‘குற்றம் கடிதல் 2′
‘மனிதன் தெய்வமாகலாம்’ விமர்சனம் RATING 2.9/5
டென்னிஸ் மஞ்சுநாத் அவர்களின் இயக்கத்தில் செல்வராகவன், குஷி ரவி, ஆர் எஸ் சதீஷ், கெளசல்யா, மைம் கோபி, ஒய் ஜி மகேந்திரன், லிர்திகா, சேலம் தீபக் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “மனிதன் தெய்வமாகலாம்”.
விமர்சனம்:
சிறையில் தூக்கு தண்டனை கைதியாக இருக்கும் செல்வராகவனை காப்பாற்ற முயற்சிக்கும் எம்எல்ஏ ஒய்.ஜி.மகேந்திரன், அவரது முன்கதையை கேட்கிறார். பொன்வயல் கிராமத்தில் மனைவி குஷி ரவியுடன் எளிய வாழ்க்கை மேற்கொண்டு வருகிறார், செல்வராகவன். அவரது அக்கா கவுசல்யாவுக்கு அடாவடி ஆசாமி மைம் கோபி வட்டி பணம் கேட்டு குடைச்சல் கொடுக்க, கவுசல்யாவுக்கு உதவ சென்ற குஷி ரவியின் வாழ்க்கையில் மைம் கோபி விளையாட, சாதுவாக இருந்த செல்வராகவன் கையில் கத்தி எடுக்கிறார். பிறகு என்ன நடக்கிறது? தூக்கு தண்டனையில் இருந்து செல்வராகவன் தப்பித்தாரா? என்பது மீதி கதை….
கதைக்கான நாயகனாக செல்வராகவன் வாழ்ந்திருப்பது மகிழ்ச்சி. நாயகி குஷி ரவி கதைக்கு ஏற்ற நாயகியாக பொருந்தியிருந்தார். கெளசல்யாவின் கதாபாத்திரமும் வலுவானது தான். அதையும் சரியாகவே கையாண்டிருக்கிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த சதீஷும் இயல்பான நடிப்பைக் கொடுத்திருந்தார்.கே.ரவிவர்மாவின் ஒளிப்பதிவும், ஏ.கே.பிரியனின் பின்னணி இசையும் காட்சிகளை நகர்த்த உதவி செய்துள்ளன.
மைனஸ்: கதை பெரிய அளவில் ஈர்க்கவில்லை…. ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் தேவை….
‘மனிதன் தெய்வமாகலாம்’- தலைப்பு உண்மை, ஆனால் கதை சோர்வு.
வெளியானது ‘ஏறி வந்தோம் ஐயப்பா’ பாடல்!
சன்னிதானம் பிஓ படக்குழுவினர் படத்தின் முதல் பாடலான ஏறி வந்தோம் ஐயப்பா பாடலை வெளியிட்டுள்ளனர். சபரிமலை யாத்திரையுடன் தொடர்புடைய நம்பிக்கை மற்றும் பக்தியின் சாரத்தை அழகாக படம்பிடித்துக் காட்டும் வகையிலும், மனதை உருக்கும் பக்தி பாடலாகவும் இது அமைந்துள்ளது. அபிஷேக் ராஜு மற்றும் விஷ்ணு ராம் ஆகியோரின் ஆழமான குரலில் உணர்வுபூர்வமாக பாடப்பட்டுள்ள இந்த பாடல், மோகன் ராஜனின் மனதை தொடும் வரிகளாலும், ஏ.ஜி.ஆர்-ன் மெய்சிலிர்க்க வைக்கும் இசையாலும் மெருகேற்றப்பட்டுள்ளது. இது படத்தின் உணர்ச்சிகரமான மற்றும் ஆன்மீக பயணத்திற்கு சரியான அடித்தளத்தை அமைத்துள்ளது.
