இந்தக் கோடையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் ஒரு அபூர்வமான சினிமா நிகழ்வாக, பவர்ஸ்டார் ‘பவன் கல்யாண்’, வீர மல்லுவாக—ஒரு வீரர், குற்றவாளி, கவியரசர் என்ற அவதாரத்தில் திரையில் தோன்றுகிறார்.
இது வரை வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன; இதனால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்க, பட குழு மிகக் கடுமையாக உழைத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் மூன்றாவது சிங்கிளையும், படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லரையும் வெளியிட தயாராகி வருகிறது. ட்ரெய்லர் வெளிவரும் தருணத்தில், எதிர்பார்ப்பு இன்னும் பலமடங்கு உயரும் எனத் தெரிகிறது.
மாபெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஹரி ஹர வீர மல்லு தற்போது இறுதி கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது, போஸ்ட்-புரொடக்ஷன் வேலைகள் முழு வேகத்தில் நடைபெறுகின்றன. VFX, Sound Design மற்றும் டப்பிங் பணிகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகின்றன.
தாமதங்கள், தடைகள் பல இருந்தாலும், அந்த தாமதங்களை எல்லாம் எதிர்கொண்டு இயக்குநர் ஏ.எம். ஜோதி கிருஷ்ணா, ஒரு இயக்குநராக ஒவ்வொரு துறையையும் சீராக வழிநடத்தி, திரையில் ஒவ்வொரு காட்சியும் அற்புதமாக இருக்குமாறு உறுதி செய்கிறார். ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம். கீரவாணியின் இசை, மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, தோட்டா தரணியின் ப்ரொடக்ஷன் டிசைன் ஆகியவை மொத்தமாக பார்வையாளர்களை மெய்மறக்க செய்யும் வகையில் உருவாகியுள்ளது.
பாபி தியோல் முகலாய அரசராகவும், நிதி அகர்வால் முக்கிய கதாபாத்திரத்திலும், சத்யராஜ் மற்றும் ஜிஷ்ணு செங்குப்தா போன்ற அனுபவ நட்சத்திரங்கள் கதைக்கு மெருகுத்தன்மையையும் , ஆழத்தையும் அளிக்கின்றனர். தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உலகமெங்கும் வெளியிட உள்ள இந்தப் படம் ரசிகர்களின் மனங்களையும், பாக்ஸ் ஆஃபிஸையும் வெல்வதற்கான முழுத் தயாரிப்பில் உள்ளது. தயாரிப்பாளர்: ஏ. தயாகர ராவ். மெகா சூர்யா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம். ரத்னம் வழங்குகிறார்.
ஜூன் 12ஆம் தேதி ‘ஹரி ஹர வீர மல்லு’ வெளியாகிறது!
லெவன் விமர்சனம் RATING 3/5
AR என்டேர்டைன்மென் தயாரிப்பில் நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி, ஆடுகளம் நரேன், திலீபன், ரித்விகா ஆகியோர் நடித்துள்ள படம் தான் ‘லெவன்’
விமர்சனம்:
சென்னையில் மர்மமான முறையில் தொடர் கொலைகள் நடக்கிறது. நாயகன் நவீன் சந்திரா போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். உடலை எரித்து அதை பொது இடங்களில் போடும் முறையை பின்பற்றும் சைக்கோ கொலையாளி பற்றி சிறு துப்பு கூட கிடைக்காமல் வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி தடுமாறுகிறார். மறுபக்கம் கொலை சம்பவங்கள் தொடர்கிறது.
வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி திடீரென்று விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்று விடுகிறார். இதனால், வழக்கு மற்றொரு காவல்துறை அதிகாரியான நாயகன் நவீன் சந்திராவிடம் ஒப்படைக்கப்படுகிறது. நவீன் சந்திரா வழக்கை விசாரிக்க தொடங்கிய உடன் அவருக்கு ஒரு துப்பு கிடைக்கிறது. இறுதியில் நவீன் சந்திரா சைக்கோ கொலையாளியை கண்டுபிடித்தாரா? அந்த சைக்கோ கொலையாளி யார்? என்பதே கதை
நவீன் சந்திரா, போலீஸ் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவரது அலட்டல் இல்லாத நடிப்பு கவனிக்க வைத்து இருக்கிறது. படம் முழுக்க இறுக்கமான முகத்துடன் நடித்து இருக்கிறார். இவரை காதலிப்பவராக நடித்து இருக்கும் ரியா ஹரி, தலைமை ஆசிரியராக வரும் அபிராமி, போலீஸ் அதிகாரிகளாக வரும் ஆடுகளம் நரேன், திலீபன் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் மனதில் பதிந்து இருக்கிறார் ரித்விகா. இறுதிக்காட்சி வரை திருப்பங்களுக்குள் திருப்பம், என்று பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் திரைக்கதை பயணிக்கிறது. பின்னணி இசை சிறப்பு. கிளைமாக்ஸில் யாரும் எதிர்பாராத திருப்பம் படத்திற்கு பலம்.
