Saturday, June 27, 2026
Blog

‘லவ் ஓ லவ்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

மகேஷ் ராஜேந்திரன் எழுதி, இயக்கி, தினேஷ் ராஜ் தயாரித்துள்ள லவ் ஓ லவ் படத்தை Zinema Media & Entertainment நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. படத்திற்கு பி. ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். Wayne Pavey, Pradeep PJ, FOXn ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். என். பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ள நிலையில், சண்டைக் காட்சிகளை அபிஷேக் ஸ்ரீனிவாஸ் வடிவமைத்துள்ளார். பவிஷ், நாக துர்கா, செல்வராகவன், கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும்

இப்படத்தின் கலைஞர்கள் கலந்து கொண்டு பேசியதாவது :

தயாரிப்பாளர் தினேஷ் பேசும்போது,

தனஞ்செயன் சாருடன் சேர்ந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி.

கடந்த 21/2 ஆண்டு காலமாக தூக்கமில்லாமல் ஆத்மார்த்தமாக உழைத்திருக்கிறார். நீண்ட நாட்களாக சரியான நாயகனை தேடி பவேஷ் கிடைத்தார்.

நாயகி தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார். யூடியூப்-ல் நடனம் மூலம் பிரபலமானவர்.

இசையமைப்பாளருக்கு இது முதல் படம். ஆனால், பரிமளா & கோ முதலில் வெளியாகி விட்டது.

இப்படத்தின் கதை அனைவருக்கும் நெருக்கமாக இருக்கும். கருத்தசொல்ல கூடிய படமாகவும் அதே சமயம் நகைச்சுவையுடனும் இருக்கும் என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது,

சிறிய அரங்கில் பார்ப்பதை விட கமலா போன்ற பெரிய திரையில் பார்க்கும் போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

திங்க் மியூசிக் அவர்களுக்கும் நன்றி. ஒரு படைப்பு என்பது கூட்டு முயற்சி. அதற்கு திங்க் மியூசிக் மிகவும் உறுதுணையாக இருந்தது.

இப்படம் விரைவாக வெளியாக அமேசான் தான் காரணம். அவர்களின் அழுத்தத்தால் ஜூலை 10 அன்று வெளியாக இரவு பகலாக வேலை நடந்து கொண்டிருக்கிறது.

நல்ல திரைப்படங்களை மக்கள் கொண்டாட தவறியதே இல்லை. அதற்கு சிறந்த உதாரணம் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டு கொண்டிருக்கும் நூறு சாமி படம் தான்.

சசி சார் 10 படங்கள் தான் கொடுத்திருக்குறீர்கள், இன்னும் 100 படம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். நூறு சாமி படம் இந்த வருடத்தின் சிறந்த படமாக பேசுப்படும்.

இந்த படத்திற்கு பிறகு வனிதா பெரிய வலம் வருவார்.

நடிகை நாக துர்கா யூடியூப்-ஐ நிறுத்தி விடுங்கள். சுபராசு சார் பணத்தில் எந்த சமரசமும் இல்லாமல் இந்த படத்தை வெளிய கொண்டு வரோம் என்று முன் பணம் கொடுத்தார்.

ஆரம்ப காலத்தில் தனுஷ் சாரை பார்த்தது போல பவேஷை பார்த்ததும் தோன்றியது. இன்னும் 2 படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். பெரிய நாயகனாக வருவார். ஆனால் தொடர்ந்து வெற்றி பெற வேண்டுமென்றால் இதே பணிவோடு இருக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்றார்.

தயாரிப்பாளர் தாணு பேசும்போது,

20 கோடி செலவாகும் பட்ஜெட்டை 10 கோடியாக்கும் தனஞ்செயனுடன் கூட்டு வைத்திருக்கிறீர்கள்.

காதல் எப்போதும் மாறாது, அந்த காதலை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள். இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகள் என்றார்.

நடிகர் சித்ரா லட்சுமணன் பேசும்போது,

தனஞ்செயன் பவிஷை பார்த்து எவ்வளவு வேண்டுமானாலும் சம்பளம் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். நாக துர்காவிடம் யூடியூப் பக்கம் போகாதீர்கள் என்றார். அதை கேட்காதீர்கள். அது தான் உங்களை இந்த இடத்தில் உட்கார வைத்திருக்கிறது.

கஸ்தூரி ராஜா பேரனை நாயகனாக்கி விட்டார். பவேஷ் காதல் காட்சிகளிலும் உணர்வு பூர்வமான காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார் என்றார்.

தயாரிப்பாளர் சங்க தலைவர் கதிரேசன் பேசும்போது,

பாடலாக இருந்தாலும் பின்னணி இசையாக இருந்தாலும் எந்த இடத்தில் என்ன மாதிரியான பாதிப்பு கொடுத்தால் படம் வெற்றியாகும் என்பதை தெரிந்து கொண்டு இசையமைத்திருக்கும் Wayne Pavey, Pradeep PJ, FOXn இருவருக்கும் பாராட்டுகள் என்றார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் துணை தலைவர் கமலகண்ணன் பேசும்போது

ஓடிடி இன்னும் 2 மாதத்தில் முதல்வரை வைத்து துவக்கி வைப்போம். ஆகவே தைரியமாக படம் எடுங்கள்.

பல்வேறு கோரிக்கைகளை முதல்வரிடம் வைத்திருக்கிறோம். சினிமாத் துறை இதன் பிறகு நன்றாக இருக்கும். லவ் ஓ லவ் படம் வெற்றியடைய வாழ்த்துகள் என்றார்.

இயக்குனர் ஆர் வி உதயகுமார் பேசும்போது,

புதிதாக வருபவர்களுக்கு பல விஷயங்கள் தெரிவதில்லை. ஆனால், விஷயம் தெரிந்த தனஞ்செயனை தேர்ந்தெடுத்து உடன் வைத்திருக்குறீர்கள். அவர் வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிகளையும் கூறுவார்.

இந்த படத்தின் ட்ரைலர் பார்த்ததும் அதிர்ந்து விட்டேன். யார் இந்த பையன் பிரமாதமாக நடித்திருக்கிறான் என்று கேட்டேன். கஸ்தூரி ராஜா பேரன் என்று தெரிந்ததும் மகிழ்ச்சி அடைந்தேன்.

ஒரு மகனை இயக்குனராகவும், இன்னொரு மகனை நடிகராகவும் உருவாக்கியுள்ளார் கஸ்தூரி ராஜா. தன்னுடைய பெரியப்பாவிற்கு பவிஷ் நல்ல பெயர் வாங்கி கொடுக்க வேண்டும்.

இசையமைப்பாளர் தீனா பேசும்போது,

6 நாட்கள் கோவாவில் ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அங்கு இந்த படத்தை பற்றி தனஞ்செயனும் இயக்குனர் சசியும் கூறினார்கள்.

23 வருடத்திற்கு முன்பு திருடா திருடி படத்தில் தனுஷை பார்த்தது போல இன்று பவேஷை பார்க்கிறேன். இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகள் என்றார்.

இயக்குனர் கஸ்தூரி ராஜா பேசும்போது,

பவிஷ் அம்மா இன்று வர இயவில்லை, அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். தனுஷின் பிரதி தான் பவேஷ்.

உன்னுடைய இயக்குனரோ தயாரிப்பாளரோ அவர்கள் சொன்ன நேரத்திற்கு சென்று விடு என்று தனுஷிடம் கூறினேன். இன்று வரை அதை பின்பற்றி கொண்டிருக்கிறார். அதே போல் பவேஷ் தன்னை தானே வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்போதெல்லாம் நான் யாருக்கும் அறிவுரை சொல்வது கிடையாது.

என்னுடைய வீட்டில் பவேஷ் ஸ்பெஷல், என் மனைவிக்கு செல்வராகவன் ஸ்பெஷல். எனக்கு பவேஷ் அம்மா ஸ்பெஷல். 3 பாடல்களிலேயே வியக்க வைத்து விட்டான் பவேஷ்.

தயாரிப்பாளர் மற்றும் தனஞ்செயன் இருவரும் பவேஷ் பற்றி பெருமையாக சொல்கிறார்கள்.