புகழ்பெற்ற இயக்குநர் சேரன் மற்றும் பிரபல நடிகை மஞ்சு வாரியர் ஆகியோரால் வெளியிடப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை தூண்டிய நிலையில், தற்போது தனித்துவமான திரையனுபவத்திற்கான எதிர்பார்ப்பை இந்த பாடல் மேலும் அதிகரித்துள்ளது. சர்வதா சினி கரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள சன்னிதானம் பிஓ திரைப்படத்தை அமுத சாரதி இயக்கியுள்ளார். அவரே படத்திற்கான வசனங்களையும் எழுதியுள்ளார். இப்படத்தை மதுசூதன் ராவ், வி. விவேகானந்தன் மற்றும் ராமசாமி வேலு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
யோகி பாபு, ரூபேஷ் ஷெட்டி மற்றும் வர்ஷா விஸ்வநாத் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், பல்வேறு திரையுலகங்களை சேர்ந்த திறமையான கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இவர்களுடன் மூத்த கலைஞர்களான சித்தாரா, பிரமோத் ஷெட்டி, முன்னார் ரமேஷ், கஜராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சபரிமலை, பம்பை, எருமேலி, சென்னை மற்றும் பொள்ளாச்சி போன்ற ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த படம், பார்வையாளர்களுக்கு உண்மையான மற்றும் கதையோடு ஒன்றிப்போக செய்யும் பின்னணியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சன்னிதானம் பிஓ படத்தின் மையக்கரு ஆழமான மனித உணர்வுகளை அடிப்படையாக கொண்டது. ஐயப்ப பக்தர்கள் சந்திக்கும் ஓர் எதிர்பாராத சம்பவத்தையும், அதனை தொடர்ந்து அவர்களின் பயணத்தில் ஏற்படும் மாற்றங்களையும் சுற்றியே இதன் கதை நகர்கிறது. நம்பிக்கை, மன உறுதி மற்றும் மனித உறவுகளில் வேரூன்றிய இந்த திரைப்படம், மனதை ஆழமாக தொடும் ஒரு திரையனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை அஜினு ஐயப்பன் எழுதியுள்ளார். வினோத் பாரதி ஒளிப்பதிவு செய்ய, பி.கே படத்தொகுப்பை கையாண்டுள்ளார். தொழில்நுட்ப குழுவில் விஜய் தென்னரசு (கலை இயக்குநர்), மெட்ரோ மகேஷ் (சண்டைப் பயிற்சி), ஜாய் மதி (நடன அமைப்பு), நடராஜ் (ஆடை வடிவமைப்பு) மற்றும் மோகன் ராஜன் (பாடல் வரிகள்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஏறி வந்தோம் ஐயப்பா பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் பயணம் ஒரு சிறப்பான ஆன்மீக உணர்வுடன் தொடங்கியுள்ளது; வரும் நாட்களில் படம் குறித்த பல சுவாரஸ்யமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள சன்னிதானம் பிஓ மே மாதம் திரைக்கு வர உள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
நடிகர்கள்:
யோகி பாபு, ரூபேஷ் ஷெட்டி, சித்தாரா, பிரமோத் ஷெட்டி, வர்ஷா விஸ்வநாத், முன்னார் ரமேஷ், கஜராஜ், ராஜா ருத்ரகோடி, சாத்விக், அஸ்வின் ஹாசன், வினோத் சாகர், கல்கி ராஜா, விஷாலினி, தஷ்மிகா லக்ஷ்மண், மதுசூதன் ராவ்.
தொழில்நுட்பக் குழு:
வசனம் & இயக்கம்: அமுத சாரதி
கதை & திரைக்கதை: அஜினு ஐயப்பன்
தயாரிப்பாளர்கள்: மதுசூதன் ராவ், வி. விவேகானந்தன் & ராமசாமி வேலு
இணை தயாரிப்பாளர்: ஷபீர் பதான்
தயாரிப்பு நிறுவனங்கள்: சர்வதா சினி கரேஜ் & ஷிமோகா கிரியேஷன்ஸ்
ஒளிப்பதிவு: வினோத் பாரதி
இசை: ஏ.ஜி.ஆர்
படத்தொகுப்பு: பி.கே
கலை இயக்குநர்: விஜய் தென்னரசு
சண்டைப்பயிற்சி: மெட்ரோ மகேஷ்
பாடலாசிரியர்: மோகன் ராஜன்
நடன அமைப்பு: ஜாய் மதி
ஆடை வடிவமைப்பாளர்: நடராஜ்
ஒப்பனை: சி. சிபுகுமார்
புரொடக்ஷன் கண்ட்ரோலர்கள்: ரிச்சர்ட் & டி. முருகன்
நிர்வாகத் தயாரிப்பாளர்: விலோக் ஷெட்டி
இணை இயக்குநர்கள்: ஷக்கி அசோக் & சுஜேஷ் ஆனி ஈப்பன்
அசோசியேட் இயக்குநர்கள்: முத்து விஜயன், ராஜா சபாபதி, ராஜா ராம்
உதவி இயக்குநர்கள்: அக்னி மகேந்திரன், சரவணன் ஜீவா
பப்ளிசிட்டி டிசைனர்: வி.எம். சிவகுமார்
புகைப்படங்கள்: ரெனி மோன்
மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத் & பாரஸ் ரியாஸ்
ஆடியோ லேபில்: ட்ரெண்ட் மியூசிக்
ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன்! நடந்தது என்ன?!
