Friday, July 17, 2026
Blog

உயர் துல்லிய லைப்போசக்ஷன் மாஸ்டர்கிளாஸ்!

சென்னை:
 
உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினத்தை (ஜூலை 15) முன்னிட்டு, தேசிய அளவிலான உயர் துல்லிய (High Definition) லைப்போசக்ஷன் மாஸ்டர்கிளாஸ் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை ஸ்பெக்ட்ரா மெடிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அரங்கில் நடைபெற்றது.
 
இந்த அறிவியல் கருத்தரங்கில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்று, அழகியல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை (Aesthetic Plastic Surgery), உயர் துல்லிய லைப்போசக்ஷன் (High Definition Liposuction), உடல் வடிவமைப்பு (Body Contouring), 4D Body Sculpting, தோல் இறுக்கம் (Skin Tightening) உள்ளிட்ட நவீன சிகிச்சை முறைகள் குறித்து கலந்துரையாடினர்.
 
நிகழ்ச்சிக்கு ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் ஜே. எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் கோவை ராய் காஸ்மெட்டிக் சென்டரின் நிறுவனர் டாக்டர் ஜேம்ஸ் ராய் கஞ்சூர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.
 
சென்னை பிளாஸ்டிக் சர்ஜரி நிறுவனத்தின் ஆலோசகர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நிசார் வரவேற்புரை வழங்கினார்.
 
கருத்தரங்கில், டெல்லியைச் சேர்ந்த டாக்டர் மோனிஷா கபூர், அறுவை சிகிச்சையின்றி அல்லது குறைந்த அளவிலான அறுவை சிகிச்சையுடன் மேற்கொள்ளப்படும் 4D Body Sculpting மற்றும் Skin Tightening தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார்.
 
கேரளாவைச் சேர்ந்த டாக்டர் பிபிலாஷ் பாபு, லைப்போசக்ஷனின் அடிப்படைகள், பல்வேறு Liposuction Cannula வகைகள், மற்றும் Male High Definition Body Contouring குறித்து இளம் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பயனுள்ள வழிகாட்டுதல்களை வழங்கினார்.
 
துபாய் மற்றும் பெங்களூருவில் பணியாற்றி வரும் டாக்டர் சுரிந்தர் டி.எஸ்.ஏ., நவீன High Definition Liposuction மற்றும் மேம்பட்ட உடல் வடிவமைப்பு முறைகள் குறித்து தனது சர்வதேச அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
 
பெங்களூருவைச் சேர்ந்த டாக்டர் கரிஷ்மா காகோடு, “பெண்களுக்கான உயர் துல்லிய கொழுப்பு உறிஞ்சும் அறுவை சிகிச்சை” (Feminine High-Definition Liposuction) என்ற தலைப்பில் விரிவான சிறப்புரையாற்றினார். மேம்பட்ட 4-பரிமாண வேசர் கொழுப்பு உறிஞ்சும் அறுவை சிகிச்சை (4D VASER Liposuction) தொடர்பான தனது அனுபவங்களையும், நவீன அறுவை சிகிச்சை நுட்பங்களையும் பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
 
சென்னை பிளாஸ்டிக் சர்ஜரி நிறுவனத்தின் இயக்குநரும் அழகியல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் கார்த்திக் ராமசாமி, உயர் துல்லிய லைப்போசக்ஷனில் பாதுகாப்பு, உடலமைப்பியல் (Anatomy), இயற்கையான தோற்றத்தை வழங்கும் நுட்பங்கள் மற்றும் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
 
உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை என்பது அழகுக்கான அறுவை சிகிச்சை மட்டும் அல்ல; தீக்காயம், விபத்து, பிறவிக் குறைபாடுகள், கை அறுவை சிகிச்சை, மைக்ரோசர்ஜரி, முக எலும்பு மற்றும் திசு மறுசீரமைப்பு போன்ற பல துறைகளிலும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை மருத்துவர்கள் வலியுறுத்தினர்.
 
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் கார்த்திக் ராமசாமி, “மருத்துவர்களுக்கிடையே அறிவைப் பகிர்வதும், பொதுமக்களிடம் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை குறித்த சரியான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இன்றியமையாதது. நோயாளிகளின் பாதுகாப்பு, அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையிலான சிகிச்சை மற்றும் தொடர்ச்சியான மருத்துவக் கல்வியே எங்கள் துறையின் அடித்தளம்,” என்றார்.
 
நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற ஆதரவு வழங்கிய ஸ்பெக்ட்ரா மெடிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட், சிறப்பு விருந்தினர்கள், மருத்துவ நிபுணர்கள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்கேற்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் ஊடக பிரதிநிதிகளுக்கு ஏற்பாட்டாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
 
இந்த நிகழ்ச்சி, அழகியல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, லைப்போசக்ஷன், உடல் வடிவமைப்பு, ரைனோபிளாஸ்டி, மார்பக அறுவை சிகிச்சை, மம்மி மேக்கோவர் உள்ளிட்ட துறைகளில் சென்னை தொடர்ந்து தேசிய அளவில் முன்னணி மையமாக திகழ்ந்து வருவதை மீண்டும் உறுதிப்படுத்தியது.

“தி ஒடிஸி” The Odyssey Movie

கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி (The Odyssey)’ என்பது முற்றிலும் புதிய IMAX® ஃபிலிம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் படமாக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான அதிரடி புராணக் காவியமாகும். முழுமையாக IMAX® ஃபிலிம் கேமராக்களைக் கொண்டு எடுக்கப்பட்ட உலகின் முதல் முழுநீளத் திரைப்படம் என்ற பெருமையுடன், ஹோமரின் புகழ்பெற்ற கிரேக்க காவியமான ‘ஒடிஸி’யை, இப்படம் உலகளாவிய திரைகளுக்குக் கொண்டு வருகிறது. நோலனின் முந்தைய படைப்புகளான ‘தி டார்க் நைட்’ முத்தொகுப்பு, ‘இன்செப்ஷன்’, ‘இன்டர்ஸ்டெல்லார்’, ‘டன்கிர்க்’, ‘ஓப்பன்ஹைமர்’ போன்ற படங்களைத் தொடர்ந்து, 6 நாடுகளில் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் இந்த வருடத்தின் மிக ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஒரு திரைப்படமாகும்! இது நோலனின் 13 ஆவது முழுநீளத் திரைப்படமாகும். மேலும் இது பார்வையாளர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான மற்றும் மறக்க முடியாத சினிமா அனுபவத்தை வழங்கவுள்ளது.
 
கதைச்சுருக்கம் – இத்தாகா (Ithaca) என்ற பாறைகள் நிறைந்த கிரேக்கத் தீவின் அரசனான ஒடிசியஸ், தனது புகழ்பெற்ற ‘ட்ரோஜன் குதிரை’ தந்திரத்தின் மூலம் அகமெம்னானுக்காகப் போரை வென்று தருகிறார். அவரது மகன் டெலிமக்கஸ், ஒடிசியஸ் போருக்குச் சென்றபோது ஒரு கைக்குழந்தையாக இருந்தவன், தற்போது வாலிபனாக வளர்ந்து நிற்கிறான். போர் முடிந்து ஒடிசியஸ் தாயகம் திரும்பும் வழியில், அவரது பயணத்திற்குக் கடவுள்களாலும், அசுரர்களாலும், பெரும் புயல்களாலும், பேரழிவு நிகழ்வுகளாலும் இடையூறு ஏற்படுகிறது. இத்தாகாவில், டெலிமக்கஸ்க்கும், அவனது தாயார் பெனிலோப்பிற்கும் ஒரு பெரும் அச்சுறுத்தல் உருவாகிறது. தந்தை இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு டெலிமக்கஸ் அவரைத் தேடுகிறான். அதே நேரத்தில், ஓநாய்களைப் போன்ற கொடூர குணம் கொண்ட இளவரசர்களும் பிரபுக்களும், டெலிமக்கஸின் அரண்மனையை ஆக்கிரமித்துக் கொண்டு, ஒடிசியஸ் திரும்புவார் என்ற நம்பிக்கையைக் கைவிட்டு, தங்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு புதிய அரசனாக்குமாறு ராணி பெனிலோப்பைத் தொடர்ந்து வற்புறுத்தி நெருக்கடி கொடுக்கின்றனர்.
 