இயக்குனர் ஆர்.கே. செல்வமணி பேசும்போது,

ரோஜாவை அறிமுகப்படுத்தியது செல்வமணி என்பது மாறி ரோஜாவின் ராஜா செல்வமணி என்ற பெயர் வந்துவிட்டது. அது தான் நடிகருக்கு இருக்கும் சிறப்பு.

லவ் ஓ லவ் பெயருக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. இந்த கதையை 1 1/2 மணி நேரம் கதை கூறினார். கேட்கும் போது நேரில் பார்ப்பது போல் இருந்தது.

தனஞ்செயன் வாயால் நல்ல பெயர் எடுப்பது கஷ்டம். அதை இந்த படத்தின் இயக்குனர் மகேஷ் வாங்கியிருக்கிறார்.

அன்று படம் வெளியாவது தயாரிப்பாளர் கட்டுப்பாட்டில் இருந்தது, பிறகு நடிகரிடம் இருந்தது. இப்போது ஓடிடி -யிடம் இருக்கிறது. இங்கு இருக்கும் ஓடிடி அலுவலகம் மும்பையில் இருக்கிறது.

200 படங்கள் இலவசமாக கொடுத்தால் கூட வாங்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. வாரந்தோறும் 50 படங்களாவது ஓடிடியில் வெளியானால் நன்றாக இருக்கும்.

ரஜினியிடம் இருக்கும் தன்னம்பிக்கை முதல் படத்திலேயே தனுஷுக்கு இருந்தது. அதே நம்பிக்கை இன்று பவிஷிடம் பார்க்க முடிகிறது என்றார்.

இயக்குனர் சசி பேசும்போது,

பரிமளா & கோ படத்திலேயே பாலாஜி ஸ்ரீராமின் இசையை பார்த்தேன். ஒரு பாடலே அந்த படத்தை அடுத்த இடத்திற்கு கொண்டு சென்றது. அதே போல இந்த படமும் பெரிய வெற்றி பெறும் என்றார்.

நடிகர் ரவி மரியா பேசும்போது,

மகேஷ் கதை கூறினால், உடனே படப்பிடிப்பிற்கு சென்று விடலாம் என்று தோன்றும்.

தனஞ்செயன் சாருடன் உருவான தண்டட்டி படம் பெரிய பெயர் வாங்கியது எல்லோருக்கும் தெரியும் என்றார்.

சுப்பிரமணிய சிவா பேசும்போது,

செல்வமணி அண்ணன் பேசியது ரொம்ப முக்கியமானது. பவிஷ் அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கருப்பண்ண சாமி மூலம் தாத்தா எப்படி வெற்றி அடைந்தாரோ அதே போல பவிஷ் வர வேண்டும். எல்லா காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்.

எம் ஜி ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித், சிம்பு – தனுஷ் வரிசையில் பவிஷ் இடம் பெறுவார். ஆனால், அவருக்கு இணையாக யார் வருவார் என்று தெரியவில்லை என்றார்.

லக்ஷ்மணன் பேசும்போது,

6 வருடங்களுக்கு முன்பே இந்த கதையை மகேஷ் கூறும் போது இந்த படம் நிச்சயம் வெற்றியடையும் என்று கூறினேன். மகேஷ் மற்றும் பவிஷ் இருவரும் அழகாக இருக்கிறீர்கள் என்றார்.

இசையமைப்பாளர்கள் பாக்ஷன் பேசும்போது,

இந்த வாய்ப்பை கொடுத்த தனஞ்செயன் சார், மகேஷ் மற்றும் அனைவருக்கும் நன்றி.

இந்த படத்தின் பாடல்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

நடிகை நாக துர்கா பேசும்போது,

டீஸருக்கு நீங்க கொடுத்த ஆதரவிற்கு நன்றி. அதே போல படத்திற்கும் ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன் என்றார்.

நடிகர் பவிஷ் பேசும்போது,

எந்த மேடையாக இருந்தாலும், எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் தனுஷ் சாருக்கு தான் முதலில் நன்றி சொல்வேன்.

தனஞ்செயன் மற்றும் தினேஷ் சாருக்கு நன்றி. மகேஷ் சார் கதை கூறுவதில் சிறந்தவர்.

பிரதீப் மற்றும் இருவரும் சேர்ந்து பாக்சன் என்ற பெயரில் இசையமைத்திருக்கிறார்கள். சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள்.

நாக துர்கா பயிற்சி இல்லாமல் பார்த்ததுமே நடனம் ஆடி வியக்க வைத்தார் என்றார்.

சண்டை பயிற்சி இயக்குனர் என்னுடைய பணியை எளிமையாக்கினார் என்றார்.

நடிகர் அஜய் திஷான் பேசும்போது,

லவ் ஓ லவ் ட்ரைலர் நன்றாக வந்துருக்கிறது. பவிஷ், நாக துர்கா, நன்றாக நடித்திருக்கிறார்கள். படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.

இயக்குனர் மகேஷ் ராஜேந்திரன் பேசும்போது,

இங்கு வந்த அனைவருக்கும் நன்றி. 1 1/2 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்ற முடியுமென்றால் கடவுளால் தான் முடியும். அந்த வகையில் தனஞ்செயன் சாருக்கும் தினேஷ் சாருக்கும் நன்றி.

கலை இயக்குனர் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். நாக துர்கா நன்றாக நடித்திருந்தீர்கள். சசி சார் நூறு சாமி என்ற சிறப்பான படைப்பை கொடுத்திருக்கிறார்.

இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.

கடவுளுக்கு நன்றி என்றார்.

நடிகை வனிதா விஜயகுமார் பேசும்போது,

நான் சினிமாவை விட்டு சென்ற பிறகும் மீண்டும் என்னை நடிக்க வைத்திருக்கிறார்கள். என்னுடைய கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். எனக்கும் பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது.

இன்றைய காலத்திற்கு தேவையான தலைப்பு லவ் ஓ லவ். அனைவரும் திரையரங்கம் சென்று பாருங்கள்.

நேர்மையான விமர்சனம் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

 

லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி படத்தின் துவக்க விழா

Kaviya Productions மற்றும் S2 Movies இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படமான ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படத்தின் பூஜை விழா இன்று (ஜூன் 26) கோலாகலமாக நடைபெற்றது.

யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரச்சிதா மகாலக்ஷ்மி, யாஷிகா ஆனந்த், YGM மதுவந்தி, மெல்வின், அமித் பார்கவ், அஸ்மிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தை கே.ஆர். செந்தில்நாதன் எழுதி இயக்குகிறார். பி. மஞ்சுநாத் தயாரிக்கும் இப்படத்தை S2 Movies இணைந்து தயாரிக்கிறது. அச்சு ராஜாமணி இசையமைக்க, ஷிஹாப் பட்டாம்பி ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.பி. அகமது படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ரெம்பன் பால்ராஜ் கலை இயக்குநராகவும், ஜாக்கி பிரபு சண்டைப் பயிற்சி இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். நிர்வாக தயாரிப்பாளராக சேலம் சரவணன் செயல்படுகிறார்.

பட விழாவில் இயக்குனர் கே.ஆர் செந்தில்நாதன் பேசியது.

அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எனது வணக்கம். இன்று முதல் நாளாகவே எங்கள் படத்தின் பூஜை விழாவுடன் படப்பிடிப்பைத் தொடங்கியிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்தப் படத்தை தயாரிப்பாளர் திரு. மஞ்சுநாத் தயாரிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக ரச்சிதா மேடம், யாஷிகா மேடம் மற்றும் இங்கு வருகை தந்துள்ள அனைத்து விருந்தினர்களுக்கும் நன்றி. அனைவரின் ஆதரவுடன் இந்தப் படம் சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன்.


இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.வி. உதயகுமார், நடிகையும் அரசியல்வாதியுமான YGM மதுவந்தி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


நடிகர் மெல்வின் பேசியதாவது..,

“இந்தப் படம் விளையாட்டை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகிறது. இயக்குநர் கதையை சொன்னபோதே அதற்காக நாங்கள் தயாராக ஆரம்பித்துவிட்டோம். கண்டிப்பாக இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். படம் வெளியான பிறகு மற்ற விஷயங்களை விரிவாகப் பேசலாம். நன்றி.


நடிகர் அமித் பார்கவ் பேசியதாவது..

“அனைவருக்கும் வணக்கம். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். ஒரு திரைப்படம் உருவாவது என்பது மிகவும் நீண்ட பயணம். ஒரு கதை எழுதுவதிலிருந்து அதை திரைப்படமாக உருவாக்கி, மக்களிடம் கொண்டு சேர்க்கும் வரை எத்தனையோ சவால்களையும், தடைகளையும் கடக்க வேண்டியுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டரைப் பார்த்தாலே அந்தப் பயணத்தின் அருமை புரியும். ஒரு கதையை உருவாக்கி, போட்டோஷூட் நடத்தி, இன்று பூஜை விழா வரை கொண்டு வந்திருப்பது சாதாரண விஷயம் அல்ல. இதுவே ஒரு திரைப்படத்தின் மிக முக்கியமான கட்டமாக நான் கருதுகிறேன்.

இயக்குநர் செந்தில்நாதன் சாரின் பார்வையும், இந்தப் படத்தின் கதையும் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்று நம்புகிறேன். அனைவரும் இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.”

வழக்கறிஞர் சிவராமகிருஷ்ணன் பேசியதாவது..,

“இந்த நிகழ்வில் என்னை அழைத்த இயக்குநர் கே.ஆர். செந்தில்நாதன் அவர்களுக்கும், தயாரிப்பாளர் மஞ்சுநாத் அவர்களுக்கும், சரவணன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எந்த ஒரு திரைப்படமும் வெற்றி பெறுவதற்கு பத்திரிகை மற்றும் ஊடகங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. சகோதரர்களாகிய நீங்கள் அனைவரும் உங்கள் முழு ஆதரவையும் இந்தப் படத்திற்கு வழங்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக விளையாட்டை மையமாகக் கொண்ட இப்படம் அனைவரிடமும் சென்று சேர உங்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

ஒரு திரைப்படத்தைத் தொடங்கி, அதை உருவாக்கி, திரையரங்குகளுக்கு கொண்டு வருவது எவ்வளவு கடினமான பயணம் என்பதை ஒரு தயாரிப்பாளராக நானும் நன்கு அறிவேன். அந்தப் பெரிய முயற்சியை மேற்கொண்டுள்ள தயாரிப்பாளர்கள், இயக்குநர் மற்றும் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் இந்தப் படத்திற்கு தங்களது முழு ஆதரவை வழங்க வேண்டும். ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ மாபெரும் வெற்றி பெற்று, நூறாவது நாள் வெற்றி விழாவைக் கொண்டாட என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி. வணக்கம்.”

 


இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி பேசியதாவது..,

“இங்கு கலந்து கொண்டுள்ள அனைத்து கலைஞர்களுக்கும், விஜயரத்னம் சாருக்கும், செந்தில் சாருக்கும் எனது வாழ்த்துகள். செந்தில் சாரை எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். அவருடைய அர்ப்பணிப்பும், உழைப்பும் எனக்கு நன்றாகத் தெரியும். இந்தப் படத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அனைவருக்கும் நன்றி.”

நடிகை மதுவந்தி பேசியதாவது.., “அனைவருக்கும் வணக்கம். மேடையில் அமர்ந்திருக்கும் தயாரிப்பாளர் மஞ்சுநாத் சார், இயக்குநர் செந்தில்நாதன் சார், இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி மற்றும் இந்தப் படத்தின் அனைத்து கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்தப் படத்தில் நானும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகிறேன். போஸ்டரில் என் புகைப்படம் இல்லையே என்று யாரும் கேட்க வேண்டாம், ஆனால் இந்தப் படத்தில் நான் இருப்பது உறுதி.இது வித்தியாசமான களத்தில் உருவாகும் ஒரு திரைப்படம். குறிப்பாக, இன்றைய தமிழ் சினிமாவுக்கு மிகவும் தேவையான விளையாட்டை மையமாகக் கொண்ட ஆரோக்கியமான கதைக்களத்துடன் இந்தப் படம் உருவாகி வருகிறது. இப்படிப்பட்ட ஒரு நல்ல முயற்சியை மேற்கொண்டுள்ள படக்குழுவினருக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

இந்தப் பூஜை விழாவோடு மட்டும் இல்லாமல், இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்று இதே உற்சாகத்துடன் வெற்றி விழாவையும் கொண்டாடுவோம் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ள பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.”

 

நடிகை அஸ்மிதா பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ என்ற தலைப்பே மிகவும் வித்தியாசமாகவும், அனைவரையும் கவரக்கூடியதாகவும் இருக்கிறது. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் செந்தில்நாதன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் நான் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

மேலும், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கலைஞர்களுடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தக் கதையும், என்னுடைய கதாபாத்திரமும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.”


நடிகை யாஷிகாஆனந்த் பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கிய இயக்குநர் செந்தில்நாதன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்பை அளித்ததற்காக தயாரிப்பாளருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘டி.டி. நெக்ஸ்ட் லெவல்’ படத்திற்குப் பிறகு, ஒரு நல்ல கதைக்காக காத்திருந்தேன். அப்போது இந்தக் கதை என்னிடம் வந்தது. இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டு எங்களை வாழ்த்த வந்துள்ள சக நடிகர்கள், சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

இந்தப் படத்தை விரைவில் திரையரங்குகளில் உங்களுடன் சேர்ந்து பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். விரைவில் திரையரங்குகளில் அனைவரையும் சந்திப்போம். நன்றி.”


நடிகை ரச்சிதா பேசியதாவது..,

“பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம். இன்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டதற்கு மிக்க நன்றி. ஏற்கனவே பலரும் கூறியதுபோல், ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்பது மிகவும் கடினமான பயணம். ஒரு கதையை உருவாக்கும் கட்டத்திலிருந்தே பல சவால்கள் தொடங்கிவிடுகின்றன. இயக்குநர் செந்தில்நாதன் சாருடன் கதையைப் பற்றி பேசும்போதெல்லாம், இரண்டு வாரங்களுக்கு முன் பேசிய விஷயங்கள் மீண்டும் மாறியிருக்கும். கதை இன்னும் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பல மாற்றங்கள், விவாதங்கள் நடைபெறும்.

இந்தப் படம் செந்தில்நாதன் சாரின் கனவுப் படைப்பு என்று சொல்லலாம். ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு கனவுத் திரைப்படம் இருக்கும்; அதுபோல இந்தப் படம் அவருக்கு மிகவும் முக்கியமானது. அந்தக் கனவு முழுமையாக நிறைவேற வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறது. திரைப்படம் உருவாகும் பயணத்தில் பல சிரமங்களும், எதிர்பாராத சவால்களும் வந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து இன்று இந்தப் படத்தின் பூஜை விழா நடைபெறுகிறது. இனி இந்தப் படம் எந்தத் தடையும் இல்லாமல் வெற்றிகரமாக நிறைவடைய வேண்டும் என்பதே என்னுடைய மனமார்ந்த விருப்பம்.

போஸ்டரைப் பார்த்தவுடன் நான் ‘பி.டி. மாஸ்டர்’ கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். என்னுடைய கதாபாத்திரம் என்ன என்பதை படத்தில் பார்க்கும்போது உங்களுக்கே தெரியும். அனைவருக்கும் நன்றி.”

 


இயக்குநர் சங்கம் சார்பில் R V உதயகுமார் பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ என்ற தலைப்பே மிகவும் வித்தியாசமாகவும், வண்ணமயமாகவும் இருக்கிறது. இந்த மேடையைப் பார்த்தாலே அந்த உற்சாகம் தெரிகிறது. இன்று இங்கு வந்தவுடன் எனது அத்தனை சோர்வும் மறைந்துவிட்டது.