சிவகங்கையில் ரூ.8,000-க்கான மாதிரி கூப்பன் விநியோகித்த 2 பேரை பிடித்து தேர்தல் அதிகாரிகளிடம் அதிமுகவினர் ஒப்படைத்தனர். அவர்களை அதிகாரிகள் விடுவித்ததால் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது அதிமுக, திமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் கருணாஸ், அதிமுக சார்பில் பி.ஆர்.செந்தில்நாதன் போட்டி யிடுகின்றனர். சிவகங்கை 5-வது வார்டில் திமுகவினர் சிலர் வீடு வீடாகச் சென்று ரூ.8,000-க் கான மாதிரி கூப்பன் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த அதிமுக, பாஜகவினர் அங்கு சென்று 2 பேரை கூப்ப னுடன் பிடித்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மரிய ஆரோக்கிய ரூபல்லா தலைமையிலான தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினரிடம் ஒப்படைத்தனர்.
மேலும், அவர்கள் மீது வழக்குப் பதிய வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து பிடிபட்ட இருவரையும் நகர் போலீஸாரிடம் தேர்தல் அதிகாரிகள் ஒப்படைத்தனர். ஆனால், சிறிது நேரத்தில் இருவரையும் போலீஸார் விடுவித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக நகரச் செயலாளர் என்.எம்.ராஜா, பாஜக நகரத் தலைவர் உதயா தலைமையிலான அதிமுகவினர் சிவகங்கை நகர் காவல் நிலை யத்தை முற்றுகையிட்டனர். அதேநேரம் நகராட்சித் தலைவர் சி.எம்.துரை ஆனந்த் தலைமையிலான திமுகவினர் அங்கு வந்தனர். மாதிரி கூப்பன் கொடுப்பதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
ரூ.8,000 மாதிரி கூப்பன் குறித்து விளம்பரம் செய்வதற்குத்தான் ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது. கூப்பனை வாக்காளர்களிடம் விநியோகிக்கக் கூடாது என்று அதிமுகவினர் கூறினர். இதனால், இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. டிஎஸ்பி அமலா அட்வின் தலைமையிலான போலீஸார் இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து அதிமுகவினர் புகார் மனு கொடுத்தனர்.
இது குறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ‘மாதிரி கூப்பன் கொடுத்ததில் விதிமீறல் இருக்கிறதா என்பது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் விளக்கம் பெற்று, தவறு இருந்தால் வழக்குப் பதிந்து விசாரிக்கப்படும்’ என்றனர்.
அதிமுகவினர் கூறுகையில், ‘கூப்பன் விநியோகம் செய்த நபர்களை பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தோம். பறிமுதல் செய்த கூப்பன்களை வாங்கிக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். ஆனால் நடவடிக்கை எடுக்காமல் இருவரையும் தப்பவிட்டனர். தேர்தல் அதிகாரிகளும், போலீஸாரும் ஆளும்கட்சிக்கு ஆதரவாக உள்ளனர்’ என்று கூறினர்.
மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் போராட்டம்!
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் வீடுகள் தோறும் கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்பேரில் மாநிலம் முழுவதும் திமுகவினர் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தியும், வீடுகளின் முன் கருப்புக் கொடி கட்டியும், கோலமிட்டும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இச்சூழலில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் சேலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு நேற்று இரவு வந்தார். நாமக்கல் நல்லிபாளையத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் தங்கினார். தொடர்ந்து இன்று காலை நாமக்கல் நல்லிபாளையத்திற்கு கருப்பு உடை அணிந்து முதல்வர் ஸ்டாலின் வந்தார். இதனையடுத்துஅங்கு செல்லப்பன் என்பவரது வீட்டின் முன் உள்ள கொடிக் கம்பத்தில் தொகுதி மறுவரை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடியேற்றினார். மேலும், மசோதா நகலை தீயிட்டு எரித்தார்.