மைனஸ்: படத்தில் பல காட்சிகளில் லாஜிக் மீறல்கள் இருக்கிறது …. பாடல்கள் பெரிய அளவில் இல்லை….
மொத்தத்தில் இந்த ‘லெவன்’ திருப்புமுனை…..
CAR-T செல் தெரபியை அறிமுகப்படுத்தும் காவேரி மருத்துவமனை!
மருத்துவமனையில் முதல்வர் ஆய்வு! பதறி போன டீன்!!
ஊட்டியில் 25 ஏக்கர் பரப்பளவில் ரூ.143.69 கோடி ரூபாய் செலவில் 700 படுக்கைகளுடன் நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையை திறந்து வைத்தார். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று அதன் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள் குறித்தும், அவர்களது தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, சிகிச்சைக்கு வரும் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், மருத்துவமனைக்கு நேரில் வந்து சிகிச்சை பெற முடியாத நோயாளிகளுக்கு ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம், சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு ‘இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48’ திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார்.
மேலும், பயிற்சி மருத்துவர்களிடம் கலந்துரையாடி, சிகிச்சைக்கு வரும் மக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். அத்துடன் மருத்துவப் பணியாளர்களின் வருகை பதிவேடுகள், மருந்து இருப்பு பதிவேடுகள் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தமிழக முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடிய போது, வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமைத் தேடி தரும் வகையில் சேவை மனப்பான்மையுடன் மருத்துவப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்னர், மருத்துவக் கல்லூரி மாணவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:
”கடந்த ஏப்ரல் மாதம் திறந்து வைத்த நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செயல்பாடுகளை இன்று நேரில் ஆய்வு செய்தேன். ரூ.143 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இம்மருத்துவமனை மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தினசரி 1,300 வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறன்றனர். மேலும், உள் நோயாளிகள் சிகிச்சையும் சிறப்பாக அளிக்கப்பட்டு வருகிறது.
தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் செலுத்தி எடுத்து வந்த எம்ஆர்ஐ, சி.டி.ஸ்கேன் போன்றவை கட்டணமில்லாமல் தற்போது நோயாளிகள் எடுத்து வருகின்றனர். மருத்துவக் கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்தபோது, அவர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், தேவைகள் குறித்தும் கேட்டறிந்ததாகவும், அப்போது எந்த குறையுமில்லாமல் சிறப்பாக உள்ளதாக அம்மாணவர்கள் தெரிவித்தனர். தேவைப்படும் கூடுதல் வசதிகளையும் செய்து தர அரசு தயாராக உள்ளது” என்று அவர் கூறினார்.
இந்நிகழ்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் எம்.கீதாஞ்சலி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
லஞ்சம் வாங்கிய கல்வி அலுவலக கண்காணிப்பாளர்!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் திருவேங்கடம் வட்டம், செவல்குளத்தில் உள்ள செயின்ட் பவுல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வந்தார். அவர், அந்த பள்ளியில் பணிபுரிந்த காலங்களுக்கு பணி அனுபவ சான்று கேட்டு பள்ளி தாளாளரிடம் விண்ணப்பித்துள்ளார்.
அதன்படி, பணி அனுபவ சான்றை தயார் செய்த பள்ளி தாளாளர் நாகராஜ் (46) என்பவர், அதில் மேலொப்பம் பெற்று, அலுவலக நடைமுறைகளை முடித்து தருவதற்காக தென்காசி மாவட்ட கல்வி அலுவலகத்தில் (தனியார் பள்ளி) சமர்ப்பித்துள்ளார்.
இது தொடர்பாக தென்காசி மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் சுரேஷ் குமாரை சந்தித்து பேசியபோது, அவர் ஆசிரியரின் பணி அனுபவ சான்றை மேலொப்பம் பெற்று அலுவலக நடைமுறைகளை முடித்து வழங்குவதற்கு ரூ.60 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பள்ளி தாளாளர், இது குறித்து தென்காசி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, போலீஸாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய பணம் 60 ஆயிரம் ரூபாயை அலுவலக கண்காணிப்பாளர் சுரேஷ் குமாரிடம் பள்ளி தாளாளர் நாகராஜ் கொடுத்தார். லஞ்ச பணத்தை சுரேஷ் குமார் பெற்றுக் கொண்டதை அறிந்த தென்காசி லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பால் சுதர், காவல் ஆய்வாளர் ஜெய ஸ்ரீ மற்றும் போலீஸார், விரைந்து சென்று சுரேஷ் குமாரை கைது செய்தனர்.
ஐபோன் மோசடி செய்த இரண்டு பேர் கைது!
