குணாபாபு தனது நண்பர்களுடன் இணைந்து குறும்படம் தயாரிக்கிறார். அந்த குறும்படத்தை சரியில்லை என்று கூறி தயாரிப்பாளர் நிராகரிக்கிறார். சோகத்தில் தனது நண்பர்களுடன் உலா வரும் குணாபாபு, அந்தவழியாக காரில் செல்லும் ஒருவரிடம் லிப்ட் கேட்டு செல்கிறார். அவரிடம் தனது குறும்படத்தின் கதையை சோகத்துடன் சொல்கிறார்.

அவர் சொல்லும் கதையில் ஆதிக்க வர்க்கத்தினர் ஏகப்பட்ட இடையூறுகளையும், தடைகளையும் தாண்டி ஒரு சிறுவன் பள்ளிக்கூட வாசலை மிதிக்கிறான் என்பது போல குறிப்பிடப்படுகிறது. இதில் அங்காடித்தெரு மகேஷ் உள்ளிட்டோர் இடம்பெறுகிறார்கள். ‘யூ-டியூப்’ மோகத்தால் மக்கள் சந்திக்கும் அவலம் சொல்லப்படுகிறது. இரண்டு கதைகளும் இணையும் இடத்தில் சில திருப்பங்களும் உண்டாகின்றன. அவை என்ன? என்ன நடந்தது? என்பதே கதை…

அங்காடி தெரு மகேஷ், திருக்குறள் குணா பாபு, கே.எம்.பாரிவள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது என முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களில் ஒரு சிலர் சில படங்களில் நடித்திருந்தாலும், பெரும்பாலானவர்கள் புதுமுகங்களாகவே இருக்கிறார்கள். ஆனால், அந்த அடையாளம் தெரியாதபடி அனைவரும் நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள். பல வருடங்களுக்கு பிறகு திரைக்கு வந்துள்ள ‘அங்காடித்தெரு’ மகேஷ் நடிப்பு கவனிக்க வைக்கிறது. சமூக ஊடகங்கள் மூலம் ஏற்படும் சமூக சீர்கேடுகள் மற்றும் அதன் பேராபத்துகளையும் படம் சொல்லுகிறது. 

மைனஸ்: கதையை தெளிவாக சொல்லவில்லை…. இசையில் கூடுதல் கவனம் தேவை….

மொத்தத்தில் இந்த ’தடை அதை உடை’ குழப்பம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here