவர்கள் மகிழ்ச்சி அடைவதை பார்த்து சந்தோஷம் அடைபவர் தான் சந்தானம். அவருக்கும் ஒரு காட்பாதர் இருக்கிறார். அவருடைய வளர்ச்சியை கண்டு சந்தோஷமடையும் எஸ் டி ஆர் தான் அது. அவரும் இங்கு இருக்கிறார். 
 
‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் இயக்குநர் என்று சொல்லிக் கொள்வதை விட, இப்படத்தின் கதையை நானும் இணைந்து எழுதி இருக்கிறேன் என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன். ஒரு படம் வெற்றி பெற்றால் அந்தப் படத்தின் இயக்குநர் தான் வெளிச்சத்திற்கு வருவார். அந்தப் படத்தின் கதாசிரியர் வெளியே தெரிய மாட்டார். அது போல் இந்த படத்திற்கு நடைபெறக்கூடாது. இந்தப் படத்தில் என்னுடன் முருகன், சேது ஆகிய இருவரும் இணைந்து எழுதி இருக்கிறார்கள். இந்த படம் பெரிய வெற்றியைப் பெற்றால் அதில் இவர்களுக்கும் பங்கு உண்டு. 
 
இந்தப் படத்தின் ஐடியாவை ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் கதையை சொல்வதற்கு முன்னாலேயே சந்தானத்திடம் சொன்னேன். அவர் ஐடியா நன்றாக இருக்கிறது ஆனால் படத்தின் பட்ஜெட் மிக அதிகம். அதனால் அதற்கான தயாரிப்பாளர் கிடைக்கும் வரை காத்திரு என்றார். சின்ன பட்ஜெட்டில் உன் திறமையை வெளிப்படுத்து, அந்த திரைப்படம் வெற்றி பெற்ற பிறகு அதை எடுக்கலாம் என்றார். சந்தானத்தின் வாய் முகூர்த்தம் பலித்து விட்டது. ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அவர் சொன்னது போல் இப்படத்திற்கான தயாரிப்பாளரையும் கொடுத்தது.‌ 
 
ஆர்யா போன்ற தூய மனம் கொண்ட தயாரிப்பாளர் எங்களுக்கு கிடைத்தது வரம் தான். எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். அவரைப் போலவே இப்படத்திற்கு முதுகெலும்பாக செயல்பட்டவர் கிஷோர். ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இதிலும் இணைந்து பணியாற்று இருக்கிறார்கள். இதில் ஓ ஜி சாண்டாவை பார்ப்பீர்கள். அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களை விட இதில் நடித்திருக்கும் கிச்சா எனும் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவரும். 
 
இப்படத்தின் ஹீரோயின் கீதிகா. அவர் படப்பிடிப்பிற்கு வந்த முதல் நாளே அழுக்கான ஆடையை கொடுத்து நடிக்க சொன்னோம். எந்தவித தயக்கமும் இல்லாமல் நடித்தார். இந்தப் படத்திற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியில் எப்படி ஒரு புதிய வீரரை அணியில் இடம்பெறச் செய்தார்களோ, அதே போல் எங்கள் அணியில் நிழல்கள் ரவியை நாங்கள் இணைத்துக் கொண்டோம். அவருடைய நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவரும். 
 
இந்த படம் மல்டி ஜானர் மூவியாக இருக்கும். குழந்தைகள் முதல் ஃபேமிலி ஆடியன்ஸ் வரை அனைவரும் ரசிக்கக் கூடிய வகையில் இந்தப் படம் இருக்கும். மனிதனுக்கு உள்ள உணர்வுகள் எல்லாம் இதயம் சம்பந்தப்பட்டது. மன அழுத்தம், பயம், கோபம் இதெல்லாம் மனம் சம்பந்தப்பட்டது. இதயத்தை தொடும் படத்தை கொடுப்பதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் ஸ்டிரஸ் பஸ்டர் மூவியை கொடுப்பதற்கு சந்தானம் மட்டும்தான் இருக்கிறார். இந்தத் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்து மகிழ்ச்சி அடையலாம். நம்பி வாங்க…! சிரிச்சிட்டு போங்க..! நன்றி,” என்றார். 
 
நடிகர் ஆர்யா பேசுகையில், ”இந்தப் படத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தின் ஐடியாவை சந்தானம் சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  ஏற்கனவே மூன்று பாகங்களை எடுத்திருக்கிறார்கள். இனிமேல் இதில் என்ன புதிதாக சொல்லப் போகிறார்கள் என்ற எண்ணத்துடன் தான் இயக்குநர் பிரேம் ஆனந்திடம் கதையைக் கேட்க தொடங்கினேன். ஆனால் அவர் கதையை சொன்ன விதம் இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. கதையைக் கேட்டு முடித்தவுடன் இதனை திரைக்கதையாக எழுதிக் கொண்டு வந்தால் மிகப்பெரிய படமாக இருக்கும் என்றேன். அதன் பிறகு ஆறு மாதம் கழித்து கடுமையாக உழைத்து திரைக்கதையாக கொடுக்கும் போது பெரிய பட்ஜெட் படமாக இருந்தது. இதற்காக நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் பேசினேன்.‌ அவர்களும் ஒப்புக்கொண்டனர். அவர்கள் தான் கிஷோரை அறிமுகப்படுத்தினார்கள். இந்த திரைப்படத்திற்காக சந்தானத்தையும், இயக்குநர் பிரேம் ஆனந்தையும் கிஷோரிடம் ஒப்படைத்து விட்டேன். இதுதான் என்னுடைய பணி. அதன் பிறகு இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து திட்டமிட்டு உருவாக்கிய படம் தான் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. 
 
ஒரு வாரத்திற்கு முன் இப்படத்தை பார்த்தேன். மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படம் நிச்சயமாக பிளாக் பஸ்டர் ஹிட் ஆகும் எனும் நம்பிக்கை இருக்கிறது. இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகளுக்கும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 
 
இந்தப் படத்தில் நடித்திருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் ஆகியோர் நட்புக்காகவே ஒப்புக் கொண்டார்கள். இதற்காக அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பு விருந்தினராக இங்கு வருகை தந்த சிலம்பரசனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார். 
 
நடிகர் சந்தானம் பேசுகையில், ”தில்லுக்கு துட்டு 1, தில்லுக்கு துட்டு 2, டி டி ரிட்டர்ன்ஸ் என அனைத்து படங்களுக்கும் எழுத்து வடிவில் எங்களுக்கு உதவிய எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய மறைவு எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. இருந்தாலும் அவருடைய ஆன்மா எங்கள் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் என நம்புகிறேன். 
 
இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ள எஸ் டி ஆர் அவர்களுக்கு நன்றி. அவரைப் பற்றி நான் பல மேடைகளிலும், பல இன்டர்வியூக்களிலும் சொல்லியிருக்கிறேன், அவர் இல்லை என்றால் நான் இல்லை என்று. அவர்தான் என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தி , உயரத்திற்கு அழைத்துச் சென்றார்.  ‘காதல் அழிவதில்லை’ படத்தில் துணை நடிகராக நடித்திருக்கிறேன். அதனை பார்த்து தான் ‘மன்மதன்’ படத்தில் எனக்கு வாய்ப்பளித்தார் சிலம்பரசன். படப்பிடிப்பு தளத்தில் எனக்கான அறிமுகக் காட்சி பற்றிய விவாதம் நடைபெற்றது. “நீ லொள்ளு சபாவில் இருந்து சினிமாவிற்கு வந்திருக்கிறாய். உன்னுடைய அறிமுகக் காட்சியில் ரசிகர்களிடத்தில் கைதட்டல் வரவேண்டும். அதற்காக எப்படி உன்னை அறிமுகப்படுத்துவது” என விவாதித்து கொண்டிருக்கிறோம் என்றார். அந்த விவாதத்தில் நானும் கலந்து கொண்டு என்னுடைய யோசனையையும் சொன்னேன்.‌ அதன் பிறகு அந்த காட்சி படமாக்கப்பட்டது. இதை ஏன் நான் இப்போது இங்கு சொல்கிறேன் என்றால், அன்றைய தினம் சினிமாவில் திரையில் நான் தோன்றும்போது கைத்தட்டல் இருக்க வேண்டும் என்று எனக்காக எடுத்த அக்கறையும், அன்பும்  இன்று வரை குறையாமல் தொடர்கிறது. இது போன்றதொரு நல்ல மனம் படைத்த சிலம்பரசன் நண்பராக கிடைத்ததற்கு இறைவனுக்குத்தான் நான் நன்றியை சொல்ல வேண்டும்.  சிம்பு ஐ லவ் யூ. எப்போதும் அவருக்கு பின்னால் நான் இருப்பேன். எஸ் டி ஆர் 49லும் என்னுடைய பங்களிப்பை வழங்குவேன். என்னுடைய பெற்றோர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
 
அடுத்ததாக என்னுடைய நண்பரும், தயாரிப்பாளருமான ஆர்யா.  ஆர்யாவை மட்டும் தான் எனக்குத் தெரியும். ஆர்யா தான் நிஹாரிகா என்டர்டெய்ன்மென்டை சார்ந்த கிஷோரை அறிமுகப்படுத்தினார்.  அவரை நான் ‘கிளாரிட்டி ‘கிஷோர் என்று தான் அழைப்பேன்.  அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 
 
ஆர்யா என் உயிர் நண்பர். ‘கல்லூரியின் கதை’ படத்தில் தான் நாங்கள் இருவரும் நண்பர்கள் ஆனோம். படப்பிடிப்பு தளத்தில் எங்களுடன் நடித்த அழகான பெண்களை கவர்வதற்காக ஆர்யா என்னை காமெடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லிவிட்டார். அந்த அழகான பெண்கள் சற்று சந்தேகத்துடன் என்னை  பார்த்தார்கள். நண்பர் சொல்லிவிட்டாரே என்பதற்காக அவர்கள் முன்னால் நானும் சில காமெடியை பேசி நடித்து காட்டினேன். இதனை இயக்குநரும், தயாரிப்பாளரும் கவனித்து விட்டு, எங்களிடம் கேட்டனர், பிறகு சமாளித்தோம். ஆனால் ஆர்யா காமெடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை விடவில்லை. ‘சேட்டை’ படத்தில் காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் என டைட்டிலில் இடம் பெற வைத்தார். ‘லிங்கா’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடிக்கும் போது அவர் என்னிடம் நீங்கள் காமெடி சூப்பர் ஸ்டாரா என்று கேட்டார். அதற்கு சிரித்துக் கொண்டே என் நண்பர் ஆர்யா செய்த வேலை அது என விளக்கம் அளித்தேன். 
 
இந்தப் படத்தின் கதையை இயக்குநர் ஆனந்த் ஆர்யாவிடம் விவரித்தார் அவருக்கும் பிடித்து விட்டது. படத்தின் பணிகள் தொடங்கின. இந்த தருணத்தில் நான் சென்னையின் புறநகர் பகுதியில் வீடு ஒன்றினை வாங்கி, அதனை சீரமைத்து அங்கு குடும்பத்தினருடன் சென்று வசிக்கலாம் என திட்டமிட்டேன். இதற்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, வாரம் தவறாமல் வெள்ளிக்கிழமைகளில் என்னுடைய மனைவியும், அம்மாவும் அந்த வீட்டிற்கு சென்று விளக்கேற்றி வழிபட்டு வருவார்கள். இந்தத் தருணத்தில் ஒரு முறை ஆர்யா எனக்கு போன் செய்த போது வீட்டை புதுப்பிக்கும் பணியில் இருக்கிறேன் என்று சொன்னேன் உடனடியாக அவர் அந்த வீட்டிற்கு வந்தார். வீட்டை முழுவதும் சுற்றி பார்த்துவிட்டு வீட்டை இடித்து விட்டு புதிதாக கட்டு என்று சொல்லிவிட்டார். இதற்கு நான் மறுப்பு தெரிவிக்க, ஆர்யா அவரது நண்பருக்கு போன் செய்து வீட்டை இடிக்கும் பணியில் தீவிரம் காட்டி விட்டார். இந்த விஷயத்தை நான் எங்கள் வீட்டில் தெரிவிக்கவில்லை. அடுத்த வாரம் என்னுடைய அம்மாவும், மனைவியும் அந்த வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கு வீடு இல்லாததை கண்டு திகைத்து விட்டார்கள். அதன் பிறகு எனக்கு போன் செய்து வீட்டை காணவில்லை என்று சொன்னார்கள். அதன் பிறகு அவர்களிடம் நடந்ததை சொன்னேன். ஆர்யா சொன்னால் நன்றாகத்தான் இருக்கும் என்றும் சொன்னேன். அப்போது என்னுடைய அம்மா நீங்கள் இருவரும் படத்தில்தான் இப்படி நடிப்பீர்கள். நிஜத்திலுமா இப்படி இருப்பீர்கள் எனக் கேட்டார். இந்த லெவலில் தான் எங்களுடைய பிரண்ட்ஷிப் இருக்கிறது. 
 