இயக்குநர் செந்தில்நாதன் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இன்றைய தமிழ் சினிமாவுக்கு மிகவும் தேவையான விளையாட்டை மையமாகக் கொண்ட ஒரு படத்தை உருவாக்கும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. இந்தப் படத்தில் பணியாற்றும் நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர் அச்சு, தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்தப் படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு விருந்தாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படத்தை இவ்வளவு பிரமாண்டமாக பூஜையுடன் தொடங்குவதே பெரிய விஷயம். ஒரு திரைப்படத்தை ஆரம்பிப்பதில் இருந்து அதை முடித்து, திரையரங்குகளுக்கு கொண்டு வரும் வரை எண்ணற்ற போராட்டங்களும் சவால்களும் இருக்கின்றன. படப்பிடிப்பில் வரும் சவால்களைவிட, அந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. ஒரு திரைப்படத்தின் வெற்றியை அதன் கதை, நடிகர்களின் நடிப்பு, ஒளிப்பதிவு அல்லது இசை மட்டுமே தீர்மானிப்பதில்லை. அந்தப் படத்தை சரியான முறையில் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதும் மிக முக்கியம். அதற்கு நல்ல உள்ளடக்கம் (Content) மட்டுமல்ல, நல்ல நேரமும் (Timing) அவசியம்.

இந்த இரண்டும் சிறப்பாக அமையும்போது தான் ஒரு திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெறும். ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படமும் அந்த வெற்றியைப் பெற்று ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.”

 


வழக்கறிஞர் தெய்வ சிகாமணி பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். இயக்குநர் செந்தில்நாதன் சாரை எனக்கு பல காலமாக தெரியும். அவர் பல வெற்றிப் படங்களில் பணியாற்றியிருக்கிறார். கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தப் படத்திற்காக அவர் எடுத்த முயற்சியும், ஓடிய ஓட்டமும், பட்ட கஷ்டங்களும் எனக்கு நன்றாகத் தெரியும்.

இந்த ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படம் அவருடைய கனவுத் திரைப்படம். அந்தக் கனவை நனவாக்க அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார். கடந்த ஏழு ஆண்டுகள் ஓடியவர், இந்தப் படத்தின் மூலம் வெற்றியாளராக மாறி, பல வெற்றிகளையும் விருதுகளையும் பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்தப் படத்திற்கு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் தங்களது முழு ஆதரவை வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”

 


தயாரிப்பாளர், நடிகர் மஞ்சுநாத் பேசியதாவது..,

இந்த விழாவிற்கு வருகை தந்து, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்து, அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில் உங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி


விளையாட்டு பின்னணியில் நகைச்சுவையும், குடும்ப பொழுதுபோக்கும் கலந்த வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகவுள்ள ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படம் குறித்து விரைவில் மேலும் பல அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.


வழக்கறிஞர் தெய்வ சிகாமணி பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். இயக்குநர் செந்தில்நாதன் சாரை எனக்கு பல காலமாக தெரியும். அவர் பல வெற்றிப் படங்களில் பணியாற்றியிருக்கிறார். கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தப் படத்திற்காக அவர் எடுத்த முயற்சியும், ஓடிய ஓட்டமும், பட்ட கஷ்டங்களும் எனக்கு நன்றாகத் தெரியும்.

இந்த ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படம் அவருடைய கனவுத் திரைப்படம். அந்தக் கனவை நனவாக்க அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார். கடந்த ஏழு ஆண்டுகள் ஓடியவர், இந்தப் படத்தின் மூலம் வெற்றியாளராக மாறி, பல வெற்றிகளையும் விருதுகளையும் பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்தப் படத்திற்கு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் தங்களது முழு ஆதரவை வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”


விளையாட்டு பின்னணியில் நகைச்சுவையும், குடும்ப பொழுதுபோக்கும் கலந்த வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகவுள்ள ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படம் குறித்து விரைவில் மேலும் பல அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

‘நடமாடும் மேமோகிராம்’ வாகனச் சேவை!

சென்னை:
 
மருத்துவச் சேவையில் தமிழ்நாட்டில் முன்னணி வகிக்கும் சென்னை காவேரி மருத்துவமனை, லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை KVG அறக்கட்டளை மற்றும் லயன்ஸ் மாவட்டம் 3241C ஆகியவற்றுடன் இணைந்து, தனது சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் கீழ் ‘நடமாடும் மேமோகிராம்’ வாகனச் சேவையைத் தொடங்கியுள்ளது. மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்கான வழக்கமான மேமோகிராம் பரிசோதனைகளைச் செய்ய, மருத்துவமனை அல்லது பரிசோதனை மையங்களுக்குச் செல்வதில் சிரமப்படும் பெண்களுக்கு இப்பரிசோதனையை எளிதாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த நடமாடும் வாகனத்தின் மூலம் பரிசோதனைச் சேவைகளை நேரடியாகப் பொதுமக்களின் வசிப்பிடத்திற்கே கொண்டு செல்வது, ஆரம்ப நிலையிலேயே பாதிப்பைக் கண்டறியவும், மார்பக ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பெரிதும் உதவும்.
 
நவீன மேமோகிராம் சாதனம் பொருத்தப்பட்ட இந்த நடமாடும் மருத்துவ ஊர்தியை, தமிழ்நாடு அரசின் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப. வெங்கடரமணன்அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
 
இந்த நடமாடும் மேமோகிராம் வாகனம், மார்பகப் புற்றுக்கட்டிகளைக் கண்டறிவதற்கான டிஜிட்டல் மேமோகிராபி பரிசோதனையை மிகவும் வசதியாகவும் எளிதாகவும் வழங்கும் வசதிகளைக் கொண்டுள்ளது. குடியிருப்புப் பகுதிகள், பணியிடங்கள், சமுதாயக் கூடங்கள் மற்றும் புறநகர், நகர்ப்புறங்களின் பல்வேறு இடங்களுக்கு நேரடியாகச் சென்று இவ்வாகனம் சேவை வழங்கும். இது, பெண்கள் தங்களது ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும்.
 
மார்பகப் புற்றுநோய் கண்டறிதலுக்கான டிஜிட்டல் மேமோகிராபியுடன், இந்த நடமாடும் வாகனம் ‘பேப் ஸ்மியர்’ (Pap smear) மற்றும் ‘கோல்போஸ்கோபி’ (Colposcopy) பரிசோதனை வசதிகளையும் வழங்கும். இதனால், பெண்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வு மற்றும் நோய் தடுப்புப் பரிசோதனைகளுக்கான ஒரே இடமாக (All-in-one wellness unit) இந்த வாகனம் செயல்படும். பேப் ஸ்மியர் பரிசோதனை, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அல்லது அதற்கான ஆரம்பகட்ட மாறுபாடுகளைக் கண்டறிய உதவுகிறது. மேலும், கூடுதல் பரிசோதனை தேவைப்படும் பட்சத்தில் கோல்போஸ்கோபி மூலம் கர்ப்பப்பை வாய் பகுதியை மிக நெருக்கமாகப் பரிசோதிக்க முடியும். இந்த வாகனத்தில் காவேரி மருத்துவமனையின் பெண் மருத்துவர்கள் மற்றும் கதிரியக்க வல்லுநர்கள் (Radiologists) உடன் இருப்பார்கள். அவர்கள் பெண்களின் பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்து, தேவையான ஆலோசனைகளையும் அடுத்தகட்ட வழிகாட்டுதல்களையும் வழங்குவர்.
 
இந்தச் சேவையின் தொடக்க விழாவில் பேசிய லயன்ஸ் சர்வதேச அமைப்பின் 3241C மாவட்ட ஆளுநர், PMJF லயன் எஸ். போஸ், “தமிழ்நாட்டில் பெண்களைப் பாதிக்கும் பொதுவான புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் தொடர்ந்து முதன்மையாக உள்ளது. விழிப்புணர்வு இல்லாமை மற்றும் போதிய மருத்துவ வசதிகள் தங்களுக்கு அருகில் கிடைக்காத காரணத்தால், பல பெண்கள் சரியான நேரத்தில் இதற்கான பரிசோதனையைச் செய்துகொள்வதில்லை. இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புறங்கள், புறநகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் வசிக்கும் இடத்திற்கு மிக அருகிலேயே இப்பரிசோதனை வசதியைக் கொண்டு சேர்ப்பதே எங்களது நோக்கமாகும். தமிழ்நாட்டின் முன்னணி மருத்துவக் குழுமங்களில் ஒன்றான காவேரி மருத்துவமனையுடன் இணைந்து இந்த சமூக நலத் திட்டத்தில் பங்கேற்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.
 
