ன்று நாம் தெரிந்து கொள்ளும் மூலிகை ‘அமுக்குரா’ எனும் ஒரு குத்து செடி இதற்கு ஆயுர்வேதத்தில் ‘அஸ்வகந்தா’ என்ற பெயரும் உண்டு அஸ்வா என்றால் குதிரை என்ற பொருளும் உண்டு இந்த மூலிகையை ஒரு ஆண்மகன் பக்குவப்படுத்தி பயன்படுத்தும் போது இல்லற வாழ்க்கையில் அவனது சக்தி குதிரைக்கு இணையாக இருக்கும் என்ற பொருளும் நாம் எடுத்துக் கொள்ளலாம் இது சாதாரணமாக மலைப்பகுதிகளில் வளரக்கூடியது.

இதன் வேர்ப்பகுதி மட்டுமே நமக்கு ஆண்மை விருத்திக்கான மருந்தாக பயன்படுகிறது இதன் வேர்களை சேகரித்து பாலில் புட்டு அவியல் செய்து இடித்து சூரணம் செய்து காலை மாலை இரண்டு கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர நரம்பு மண்டலங்கள் வலிமை அடையும் விந்து உற்பத்தி அதிகமாகும் மற்றும் நன்கு உறக்கம் வரும் மேலும் இதில் வரும் பழங்களை நாம் துவையல் செய்து சாப்பிடலாம்.

அமுக்குரா இதை பிரித்து பொருள் பார்த்தால் உறவில் ஆண்களுக்கு அமுக்கத்தை அதாவது போதிய அளவு நேரத்தை கூட்டக்கூடிய தன்மை கிடைக்கும் என்றும் பொருள் எடுத்துக் கொள்ளலாம். இதன் இலைகள் உடலில் வரும் கட்டிகளை பழுக்க வைக்க பயன்படுகிறது மேல் பூச்சியாக பயன்படுத்த கட்டிகள் பழுத்து உடையும்.

இப்படிப்பட்ட ஒரு சிறப்பான மூலிகை நரம்பு மண்டலங்களை பலப்படுத்த தூக்கத்தை வரவழைக்க உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் இதை அனைவரும் பயன்படுத்தி பலன் அடையுங்கள் நன்றி.

தொடர்பு கொள்ள:

திரு. கனகராஜ் (பாரம்பரிய வைத்தியர்)
சரவணா ஹெர்பல்ஸ், சேலம்
9942558530

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here