‘கல்லூரியின் கதை’ படத்தில் தொடங்கிய எங்கள் நட்பில் நாங்கள் இருவரும் எதற்காகவும் பயந்ததில்லை. எதுவாக இருந்தாலும் தைரியமாக செய்வோம். வாழும் வரை சந்தோஷமாக வாழ்வோம். எது வந்தாலும் அதனை எதிர்கொள்வோம் என்பார். அந்த ஒரு சக்தி தான் அவரை இங்கு தயாரிப்பாளராக நிற்க வைத்து இருக்கிறது. என்னையும் நாயகனாக உயர்த்தி இருக்கிறது. 
 
இந்தப் படத்தில் நடிக்கும் போது வேறு எந்த படத்திலும் நடிக்காதே உன் அனைத்து பிரச்சனைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆர்யா நம்பிக்கை கொடுத்தார். படத்தை வெற்றி பெற செய்வது மட்டும்தான் உன் வேலை என்றார் அதற்காக இந்த படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறோம். இந்தப் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக ஆர்யாவுக்கு தருவேன் என்று நம்புகிறேன். 
 
இந்தப் படத்தின் இயக்குநரான பிரேம் ஆனந்தை நான் தமிழ் சினிமாவின் கிறிஸ்டோபர் நோலன் என்று தான் சொல்வேன். ஒரு கதையை சொன்னால் அதனை பல லேயர்களில் சொல்வார். ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படம் ஒரு ஹாரர் படம் என்றாலும் அதில் ஒரு கேம் ஷோ இருக்கும். அந்த கேமிற்குள் ஒரு திருட்டு கும்பலின் அட்வென்ச்சர் இருக்கும். இப்படி மல்டி லேயரில் ஒரு கதையை கச்சிதமாக உருவாக்குவார். அதேபோல் தான் இந்தப் படத்தின் கதையையும் அவர் எழுதியிருக்கிறார். இந்தப் படத்தில் அவர் தெளிவாக காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்கியிருக்கிறார். அந்த வகையில் ஆனந்த்திற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 
 
இந்தப் படத்திற்காக பணியாற்றிய முருகன், சேது உள்ளிட்ட என்னுடைய குழுவினருக்கும், இந்த படத்தில் என்னுடன் இணைந்து நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 
 
இந்தப் படத்தில் மாறனுக்கு டிவி காமெடி இருக்கிறது. ரெடின் கிங்ஸ்லிக்கு தலைகீழாக நடக்கும் காமெடி இருக்கிறது. மொட்டை ராஜேந்திரனுக்கு ஒரு எலி காமெடி இருக்கிறது. நிழல்கள் ரவி சாருக்கு ஒரு டாய்லெட் காமெடி இருக்கிறது. யாஷிகா ஆனந்திற்கு ஒரு பாட்டில் காமெடி இருக்கிறது. கஸ்தூரி மேடத்திற்கு ஒரு புக் காமெடி இருக்கிறது. இதற்கெல்லாம் திரையரங்கத்தில் கைத்தட்டல் கிடைக்கும். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நகைச்சுவை காட்சிகளில் பங்களிப்பு இருக்கிறது. 
 
ஒரு படத்திற்கு மிகப்பெரிய பலமே இசைதான். இந்த படத்தில் இடம் பிடித்திருக்கும் பாடல்கள் வெளியாகி வெற்றி பெற்று இருக்கின்றன. படத்தைப் பார்க்கும்போது பின்னணி இசைக்காகவும் நீங்கள் கைதட்டுவீர்கள். குறிப்பாக மொட்டை ராஜேந்திரனுக்காக இவர் வாசித்திருக்கும் பின்னணி இசை ரசிகர்களை கவரும். இதற்காக ஆஃப்ரோவுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
இந்தப் படத்தில் ஹீரோயின் கீதிகா வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார். அவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த திரைப்படத்தில் புதிதாக என்ன இருக்கிறது என்றால், ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் கௌதம் வாசுதேவ் மேனனும், செல்வராகவனும் வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார்கள்.  
 
ஒருவர் மிகுந்த உயரத்திற்கு செல்கிறார் என்றால் அதற்கு அவர் மட்டும் காரணம் அல்ல. உதாரணத்திற்கு ராமாயணத்தில் அனைவரும் ராமரை புகழ்கிறார்கள் என்றால்.. அவருடன் இருந்த சீதை, லட்சுமணன், விபீஷணன், பரதன், ராவணன் என எல்லா கேரக்டரும் சேர்ந்தது தான் ராமர் எனும் வெளிப்பாடு. அந்த வகையில் ஒருவர் உயரத்திற்கு செல்கிறார் என்றால் அவருடைய தனித்திறமை மட்டும் அதற்கு காரணம் அல்ல. அவரை சுற்றி  இருப்பவர்களும் தான் காரணம் என்பேன். இங்கு நான் உயர்வதற்கு சிலம்பரசன், ஆர்யா என பலரும் காரணமாக உள்ளார்கள். 
 
மே 16ம் தேதி அன்று இப்படம் வெளியாகிறது. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் காமெடியை இடம்பெறச் செய்திருக்கிறோம். டி டி ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தை விட மும்மடங்கு காமெடியுடன் கூடிய விருந்து இருக்கிறது. அனைவரும் மகிழ்ச்சி அடைவீர்கள்,” என்றார். 
 