மார்பகப் புற்றுநோயின் பரவலான பாதிப்பு குறித்துப் பேசிய மூத்த புற்றுநோய் அறுவைசிகிச்சை மற்றும் ரோபோடிக் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் சுஜய் சுசிகர், “மாநில புற்றுநோய் பதிவேட்டின் தரவுகள், பெண்களிடையே மார்பகப் புற்றுநோயே முதன்மையான பாதிப்பாக இருப்பதைக் காட்டுகின்றன. இது, சரியான நேரத்தில் பரிசோதனை செய்து, நோயை முன்கூட்டியே கண்டறிய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. புற்றுநோய் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள நவீன மருத்துவ முன்னேற்றங்கள் காரணமாக, மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முறையான சிகிச்சை மூலம் முழுமையாகக் குணப்படுத்த முடியும். ஆனால், பரிசோதனை வசதிகளை எளிதில் அணுக இயலாததாலும், விழிப்புணர்வின்மையாலும் பல பெண்கள் பரிசோதனையைத் தள்ளிப்போடுகின்றனர். இந்த நடமாடும் மேமோகிராம் வாகனம் மூலம், பரிசோதனை வசதியை அவர்களின் வாழ்விடங்களுக்கே கொண்டு சென்று, பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து, சரியான நேரத்தில் சிகிச்சை பெற்று நலம் பெற உதவுகிறோம்” என்றார்.
 
காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில், “இந்தத் திட்டம், அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கக்கூடிய, முன்கூட்டியே தற்காத்துக் கொள்ளக்கூடிய ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதில் காவேரி மருத்துவமனைக்கு உள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. இந்த நடமாடும் மேமோகிராம் வாகனம் என்பது வெறும் பரிசோதனை சேவை மட்டுமல்ல; இது பெண்கள் எதிர்கொள்ளும் தடைகளைக் குறைத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி, தங்களின் ஆரோக்கியத்தை அவர்களே கவனித்துக் கொள்ள வழிவகுக்கும் ஒரு முக்கிய முன்னேற்ற நடவடிக்கையாகும். மருத்துவச் சேவைகளை மக்களிடமே நேரடியாகக் கொண்டு செல்வதன் மூலம், நோய் தடுப்புப் பராமரிப்பை அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாற்ற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த நற்பணிக்காக லயன்ஸ் சர்வதேச அமைப்புடன் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.
 
முன்கூட்டியே மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் வசதி குறைவாக உள்ள பகுதிகளைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டு, வரும் வாரங்களில் இந்த நடமாடும் வாகனம் மூலம் திட்டமிடப்பட்ட இலவசப் பரிசோதனை முகாம்களை காவேரி மருத்துவமனை நடத்தவுள்ளது.

‘தர்மன்’ பட விழாவில் ரஜினிகாந்த் பேசியது என்ன?!

மிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு “தர்மன்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் இந்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பது குறித்து நீண்ட நாட்களாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. ஆரம்பத்தில் இயக்குநர் சுந்தர்.சி இந்தப் படத்தை இயக்குவார் என கூறப்பட்டது. பின்னர் சிபி சக்கரவர்த்தியின் பெயரும் அடிபட்டது. ஆனால் இறுதியில் “ஓ மை கடவுளே” மற்றும் “டிராகன்” திரைப்படங்களை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து இந்த முக்கிய வாய்ப்பை பெற்றுள்ளார்.

“தர்மன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆக்‌ஷன் தோற்றத்தில் காணப்படும் ரஜினிகாந்த், கையில் கத்தி ஏந்தியபடி முகத்தில் சிறு புன்னகையுடன் அவருக்கு உரிய ஸ்டைலில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மூலம் படம் அதிரடி மற்றும் உணர்ச்சிகள் கலந்த கதைக்களத்தில் உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் நடிகை சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே “பேட்ட” திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்த சிம்ரன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் திரையை பகிர உள்ளனர்.

மேலும், நடிகை ராஷி கன்னாவும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவராக இணைந்துள்ளார். அவரது கதாபாத்திரம் குறித்து படக்குழு இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை என்றாலும், கதையின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இசையமைப்பாளர் அனிருத் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். ரஜினிகாந்த் – அனிருத் கூட்டணியில் ஏற்கனவே வெளியான பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், “தர்மன்” படத்தின் இசை மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் பெயர் வெளியிட்டு விழா இன்று காலை நடத்த நிலையில் அதில் பேசிய ரஜினிகாந்த் “நான் பேசினாலே பிராப்ளம் தான், ஒன்னு எனக்கு பிராப்ளம் இல்ல மத்தவங்களுக்கு பிராப்ளம்.

இந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய போது கமல் சார் சொன்னார் இங்கு நீங்க ஒரு திரைப்படம் பண்ணனும்.. அதுக்கு அப்புறம் ரெண்டு பெரும் வேலைகளில் பிசி ஆகிட்டோம். அது இப்போ நடந்து இருக்கு.. பல இயக்குனர்கள் மாறி இப்போது அஷ்வத் மாரிமுத்து இந்த கதையை இயக்கியுள்ளார். இதில் பெரிய சிக்கல் கமல் தான் கதை கேட்க மாட்டேன் எல்லாத்தையும் நீங்களே முடிவு பண்ணுங்கன்னு சொல்லிட்டாரு.. நான் ரொம்ப வற்புறுத்தியாக பிறகு தான் கதையை கேட்டார்.. எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பு உங்களுக்கே தெரியும் பல உதவிகளை செய்திருக்கிறார். ஒரு நல்ல என்டர்டைமென்ட் உடன் ஒரு திரில்லர் படமா இது இருக்கும்” என கூறினார்.

பெண்ணை மிரட்டி பல முறை பாலியல் தொல்லை! அந்த புகைப்படங்கள் என்ன?!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ஆர்.என்.கண்டிகை பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் தனது கணவரின் உறவினர் ஒருவருடன் தகாத உறவு இருந்துள்ளார். எனவே இருவரும் அடிக்கடி வீட்டிற்கு தெரியாமல் மறைவான பகுதிகளுக்குச் சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். அப்படி அவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்ததை கவனித்த அதே பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் அவரகள் உல்லாசமாக இருப்பதை மறைமுகமாக புகைப்படம் எடுத்துள்ளனர். அந்தப் புகைப்படத்தை காட்டி அந்த இளைஞர்கள் அந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன், பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

எங்கு கள்ளக்காதல் குறித்து கணவனுக்கு தெரிந்து விடுமோ என அச்சமடைந்த அந்த பெண் கணவருக்கு தெரியாமல் அவர்களுக்கு அவ்வப்போது பணம் அளித்துள்ளார். அந்தப் பெண் சிறுக சிறுக ரூபாய் இருபது லட்சத்திற்கு மேல் பணம் அளித்த நிலையில் மீண்டும் அவர்கள் ஐந்து லட்சம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு பெண் மறுப்பு தெரிவிக்கவே தொடர்ந்து தொல்லை செய்த வாலிபர்கள் அந்தரங்க புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டியுள்ளனர். எனவே அந்த பெண் கணவர் சீட்டு பணம் கட்டுவதற்காக வைத்திருந்த ரூபாய் 5 லட்சத்தை கணவருக்கு தெரியாமல் எடுத்து அந்த இளைஞர்களுக்கு கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சீட்டு பணம் கட்டாதது குறித்து அந்த பெண்ணிடம் கணவர் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பெண்ணின் கள்ளக்காதல் குறித்து கணவனுக்கு தெரியவந்த நிலையில் மன உளைச்சல் அடைந்த அந்த பெண் ஆசிட்டை குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அந்த பெண் பணம் கொடுத்த விவகாரம் குறித்து கணவரிடம் தெரிவித்ததன் பேரில் அவர் பெருநகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பெண்ணை மிரட்டிய அதே பகுதியை சேர்ந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகன் சந்தோஷ் டேனியல், மைக்கேல்ராஜ், மார்ட்டின் டேனியல், ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களது செல்போன்களை கைப்பற்றிய போலீசார் அதில் உள்ள பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை டெலிட் செய்து வேறு நகல்கள் உள்ளதா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த புகைப்படத்தை வைத்து பெண் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The Hidden Protector (2026) Review RATING 3/5

