‘நடமாடும் மேமோகிராம்’ வாகனச் சேவை!
‘தர்மன்’ பட விழாவில் ரஜினிகாந்த் பேசியது என்ன?!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு “தர்மன்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் இந்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பது குறித்து நீண்ட நாட்களாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. ஆரம்பத்தில் இயக்குநர் சுந்தர்.சி இந்தப் படத்தை இயக்குவார் என கூறப்பட்டது. பின்னர் சிபி சக்கரவர்த்தியின் பெயரும் அடிபட்டது. ஆனால் இறுதியில் “ஓ மை கடவுளே” மற்றும் “டிராகன்” திரைப்படங்களை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து இந்த முக்கிய வாய்ப்பை பெற்றுள்ளார்.
“தர்மன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆக்ஷன் தோற்றத்தில் காணப்படும் ரஜினிகாந்த், கையில் கத்தி ஏந்தியபடி முகத்தில் சிறு புன்னகையுடன் அவருக்கு உரிய ஸ்டைலில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மூலம் படம் அதிரடி மற்றும் உணர்ச்சிகள் கலந்த கதைக்களத்தில் உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் நடிகை சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே “பேட்ட” திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்த சிம்ரன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் திரையை பகிர உள்ளனர்.
மேலும், நடிகை ராஷி கன்னாவும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவராக இணைந்துள்ளார். அவரது கதாபாத்திரம் குறித்து படக்குழு இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை என்றாலும், கதையின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இசையமைப்பாளர் அனிருத் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். ரஜினிகாந்த் – அனிருத் கூட்டணியில் ஏற்கனவே வெளியான பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், “தர்மன்” படத்தின் இசை மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் பெயர் வெளியிட்டு விழா இன்று காலை நடத்த நிலையில் அதில் பேசிய ரஜினிகாந்த் “நான் பேசினாலே பிராப்ளம் தான், ஒன்னு எனக்கு பிராப்ளம் இல்ல மத்தவங்களுக்கு பிராப்ளம்.
இந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய போது கமல் சார் சொன்னார் இங்கு நீங்க ஒரு திரைப்படம் பண்ணனும்.. அதுக்கு அப்புறம் ரெண்டு பெரும் வேலைகளில் பிசி ஆகிட்டோம். அது இப்போ நடந்து இருக்கு.. பல இயக்குனர்கள் மாறி இப்போது அஷ்வத் மாரிமுத்து இந்த கதையை இயக்கியுள்ளார். இதில் பெரிய சிக்கல் கமல் தான் கதை கேட்க மாட்டேன் எல்லாத்தையும் நீங்களே முடிவு பண்ணுங்கன்னு சொல்லிட்டாரு.. நான் ரொம்ப வற்புறுத்தியாக பிறகு தான் கதையை கேட்டார்.. எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பு உங்களுக்கே தெரியும் பல உதவிகளை செய்திருக்கிறார். ஒரு நல்ல என்டர்டைமென்ட் உடன் ஒரு திரில்லர் படமா இது இருக்கும்” என கூறினார்.
பெண்ணை மிரட்டி பல முறை பாலியல் தொல்லை! அந்த புகைப்படங்கள் என்ன?!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ஆர்.என்.கண்டிகை பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் தனது கணவரின் உறவினர் ஒருவருடன் தகாத உறவு இருந்துள்ளார். எனவே இருவரும் அடிக்கடி வீட்டிற்கு தெரியாமல் மறைவான பகுதிகளுக்குச் சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். அப்படி அவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்ததை கவனித்த அதே பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் அவரகள் உல்லாசமாக இருப்பதை மறைமுகமாக புகைப்படம் எடுத்துள்ளனர். அந்தப் புகைப்படத்தை காட்டி அந்த இளைஞர்கள் அந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன், பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
எங்கு கள்ளக்காதல் குறித்து கணவனுக்கு தெரிந்து விடுமோ என அச்சமடைந்த அந்த பெண் கணவருக்கு தெரியாமல் அவர்களுக்கு அவ்வப்போது பணம் அளித்துள்ளார். அந்தப் பெண் சிறுக சிறுக ரூபாய் இருபது லட்சத்திற்கு மேல் பணம் அளித்த நிலையில் மீண்டும் அவர்கள் ஐந்து லட்சம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு பெண் மறுப்பு தெரிவிக்கவே தொடர்ந்து தொல்லை செய்த வாலிபர்கள் அந்தரங்க புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டியுள்ளனர். எனவே அந்த பெண் கணவர் சீட்டு பணம் கட்டுவதற்காக வைத்திருந்த ரூபாய் 5 லட்சத்தை கணவருக்கு தெரியாமல் எடுத்து அந்த இளைஞர்களுக்கு கொடுத்துள்ளார்.