நடிகர் சிலம்பரசன் பேசுகையில், ”இந்தப் படத்தின் முந்தைய பாகங்களை பார்த்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன். நான் முதலில் சினிமா ரசிகன். ஒரு ரசிகனாகத்தான் திரைப்படத்தை பார்ப்பேன். அது சந்தானம் படமாக இருந்தாலும் அவருக்கும், எனக்குமான நெருங்கிய தொடர்புகளை எல்லாம் படம் பார்க்கும்போது சற்று தள்ளி வைத்து விடுவேன். அந்த வகையில் ஒவ்வொரு படத்திற்கும் நிறைய மெனக்கெட்டு வித்தியாசமாக ரசிகர்களுக்கு ஏதாவது ஒன்றை வழங்க வேண்டும் என கடுமையாக உழைக்கிறார் சந்தானம். இந்தப் படத்தின் பார்ட் 1 பார்ட் 2 என இரண்டு பாகத்தையும் சிறப்பாக உருவாக்கி இருப்பார்கள். இந்தப் படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போதும் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக சந்தானத்தின் உடல் மொழி, வசன உச்சரிப்பு நன்றாக இருக்கிறது. முதலில் இந்த படத்திற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 
 
நடிகர் ஆர்யா எனக்கு நெருங்கிய நண்பர். நண்பர் ஆர்யாவுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். அமைய வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன். இயக்குநர் பிரேம் ஆனந்த் – சந்தானத்தின் பிரத்யேக குழுவில் இருப்பவர். இங்கு அவருடைய குழுவில் உள்ள முருகன், சேது ஆகியோரை மேடையில் சந்தானம் அறிமுகப்படுத்தினார். இவர்கள் இருவரும் ‘மன்மதன்’ பட காலகட்டத்திலேயே படப்பிடிப்பு தளத்தில் இவர்களுடன் சந்தானம் விவாதித்துக் கொண்டிருப்பார். இவர்கள் யார் என மனதிற்குள் கேள்வி எழும்.  சந்தானத்திடம் கேட்ட போது என்னுடைய நண்பர்கள் தான் என விளக்கம் அளித்தார். இதை ஏன் நான் விவரிக்கிறேன் என்றால் அன்று தொடங்கிய அவர்களின் நட்பு இன்று வரை தொடர்கிறது. இந்தப் படம் வரை ஒரு துளி அன்பும், அக்கறையும் குறையாமல் அவர்கள் தங்களுடைய உழைப்பை வழங்குகிறார்கள். இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதனால் இயக்குநர் பிரேம் ஆனந்த் உள்ளிட்ட அந்த மூவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். 
 
இசையமைப்பாளர் ஆஃப்ரோ புதிய இளம் திறமையாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி கொண்டிருக்கிறார். அதனால் அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ‘வேட்டை மன்னன்’ படத்தில் நடித்த போதே எனக்கு ரெடின் கிங்ஸ்லியை தெரியும். அப்போதே இயக்குநர் நெல்சனிடம் இவர் எதிர்காலத்தில் பெரிய காமெடியனாக வருவார் என்று சொன்னேன். அப்போது நெல்சன் சிரித்தார். இன்று நெல்சன், ரெடின் இல்லாமல் எந்த படத்தையும் இயக்குவதில்லை. 
 
இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்தப் படத்தை பார்த்தேன். எங்கள் இயக்குநர் கௌதம் மேனனை இப்படி செய்வீர்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை.  இதற்காகவாவது உங்களை நான் சும்மா விடப்போவதில்லை. இருந்தாலும் இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். 
 
சந்தானத்தை பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கிறது. சந்தானம் எல்லா மேடைகளிலும் உங்களை குறிப்பிட்டு பேசுகிறார். இதன் பின்னணி என்ன என்று என்னிடம் பலமுறை பலர் கேட்டிருக்கிறார்கள். அவர்களிடம் அதுதான் அவரின் கேரக்டர் என பதிலளித்திருக்கிறேன். இந்தத் தருணத்தில் அனைவரிடத்திலும் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் ஏதாவது ஒரு உதவியை செய்கிறீர்கள் என்றால் எதையும் எதிர்பார்க்காமல் செய்யுங்கள். எதிர்பார்ப்பை மனதில் வைத்துக் கொண்டு யாருக்கும் உதவ வேண்டாம். சிலர் நாம் செய்த உதவியை மனதில் வைத்துக் கொண்டு அதற்கு உரிய மரியாதையை அளித்து பேசுவார்கள். பலர் இதை புறக்கணித்து விடுவார்கள். அதனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்யுங்கள். 
 
சந்தானத்தின் இப்படம் அவருடைய நெக்ஸ்ட் லெவலாக இருக்கும். ‘எஸ் டி ஆர் 49’ இல் நாங்கள் இருவரும் இணைந்து இருக்கிறோம். ஏன் என்பதை சொல்ல விரும்புகிறேன். இன்றைய சினிமாவில் காமெடி குறைந்து விட்டது.

ஆட்டோ ஓட்டுநரிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம்….!

தூத்துக்குடியில் பட்டா மாறுதலுக்காக ஆட்டோ ஓட்டுநரிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி பண்டாரம்பட்டியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பிரபாகரன் (45). இவரது மனைவி தமிழ்ச்செல்வி, சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்துவிட்டாராம். இதனால், அவா் தனது மனைவி பெயரில் பண்டாரம்பட்டியிலுள்ள நிலத்தை பட்டா மாற்றம் செய்வதற்காக, தூத்துக்குடி கங்கா பரமேஸ்வரி நகரில் செயல்பட்டுவரும் சங்கரப்பேரி கிராம நிா்வாக அலுவலகத்தில் கடந்த மாதம் விண்ணப்பித்தாா். அந்த விண்ணப்பம் இருமுறை நிராகரிக்கப்பட்டதாம்.

இதுதொடா்பாக அவா் அந்த அலுவலகத்துக்குச் சென்று கேட்டபோது, கிராம நிா்வாக அலுவலா் கணேசமூா்த்தி ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வேண்டும் எனக் கேட்டாராம். இதையடுத்து, பிரபாகரன் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகாா் தெரிவித்தாா். போலீஸாரின் ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய ரூ. 3 ஆயிரத்தை கணேசமூா்த்தியிடம் பிரபாகரன் திங்கள்கிழமை கொடுத்தாா். அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பீட்டா்பால் தலைமையிலான போலீஸாா் கணேசமூா்த்தியைக் கைது செய்தனா். தொடா்ந்து, அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.

இன்றைய தங்கத்தின் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 1000 உயர்ந்து ரூ. 72,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த சில நாள்களாக குறைந்துவந்த நிலையில், மே 3-ஆம் தேதி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ. 8,755-க்கும், சவரன் ரூ. 70,040-க்கும் விற்பனையானது.

அதைத் தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ரூ. 8,775-க்கும், சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 70,200-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1000 உயர்ந்து ரூ. 72,200-க்கும் கிராமுக்கு ரூ. 125 உயர்ந்து ரூ. 9,025-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ. 107.90-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 100 குறைந்து ரூ. 1,07,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

6வது சர்வதேச சிவசித்தாந்த மாநாட்டின் நிறைவு விழா!

சென்னை, காட்டாங்குளத்தூர்:
 
திருக்கயிலாயப் பரம்பரைத் தருமை ஆதீனம் அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம் இணைந்து நடத்திய ஆறாவது அனைத்துலக சைவசித்தாந்த மாநாடு, எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் விமர்சையாக நிறைவடைந்தது.
 