முன்னதாக தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும், வெல்வோம் எனவும் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷம் எழுப்பப்பட்டது. தொடர்ந்து நாமக்கல் உழவர் சந்தைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் அங்கு விவசாயிகள், மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது நாமக்கல் தொகுதி திமுக வேட்பாளர் ராணி, கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
முதல்வர் ஸ்டாலின் பதிவு:
தொடர்ந்து, இன்று நடைபெற்ற போராட்டம் குறித்து தமிழக முதல்வர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத்தீ பரவட்டும், பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும். அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது. இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பாஜக.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும். “தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் – இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ” எனத் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகன் படம் லீக்! காரணம் இவர்களா?!
விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டது. விஜய்யின் கடைசிப் படம் என்பதால் படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. எனினும், படத்தின் சில காட்சிகளுக்குத் தணிக்கைக் குழு ஆட்சேபம் தெரிவித்ததால், வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது.
இதற்கிடையில் விஜய் முழுநேரத் தேர்தல் களத்தில் இறங்கியதால், இப்படம் தேர்தலுக்குப் பிறகுதான் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இத்தகைய சூழலில், சில நாட்களுக்கு முன்பு படத்தின் ஆரம்பக் காட்சிகள் மற்றும் பாடல்கள் இணையத்தில் வெளியாகிப் படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் தொடர்ச்சியாக, தற்போது முழுத் திரைப்படமுமே இணையத்தில் கசிந்திருப்பது தவெக தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:
ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக அது சாட்டிலைட் கட்டுப்பாட்டில் இருக்கும். தற்போது சாட்டிலைட் பாஜகவின் வசமே உள்ளது. எனவே, திட்டமிட்டுப் படத்தை இணையத்தில் கசியவிட்டு, விஜய்க்கும் தயாரிப்பாளருக்கும் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி மிரட்டியிருக்கிறார்கள். இதற்கு துணை முதல்வர் உதயநிதியும் மத்திய அமைச்சர் எல்.முருகனும்தான் காரணம். விஜய்க்கு எவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தினாலும், தமிழக மக்களே அவருக்கு அரணாக இருப்பார்கள்.
தொடர்ந்து படத்தைத் திரையிட விடாமல் முட்டுக்கட்டைப் போடும் எல். முருகன், உதயநிதியின் செயல்களுக்குப் பின்னால் முதல்வர் ஸ்டாலின் மூளையாகச் செயல்படுகிறார். இன்னும் 10 நாட்களில் விஜய்யை எப்படியெல்லாம் தாக்க முடியுமோ, அவமானப்படுத்த முடியுமோ அத்தனையையும் போலிப் பிரச்சாரங்கள் மூலம் செய்வார்கள். ஆனால், மக்கள் அவரது கண்ணீருக்குத் தேர்தல் வெற்றி மூலம் பதில் தருவார்கள்.
அன்று எம்ஜிஆருக்கு திமுக மிகப்பெரிய நெருக்கடியைக் கொடுத்தது. மதுரையில் அவரது திரைப்படப் பெட்டிகளை திமுகவினர் தூக்கிச் சென்ற வரலாறும் உண்டு. இன்று அதையே சாட்டிலைட் தொழில்நுட்பம் மூலம் நவீனமாகச் செய்கிறார்கள். இதற்கு மக்கள் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள். கரூரில் 41 பேர் உயிரிழந்ததற்கு முதல்வர் ஸ்டாலின், உதயநிதி மற்றும் மகேஷ் பொய்யாமொழிதான் பொறுப்பு. அன்று முதல் மக்கள் இவர்களைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால்தான் இப்போது தவெக-விற்குப் மிகப்பெரிய மக்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது! -சரத்குமார்
CSK-வுக்கான CUB-இன் கீதம் வெளியீடு!
சென்னை:
இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான சிட்டி யூனியன் வங்கி (CUB), சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடனான தனது கூட்டாண்மையைக் கொண்டாடும் வகையில், அதிகாரப்பூர்வ கீதத்தை வெளியிடுவதை பெருமையுடன் அறிவிக்கிறது. CUB மற்றும் CSK ஆகிய இரு தரப்பினரும் கொண்டிருக்கும் உறுதிப்பாடு, கூட்டு முயற்சி மற்றும் பேரார்வம் ஆகிய பகிரப்பட்ட விழுமியங்களை இந்தக் கீதம் பிரதிபலிக்கிறது. CUB நாடு முழுவதும் தனது கிளைகளைக் கொண்டுள்ளது; அதேபோன்று, CSK அணியும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ரசிகர்களைக் கொண்டுள்ளது.