இந்நிலையில் சீட்டு பணம் கட்டாதது குறித்து அந்த பெண்ணிடம் கணவர் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பெண்ணின் கள்ளக்காதல் குறித்து கணவனுக்கு தெரியவந்த நிலையில் மன உளைச்சல் அடைந்த அந்த பெண் ஆசிட்டை குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அந்த பெண் பணம் கொடுத்த விவகாரம் குறித்து கணவரிடம் தெரிவித்ததன் பேரில் அவர் பெருநகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பெண்ணை மிரட்டிய அதே பகுதியை சேர்ந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகன் சந்தோஷ் டேனியல், மைக்கேல்ராஜ், மார்ட்டின் டேனியல், ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களது செல்போன்களை கைப்பற்றிய போலீசார் அதில் உள்ள பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை டெலிட் செய்து வேறு நகல்கள் உள்ளதா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த புகைப்படத்தை வைத்து பெண் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The Hidden Protector (2026) Review RATING 3/5
‘அனந்தன் காடு’ விமர்சனம் RATING 3/5
சுயநல அரசியல்வாதி மற்றும் காவல் அதிகாரி இருவரால் பாதிக்கப்பட்ட ஒரு சிறு கூட்டம் படும்பாடு தான் இந்த ‘அனந்தன் காடு’
விமர்சனம்:
படத்தின் ஆரம்பத்தில் ஒருவரை துப்பாக்கி முனையில் நிறுத்தி ஒரு கதை சொல்கிறார் ஒரு இளைஞர். அந்தக் கதைப்படி இலங்கை ராணுவத்தால் தன் குடும்பத்தை இழந்த இளைஞன் ஆர்யா கேரளா வருகிறார். அவர் வந்து அங்கு அரசியல்வாதி ஒருவருக்காக கொலைகள் செய்யும் குட்டி கூலிப்படை ஒன்றோடு இணைகிறார். அந்தக்கூலிப்படைக்கு அரசியல்வாதி இன்னொரு வேலையும் கொடுக்கிறார். அதை ஆர்யாவே முன்னின்று செய்கிறார். அதன்பின் அந்த அரசியல்வாதி ஆர்யாவையும் அவர் நண்பர்களையும் கொலை செய்ய திட்டம் தீட்ட அந்தத் திட்டங்களை ஆர்யா முறியடித்தாரா? இல்லையா? துப்பாக்கி முனையில் நின்று கதை சொல்லும் அந்த சிறுவன் யார்? அடுத்து என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை….
சண்டைக்காட்சிகளில் ஆர்யாவின் துடிப்புமிக்க உழைப்பு ஆச்சர்யப்படுத்துகிறது. குற்றப் பின்னணி கொண்ட நால்வர் குழுவினராக நடித்திருக்கும் முரளி கோபி, தேவ் மோகன், இந்திரன்ஸ் மற்றும் அப்பானி சரத் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வாக இருப்பதோடு, உணர்வுப்பூர்வமான காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் முரளி கோபி, ஒரு குறிப்பிட்ட உண்மை சம்பவத்தை மையமாக வைத்துக்கொண்டு அதை கமர்ஷியல் ஆக்ஷன் பாணியிலான படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். யுவாவின் ஒளிப்பதிவுக்கு தனியாக ஒரு பாராட்டுப்பத்திரமே வாசிக்கலாம். இரவு ஷாட்ஸ் முதல் சண்டைக்காட்சிகள் வரை அவரது கேமரா அபாரம். எடிட்டர் ரோஹித் வி.எஸ். வாரியத் சிறப்பாக கட்ஸ் கொடுத்துள்ளார்
மைனஸ்: சில காட்சிகள் லாஜிக்கே இல்லை… தமிழர்கள் கதையில் கூடுதல் கவனம் தேவை….