இந்த விழாவிற்கு மதிப்பிற்குரிய ஆன்மிக மற்றும் கல்வி துறையின் முன்னணி பிரபலங்களின் பங்கேற்பு இருந்தது. அவற்றில் தருமையாதீனம் 27-ஆவது குருமகாசந்திதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமிகள், தர்மபுரம்; மாண்பமை சி.பி. இராதாகிருஷ்ணன், மகாராஷ்டிரா ஆளுநர்; டான் ஸ்ரீ டத்தோ டாக்டர். ஆர். நடராஜா, தலைவர், ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில், கோலாலம்பூர்; திருமதி பாரதி பாஸ்கர், தமிழ்ப்பேச்சாளர்; டாக்டர் ரவி பச்சமுத்து, இணைவேந்தர் (நிர்வாகம்), எஸ்.ஆர்.எம்; முனைவர் கரு. நாகராசன், தலைவர், தமிழ்ப்பேராயம்; முனைவர் ஸ்ரீமத் மௌன திருஞானசம்பந்தத் தம்பிரான் ஸ்வாமிகள், கட்டளை விசாரணை, ஸ்ரீ மௌனமடம், திருச்சிராப்பள்ளி; மற்றும் திரு. மறை. வெற்றிவேல், மாநாட்டுப் பொறுப்பாளர், தருமையாதீனம், ஆகியோர் வருகைதந்தனர்.
 
“கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில், தமிழில் பூஜை செய்யக்கூடிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட அர்ச்சகர்களை உருவாக்கி, தமிழில் வழிபாடு நடைபெற வழிவகுத்துள்ளோம் — இது தமிழ்ச் சமயத்திற்கு கிடைத்த ஒரு பெரும் வெற்றி. பக்தியை வளர்த்தால், பண்பாடும், ஒழுக்கமும், கருணையும் வளர்கின்றன. இளைஞர்களிடம் பக்தியும் நெறிகளும் பதியும்போதுதான் சமூக மாற்றம் நிகழும்.” — கரு நாகராஜன், தலைவர், தமிழ்ப் பேராயம்
 
“சைவ சித்தாந்தம் என்பது நூலில் இருக்கக்கூடிய ஞானம் மட்டும் இல்லை; நெஞ்சில் நிலைத்திருக்க வேண்டிய ஒழுக்க நெறி!”  — திருமதி. பாரதி பாஸ்கர், தமிழ் பேச்சாளர்
 
“சைவ சித்தாந்த மாநாடு, நமது ஆன்மிக அறிவின் பகிர்வுக்கான முக்கியத் தளமாக இருக்கின்றது. இந்நிகழ்வு, சைவ சித்தாந்தத்தின் உண்மைகள் மற்றும் அதன் பரம்பரை தத்துவங்களை உலக அளவில் பரப்பி, ஒவ்வொரு மனிதனுக்கும் ஆன்மிக வளர்ச்சி மற்றும் அறிவு பெறும் வழியைக் காட்டுகின்றது.” — டாக்டர். ரவி பச்சமுத்து, இணைவேந்தர் (நிர்வாகம்), எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்.
“சைவசித்தாந்தத்தின் ஆதாரம் கூறும் பொருள், ஆணவம், கண்ணியமும், மாயையும் நீக்கி ஆன்மா இறைவனின் திருவடியைச் சேர்ந்தபோது, உண்மையுடன் இணைகின்றது.
 
சைவசித்தாந்தத்தின் போதனைகளின் மூலம், உண்மையான அறிவு உள்ளிலிருந்து மலர்ந்துவிடுகிறது, அப்போது ஆன்மா, பற்றலும் ஆணவமும் இலங்கை, இறைவனின் திருவுருவுடன் ஒன்றாகிறது.” — தருமையாதீனம் 27-ஆவது குருமகாசந்திதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமிகள், தர்மபுரம்
 
“முன்னேற்றத்தின் பயணத்தில், நம்முடைய பண்டைய அறிவைக் கடைபிடிப்பதையே நாம் உண்மையான புதுமை என எண்ண வேண்டும். நாம் முன்னேறும் போதிலும், எங்கள் பூர்வீகங்களின் காலந்தாண்டிய கற்பனைகளைக் கௌரவிப்போம். அவற்றை கடந்த காலத்தின் கண்ணாடியாக மட்டும் பார்க்காமல், எதிர்காலத்தை உருவாக்குவதற்கு வழிகாட்டி என்று பார்த்துக்கொள்ள வேண்டும். எங்கள் பாரம்பரியம், நாம் இருந்ததை மட்டுமல்ல, நாம் என்ன ஆக முடியும் என்பதற்கான கட்டிடக்கல்.” — ஸ்ரீ சி.பி. இராதாகிருஷ்ணன், மகாராஷ்டிரா மாநில ஆளுநர்.
 
இந்த விழா, மாநாட்டின் வெற்றிகரமான நிறைவையும் அதன் உலகளாவிய முக்கியத்துவத்தையும் குறிக்கிறது. சைவசித்தாந்தம் மற்றும் தமிழின் ஆன்மிக பாரம்பரியத்தை கல்வி மற்றும் கலாச்சார வழியில் பாதுகாக்க அனைவரும் கொண்டுள்ள ஒன்றுபட்ட உறுதியை இது மீண்டும் உறுதிபடுத்துகிறது.

உடனடி நோயறிதல் காரணமாகத் தீர்த்து வைக்கப்பட்ட எட்டு வயது சிறுமியின் மருத்துவ மர்மம்!

சென்னை:

ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனையில், சிறுநீர் கட்டுப்பாடின்மை காரணமாகப் பல ஆண்டுகளாக தொடர்ந்து அசௌகரியத்தை அனுபவித்த எட்டு வயது சிறுமிக்கு, ஒரு தனித்துவமான பைலேட்ரல் இன்ட்ராவெசிகல் ரீ-இம்பிளான்டேஷன் (Bilateral Intravesical Reimplantation Surgery) அறுவைs சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எக்டோபிக் யூரிட்டர் (Ectopic Ureter) எனப்படும் அரிய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் எனக் கண்டறியப்பட்டு, அறுவைச் சிகிச்சையினால் இறுதியாக முழு நிவாரணம் பெற்றுள்ளார். அவர், இன்று குணமடைந்து வருவது விடாமுயற்சி, கருணைகூர் பராமரிப்பு, மற்றும் முழுமையான மருத்துவ நிபுணத்துவத்தின் வல்லமைக்கு சான்றாக நிற்கிறது.