நடிகர்கள்:
 
மேட் டாமன் – ஒடிசியஸ், இத்தாகாவின் அரசன்
டாம் ஹாலண்ட்  – டெலிமக்கஸ், ஒடொசியஸின் மகன்
ஆன் ஹாத்வே – பெனிலோப், இத்தாகாவின் அரசி
ராபர்ட் பேட்டர்சன்
லூபிடா நியாங்கோ
சம்ந்தா மார்டன் 
 
தொழில்நுட்பக் குழு:
 
ஒளிப்பதிவு – ஹாய்டே வான் ஹாய்டெமா 
இசை – லுட்விக் கோர்டான்சன் 
படத்தொகுப்பு – ஜெனிஃபர் லேம்
ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மேற்பார்வையாளர் – ஸ்காட் ஃபிஷர்
விஷுவல் எஃபெக்ட்ஸ் மேற்பார்வையாளர்-  ஆண்ட்ரூ ஜாக்சன்
உடை வடிவமைப்பு – எலன் மிரோஜ்னிக்
 
யுனிவர்சல் பிக்சர்ஸ் வெளியீடு

தஞ்சை பெரிய கோவில் திருவிழா ஜீலை 23-ம் தேதி வரை நடக்கும்!

ஞ்​சாவூர் பெரிய கோயி​லில் உள்ள வராகி அம்​மனுக்​கான ஆஷாட நவராத்​திரி விழா நேற்று தொடங்​கியது. இதையொட்​டி, காலை கணபதி ஹோமம், கணபதி அபிஷேகம், வராகி அம்​மன் சிறப்பு அபிஷேகம் நடை​பெற்​றது. பின்​னர், அம்​மனுக்கு இனிப்பு அலங்​காரம் செய்​யப்​பட்​டது. மாலை​யில் பரத​நாட்​டிய இசை நிகழ்ச்சி நடை​பெற்​றது.இந்​நிகழ்​வில், ஏராள​மானோர் கலந்​து​கொண்​டு, வராகி அம்​மனை தரிசனம் செய்​தனர்.

இதைத் தொடர்ந்​து, ஜூலை 23-ம் தேதி வரை தின​மும் அம்​மன் பல்​வேறு அலங்​காரங்​களில் அருள் பாலிக்க உள்​ளார். விழா நாட்​களில் தின​மும் காலை 8 மணிமுதல் 10 மணி வரை வராகி ஹோமம், காலை 10 மணி முதல் 11 மணி வரை சிறப்பு அபிஷேகம், மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்​காரம், மாலை 6.30 மணிக்கு இசை நிகழ்ச்​சிகள் நடை​பெறுகின்​றன.

விழா​வின் நிறைவு நாளான ஜூலை 23-ம் தேதி தென்னக பண்​பாட்டு மையம் சார்​பில் நாகசுரம், கரகாட்​டம், ஒயி​லாட்​டம், செண்டை மேளம், வாணவேடிக்கை ஆகிய​வற்​றுடன் நான்கு ராஜவீ​தி​களில் வராகி அம்​மன் வீதி​யுலா நடை​பெறுகிறது. விழா ஏற்​பாடு​களை அரண்​மனை தேவஸ்​தான பணி​யாளர்​கள் செய்து வருகின்​றனர்​.

 

லஞ்சம் வாங்கியது உறுதி! TVK ஊராட்சி மன்றத் தலைவர் கைது!!

செங்​கல்​பட்டு மாவட்​டம், திருப்​போரூர் தொகு​திக்கு உட்​பட்ட மாம்​பாக்​கம் ஊராட்சி மன்​றத் தலை​வரும், தமிழக வெற்​றிக் கழகத்​தின் செங்​கல்​பட்டு கிழக்கு மாவட்ட இணை செய​லா​ள​ரு​மான என். வீரா (எ) வீரா​சாமி, ஒப்​பந்​த​தா​ரரிடம் ரூ.1.30 லட்​சம் லஞ்​சம் பெற்​ற​தாக கைது செய்யப்பட்டுள்ளார்.

மாம்​பாக்​கம் ஊராட்​சி​யில் ரூ.9.80 லட்​சம் மதிப்​பீட்​டில் சிமெண்ட் சாலை அமைத்த ஒப்​பந்​த​தா​ரர் நவீன், பணி முடிந்​தும் பில் நிலு​வை​யில் இருந்​த​தாக​வும், அதை அனு​ம​திக்க வீரா முதலில் ரூ.1 லட்​சம் லஞ்​சம் கேட்​ட​தாக​வும் கூறப்​படு​கிறது. பின்​னர் நடை​பெற்ற பேச்​சு​வார்த்​தை​யில் தொகை ரூ.1.30 லட்​ச​மாக நிர்​ண​யிக்​கப்​பட்​ட​தாக​தெரிகிறது. அதில் ஒரு பகுதி கூகுள் பே (GPay) மூலம் அனுப்​பப்​பட்​டதுடன், மீத​முள்ள தொகையை நேரில் வழங்​கிய காட்​சிகள் சமூக வலை​தளங்​களில் வெளி​யானது.