மொத்தத்தில் இந்த ‘அனந்தன் காடு’ மழை வந்து நிற்கும்.
முதல்வர் விஜய் ரியாக்சன்! சட்டசபையில் சலசலப்பு!!
தமிழக சட்டப்பேரவை நீண்ட, நெடிய பாரம்பரியம் கொண்டது. அடுக்குமொழிப் பேச்சுகள், காரசார விவாதங்கள், ஆளுங்கட்சியை அதிரவைத்த எதிர்க்கட்சிகளின் கேள்விகள், வெளிநடப்புகள், உறுப்பினர்களை அவையிலிருந்து குண்டுக்கட்டாக அப்புறப்படுத்திய, பேப்பர் முதல் சட்டை வரை கிழிந்த நிகழ்வுகள் என பற்பல சம்பவங்களின் சாட்சியாக நிற்கும் புனித ஜார்ஜ் கோட்டை மீதுதான் ஜூன் 18 அன்று தமிழகத்தின் ஒட்டுமொத்த கவனக் குவிப்பும் இருந்தது எனலாம்.
தமிழக முதல்வராக விஜய், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி பேரவை கூட்டத் தொடரில் எப்படிக் களமாடுவார்கள் என்ற எதிர்பார்ப்புதான் அதற்குக் காரணம்.
அன்றைய தினம் (ஜூன் 18) சட்டப்பேரவை வளாகத்துக்கு வெளியில் உதயநிதி தலைமையிலான திமுக எம்எல்ஏக்கள் ‘வாயை திறங்க சிஎம்’ என்று எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்தும், ஆளுங்கட்சியைக் கேள்வி கேட்கும், விமர்சிக்கும் வாசகங்கள் கொண்ட விதவிதமான பதாகைகளை ஏந்தியும் வந்திருந்தனர். அன்றைய தினம் ஆளுநர் உரை வாசிக்கப்பட்டது.
இரண்டாவது நாளான ஜூன் 19 அன்று முதல்வர் விஜய், மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கையை எதிர்த்து தனித் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அதன் மீது எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசின் முயற்சிகளில் உடன் இருப்போம்” என்று பாந்தமாகக் கூறினார். மேகேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கையைக் கூட உடனடியாக ஏற்றார் முதல்வர் விஜய்.
இந்த நடவடிக்கைகள் வெகுவாக கவனம் ஈர்த்தன. ஏன் சிலர் சமூக வலைதளங்களில், ‘காரசார விவாதத்தை எதிர்பார்த்தோம், சண்டை போடுங்களேன்’ என்று மீம்ஸ் எல்லாம் போட்டார்கள்.
ஜூன் 20, 21 விடுமுறைக்குப் பின்னர் நேற்று (ஜூன் 22) சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “மின்வெட்டு பிரச்சினையால் தொழில் முதலீடுகளை கோட்டைவிட்டு விடாதீர்கள்” என்று கூறி தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பற்றி முக்கியமான கருத்துகளை முன்வைத்தார்.
இந்த நிலையில், கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று தமிழக முதல்வர் விஜய் தனது பதிலுரையில் பேசியது அக்கட்சியினர் மத்தியில் வரவேற்பையும், தமிழக மக்கள் மத்தியில் பரவலாக இருவேறு விதமான கருத்துகளையும் ஈர்த்திருக்கிறது.
முதல்வர் விஜய் இன்று பேசுகையில், சொன்ன குட்டிக் கதைதான் ஹைலைட் விவாதப் பொருளாகியுள்ளது.
“ஒரு ஊரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்பதால் பெரியர் ஒருவர் கண்கள் மீது கையை வைத்து மறைத்தபடி சுற்றும் முற்றும் பார்த்து தேடிக் கொண்டிருந்தார். அப்போது உடன் இருந்த சிறுவன் என்ன தேடுகிறீர்கள் எனக் கேட்டான். அதற்கு ‘ஒன்றுமில்லை தம்பி, உங்கள் அப்பா இங்கே தான் இருப்பார் எனச் சொன்னார்கள். அவரைத் தேடிக்கொண்டு இருக்கிறேன். எங்க உங்க அப்பாவை காணோம். அவரை தான் தேடிக்கொண்டு இருக்கிறேன்’ என சொன்னாராம்” என்று குட்டிக் கதையை கூறினார் முதல்வர் விஜய்.