எக்டோபிக் யூரிட்டர் என்பது சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரைக் கொண்டு செல்லும் சிறுநீர்க்குழாய், சிறுநீர்ப்பையுடன் சரியாக இணையாமல், சிறுநீர்ப்பைக்கு வெளியே இணைந்திருக்கும் ஒரு பிறவி குறைப்பாடாகும். இது சிறுநீர் வெளியேற்றத்தில் ஒழுங்கற்றத்தனத்தை ஏற்படுத்தி, சிறுநீர் கட்டுப்பாடின்மை போன்ற அறிகுறிகளைத் தோற்றுவிக்கும், குறிப்பாக பெண்களில். குழந்தைப் பருவத்திலிருந்தே, அச்சிறுமி தொடர்ந்து சிறுநீர் கசிவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் இரவும் பகலும் டயப்பர்களையே சார்ந்து இருக்க வேண்டிய நிலையிருந்தது. பல ஆண்டுகளாக ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவருடைய பிரச்சனை என்பது மீண்டும் மீண்டும் வரும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் வுல்வோவஜினைடிஸ் (Vulvovaginitis) என்று தவறாகக் கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான ஈரப்பதம், கடுமையான தோல் உரிதல் போன்ற  உடல் அசௌகரியத்துடனும், தனிமை, பழிச்சொல் போன்ற மனவலியுடனும் போராடியுள்ளார்.

ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனையின் குழந்தை -சிறுநீரக மருத்துவ நிபுணரும், மூத்த ஆலோசகரும், மருத்துவருமான சங்கீதாவின் பராமரிப்பின் கீழ் வந்தபோது, ​​குழந்தையின் பயணம் நம்பிக்கைக்குரிய திருப்பத்தை எடுத்தது. விரிவான மருத்துவ மதிப்பீட்டின் போது, ​​ சிறுநீர்க்குழாயிலிருந்து தொடர்ச்சியான சிறுநீர் கசிவிற்குக் காரணம், எக்டோபிக் யூரிட்டராக இருக்குமோ என்ற சந்தேகத்தை அடைந்தது மருத்துவ குழு. அல்ட்ராசவுண்ட், MR யூரோகிராம் மற்றும் சிஸ்டோஸ்கோபி உள்ளிட்ட மேலதிக மருத்துவ ஆய்வுகள், குழந்தையின் நிலை குறித்து முக்கியமான நுண்ணறிவுகளை வழங்கின. நோயைக் கண்டறிந்ததும், அறுவைச் சிகிச்சை தான் தீர்வு எனும் தெளிவு கிடைக்கப்பெற்றது. குழந்தை அறுவைச் சிகிச்சை நிபுணரும் மருத்துவரான ராகுல் M அவர்களின் நிபுணத்துவத்தின் கீழ், குழந்தைக்கு பைலேட்ரல் இன்ட்ராவெசிகல் யூரிட்ரிக் ரீ-இம்பிளான்டேஷன் (Bilateral Intravesical Ureteric Reimplantation Surgery) அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய மாற்றம் குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாகச் சிறுநீர் கட்டுப்பாடின்மையில் போராடிய பிறகு, அந்த சிறுமி தற்போது பகலிலும் இரவிலும் நிம்மதியாக இருக்கிறார். இரண்டு மணி நேரம் வரை சிறுநீரைக் கட்டுப்படுத்தும் சாதனை என்பது, ஒரு காலத்தில் சாத்தியமற்றதாக இருந்தது. இப்போது அவர் புது நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்க்கையை எதிர்கொள்கிறார். “எக்டோபிக் யூரிட்டர் என்பது அரிதான நோயாக இருந்தாலும், விடாப்பிடியான சிறுநீர் கட்டுப்பாடின்மைக்கு ஒரு மறைமுக காரணமாக இருக்கலாம், குறிப்பாக இளம் பெண்களில்” என்று மருத்துவர் சங்கீதா விளக்கினார்.

“இந்த விஷயத்தில், விரிவான வரலாறு மருத்துவ பரிசோதனைகளின் வழியாக மூல காரணத்தைக் கண்டறிந்து, அவளுக்கு ஒரு சாதாரண, மகிழ்ச்சியான குழந்தைப் பருவத்தை அனுபவிக்க ஒரு வாய்ப்பை வழங்க எங்களுக்கு உதவியது” என்றார். சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை, ஒரு முன்னணி சுகாதார நிறுவனமாகும். நரம்பியல், இருதயவியல், இரைப்பை குடல், பெண்கள் மற்றும் குழந்தை நலம், எலும்பியல், மூட்டு புணரமைப்பு, சிறுநீரகம், சிறுநீரகம் முதலிய சிறப்புப் பிரிவுகளில், மேம்பட்ட மருத்துவமும், அறுவை சிகிச்சை வசதியும் வழங்குகின்றது. பிரத்தியேக நிபுணர்கள் குழு, 50+ கிரிட்டிக்கல் கேர் படுக்கைகள், 20+ NICU படுக்கைகள், 7+ ஆபரேஷன் தியேட்டர்கள், ஒரு மேம்பட்ட கேத் லேப், 3T MRI மற்றும் 4K + 3D நரம்பியல் நுண்ணோக்கி, உறுப்பு மாற்று சிகிச்சை வசதிகள், 24/7 டயாலிசிஸ் பிரிவு போன்ற அதி நவீன வசதிகளின் மூலம் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவையை, உலகம் முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு வழங்குகின்றது.

Dr Agarwals Eye Hospital’s Reticon 2025

Chennai: 

Dr Agarwals Eye Hospital, a leader in eye care in the country with a growing global presence, organised Reticon 2025,

A scientific meeting dedicated to advancements in retina care, with the theme of “Advancements in Retina”, bringing together over 1500 vitreoretinal specialists, postgraduates, and general ophthalmologists from India and abroad.

Reticon 2025 was inaugurated by Dr. Kalanidhi Veeraswamy, Member of Parliament, Chennai North and guest of honor Dr. Mohan Rajan, Vice President, All India Ophthalmological Society in the presence of Prof. Dr. Amar Agarwal, Chairman of Dr Agarwals Eye Hospital, and Dr. Ashvin Agarwal, Chief Clinical Officer.