The Hidden Protector (2026) is a delightful and visually spectacular evolution of the beloved franchise, delivering a perfect mix of fantasy, humor, and heartfelt storytelling. The film takes a bold step forward by weaving in the legendary tale of the Nian beast from Chinese mythology, transforming a familiar children’s series into a grand, magical adventure. This mythological layer adds depth and excitement while still remaining easy for younger audiences to enjoy. Visually, the movie is a real standout. The animation is vibrant, detailed, and cinematic, with breathtaking environments like the mystical Eve City and beautifully choreographed magical battles. It marks a clear upgrade in production quality and ambition for the series.
 
The heart of the film, however, lies in its characters. Briar, Bramble, and Vick continue to shine with their natural comedic timing and lovable chemistry. Their interactions are funny, light, and never forced, keeping the film consistently entertaining from start to finish. Emotionally, the story delivers a strong message about self-confidence, growth, and teamwork. Briar’s personal journey from insecurity to self-acceptance adds genuine warmth and meaning without slowing down the adventure. Overall, The Hidden Protector is a joyful, action-packed, and emotionally satisfying family film. It successfully blends mythology, comedy, and heart, making it one of the most impressive and memorable entries in the Boonie Bears franchise.

‘அனந்தன் காடு’ விமர்சனம் RATING 3/5

சுயநல அரசியல்வாதி மற்றும் காவல் அதிகாரி இருவரால் பாதிக்கப்பட்ட ஒரு சிறு கூட்டம் படும்பாடு தான் இந்த ‘அனந்தன் காடு’

விமர்சனம்:

படத்தின் ஆரம்பத்தில் ஒருவரை துப்பாக்கி முனையில் நிறுத்தி ஒரு கதை சொல்கிறார் ஒரு இளைஞர். அந்தக் கதைப்படி இலங்கை ராணுவத்தால் தன் குடும்பத்தை இழந்த இளைஞன் ஆர்யா கேரளா வருகிறார். அவர் வந்து அங்கு அரசியல்வாதி ஒருவருக்காக கொலைகள் செய்யும் குட்டி கூலிப்படை ஒன்றோடு இணைகிறார். அந்தக்கூலிப்படைக்கு அரசியல்வாதி இன்னொரு வேலையும் கொடுக்கிறார். அதை ஆர்யாவே முன்னின்று செய்கிறார். அதன்பின் அந்த அரசியல்வாதி ஆர்யாவையும் அவர் நண்பர்களையும் கொலை செய்ய திட்டம் தீட்ட அந்தத் திட்டங்களை ஆர்யா முறியடித்தாரா? இல்லையா? துப்பாக்கி முனையில் நின்று கதை சொல்லும் அந்த சிறுவன் யார்? அடுத்து என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை….

சண்டைக்காட்சிகளில் ஆர்யாவின் துடிப்புமிக்க உழைப்பு ஆச்சர்யப்படுத்துகிறது. குற்றப் பின்னணி கொண்ட நால்வர் குழுவினராக நடித்திருக்கும் முரளி கோபி, தேவ் மோகன், இந்திரன்ஸ் மற்றும் அப்பானி சரத் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வாக இருப்பதோடு, உணர்வுப்பூர்வமான காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் முரளி கோபி, ஒரு குறிப்பிட்ட உண்மை சம்பவத்தை மையமாக வைத்துக்கொண்டு அதை கமர்ஷியல் ஆக்‌ஷன் பாணியிலான படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். யுவாவின் ஒளிப்பதிவுக்கு தனியாக ஒரு பாராட்டுப்பத்திரமே வாசிக்கலாம். இரவு ஷாட்ஸ் முதல் சண்டைக்காட்சிகள் வரை அவரது கேமரா அபாரம். எடிட்டர் ரோஹித் வி.எஸ். வாரியத் சிறப்பாக கட்ஸ் கொடுத்துள்ளார்

மைனஸ்: சில காட்சிகள் லாஜிக்கே இல்லை… தமிழர்கள் கதையில் கூடுதல் கவனம் தேவை….

மொத்தத்தில் இந்த ‘அனந்தன் காடு’ மழை வந்து நிற்கும்.

முதல்வர் விஜய் ரியாக்சன்! சட்டசபையில் சலசலப்பு!!

மிழக சட்டப்பேரவை நீண்ட, நெடிய பாரம்பரியம் கொண்டது. அடுக்குமொழிப் பேச்சுகள், காரசார விவாதங்கள், ஆளுங்கட்சியை அதிரவைத்த எதிர்க்கட்சிகளின் கேள்விகள், வெளிநடப்புகள், உறுப்பினர்களை அவையிலிருந்து குண்டுக்கட்டாக அப்புறப்படுத்திய, பேப்பர் முதல் சட்டை வரை கிழிந்த நிகழ்வுகள் என பற்பல சம்பவங்களின் சாட்சியாக நிற்கும் புனித ஜார்ஜ் கோட்டை மீதுதான் ஜூன் 18 அன்று தமிழகத்தின் ஒட்டுமொத்த கவனக் குவிப்பும் இருந்தது எனலாம்.

தமிழக முதல்வராக விஜய், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி பேரவை கூட்டத் தொடரில் எப்படிக் களமாடுவார்கள் என்ற எதிர்பார்ப்புதான் அதற்குக் காரணம்.

அன்றைய தினம் (ஜூன் 18) சட்டப்பேரவை வளாகத்துக்கு வெளியில் உதயநிதி தலைமையிலான திமுக எம்எல்ஏக்கள் ‘வாயை திறங்க சிஎம்’ என்று எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்தும், ஆளுங்கட்சியைக் கேள்வி கேட்கும், விமர்சிக்கும் வாசகங்கள் கொண்ட விதவிதமான பதாகைகளை ஏந்தியும் வந்திருந்தனர். அன்றைய தினம் ஆளுநர் உரை வாசிக்கப்பட்டது.

இரண்டாவது நாளான ஜூன் 19 அன்று முதல்வர் விஜய், மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கையை எதிர்த்து தனித் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அதன் மீது எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசின் முயற்சிகளில் உடன் இருப்போம்” என்று பாந்தமாகக் கூறினார். மேகேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கையைக் கூட உடனடியாக ஏற்றார் முதல்வர் விஜய்.

இந்த நடவடிக்கைகள் வெகுவாக கவனம் ஈர்த்தன. ஏன் சிலர் சமூக வலைதளங்களில், ‘காரசார விவாதத்தை எதிர்பார்த்தோம், சண்டை போடுங்களேன்’ என்று மீம்ஸ் எல்லாம் போட்டார்கள்.

ஜூன் 20, 21 விடுமுறைக்குப் பின்னர் நேற்று (ஜூன் 22) சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “மின்வெட்டு பிரச்சினையால் தொழில் முதலீடுகளை கோட்டைவிட்டு விடாதீர்கள்” என்று கூறி தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பற்றி முக்கியமான கருத்துகளை முன்வைத்தார்.

இந்த நிலையில், கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று தமிழக முதல்வர் விஜய் தனது பதிலுரையில் பேசியது அக்கட்சியினர் மத்தியில் வரவேற்பையும், தமிழக மக்கள் மத்தியில் பரவலாக இருவேறு விதமான கருத்துகளையும் ஈர்த்திருக்கிறது.