புதுச்சேரி கோரிமேட்டை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் இன்ஸ்டாகிராமில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஐபோன் 15-ஐ ரூ.7 ஆயிரத்துக்கு தருகிறோம் என்ற விளம்பரத்தை பார்த்துள்ளார். அதனை உண்மை என நம்பிய அவர் விளம்பரத்தை பதிவிட்ட நபர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பிறகு அவர்கள் கூறிய வங்கிக் கணக்குக்கு மூன்று தவணைகளாக பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால், அந்த நபர்கள் தாங்கள் சொன்னது போல போனை தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.
இதனால் ரஞ்சித் தான் அனுப்பிய பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர்கள் மிரட்டும் தோனியில் பேசியதோடு நாங்கள் மிகுந்த பாதுகாப்பாக இருக்கிறோம். எங்களை நெருங்கிப்பார் என்று சவால் விட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரஞ்சித் இது குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எஸ்.பி பாஸ்கரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி ஆகியோர் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் குறைந்த விலைக்கு ஐ-போன் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டது புதுச்சேரியைச் சேர்ந்த மாதேஷ் (22), திருச்சி அவணியாபுரத்தைச் சேர்ந்த சஜித் அகமது (19) ஆகியோர் என்பதும், இவர்கள் வாட்ஸ்-அப், இன்ஸ்டா கிராமில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஐபோனை குறைந்த விலைக்கு தருகிறோம் என்று விளம்பரம் செய்து தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பலரிடம் பணம் பறித்ததும், இதற்கு மூளையாக சஜித் அகமது செயல்பட்டதும், ஏமாற்றிய பணத்தில் சொகுது வாழ்க்கை வாழ்ந்ததும் தெரியவந்தது.
மேலும் ஐடிஐ முடித்துள்ள மாதேஷ் 6 மொழிகளை சரளமாக பேசும் திறன் கொண்டவர் என்பதும், தேக்கு வாண்டோ விளையாட்டு போட்டியில் மூன்று தங்க பதக்கங்களை பெற்றுள்ளார் என்பதும், கைது செய்யப் பட்டவர்களின் செல்போன் எண்களை வைத்து நேஷனல் சைபர் கிரைம் போர்டல் மூலமாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் சோதனை செய்த போது 43 புகார்கள் இவர்கள் மீது இதுவரை பதிவாகியிருப்பதும் தெரிந்தது.
இதையடுத்து மாதேஷ், சஜித் அகமது இருவரையும் கைது செய்த போலீஸார் ரூ.1.30 லட்சம் ரொக்க பணம், ஒரு லேப்-டாப், 4 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு வங்கி கணக்கை கொடுத்து உதவிய நண்பர்களையும் விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
சிறப்பாக செயல்பட்டு மோசடி நபர்களை கைது செய்த போலீஸாரை சீனியர் எஸ்.பி நாரா சைதன்யா பாராட்டினார். அப்போது அவர் இணைய வழியில் வருகின்ற எந்த விலை குறைந்த பொரட்களையும் வாங்கி ஏமாற வேண்டாம். இதே போன்று சென்ற ஆண்டு மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
IRIS Events Presents 12th Edition of Chennai Super Mom 2025 by Mom Junction
Chennai:
The vibrant city of Chennai witnessed an unforgettable celebration of motherhood with the grand success of the Iris Chennai Supermom 2025, held at Ampa Skyone Mall, Aminjikarai. The event organized by Iris Events brought together mothers from all walks of life for a day filled with fun, creativity, inspiration and empowerment.
This year’s competition received an overwhelming 1000+ response, with 200+ participants competing in a series of engaging and entertaining activities tailored for moms and their little ones, including Mother & child Fashion Show, Cookery Contest, Instagram Reel Challenge & Debate on Gentle Parenting, Saree Drapping etc.
Mrs. Neelima Esai – Actress, Entrepreneurs & Producer, Ms. Premi Venkat – Actress & News Reader, Mr. Bharath Kalyan – Actor & Singer and Mr.Rithesh D Sha – MD of Just Buy Cycles. Mr.Vicky Kapoor – Fashion Choreographer & Stylist , Ms.Pooja Ravi – Model & Mrs. India Winner & Mr. Munaf Rahman – Actor, Model, Mr Ajayan – Model & Actor, Ms Suja Suriya Nila – Model and Mr. Arvind Kathare – Actor & Model, Dr. Sumathi – founder of Mind Café, Ms. Premi Venkat, Ms. Neelima Esai & Ms. Anita Chandhoke – Influencer & Youtuber are attended the program at Ampa Skyone Mall.