The annual event, stepping into its 15th year, aimed at disseminating the latest knowledge on diagnosing and managing vitreoretinal disorders, offering updates on cutting-edge techniques and technologies in this rapidly evolving field. It featured over 30 distinguished speakers, including both national and international experts, who led a series of six focused scientific sessions covering key topics in vitreoretinal care. International faculty included Dr. Aniruddha Agarwal, Dr. Jesse Sengillo, and Dr. Kelvin Teo. Reticon 2025 also hosted the exciting Retina Premier League where Teams showcased the most challenging cases, and the best team was awarded. Debates on critical topics related to treatments and surgeries were also a part of the event. Hands-on Wet Lab courses were also conducted, offering practical training on Glued IOL, SFT (Scleral Fixated Techniques), and Intravitreal Injections, giving participants a valuable opportunity to enhance their surgical skills.

In his comments, Prof. Dr. Amar Agarwal, Chairman, Dr Agarwals Eye Hospital said:

“We are proud to have been organising Reticon with such dedication over the years, creating a platform that not only updates specialists on the latest advancements in vitreoretinal care but also puts India’s prowess in eye care firmly on the global map. Reticon 2025 offers vitreoretinal specialists, fellows, postgraduate students, and general ophthalmologists a unique opportunity to explore cutting-edge techniques, innovative surgical approaches, and evolving treatment options, all aimed at delivering better outcomes for patients worldwide. The knowledge shared at Reticon not only helps in refining surgical skills and clinical practice but also inspires a spirit of innovation and excellence among the next generation of ophthalmologists. We believe that through such continuous learning, we can collectively raise the standards of retina care both nationally and internationally.”

Talking about the benefits of the event, Dr. Ashvin Agarwal, Chief Clinical Officer, Dr Agarwals Eye Hospital said:

“The theme of Reticon 2025, ‘Advancements in Retina’ reflects the tremendous progress being made in diagnosing and treating vitreoretinal diseases. This year’s sessions covered a broad and crucial spectrum – from emerging trends in medical retina and innovative approaches to pediatric uveitis, to surgical management of inherited retinal dystrophies, and the exciting future of AI in disease management. Our hands-on Wet Lab courses, focusing on techniques like Glued IOL, SFT, and intravitreal injections, provided participants with invaluable practical experience. With an outstanding lineup of over 30 expert speakers from India and abroad, Reticon proved to be a rich learning platform. Events like these are vital for young doctors, undergraduates, and postgraduate students, giving them early exposure to the latest knowledge, techniques, and global perspectives that will shape the future of eye care.”

In his comments, Dr. Manoj Khatri, Clinical Lead and Head – Department of Vitreo-Retina, Dr Agarwals Eye Hospital said:

“Diseases of the retina have historically received low priority in blindness prevention programs across developing nations, despite the fact that they account for 4.7% of all cases of blindness in India, a figure that is expected to rise in the coming years. Vitreoretinal diseases, which affect the delicate structures of the vitreous and retina, can cause significant and irreversible vision loss if not identified and managed in time. Conditions like retinal detachment, diabetic retinopathy, macular holes, and vitreous hemorrhage highlight the urgent need for specialised care. At events like Reticon, the global exchange of views, experiences, and best practices becomes critically important. By learning from international advancements and sharing insights across borders, we can transform the landscape of eye care in India and ensure that more patients benefit from early diagnosis, innovative treatments, and better clinical outcomes.”

The organising committee for Reticon 2025 comprised Dr. Ashvin Agarwal, the Program Director. The committee included Dr. Parveen Sen, Dr. Padma Preetha N, and Dr. Triveni V of Dr Agarwals Eye Hospital.

 6-வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு!

ட்டான்குளத்தூர்:
 
சைவ பாரம்பரியம் மற்றும் தமிழ் ஆன்மிகத் தத்துவங்களின் சங்கமமாக, மதிப்பிற்குரிய தருமபுரம் ஆதீனமும், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் (SRMIST) தமிழ் பேரவையும் இணைந்து நடத்தும் 6-வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு இன்று சிறப்பாக தொடங்கப்பட்டது. 
 
இதில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த தமிழ் அறிஞர்கள், ஆன்மிக தலைவர்கள், மாணவர்கள் மற்றும் பன்னாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டு இந்த மாநாட்டை அறிவியல் மற்றும் ஆன்மிகத் தேடல்களின் பிரத்யேக விழாவாக மாற்றினர்.
 
இந்நிகழ்வில் இந்திய அரசின் கௌரவ சுகாதார மற்றும் குடும்ப நலவியல் அமைச்சர் மற்றும் வேதியியல் மற்றும் உரமியல் அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா மற்றும் தமிழ்நாட்டு ஆளுநர் திரு ஆர்.என். ரவி ஆகியோர் கலந்து கொண்டு, இம்மாநாட்டின் தேசிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.
 
இந்நிகழ்வில் பங்கேற்ற ஆன்மிகத் தலைவர்கள்: தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குரு மகாசன்னிதானம், ஸ்ரீலஸ்ரீ கைலாய மசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்; மதுரை ஆதீனத்தின் 293-வது குரு மகாசன்னிதானம், ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள்; குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் 46-வது குரு மகாசன்னிதானம், ஸ்ரீலஸ்ரீ பொன்னம்பல அடிகளார், ஆகியோர் வருகை தந்து ஆன்மிக அன்பும் பாரம்பரிய மரியாதையும் வார்த்தனர்.
 
“அறிவியல் மற்றும் ஆன்மீகம் வெவ்வேறு பாதைகளில் பயணிக்கலாம்; ஆனால் இரண்டும் தேடும் உண்மை ஒன்றே —கட்டுப்படுத்தாமல், பணிவுடன் புரிந்து கொள்ளும் உண்மை,” என்று எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் முனைவர் திரு ப. சத்தியநாராயணன் அவர்கள் கூறினார்.
 
“மதம் என்பது நன்மை செய்வதற்கும் நன்றாக இருப்பதற்கும் ஆகும். மொழி பாதுகாப்பு, மதங்களுக்கு இடையிலான மரியாதை மற்றும் பன்னாட்டு கல்வி பரிமாற்றம் போன்ற முயற்சிகள் மூலமாக எஸ்.ஆர்.எம்.இன் பாரம்பரியத்திற்கும் புதுமைக்கும் பாலமாக செயல்படுகிறது,” என்று எஸ்.ஆர்.எம். நிறுவனத் தலைவர் திரு டி.ஆர். பாரிவேந்தர் அவர்கள் கூறினார்.
 