முதல்வர் விஜய் இன்று பேசுகையில், சொன்ன குட்டிக் கதைதான் ஹைலைட் விவாதப் பொருளாகியுள்ளது.

“ஒரு ஊரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்பதால் பெரியர் ஒருவர் கண்கள் மீது கையை வைத்து மறைத்தபடி சுற்றும் முற்றும் பார்த்து தேடிக் கொண்டிருந்தார். அப்போது உடன் இருந்த சிறுவன் என்ன தேடுகிறீர்கள் எனக் கேட்டான். அதற்கு ‘ஒன்றுமில்லை தம்பி, உங்கள் அப்பா இங்கே தான் இருப்பார் எனச் சொன்னார்கள். அவரைத் தேடிக்கொண்டு இருக்கிறேன். எங்க உங்க அப்பாவை காணோம். அவரை தான் தேடிக்கொண்டு இருக்கிறேன்’ என சொன்னாராம்” என்று குட்டிக் கதையை கூறினார் முதல்வர் விஜய்.

“இதனால் யாரும் டென்ஷன் ஆக வேண்டாம்,” என்று தொடர்ந்து அவர் பேசியது அப்பட்டமாகவே ஸ்டாலினையும், உதயநிதியையும் கிண்டலடித்துப் பேசியது என்று தெரிந்தததால் திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பும் செய்தனர்.

முதல்வர் விஜய்யின் உடல்மொழி பிரச்சார மேடைகளில் இருந்ததுபோலவே சட்டப்பேரவைக்குள் இருப்பதும், இயல்பாக அவை நடவடிக்கைகளில் ஈடுபடாமல் எழுதிக் கொடுத்ததை வாசிப்பதும், நடித்துக் காட்டுவதும் போல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

“என்னைப் பேசு, பேசு என்றால், ஐந்து நிமிடங்கள் கொளத்தூரில் பேசியதற்கே என்னவானது என்று தெரியும்” என்று கூறியதுடன், அன்று கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிவின்போது அப்போதைய முதல்வர் ஸ்டாலின் செய்த சைகையை, பேரவையில் இன்று முதல்வர் விஜய் செய்த விதம் அத்தனை நாகரிகமானதாக இல்லை என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

“முதல்வர் விஜய் இன்னும் பிரச்சார பாணியிலே பேசுகிறார். நம் கையில்தான் தமிழக அரசு இப்போது இருக்கிறது என்பதை உணர வேண்டும். அதை முன்னோக்கி எடுத்துச் செல்வதைத்தான் திட்டமிட வேண்டுமே தவிர திமுக vs தவெக அரசியல் சட்டப்பேரவைக்கு உள்ளே அல்லாது வெளியேதான் செய்ய வேண்டும்,” என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

அதுபோலவே, திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவால் இந்த ஆட்சியை அமைக்கவில்லை என்று விஜய் பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதாலேயே தவெகவுக்கு ஆதரவு கொடுத்தோம்” என்று தெரிவித்துள்ளார்.

‘தமிழக அரசியலுக்கும், தமிழக சட்டப்பேரவைக்கும் புதியவரான விஜய் அவை நாகரிகம், கூட்டணி நாகரிகம் எல்லாம் தெரிந்து கொண்டு வாய் திறக்க வேண்டும். வாயைத் திறக்கமாட்டேன். திறந்தால் அது கொண்டு திமுகவை மட்டுமே விமர்சிப்பேன் என்ற போக்கு என்பது பண்பட்டது அல்ல’ என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

அதேவேளையில், “விஜய் ஊழல் ஒழிப்பு சவால் விடுகிறார் என்றால் அவர் ஒரு க்ளீன் ஸ்லேட். அதனால்தான் ‘நாங்கள் ஊழல் செய்ய மாட்டோம், யாரையும் செய்யவிட மாட்டோம், இதற்கு முன்னால் செய்தவர்களையும் சும்மா விடமாட்டோம்’ என்று சவால் விடுகிறார்” என்று பாராட்டுகின்றனர் தவெகவினர்.

“இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அவர் சொன்னதுபோல் அண்ணாவின் ஆட்சியை ஏற்படுத்தியிருக்கிறார். எம்ஜிஆரின் வெற்றியைப் போல் 1977 புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறார். ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என தமிழக அரசியலில் ஒரு புதிய போக்கினை உருவாக்கியிருக்கிறார்” என்று சமூக வலைதளங்களில் இளைஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

“அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவார். அவர் பேச வேண்டும் என்பதைவிட அவர் செய்கைகள் பேச வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம். அவருடைய செயல்பாடு பேசப்படும் என்று நம்புகிறோம்” என்று தவெக தீவிர விசுவாசிகள் கூறுகின்றனர்.

ஏன், முதல்வர் விஜய்யின் தந்தையும் கூட அண்மையில் அளித்தப் பேட்டியில், “விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா?” என்ற கேள்வியையே முன்வைத்திருக்கிறார்.

இங்கே சில தலைவர்களின் எதிர்வினைகளும் சுட்டிக்காட்டத்தக்கது. “முதல்வர் விஜய் சினிமாவில் நடிப்பது போலவே நினைத்துக் கொண்டு சட்டப்பேரவையிலும் இருக்கிறார். சட்டமன்ற மரபுப்படி இவ்வாறு செய்கைகளை காட்டக் கூடாது. இதுபோன்று முன்பு செய்தவர்களின் நிலை என்ன ஆனது என்பதும் உங்களுக்குத் தெரியும். இனிமேலாவது முதல்வர் தனது தகுதியை அறிந்து, அதற்கான சட்டப்பேரவை மரபோடு நடந்து கொள்ள வேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

“தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு முதல்வர் விஜய் வழங்கிய பதிலுரை, மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அது ஆவேசம், ஆக்ரோஷம், நக்கல், நையாண்டி கலந்த புளித்துப்போன சினிமா வசனங்களின் தொகுப்பாகவே அமைந்தது. சட்டப்பேரவையையே ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றி சினிமாவில் பேசுவது போல வசனங்களை அடுக்குவது, ரீல்ஸ் போட உதவுமே தவிர, மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவாது” என்று சாடியிருக்கிறார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.

விஜய்யின் பேச்சுகளை சுட்டிக்காட்டும் அதேவேளையில் உதயநிதியின் எதிர்வினையையும் குறிப்பிட வேண்டும் என்கின்றனர் அரசியல் நடுநிலையாளர்கள்.

“செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்” என்று உதயநிதியும் தனிப்பட்ட முறையிலான விமர்சனத்தை வைத்திருக்கிறார். அதை அவைக்குள் சொல்லாதது வரவேற்கத்தக்கது. ஆனாலும், விஜய்யின் மனைவி பாதிக்கப்பட்ட பெண்ணாக இருக்கும் வேளையில், ‘ஒரு பெண்ணை மாண்போடு நடத்துவது எங்கள் பெருமித அடையாளம்’ என்று சொல்லிக் கொள்ளும் உதயநிதி சொல்லியிருக்க வேண்டாம்,” என்று சுட்டிக் காட்டுகின்றனர்.

அதேவேளையில், முதல்வர் விஜய்யின் ஆக்‌ஷன்களையும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் ரியாக்‌ஷன்களையும் வரவேற்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், “சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் பேச்சு சுவாரஸ்யமாக இருந்தது. தமிழகத்தின் அரசியல் மாறியுள்ளதைப் பார்க்க முடிகிறது. எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதும், முதல்வர் பேசும் மாடலும் மாறியுள்ளது. இந்த மாற்றத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழக அரசியல் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்துள்ளது” என்று பாசிட்டிவ் நோட் தருகிறார்.

அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ள கருத்தும் இங்கே முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

“முதல்வர் பொறுப்புக்கு விஜய் புதியவர். விரைவில் அவர் தன் கடமையை உணர்ந்து அவரே சட்டமன்றத்தில் கேள்விகளுக்கு பதில் அளிப்பார். சட்டமன்றம் என்பது கேலி செய்யும் அரங்கம் அல்ல. ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் வேறு வேறு அல்ல, இரண்டுமே ஜனநாயகத்துக்கு வலு சேர்க்கும் இரு தூண்கள்.