“இதனால் யாரும் டென்ஷன் ஆக வேண்டாம்,” என்று தொடர்ந்து அவர் பேசியது அப்பட்டமாகவே ஸ்டாலினையும், உதயநிதியையும் கிண்டலடித்துப் பேசியது என்று தெரிந்தததால் திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பும் செய்தனர்.
முதல்வர் விஜய்யின் உடல்மொழி பிரச்சார மேடைகளில் இருந்ததுபோலவே சட்டப்பேரவைக்குள் இருப்பதும், இயல்பாக அவை நடவடிக்கைகளில் ஈடுபடாமல் எழுதிக் கொடுத்ததை வாசிப்பதும், நடித்துக் காட்டுவதும் போல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
“என்னைப் பேசு, பேசு என்றால், ஐந்து நிமிடங்கள் கொளத்தூரில் பேசியதற்கே என்னவானது என்று தெரியும்” என்று கூறியதுடன், அன்று கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிவின்போது அப்போதைய முதல்வர் ஸ்டாலின் செய்த சைகையை, பேரவையில் இன்று முதல்வர் விஜய் செய்த விதம் அத்தனை நாகரிகமானதாக இல்லை என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
“முதல்வர் விஜய் இன்னும் பிரச்சார பாணியிலே பேசுகிறார். நம் கையில்தான் தமிழக அரசு இப்போது இருக்கிறது என்பதை உணர வேண்டும். அதை முன்னோக்கி எடுத்துச் செல்வதைத்தான் திட்டமிட வேண்டுமே தவிர திமுக vs தவெக அரசியல் சட்டப்பேரவைக்கு உள்ளே அல்லாது வெளியேதான் செய்ய வேண்டும்,” என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
அதுபோலவே, திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவால் இந்த ஆட்சியை அமைக்கவில்லை என்று விஜய் பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதாலேயே தவெகவுக்கு ஆதரவு கொடுத்தோம்” என்று தெரிவித்துள்ளார்.
‘தமிழக அரசியலுக்கும், தமிழக சட்டப்பேரவைக்கும் புதியவரான விஜய் அவை நாகரிகம், கூட்டணி நாகரிகம் எல்லாம் தெரிந்து கொண்டு வாய் திறக்க வேண்டும். வாயைத் திறக்கமாட்டேன். திறந்தால் அது கொண்டு திமுகவை மட்டுமே விமர்சிப்பேன் என்ற போக்கு என்பது பண்பட்டது அல்ல’ என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
அதேவேளையில், “விஜய் ஊழல் ஒழிப்பு சவால் விடுகிறார் என்றால் அவர் ஒரு க்ளீன் ஸ்லேட். அதனால்தான் ‘நாங்கள் ஊழல் செய்ய மாட்டோம், யாரையும் செய்யவிட மாட்டோம், இதற்கு முன்னால் செய்தவர்களையும் சும்மா விடமாட்டோம்’ என்று சவால் விடுகிறார்” என்று பாராட்டுகின்றனர் தவெகவினர்.
“இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அவர் சொன்னதுபோல் அண்ணாவின் ஆட்சியை ஏற்படுத்தியிருக்கிறார். எம்ஜிஆரின் வெற்றியைப் போல் 1977 புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறார். ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என தமிழக அரசியலில் ஒரு புதிய போக்கினை உருவாக்கியிருக்கிறார்” என்று சமூக வலைதளங்களில் இளைஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
“அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவார். அவர் பேச வேண்டும் என்பதைவிட அவர் செய்கைகள் பேச வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம். அவருடைய செயல்பாடு பேசப்படும் என்று நம்புகிறோம்” என்று தவெக தீவிர விசுவாசிகள் கூறுகின்றனர்.
ஏன், முதல்வர் விஜய்யின் தந்தையும் கூட அண்மையில் அளித்தப் பேட்டியில், “விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா?” என்ற கேள்வியையே முன்வைத்திருக்கிறார்.
