ஜார்க்​கண்ட் மாநிலத்​தைச் சேர்ந்த கரண், மோண்​டி, புனா​ பாடி ஆகிய 3 பேரும் சென்னை சூளை பகு​தி​யில் உள்ள கடை ஒன்​றில் பணி செய்ய கடந்த 3-ம் தேதி ரயில் மூலம் சென்னை எழும்​பூர் வந்​தடைந்​தனர். பின்​னர், அங்​கிருந்​து, ஆட்​டோ​வில் சூளை நோக்கி சென்று கொண்​டிருந்​தனர்.

பணம், செல்போன் பறிப்பு மோண்டி வழி​யில் இறங்​கி​ விட மற்ற இரு​வரும் ஆட்​டோ​வில் சென்று கொண்​டிருந்​தனர். அப்​போது, ஆட்டோ ஓட்​டுநர் மற்​றும் அவருக்கு அரு​கில் அமர்ந்​திருந்த நபருடன் சேர்ந்து ஆட்​டோ​வில் இருந்த கரண் மற்​றும் புனா​பாடி ஆகியோரை கத்​தி​யைக் காட்டி மிரட்​டி, அவர்​கள் வைத்​திருந்த செல்​போன்​கள் மற்​றும் பணத்தை பறித்​தனர். பின்​னர், அவர்​களை ரித்​தர்​டன் சாலை அருகே இறக்​கி​விட்டு தப்​பினர்.

அம்பத்தூர், அயப்பாக்கம் இதுகுறித்​து, எழும்​பூர் காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது. அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில், ஜார்க்​கண்ட் மாநில இளைஞர்​களை தாக்கி வழிப்​பறி​யில் ஈடு​பட்​டது அம்​பத்​தூர், அயப்​பாக்​கத்​தைச் சேர்ந்த நாக​ராஜ் (28) மற்​றும் அவரது கூட்​டாளி என்​பது தெரிய வந்​தது.

இதையடுத்​து, தலைமறை​வாக இருந்த நாக​ராஜை போலீ​ஸார் கைது செய்​தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் கூட்​டாளி​யான காஞ்​சிபுரம் மாவட்​டம், மேலக்​கோட்​டையூரைச் சேர்ந்த மணி​மாறன் (37) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here