இந்த விவ​காரம் பரபரப்பை ஏற்​படுத்​திய நிலை​யில், செங்​கல்​பட்டு கிழக்கு மாவட்ட செய​லா​ளர் சி.​வி. தினகரன் (எ) தீனா, ஜூலை 15-ம் தேதி வெளி​யிட்ட அறி​விப்​பில், “கட்​சிக்கு களங்​கம் விளைவிக்​கும் வகை​யில் செயல்​பட்​ட​தால் வீரா (எ) வீரா​சாமி இன்று முதல் கட்​சி​யின் அடிப்​படை உறுப்​பினர் மற்​றும் அனைத்து பொறுப்​பு​களி​லிருந்​தும் நீக்​கப்​படு​கிறார்” என்று தெரி​வித்​துள்​ளார்.

இந்நிலையில் தாழம்பூர் போலீஸார் மாம்பாக்கம் ஊராட்சி மன்​றத் தலை​வர் என். வீராவை கைது செய்துள்ளனர். வீரா​சாமி மீது கடந்த 2023-ம் ஆண்டு ஊராட்சி நிர்​வாக முறை​கேடு தொடர்​பாக வார்டு உறுப்​பினர்​கள் ஆட்​சி​யரிடம் புகார் அளித்​திருந்​ததும், பின்​னர் அவரது காசோலை கையொப்ப அதி​காரம் ரத்து செய்​யப்​பட்​ட​தாக​வும், 2025-ம் ஆண்டு நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் மூலம் தலைவர் பதவியை இழந்த அவர், நீதி​மன்ற உத்​தர​வின் பேரில் அண்​மை​யில் மீண்​டும் தலை​வர் பொறுப்​பேற்​றிருந்​தது​ம் குறிப்பிடத்தக்கது.

பழனி பத்திர பதிவு விவகாரம் சூடுபிடித்தது… முக்கிய உத்தரவு!!

ழநி தண்​ட​பாணி சுவாமிகள் மடத்​துக்​குச் சொந்​த​மான ரூ.100 கோடி மதிப்​புள்ள 1.35 ஏக்கர் நிலம் பழநி அடி​வாரத்​தில் உள்​ளது. இந்த நிலத்தை அறக்​கட்​டளை​யிடம் இருந்து வாங்கி இருப்​ப​தாக​வும், அந்த நிலத்தை தங்​கள் பெயருக்கு பத்​திரப் பதிவு செய்ய பழநி சார்​ப​தி​வாள​ருக்கு உத்​தர​விடக்​கோரி​யும் சேதுப​தி, வெள்​ளைத்​துரை ஆகியோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனுத் தாக்கல் செய்​தனர்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிப​தி, பத்​திரம் பதிவுசெய்ய சார்​ப​தி​வாள​ருக்கு உத்​தர​விட்​டார். இதையடுத்து அந்த கோயில் நிலம் தனிநபர்​கள் பெயரில் பத்​திரப்​ப​திவு செய்​யப்​பட்​டது. இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்​பியது. பத்​திரப்​ப​தி​வில் மோசடி நடந்​திருப்​ப​தாகக் கூறி சார்​ப​தி​வாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்​யப்​பட்​டார்.

இந்​நிலை​யில் தனி நீதிப​தி​யின் உத்​தரவை ரத்து செய்​யக் கோரி மடத்​தின் தக்​கார் தரப்பில் உயர் நீதி​மன்ற மதுரை அமர்வில் மேல்​முறை​யீடு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. அதில், கோயில் நிலம் தொடர்​பாக ஏற்​கெனவே தாக்​கல் செய்​யப்​பட்ட வழக்​கு, கடந்த 2024 ஆக.19 அன்று தள்​ளு​படி​யானது. இருப்​பினும், அந்த வழக்கு நிலு​வை​யில் இருப்​ப​தாக ஒரு தோற்​றத்தை உரு​வாக்கி நீதி​மன்​றத் தில் தவறான தகவல்​களை அளித்து பத்​திரப்​ப​திவு செய்ய உத்​தரவு பெற்​றுள்​ளனர்.