இங்கே சில தலைவர்களின் எதிர்வினைகளும் சுட்டிக்காட்டத்தக்கது. “முதல்வர் விஜய் சினிமாவில் நடிப்பது போலவே நினைத்துக் கொண்டு சட்டப்பேரவையிலும் இருக்கிறார். சட்டமன்ற மரபுப்படி இவ்வாறு செய்கைகளை காட்டக் கூடாது. இதுபோன்று முன்பு செய்தவர்களின் நிலை என்ன ஆனது என்பதும் உங்களுக்குத் தெரியும். இனிமேலாவது முதல்வர் தனது தகுதியை அறிந்து, அதற்கான சட்டப்பேரவை மரபோடு நடந்து கொள்ள வேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
“தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு முதல்வர் விஜய் வழங்கிய பதிலுரை, மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அது ஆவேசம், ஆக்ரோஷம், நக்கல், நையாண்டி கலந்த புளித்துப்போன சினிமா வசனங்களின் தொகுப்பாகவே அமைந்தது. சட்டப்பேரவையையே ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றி சினிமாவில் பேசுவது போல வசனங்களை அடுக்குவது, ரீல்ஸ் போட உதவுமே தவிர, மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவாது” என்று சாடியிருக்கிறார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.
விஜய்யின் பேச்சுகளை சுட்டிக்காட்டும் அதேவேளையில் உதயநிதியின் எதிர்வினையையும் குறிப்பிட வேண்டும் என்கின்றனர் அரசியல் நடுநிலையாளர்கள்.
“செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்” என்று உதயநிதியும் தனிப்பட்ட முறையிலான விமர்சனத்தை வைத்திருக்கிறார். அதை அவைக்குள் சொல்லாதது வரவேற்கத்தக்கது. ஆனாலும், விஜய்யின் மனைவி பாதிக்கப்பட்ட பெண்ணாக இருக்கும் வேளையில், ‘ஒரு பெண்ணை மாண்போடு நடத்துவது எங்கள் பெருமித அடையாளம்’ என்று சொல்லிக் கொள்ளும் உதயநிதி சொல்லியிருக்க வேண்டாம்,” என்று சுட்டிக் காட்டுகின்றனர்.
அதேவேளையில், முதல்வர் விஜய்யின் ஆக்ஷன்களையும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் ரியாக்ஷன்களையும் வரவேற்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், “சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் பேச்சு சுவாரஸ்யமாக இருந்தது. தமிழகத்தின் அரசியல் மாறியுள்ளதைப் பார்க்க முடிகிறது. எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதும், முதல்வர் பேசும் மாடலும் மாறியுள்ளது. இந்த மாற்றத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழக அரசியல் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்துள்ளது” என்று பாசிட்டிவ் நோட் தருகிறார்.
அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ள கருத்தும் இங்கே முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.
“முதல்வர் பொறுப்புக்கு விஜய் புதியவர். விரைவில் அவர் தன் கடமையை உணர்ந்து அவரே சட்டமன்றத்தில் கேள்விகளுக்கு பதில் அளிப்பார். சட்டமன்றம் என்பது கேலி செய்யும் அரங்கம் அல்ல. ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் வேறு வேறு அல்ல, இரண்டுமே ஜனநாயகத்துக்கு வலு சேர்க்கும் இரு தூண்கள்.
முதல்வர் விஜய் எப்படிப் பேசுகிறார் என்பதை விட, அவர் எந்தக் கொள்கை வழியில் நடக்கிறார் என்பதுதான் முக்கியம்” என்கிறார் மு.வீரபாண்டியன்.
