தமிழக முதல்வர் விஜய், எங்கு சென்றாலும் அவரின் செயல்கள், இணையத்தில வைரலாகி வரும் நிலையில், இன்று அவர் தனது சொந்த தொகுதியான பெரம்பூரில், புதிய ரேஷன் அட்டை வழங்குவது மற்றும் ரேஷன் கடைகளில் ஆய்வுகள் மேற்கொண்ட நிலையில், ரேஷன் கடைசியில், அவர் மக்களுக்கு பொருட்கள் வழங்கியது குறித்து ரேஷன் கடை ஊழியர் ஒருவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
தமிழக முதல்வரும் த.வெ.க தலைவருமான விஜய், இன்று, தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு சென்றிருந்தார். அங்கு புதிய ரேஷன் அட்டை வழக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், 50-க்கு மேற்பட்டோலுக்கு தனது கையால் ரேஷன் அட்டை வழங்கினார். தொடர்ந்து ரேஷன் கடைசியில், பொருட்கள் எப்படி எடை போடுகிறார்கள் என்பதை ஆய்வு செய்த விஜய், தனது கையால் மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது அவர் காரில் வருவதை பார்த்து அப்பகுதி மக்கள் அனைவரும் அவரை வரவேற்க குவிந்தனர். சாலையின் இரு பக்கமும் மக்கள் நின்றுகொண்டு மலர் தூவி அவருக்கு வரவேற்பு அளித்தனர். பெரம்பூர் மட்டும் இல்லாமல், மற்ற பகுதிகளில் இருந்து மக்கள் முதல்வர் விஜயை பார்க்க திரண்டிருந்தனர். இந்த சந்திப்பில் விஜய் நடந்துகொண்ட விதம் குறித்து பலரும் மகிழ்ச்சியாக பாராட்டி வரும் பலரும் அவரை பார்ப்பதற்காக வந்ததாக கூறியுள்ளனர்.
அருகில் இருந்து பார்த்தது பெரிய மகிழ்ச்சியாக உள்ளது என்றும் பலரும் தெரிவித்துள்ள நிலையில், ரேஷன் கடைசியில், விஜய் மக்களுக்கு பொருட்கள் வழங்க, எடை போட்டு கொடுத்த பெண் ஊழியர் ஒருவர்
இது குறித்து பேசுகையில், அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை. எடை போட்டோம். அதை அவர் எடுத்து மக்களுக்கு கொடுத்தார். முதலில் சர்க்கரை போட்டோம். அதடுத்து பருப்பு, அதன்பிறகு ஆயில் அவர் கையில் கொடுத்து கொடுக்க சொன்னோம். அதன்பிறகு இறுதியாக அரிசி எடை போட்டோம்.
அந்த அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் கீழே கொட்டாமல், மக்களுக்கு அழகாக வழங்கினார். அவர் கொட்டும்போது சிறிதளவு கூட கீழே சிந்தவில்லை. இது எதிர்பார்க்காமல் நடந்த நிகழ்வு. அவர் பக்கத்தில் இருக்கும்போது பதற்றம் அதிகமாக இருந்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ளார்.
