வெளியீட்டின் முக்கிய சிறப்பம்சங்கள்:
வெளியீடு: CSK வீரர்கள்/நிர்வாகம், CUB தலைமை மற்றும் ரசிகர்கள் கலந்துகொள்ளும் ஒரு சிறப்பு நிகழ்வில் இந்த கீதம் வெளியிடப்படும். கூட்டாண்மையைக் கொண்டாடுதல்: இந்த ஒத்துழைப்பு, ஒரு நம்பகமான கிரெடிட் கார்டு கூட்டாளராக CUB-யின் பங்கையும், அனைவராலும் விரும்பப்படும் ஒரு கிரிக்கெட் அணியாக CSK-யின் அந்தஸ்தையும் எடுத்துக்காட்டுகிறது
ரசிகர் ஈடுபாடு: இந்த கீதம் டிஜிட்டல் தளங்கள் முழுவதும் விளம்பரப்படுத்தப்படும்; இதன் மூலம் ரசிகர்கள் தங்களின் சொந்தப் பாடல் வடிவங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள்.
பகிரப்பட்ட விழுமியங்கள்: CUB மற்றும் CSK ஆகிய இரு அணிகளும் குழுப்பணி, மீள்திறன் மற்றும் சமூகப் பெருமை ஆகியவற்றை வலியுறுத்துகின்றன – இந்த விழுமியங்கள் கீதத்தின் வரிகளிலும் தாளத்திலும் பிரதிபலிக்கின்றன.
“இந்த கீதம் இசையைத் தாண்டிய ஒன்று” – இது CSK உடனான எங்கள் கூட்டாண்மையையும், எங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றுவதிலும் சமூகங்களுக்கு உத்வேகம் அளிப்பதிலும் நாங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் கொண்டாடும் ஒரு நிகழ்வாகும். கிரிக்கெட் ரசிகர்களை ஒன்றிணைப்பது போலவே, CUB-ம் நம்பிக்கை மற்றும் சேவையின் வாயிலாக மக்களை ஒன்றிணைக்கப் பாடுபடுகிறது.
அனல் பறக்கும் பிரச்சாரம்!
சென்னையின் விஐபி தொகுதியான அண்ணாநகரில் இம்முறையும் திமுகவை எதிர்த்து அதிமுக களம் காண்கிறது. திமுக சார்பில் நே.சிற்றரசு வேட்பாளராக முதன்முறையாக களம் காண்கிறார்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல் இந்திரா தொடர்ந்து 4-வது முறையாக போட்டியிடுகிறார். தவெக சார்பில் பொறியாளரான வி.கே.ராம்குமாரும், நாதக சார்பில் வழக்கறிஞர் எஸ்.சங்கரும் போட்டியிடுகின்றனர்.
மேலும், தமிழ் தெலுங்கு தேச கட்சி சார்பில் ராஜகுமார் நாயுடு, நாம் இந்தியர் கட்சியின் என்.பி.ராஜா, தமிழக முன்னேற்ற காங்கிரஸ் தயாளன் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 24 பேர் அண்ணாநகர் தொகுதி யில் போட்டியிடுகின்றனர்.
திமுக – உங்களில் ஒருவனாக இருப்பேன்:
திமுக வேட்பாளர் நே.சிற்றரசு, செல்லும் இடங்களில் எல்லாம் குழந்தைகளுக்கு பெயர் சூட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை பொது மக்களிடம் பொறுமையாக எடுத்துக்கூறி வாக்கு சேகரித்து வருகிறார். ‘நான் வெற்றி பெற்றால் உங்களில் ஒருவனாக இருந்து குறைகளைத் தீர்ப்பேன். நெல்சன் மாணிக்கம் சாலையில் பறக்கும் மேம்பாலம் அமைக்க முயற்சிப்பேன்’ என்று உறுதி கூறியுள்ளார்.
