டலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவரது மனைவி 26 வயதுடைய காமாட்சி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக கணவரைப் பிரிந்து தந்தை வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை காமாட்சி சரமாரியாக தாக்கப்பட்ட வீட்டிற்கு வெளியே உயிரிழந்து கிடந்த நிலையில் அவருக்கு அருகிலேயே அவரது தந்தையான பாண்டுரங்கன் என்பவரும் அடிபட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட காமாட்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே இளம்பெண்ணை படுகொலை செய்த அதே ஊரைச் சேர்ந்த 63 வயதுடைய மகேந்திரன் என்ற முதியவரை அண்ணாமலை நகர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீஸ் எஸ்பி ஜெயக்குமார் விசாரணை நடத்தியதை தொடர்ந்து இதில் பல்வேறு முக்கிய தகவல்களும், கொலைக்கான காரணமும் தெரிய வந்துள்ளது. அதே ஊரைச் சேர்ந்த முதியவரான மகேந்திரன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார், மேலும் மிகவும் வேண்டியவர்களுக்கு அவ்வப்போது பணமும் கொடுத்து உதவி செய்து வந்துள்ளார். அந்த வகையில் காமாட்சிக்கு அவர் இரண்டு லட்சம் ரூபாய் வரை கடனாக பணம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மகேந்திரன் இளம் பெண் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு அவருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முயன்றுள்ளார். மேலும் தனது கிராமத்தில் அந்தப் பெண் தன்னுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பதாக தவறான தகவலை பரப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளம் பெண் காமாட்சி மகேந்திரனை வரவழைத்து அவர் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோ காட்சிகளை எடுத்துள்ளார். அதில் “நான் உன் கூட தொடர்புல இருக்கேனா.. நீ என்ன வெச்சிட்டு இருக்கியா.. உனக்கு ஆசையா இருந்த உன் பொண்ணு கிட்ட போய் கேளு.. என் வாழ்க்கையையே கெடுத்துட்டியே” என இளம் பெண் கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்து பின்னர் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இந்நிலையில் ஊருக்கு வந்த மகேந்திரன் தெரிந்தவர்கள் மூலம் காமாட்சியிடம் இருந்த வீடியோ எடுத்த செல்போனை வாங்கி விட்டார். ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்போனில் பதிவான காட்சிகள் அந்தப் பகுதியில் உள்ள சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து இதனால் அதிர்ச்சியும் அவமானமும் அடைந்த மகேந்திரன் நேற்று காலை தனது வயலுக்கு செல்லும் போது காமாட்சி வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்ததை பார்த்திருக்கிறார்.

பின்னர் வயலுக்குச் சென்று இரும்பு பைப்பை எடுத்து வந்து காமாட்சியை சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளார். அதை தடுக்க வந்த அவரது தந்தையையும் தாக்கினார் என்பது தெரிய வந்தது. எனவே அவரை கைது செய்த போலீசார் மேலும் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற நோக்கத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இந்த வழக்கில் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசைக்கு இணங்க மறுத்து தட்டிக்கேட்ட பெண்ணை முதியவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here