1. Savorit Pasta – Culinary Queen contest: Moms showcased innovative snacks using Savorit pasta. With over 50 participants, judged by a panel of culinary experts from Hotel Industry, the best 5 were shortlisted for a live quiz round and three winners were awarded by the Chief Guest Mrs. Neelima Esai – Actress, Entrepreneurs & Producer
Winner: Manisha, 1st Runner-up: Durga D, 2nd Runner up: Anupama Keloji
2. Mother & Child Fashion Show: This heartwarming segment was conducted in 2 categories:
Mom Junction – Look-A-like Contest – open to moms with kids under 2 years: Moms and their toddlers twinned in matching outfits and walked the ramp together. Judged by our special Jury Panel Mr. Arvind (Actor & Model) Ms.Pooja Ravi – Model & Mrs. India Winner & Mr. Munaf Rahman – Actor, Model & Winner of Iris Face of Chennai 2017
IRIS GLAM – Retro-Themed Contest – open to moms with kids above 2 years: Each mom and child duo dressed as iconic retro characters and performed a themed walk while presenting the character they portrayed and judged by Mr Ajayan – Model & Actor, Ms Suja Suriya Nila – Model, Actress & Iris Face of Chennai 2015 Winner.
Each category recognized three standout performers with Winner & Runners-up prizes.
Mom Junction – Look-Alike: Winner – Dr Chandini, 1st Runner-up – Adshatha, 2nd Runner-up -Swathi
IRIS GLAM – Retro – Themed: Winner – Kirthiga
The winners were awarded by our Chief Guest Ms. Premi Venkat – Actress & News Reader along with Mr.Rithesh D Sha – MD of Just Buy Cycles.
3. Mom Junction – Instagram Reel Challenge:
A pre-event digital contest, invited moms to create and share innovative reels. Winners were selected based on the creativity and shares each reel received by the deadline. The winners were awarded by our Chief guest Mrs. Premi Venkat.
Winners – Illakiya, Aishwarya kumar, Steffy & Pooja.
4. Debate on Gentle Parenting by Mind Cafe & Yuvathi (Happiness Matters)
This was a spontaneous, engaging session where moms participated in a live debate discussing gentle parenting. The Session was thoughtfully moderated by Dr. Sumathi – founder of Mind Cafe and Yuvathi and a counselor & our esteemed guest speakers Ms. Premi Venkat, Ms. Neelima Esai & Ms. Anita Chandhoke – Influencer & Youtuber. Participants who offered balance and impactful points were recognized and awarded.
Winners took home gold coin from Sultan Jewels, Bicycles from Just Buy Cycle, Gift Hampers from Savorit Pasta & Nutri Bs, Gift Vouchers from Lifestyle, Nails & Beyond, VLCC & Trophies.
The Event is in aid of HOPE FOUNDATION, The Event & Concept was brought by Latha Krishna of Iris Events & Her Team.
JSW MG Motor India launched MG Windsor PRO
Chennai:
JSW MG Motor India, today, launched MG Windsor PRO that will elevate the business class travel experience with the inclusion of new tech and safety features, along with a new 52.9 kWh battery pack. The MG Windsor has witnessed phenomenal customer response since its launch and the addition of the PRO series will further strengthen its market performance. Launched at an attractive introductory BaaS price of INR 13,09,999 L + INR 4.5/km and ex-showroom price of INR 17,49,800 (Valid for first 8,000 bookings), the MG Windsor PRO promises to accelerate the rapid transition to EVs.
Sr. no Variant BaaS Price Ex-Showroom Price
1 MG Windsor Essence PRO INR 13,09,999 Lakhs + INR 4.5/km INR 18,09,800
JSW MG Motor India has onboarded new financiers, such as IDFC First Bank and Kotak Mahindra Prime to expand the reach of its Battery-As-A-Service (BaaS), an innovative ownership package that has made EV ownership flexible for Indian car buyers. This innovative ownership scheme was first launched in September 2024 and today is supported by six financiers, including Bajaj Finserv, Herofin Corp, Ecofy, VidyutTech, IDFC First Bank and Kotak Mahindra Prime. The company will offer lifetime battery warranty to the first owner of MG Windsor PRO. In addition, JSW MG Motor India will offer its 3-60 assured buyback plan for the MG Windsor PRO which ensures that it will retain 60% of its value after 3 years.
Speaking on the launch of MG Windsor PRO, Anurag Mehrotra, Managing Director, JSW MG Motor India, said, “MG Windsor has been instrumental in accelerating the growth of India’s 4W-EV segment, winning customers over with its compelling value proposition. Positive word-of-mouth from early buyers fuelled its rapid acceptance, extending its reach beyond metro cities into Tier II and III markets. By introducing a product that stands apart from the conventional, we have successfully connected with a new wave of buyers. Alongside our partners, we remain committed to redefining the Indian auto landscape by delivering relevant innovations at the right time with the right technology. The launch of the MG Windsor PRO reflects our commitment to providing expanded choices, instilling greater confidence in EVs in general, and inviting more customers to venture confidently into the future of sustainable mobility.”