இந்த நிலத்​தின் சட்​டப்​பூர்​வ உரிமை மற்​றும் நிர்​வாகம் பழநி கோயில் செயல் அலு​வலரிடம்​தான் உள்​ளது. தக்​காரை எதிர் மனு​தா​ர​ராகக் கூட சேர்க்​காமல், அவரது தரப்பு வாதங்​களைக் கேட்​காமலேயே தனி நீதிபதி, பத்திரப் பதிவுக்கு அனு​மதி வழங்கி உள்​ளார். இந்த நிலப் பரி​மாற்​றம் தொடர்​பாக தக்​கா​ரால் தொடரப்​பட்ட மற்​றொரு வழக்கு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் இருப்​பதை சார்​ப​தி​வாளர் நீதி​மன்​றத்​தின் கவனத்​துக்கு கொண்டு செல்லத்தவறிவிட்​டார்.

பொது சொத்து மற்​றும் ஆன்​மிக மடத்​தின் பல கோடி ரூபாய் மதிப்​புள்ள சொத்​துகளை தனி நபர்​கள் அபகரிப்​ப​தைத் தடுக்​கும் பொருட்​டும், சட்​டம் மற்​றும் உண்​மைக்​குப் புறம்​பாக பிறப்​பிக்​கப்​பட்ட தனி நீதிப​தி​யின் உத்​தரவை முழு​மை​யாக ரத்து செய்து உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனுவை நீதிப​தி​கள் கார்த்​தி​கேயன், சக்​திவேல் அமர்வு நேற்று விசா​ரித்​தது. பின்​னர் நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வில் கூறியிருப்பதாவது:

பதிவு செய்​யப்​பட்​டுள்ள இடம் கோயில் நிர்​வாகத்​துக்​குச் சொந்​த​மானது என ஏற்​கெனவே தீர்ப்​பு​கள் உள்​ளன. தனி நீதிப​தி​யிடம் உரிய எதிர் தரப்​பினரைச் சேர்க்​காமல் உத்​தரவை பெற்​றுள்​ளனர். இது நீதி​மன்​றத்தை ஏமாற்றி பெறப்​பட்ட உத்​தர​வாகும். அந்த இடத்தை பத்​திரப்​ப​திவு செய்​யக் கூடாது எனக் கோயில் நிர்​வாகம் ஏற் கெனவே பதிவுத்​துறை​யிடம் தெரி​வித்​துள்​ளது.

இருப்​பினும் சொத்தை பதிவு செய்ய வேண்​டும் என்​ப​தற்​காகவே, வழக்​க​மான சார் ​ப​தி​வாளரை விடுப்​பில் அனுப்பி விட்​டு, பொறுப்பு சார்​ப​தி வாளரை வைத்து பத்​திரப்​பதிவு செய்​துள்​ளனர். இது முற்​றி​லும் முறை​கே​டாக நடந்த செயலாகும். பிரச்​சினைக்​குரிய மத வழி​பாட்டு இடங்​களில் பத்​திரப் பதிவு செய்​யும்​போது கோயில் நிர்வாகம் உள்பட அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்​ட பிறகே முடிவு செய்ய வேண்​டும் என பத்​திரப் பதிவு சட்​டத்​திலேயே கூறப்​பட்​டுள்​ளது. அப்​படி​யான சூழலில் சார்​ப​தி​வாளர் எதை​யும் கருத்​தில் கொள்ளாமல் தன்​னிச்​சை​யாக முறை​கே​டாக பதிவு செய்​துள்​ளார்.

ஒரு சார்​ப​தி​வாளர் இவ்வாறு எப்​படி முறை​கே​டான பதிவு​களை மேற்​கொள்ள முடி​யும் எனக் கேள்வி எழுப்​பியபோது, அரசு தரப்​பில் அவர் மீது நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாகத் தெரிவிக்​கப்​பட்​டது. தற்​காலிகப் பணி நீக்​கம் என்​பது போது​மான​தாக இல்​லை. எனவே பத்​திரப் பதிவு முறை​கே​டாக நடை​பெற்​றுள்​ள​தால், அது செல்​லாது. ரத்து செய்​யப்​படு​கிறது. இவ்​வாறு உத்​தர​விட்டனர்.

பழநியில் ரூ.100 கோடி கோயில் நிலத்தை தனி நபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் சார் பதிவாளரை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பழநியில் கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் தனிநபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது குறித்து சிபிசிஐடி விசாணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி ராஜசேகர் நேற்று விசாரித்தார். அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் தொடர்புடைய வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றார். பின்னர் நீதிபதி, மனு தொடர்பாக சிபிசிஐடி பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜூலை 17-க்கு தள்ளி வைக்கப்படுகிறது. அதுவரை மனுதாரரை கைது செய்யக் கூடாது என உத்தரவிட்டார்.

நீங்கள் வருமான வரி செலுத்துபவரா? அப்ப உடனே படியுங்க!!