முதல்வர் விஜய் எப்படிப் பேசுகிறார் என்பதை விட, அவர் எந்தக் கொள்கை வழியில் நடக்கிறார் என்பதுதான் முக்கியம்” என்கிறார் மு.வீரபாண்டியன்.

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரிலாவது ரீல்ஸ் ஆட்சி, குட்டிக் கதை, வாயைத் திறங்க சிஎம் போன்ற அரசியலை விடுத்து, சிறந்த ஆட்சிக்கான முன்னெடுப்புகளையும், வலுவான எதிர்க்கட்சிக்கான பங்களிப்பையும் விஜய்யும், உதயநிதியும் தருவார்களா என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

 

‘நூறு சாமி’ விமர்சனம் RATING 3.9/5

சி இயக்கத்தில் ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்’ மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில், விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷான், சக்தி, பாடினி குமார், காவ்யா அனில், கருணாஸ், லிஜோமோல் ஜோஸ், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனீஷ்காந்த், ஜென்சன் திவாகர், பக்ஸ், வினோதினி வைத்தியநாதன், தாமரைச் செல்வி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம்  ‘நூறு சாமி ‘

விமர்சனம்: 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டாரத்தில் உள்ளது வலையம்பட்டு கிராமம். கிராமப்புற பின்னணியில் வாழும் செல்வி என்ற பெண், தனது இரு மகன்களையும் வளர்ப்பதற்காக தனது வாழ்க்கை ஆசைகளையே தியாகம் செய்கிறார். ஆண்டுகள் கடந்த பிறகு, அவருடைய வாழ்க்கைக்கு மீண்டும் ஒரு புதிய அர்த்தம் கிடைக்க வேண்டுமென்ற எண்ணம் உருவாகிறது. ஆனால் குடும்பம், உறவினர்கள் மற்றும் சமூகத்தின் எதிர்ப்புகள் அவரை சோதிக்கின்றன. அந்த சூழலில் ஒரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பம் வெற்றிபெறுகிறதா? என்பதே கதை…

விஜய் ஆண்டனி வழக்கமான ஹீரோ பாணியை தவிர்த்து அமைதியான கதாபாத்திரத்தில் தோன்றி கதைக்கு தேவையான ஆதாரமாக இருக்கிறார். கதையின் உணர்ச்சி அம்சங்களை தாங்கிச் செல்லும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுவாசிகா, பல காட்சிகளில் தனது இயல்பான நடிப்பால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறார். குறிப்பாக குடும்ப பாசம் மற்றும் மனவேதனைகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் அவரது நடிப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.

செல்வியின் மூத்த மகன் பாஸ்கராக அஜய் திஷானும், இளைய மகன் விவேக்காக சக்தியும் நடித்திருக்கிறார்கள். இருவருமே அவரவர் கதாபாத்திரத்தை நிறைவாய் செய்திருக்கிறார்கள். மூத்த மகனுக்கு உரிய பொறுப்பு, இளைய மகனுக்கு உரிய துடிப்பு என இருவரது கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

கதாநாயகன் என்ற லேபிள் இல்லாமல், கதைக்குள் ஒரு கதாபாத்திரமாக, விவசாயி ஏழுமலையாக, படத்தின் இரண்டாம் பாதியில் வருகிறார் விஜய் ஆண்டனி. இப்படியொரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்க முன் வந்ததற்காகவே அவரைப் பாராட்டலாம். கொஞ்சம் அப்பாவித்தனமும், நிறைய நல்ல குணங்களும் கொண்ட கிராமத்து மனிதனாக இயல்பாக நடித்து தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.

இயக்குநர் சசி, குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் மனிதர்களின் மனநிலைகளையும் மிகைப்படுத்தாமல் இயல்பாக சொல்ல முயற்சித்திருக்கிறார். கதையின் மையக் கருத்தை வணிக அம்சங்களுக்காக சமரசம் செய்யாமல் எடுத்துச் சென்றிருப்பது பாராட்டுக்குரியது.

மைனஸ்:  கதை மெதுவாக செல்கிறது…. கருத்தை இன்னும் தெளிவாக சொல்லியிருக்கலாம் ….

மொத்தத்தில் இந்த ‘நூறு சாமி’ பாசக்கார சாமி.    

‘டபுள் ஆக்குபன்சி’ வெற்றி விழா

ஸ்​வின் கந்​த​சாமி இயக்​கி​யுள்ள ‘டபுள் ஆக்குபன்சி’ படத்​தில் சந்தோஷ், சம்​யுக்தா விஸ்​வ​நாத், ரேஷ்மா வெங்​கடேஷ், வினோத் கிஷண் உள்பட பலர் நடித்​துள்​ளனர். அவ்னி மூவீஸ் மற்​றும் பென்ஸ் மீடியா இணைந்து தயாரித்​துள்ள இப்​படம் கடந்த வாரம் வெளி​யானது.

இப்​படம் வரவேற்​பைப் பெற்​றதை அடுத்து வெற்றி விழா சென்னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினருடன் கிரியேட்​டிவ் தயாரிப்​பாளர் அனந்​திதா சுந்​தரும் கலந்​து​கொண்​டார். இயக்குநர் அஸ்​வின் கந்​த​சாமி கூறும்​போது, “இதில் நடித்​தவர்​கள் அர்ப்​பணிப்​புடன் சிறந்த நடிப்பை வழங்​கி​யுள்​ளனர்.

ரொமான்ஸ் காட்​சிகளில் சந்​தோஷின் நடிப்பு பாராட்​டப்​பட்​டது. சம்​யுக்தா விஸ்​வ​நாதனின் நடிப்​பு, படத்​தின் உணர்ச்சிப்பூர்வமான உச்​சக்​கட்​டக் காட்​சியை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்​றது. படத்​தில் நடித்த அனை​வரை​யும் நான் அதி​கம் சிரமப்​படுத்தி இருக்​கலாம். இருந்​தா​லும் முழு அர்ப்பணிப்​புடன் பணி​யாற்​றினர்.

இந்த வெற்றி அவர்​களுக்​கானது. ஒரு பார்​வை​யாளரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்​தது. கடும் மன அழுத்​தத்​தில் இருந்த அவர், தற்​செய​லாக இப்​படத்​தைப் பார்த்​த​தாக​வும், நீண்ட நாட்​களுக்​குப் பிறகு மனம்விட்டு சிரித்து மகிழ்ந்​த​தாக​வும் கூறி​னார். ஒரு படைப்​பாளி​யாக எனக்கு அதை​விடப் பெரிய வெற்றி எது​வும் இல்லை” என்​றார்.

படத்தின் தயாரிப்பாளர் நடிகை குஷ்பு பேசுகையில்:

என் மூத்த மகள் திருமண வேலைகளில் தீவரமாக இருக்கிறேன். என் கணவர் சுந்தர் சி. “புருஷன் பட வேலை, திருமண வேலைகளில் சுற்றி வருகிறார். அவராலும் இந்த விழாவுக்கு வர முடியவில்லை. என் இளைய மகள் இந்த பட வேலைகளை சரியாக செய்தார். அவந்திகாவை அனி என செல்லமாக அழைப்பார்கள். நான் பொம்மை என்பேன். என் பொம்மைக்கு வாழ்த்துகள். இந்த பட வேலைகளில் சிக்கல், பிரச்னை இருந்தது. அதை மீறி ஜெயித்தார். என் மூத்த மகள் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அடுத்து நாலு படங்களில் நடிக்கப்போகிறார். முன்பு ஒரு ஹீரோயின் காதல், திருமணம் என்பதை சொல்ல பதறுவார்கள். இப்போது எல்லாம் மாறிவிட்டது. ஒரு சின்ன படம் இந்தளவு வந்தது மகிழ்ச்சி. நாம் தயாரிக்கும் படம் மக்களை மகிழ்விக்கணும் அவர்கள் கொடுக்கும். பணத்துக்கு தகுந்ததாக இருக்கணும் என்று சுந்தர் சி சொல்வார். அதை நாங்கள் தொடர்வோம்” எனப் பேசினார்.