லங்​கையை பூர்வி​க​மாகக் கொண்ட 37 வயது பெண் ஒரு​வர் கனடா நாட்​டின் குடி​யுரிமை பெற்று அங்கு வசித்து வரு​கிறார். இவர், சென்​னை​யில் உள்ள ஒரு பிரபல தனி​யார் தொலைக்​காட்​சி​யில் நடை​பெற்ற பாட்​டுப்​போட்​டி​யில் கலந்து கொள்ள சில மாதங்​களுக்கு முன்பு சென்னை வந்​தார். அப்​போது அவர், பெசன்ட் நகர் கடற்​கரைக்​குச் சென்​ற​போது, அங்கு கிளி ஜோசி​யம் பார்த்து வந்த தென்​காசி​யைச் சேர்ந்த இசக்கி முத்து (48) என்​பவரிடம் ஜோசி​யம் பார்த்​துள்​ளார்.

அவர் அந்​தப் பெண்​ணின் கடந்த கால வாழ்க்​கையை சரி​யாகக் கணித்​துக் கூறிய​தால், ஜோசி​யர் மீது அந்​தப் பெண்​ணுக்கு நம்​பிக்கை ஏற்​பட்​டது. இதற்​காக முதல்​கட்​ட​மாக ரூ.20 ஆயிரம் கட்​ட​ண​மாகக் கொடுத்​துள்​ளார். இதை தனக்கு சாதக​மாகப் பயன்​படுத்​திக் கொண்ட ஜோசி​யர், பரி​கார பூஜைகள் செய்​தால் வாழ்க்​கை​யில் மேலும் உயரலாம் என ஆசை வார்த்தை கூறி​யுள்​ளார். மேலும், தோஷம் நீங்க நிர்​வாண பூஜை செய்ய வேண்​டும் என்​றும் வற்​புறுத்​தி​யுள்​ளார். அதை நம்​பிய அந்​தப் பெண், தனது தங்​கும் அறை​யில் இருந்​த​வாறே நிர்​வாண பூஜை செய்ய, அதை ஜோசி​யர் தனது செல்​போன் வீடியோ காலில் கண்டுகளித்​துள்​ளார். இதற்கு கட்​ட​ண​மாக ரூ.70 ஆயிரத்​தை​யும் பெற்​றுக்​கொண்​டார்.

மீண்டும் சென்னைக்கு வந்த செய்தியை அறிந்த கேடி கிளி ஜோதிடர் அந்​தப் பெண்​ணைத் தொடர்பு கொண்​டு, “பூஜை செய்ய வேண்​டும், உன்​னுடைய நிர்​வாண புகைப்​படங்​களை அனுப்​பு” எனக் கேட்டு பெற்​றுள்​ளார். பின்​னர், தனக்கு ரூ.1 லட்​சம் பணம் தர வேண்​டும் என்​றும், தங்​கும் அறைக்கு வந்து செல்ல வேண்​டும் என்​றும் மிரட்​டி​யுள்​ளார். அதற்கு அந்த பெண் மறுக்​கவே, புகைப்​படங்​களை சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்டு விடு​வ​தாகக் கூறி மிரட்​டல் விடுத்​துள்​ளார்.

இதனால் அதிர்ச்​சி​யடைந்த அந்​தப் பெண், தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதன்​பேரில் வழக்​குப்​ப​திவு செய்த போலீ​ஸார், தென்​காசி சென்று கிளி ஜோசி​யர் இசக்கி முத்​துவை நேற்​று முன்​தினம்​ இரவு கைது செய்​தனர்​.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here