அதிமுக – பெண்களுக்கு அரணாக இருப்பேன்:
அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் எஸ். கோகுல இந்திரா, ‘‘உங்களின் சகோதரியாக, தொடர்ந்து உங்களுக்காக அண்ணாநகரிலேயே வசித்து குரல் கொடுத்து வருகிறேன்’’ என சென்டிமெண்டாகப் பேசி வாக்கு சேகரிக்கிறார்.
மேலும், ‘‘பெண்களுக்கு அரணாக இருப்பேன். அண்ணாநகர் டவர் பார்க்கை ஹை-டெக் பார்க்காக மாற்றுவேன். மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைப்புடன் அண்ணாநகர் பிரதான சாலைகளில் மேம்பாலங் கள் அமைப்பேன்’’ என பிரச்சாரம் செய்து வருகிறார்.
நாதக – வேலைவாய்ப்பு, கல்வித்தரத்தை உயர்த்துவேன்:
நாதக வேட்பாளரான உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.சங்கர், இந்த தொகுதியில் கடந்த முறையும் போட்டியிட்டார். ‘‘நான்வெற்றி பெற்றால் இலவச சட்ட உதவி செய்வேன். வேலைவாய்ப்பு, கல்வித்தரத்தை உயர்த்த முக்கியத்துவம் அளிப்போம்’’ என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
தவெக – மக்கள் கொஞ்சம் மாற்றி யோசிக்க வலியுறுத்தல்:
தவெக வேட்பாளரான பொறியாளர் வி.கே.ராம்குமார், வாகனத்தில் விஜய் பாடல்களை அலற விட்டபடி, வாக்காளர்களைச் சந்தித்து, ‘‘அண்ணே… இந்தமுறை கொஞ்சம் மாற்றி யோசியுங்கள். எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்’’ என்று பிரச்சாரம் செய்து வருகிறார். அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர்பழனிசாமி, திமுக வேட்பாளருக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின், நாதக வேட்பாளருக்கு ஆதரவாக சீமான் பிரச்சாரம் செய்துள்ளனர். இரவு – பகல் தொடர் பிரச்சாரத்தால் அண்ணாநகர் தொகுதி அலறுகிறது.
மெட்ரோ ரெயிலில் முதல்வர்!
சென்னையின் இன்று (வெள்ளிக் கிழமை) மெட்ரோ ரயிலில் பயணித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்த பதிவில், “மெட்ரோ விரிவாக்கப் பணிகள் எல்லாம் நிறைவுறும்போது, இந்தியாவிலேயே மெட்ரோ வழியாக அதிக தூரத்தை இணைக்கும் நகரங்களுள் ஒன்றாகச் சென்னை விளங்கும்,” என்று பெருமிதம் தெரிவித்தார்.
முதல்வர் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
மக்களின் அன்பில் நனைந்தபடியும், மெட்ரோ இரயில் திட்டம் உருவாகப் பாடுபட்ட நாட்களின் நினைவுகளைச் சுமந்தபடியும் ஒரு பயணம்… துணை முதலமைச்சராக இருந்தபோது, ஜப்பான் நாட்டிற்குச் சென்று JICA-வின் நிதியுதவியைப் பெற்று வந்து, நான் முன்னின்று செய்த திட்டம்!
விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், செண்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயங்கிவரும் முதற்கட்டத் திட்டத்தில் இதுவரையில் கோடிக்கணக்கான பயணங்களை மக்கள் மேற்கொண்டுள்ளனர்.
அதிவேகமாக நடைபெற்றுவரும் மாதவரம் – சிறுசேரி, கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி, மாதவரம் – சோழிங்கநல்லூர் இடையேயான இரண்டாம்கட்டத் திட்டப் பணிகளையும் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைப்போம்.
விமான நிலையம் – கிளாம்பாக்கம், கோயம்பேடு – பட்டாபிராம், பூந்தமல்லி – சுங்குவார்சத்திரம், தாம்பரம் – கிண்டி, கலங்கரை விளக்கம் – உயர் நீதிமன்றம், சிறுசேரி – கலைஞர் பன்னாட்டு அரங்கம் என மெட்ரோ விரிவாக்கப் பணிகளெல்லாம் நிறைவுறும்போது, இந்தியாவிலேயே மெட்ரோ வழியாக அதிக தூரத்தை இணைக்கும் நகரங்களுள் ஒன்றாகச் சென்னை விளங்கும்!
சென்னையை வளர்த்தெடுக்கும் நமது கனவு வெல்லட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

