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரிலாவது ரீல்ஸ் ஆட்சி, குட்டிக் கதை, வாயைத் திறங்க சிஎம் போன்ற அரசியலை விடுத்து, சிறந்த ஆட்சிக்கான முன்னெடுப்புகளையும், வலுவான எதிர்க்கட்சிக்கான பங்களிப்பையும் விஜய்யும், உதயநிதியும் தருவார்களா என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
‘நூறு சாமி’ விமர்சனம் RATING 3.9/5
சசி இயக்கத்தில் ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்’ மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில், விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷான், சக்தி, பாடினி குமார், காவ்யா அனில், கருணாஸ், லிஜோமோல் ஜோஸ், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனீஷ்காந்த், ஜென்சன் திவாகர், பக்ஸ், வினோதினி வைத்தியநாதன், தாமரைச் செல்வி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘நூறு சாமி ‘
விமர்சனம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டாரத்தில் உள்ளது வலையம்பட்டு கிராமம். கிராமப்புற பின்னணியில் வாழும் செல்வி என்ற பெண், தனது இரு மகன்களையும் வளர்ப்பதற்காக தனது வாழ்க்கை ஆசைகளையே தியாகம் செய்கிறார். ஆண்டுகள் கடந்த பிறகு, அவருடைய வாழ்க்கைக்கு மீண்டும் ஒரு புதிய அர்த்தம் கிடைக்க வேண்டுமென்ற எண்ணம் உருவாகிறது. ஆனால் குடும்பம், உறவினர்கள் மற்றும் சமூகத்தின் எதிர்ப்புகள் அவரை சோதிக்கின்றன. அந்த சூழலில் ஒரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பம் வெற்றிபெறுகிறதா? என்பதே கதை…
விஜய் ஆண்டனி வழக்கமான ஹீரோ பாணியை தவிர்த்து அமைதியான கதாபாத்திரத்தில் தோன்றி கதைக்கு தேவையான ஆதாரமாக இருக்கிறார். கதையின் உணர்ச்சி அம்சங்களை தாங்கிச் செல்லும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுவாசிகா, பல காட்சிகளில் தனது இயல்பான நடிப்பால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறார். குறிப்பாக குடும்ப பாசம் மற்றும் மனவேதனைகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் அவரது நடிப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.
செல்வியின் மூத்த மகன் பாஸ்கராக அஜய் திஷானும், இளைய மகன் விவேக்காக சக்தியும் நடித்திருக்கிறார்கள். இருவருமே அவரவர் கதாபாத்திரத்தை நிறைவாய் செய்திருக்கிறார்கள். மூத்த மகனுக்கு உரிய பொறுப்பு, இளைய மகனுக்கு உரிய துடிப்பு என இருவரது கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
கதாநாயகன் என்ற லேபிள் இல்லாமல், கதைக்குள் ஒரு கதாபாத்திரமாக, விவசாயி ஏழுமலையாக, படத்தின் இரண்டாம் பாதியில் வருகிறார் விஜய் ஆண்டனி. இப்படியொரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்க முன் வந்ததற்காகவே அவரைப் பாராட்டலாம். கொஞ்சம் அப்பாவித்தனமும், நிறைய நல்ல குணங்களும் கொண்ட கிராமத்து மனிதனாக இயல்பாக நடித்து தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.
இயக்குநர் சசி, குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் மனிதர்களின் மனநிலைகளையும் மிகைப்படுத்தாமல் இயல்பாக சொல்ல முயற்சித்திருக்கிறார். கதையின் மையக் கருத்தை வணிக அம்சங்களுக்காக சமரசம் செய்யாமல் எடுத்துச் சென்றிருப்பது பாராட்டுக்குரியது.
மைனஸ்: கதை மெதுவாக செல்கிறது…. கருத்தை இன்னும் தெளிவாக சொல்லியிருக்கலாம் ….
மொத்தத்தில் இந்த ‘நூறு சாமி’ பாசக்கார சாமி.
‘டபுள் ஆக்குபன்சி’ வெற்றி விழா
அஸ்வின் கந்தசாமி இயக்கியுள்ள ‘டபுள் ஆக்குபன்சி’ படத்தில் சந்தோஷ், சம்யுக்தா விஸ்வநாத், ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷண் உள்பட பலர் நடித்துள்ளனர். அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா இணைந்து தயாரித்துள்ள இப்படம் கடந்த வாரம் வெளியானது.
இப்படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அனந்திதா சுந்தரும் கலந்துகொண்டார். இயக்குநர் அஸ்வின் கந்தசாமி கூறும்போது, “இதில் நடித்தவர்கள் அர்ப்பணிப்புடன் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.