“சைவ சித்தாந்த மாநாட்டின் நோக்கம் பதி, பசு, பாசம், மாயை எனும் நான்கு சைவக் கோட்பாடுகளின் தெய்வீக சிந்தனைகளைப் பரப்புவதும் பின்பற்றுவதுமாகும். 12 அமர்வுகளில் 300க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன; 75 புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. 14 நாடுகள் பங்கேற்று, 1984 இல் தொடங்கப்பட்ட பாரம்பரியத்தை தொடர்கின்றன. இது அறிவும் ஒருமைப்பாட்டும் சேர்ந்த புனித அர்ப்பணமாகும்,” என்று தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குரு மகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கைலாய மசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்தார்.
 
“சைவ சித்தாந்தம் என்பது வெறும் மதத் தத்துவம் அல்ல — ஆன்மா, இறை, மற்றும் உலகம் ஆகியவைக்கு இடையே உள்ள புனித உறவை விளக்கும் நாகரிக ஆற்றல். பக்தி, நற்குணம், மற்றும் தெய்வ அனுக்கிரகத்தின் மூலம் செல்கின்ற ஆன்மிக வழி இது. இன்றைய மருத்துவ முன்னேற்றங்களுடன், அறிவியல், மனிதநேயம் மற்றும் மதம் இணைந்து மனித வாழ்க்கைக்கும் உயர் உண்மைக்கும் சேவையளிக்கின்றன,” என்று அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா அவர்கள் பேசினார்.
 
“சைவ சித்தாந்தம் தத்துவப் பாடத்திட்டங்களில் இடம்பெற வேண்டும். திருமுறை போன்ற நூல்கள் தமிழிலக்கியத்தின் உச்சமாக ஏற்கப்பட வேண்டும். மரபுகளின் புறக்கணிப்பு நிகழும் நிலையில், பல்கலைக்கழகங்கள் அவற்றை பாதுகாத்து வளர்க்க முனைய வேண்டும். இம்மாதிரியான மாநாடுகள் அறிவுசார் வளர்ச்சிக்கு ஊக்கமளித்து, கலாசார விழிப்புணர்வை மீண்டும் உருவாக்குகின்றன,” என்று தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என். ரவி அவர்கள் வலியுறுத்தினார்.
 
உலக அமைதிக்காக நேற்று மாணவர்கள் மத்தியில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது, இந்த மாநாட்டின் தொடக்க விழாவை சிறப்பித்தது. 100 வீரர்கள் கலந்து கொண்ட டார்ச் ஓட்டம் செங்கல்பட்டில் இருந்து துவங்கப்பட்டு, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நிறைவடைந்தது. புதுநிலைத் துணைவேந்தர் டாக்டர் நிதின் எம். நாகர்கர் மற்றும் தமிழ் பேரவைத் தலைவர் டாக்டர் கருநாகராசன், ஆகியோர் தலைமை வகித்தனர்.
 
மேலும், எஸ்.ஆர்.எம். அவசர மற்றும் பேரிடர் மருத்துவமனை, மற்றும் எஸ்.ஆர்.எம். இதயவியல் அறிவியல் நிறுவனம் ஆகியன திரு ஜெ.பி. நட்டா அவர்களால் திறந்து வைக்கப்பட்டன. இதில் திரு ஆர்.என். ரவி, திரு டி.ஆர். பாரிவேந்தர், இணைவேந்தர் (கல்விசார்) டாக்டர் ப. சத்தியநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இது எஸ்.ஆர்.எம்-இன் உலக தர மருத்துவ சேவைக்கான அர்ப்பணிப்பை மெய்ப்பிக்கும் இன்னொரு படியாகும்.
 
மாநாட்டின் முக்கிய சிறப்பம்சமாக, 300 மேற்பட்ட ஆய்வுப் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த பிரபல அறிஞர்கள் சைவ சித்தாந்தத்தின் தத்துவம், மற்றும் கலாசார பரிமாணங்களைப் பற்றி புதிய வெளிச்சத்தில் ஆராய்ந்து பேசுகின்றனர்.
 
இந்த நிகழ்வு சைவ சித்தாந்தத்தின் நவீனத்துவ பயன்பாட்டையும், தமிழ் அடையாளம், ஆன்மீகம் மற்றும் அறிவுத் துறை மரபுகளோடும் கொண்டுள்ள ஆழமான உறவையும் மீண்டும் நிரூபிக்கிறது.

25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த மாணவ மாணவிகள்!

சென்னை:

தண்டையார்பேட்டை படேல் நகர் 3 வது தெருவில் சென்னை மாநகராட்சி மேல்நிலை பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 2000-2001 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ மாணவிகள் 25 ஆண்டுகள் கழித்து அனைவரும் இன்று அப்பள்ளியில் சந்தித்தனர். சந்தித்த மகழ்ச்சியில் அனைவரும் ஒருவருக்கொருவர் கட்டி அனைத்து அன்பை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில் அன்று பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர்களை அழைத்து கவுரவித்து ஆசிர்வாதம் பெற்றனர்.

MNK Hello Digital Multi Trades LLP

 
Chennai:
 
Shri Manish Kumar Benia, Founder, Co-Founder Shri Sandeep, Dr. Srinivasan Selvaraj-State Project Coordinator, Dr. Guganendrian P -State Technical Head and Dr. A.Puthiya Selvam – State Operation Head of MNK Hello Digital Multi Trades LLP, today in an insightful discussion on the Awareness of Educational programs in Tamil Nadu. The focus was on innovative Awareness is One Nation One Student ID (APAAR/ABC) and other ground breaking measures aimed at improving Benefit, confidents and empowering students across the state.
 
APAAR is a unique initiative to provide every student with a unified digital identity. This ID will serve as a lifelong academic credential, ensuring seamless access to education and career opportunities nationwide. Academic Bank of Credits has been established on the lines of the National Academic Depository (NAD), in the sense, NAD is the backbone of ABC, where the students’ academic data are held and academic awards are stored (i.e. storehouse of academic awards). Despite the fact that ABC enables students to register or commence credit transfer, the final outcomes of credit redemption and issuance of certificates, as well as the compilation of award records, are administered by academic institutions via the NAD Platform.
 
“Tamil Nadu has immense potential to become a leader in the digital Education System. By adopting these Awareness programs, we aim to bring the Education system closer to the student and empower every student with the tools they need to thrive in the digital age,” said Shri Manish Kumar Benia, Founder, Co-Founder Shri Sandeep, Dr. Srinivasan Selvaraj-State Project Coordinator, Dr. Guganendrian P -State Technical Head and Dr. A.Puthiya Selvam -State Operation Head.