ரொமான்ஸ் காட்சிகளில் சந்தோஷின் நடிப்பு பாராட்டப்பட்டது. சம்யுக்தா விஸ்வநாதனின் நடிப்பு, படத்தின் உணர்ச்சிப்பூர்வமான உச்சக்கட்டக் காட்சியை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றது. படத்தில் நடித்த அனைவரையும் நான் அதிகம் சிரமப்படுத்தி இருக்கலாம். இருந்தாலும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினர்.
இந்த வெற்றி அவர்களுக்கானது. ஒரு பார்வையாளரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. கடும் மன அழுத்தத்தில் இருந்த அவர், தற்செயலாக இப்படத்தைப் பார்த்ததாகவும், நீண்ட நாட்களுக்குப் பிறகு மனம்விட்டு சிரித்து மகிழ்ந்ததாகவும் கூறினார். ஒரு படைப்பாளியாக எனக்கு அதைவிடப் பெரிய வெற்றி எதுவும் இல்லை” என்றார்.
படத்தின் தயாரிப்பாளர் நடிகை குஷ்பு பேசுகையில்:
என் மூத்த மகள் திருமண வேலைகளில் தீவரமாக இருக்கிறேன். என் கணவர் சுந்தர் சி. “புருஷன் பட வேலை, திருமண வேலைகளில் சுற்றி வருகிறார். அவராலும் இந்த விழாவுக்கு வர முடியவில்லை. என் இளைய மகள் இந்த பட வேலைகளை சரியாக செய்தார். அவந்திகாவை அனி என செல்லமாக அழைப்பார்கள். நான் பொம்மை என்பேன். என் பொம்மைக்கு வாழ்த்துகள். இந்த பட வேலைகளில் சிக்கல், பிரச்னை இருந்தது. அதை மீறி ஜெயித்தார். என் மூத்த மகள் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அடுத்து நாலு படங்களில் நடிக்கப்போகிறார். முன்பு ஒரு ஹீரோயின் காதல், திருமணம் என்பதை சொல்ல பதறுவார்கள். இப்போது எல்லாம் மாறிவிட்டது. ஒரு சின்ன படம் இந்தளவு வந்தது மகிழ்ச்சி. நாம் தயாரிக்கும் படம் மக்களை மகிழ்விக்கணும் அவர்கள் கொடுக்கும். பணத்துக்கு தகுந்ததாக இருக்கணும் என்று சுந்தர் சி சொல்வார். அதை நாங்கள் தொடர்வோம்” எனப் பேசினார்.
‘ஆனந்தன் காடு’ பத்திரிகையாளர் சந்திப்பு
First Look of Comedy Entertainer ‘Marriage Story’
The highly anticipated first look poster of the upcoming comedy-commercial entertainer “Marriage Story” has been officially released. Produced under the banner of Reel Petti Productions, the film is directed by filmmaker Sunil Dev.
“Marriage Story” marks the exciting reunion of director Sunil Dev and actor S.P. Siddarth, whose previous thriller collaboration, Athomugam (2024), received critical acclaim and a warm reception from the audience.
Shifting gears from their previous outing, the duo is back with a complete family entertainer packed with friendship, romance, and non-stop comedy.
The film features a dynamic ensemble cast bringing this commercial celebration to life: Lead Actors include S.P. Siddarth, Shabana Shahjahan Aryan, and Deepika Venkatachalam. The Supporting Cast has Veteran actors Nassar, Nizhalgal Ravi, Aruldoss, and Puduvai Poobalan in pivotal roles.
“Marriage Story” boasts a strong technical team ensuring a high-quality cinematic experience:
Technical Team:
Director: Sunil Dev
Cinematography: Tamil Selvan
Music Director: Deepan Chakravarthy
Editor: Tamil Arasan
Stunt Choreography: Miracle Michael
Production House: Reel Petti Productions
With “Athomugam” proving to be a success, the reunion of Sunil Dev and S.P. Siddarth has already generated significant buzz in the trade circuits. ‘Marriage Story’ promises to be a wholesome, theatrical laugh-riot for audiences of all ages.
With post-production work moving at a brisk pace, the team will soon announce the teaser and audio release dates.

