ருமான வரி கணக்கு (Income Tax Return – ITR) தாக்கல் செய்வது என்பது ஆண்டுதோறும் செய்ய வேண்டிய ஒரு சாதாரண நடைமுறையாக பலர் கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் அது ஒவ்வொரு வரி செலுத்துபவரின் நிதி ஒழுங்கு, சட்டப்பூர்வ பொறுப்பு மற்றும் நம்பகத்தன்மையை நிரூபிக்கும் மிக முக்கியமான ஆவணமாகும். குறிப்பாக 2026-27 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், கடைசி நேர அவசரம், முழுமையற்ற தகவல்கள், தவறான படிவத் தேர்வு அல்லது வருமானத்தை மறைப்பது போன்ற சிறிய தவறுகள்கூட ஆயிரக்கணக்கில் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் வரை அபராதத்திற்கும், வருமான வரித்துறையின் விசாரணைக்கும் வழிவகுக்கலாம் என்று வரி நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

பெரும்பாலான வரி செலுத்துபவர்கள் செய்யும் முதல் தவறு, ITR தாக்கலை கடைசி தேதிவரை தள்ளிப்போடுவதுதான். “இன்னும் சில நாட்கள் இருக்கின்றன” என்ற எண்ணத்தில் பலர் காத்திருக்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவைத் தாண்டி தாக்கல் செய்தால், சட்டப்படி தாமதக் கட்டணம் (Late Filing Fee) விதிக்கப்படும். வருமானத்தின் அளவைப் பொறுத்து இந்த அபராதம் ₹1,000 முதல் ₹5,000 வரை இருக்கலாம். இதைத் தவிர, தாமதமாக தாக்கல் செய்வதால் சில வரிச் சலுகைகளையும், அடுத்த ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்லக்கூடிய வரி இழப்புகளையும் (Loss Carry Forward) இழக்கும் நிலையும் உருவாகலாம். எனவே, கடைசி தேதி என்பது வெறும் நினைவூட்டல் அல்ல; அது நிதி பாதுகாப்பிற்கான முக்கிய எல்லையாகும்.


சிலர் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்துவிட்டால் போதும் என்று நினைத்து, செலுத்த வேண்டிய Self-Assessment Tax-ஐ பின்னர் கட்டலாம் என்று கருதுகின்றனர். ஆனால் வரி முழுமையாக செலுத்தப்படாமல் ITR தாக்கல் செய்யப்பட்டால், அதன் மீது கூடுதல் வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். பின்னர் வரித்துறை நேரடியாக வசூல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இதனால் ஆரம்பத்தில் சிறிய தொகையாக இருந்த வரிப்பாக்கி, காலப்போக்கில் கணிசமாக உயரக்கூடும்.


மற்றொரு முக்கிய தவறு வருமானத்தை முழுமையாக வெளிப்படுத்தாமல் இருப்பது. வங்கி வட்டி, ஃப்ரீலான்ஸ் வருமானம், வாடகை வருமானம், பங்குச் சந்தை லாபம் அல்லது பிற முதலீட்டு வருவாய்களை சிலர் குறிப்பிடாமல் விடுகின்றனர். ஆனால் தற்போது வருமான வரித்துறை AIS (Annual Information Statement), Form 26AS, வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான தரவு பகுப்பாய்வு மூலம் அனைத்து தகவல்களையும் ஒப்பிட்டு சரிபார்க்கிறது. எனவே, முன்புபோல் எந்த வருமானத்தையும் மறைப்பது எளிதல்ல. வருமானத்தை குறைத்து காட்டியது கண்டறியப்பட்டால், செலுத்த வேண்டிய வரியுடன் கூடுதல் அபராதமும் விதிக்கப்படும். திட்டமிட்டு தவறான தகவல் வழங்கியதாக நிரூபிக்கப்பட்டால், அதன் விளைவுகள் இன்னும் கடுமையாக இருக்கலாம்.


ITR தாக்கலில் பலர் கவனிக்காத மற்றொரு விஷயம் சரியான படிவத்தை (ITR Form) தேர்வு செய்வது. சம்பளதாரர், தொழில்முனைவோர், ஓய்வூதியதாரர், முதலீட்டாளர் என ஒவ்வொருவருக்கும் தனித்தனி ITR படிவங்கள் உள்ளன. தவறான படிவத்தில் தாக்கல் செய்தால், அது செல்லுபடியாகாததாக அறிவிக்கப்படலாம். இதனால் மீண்டும் தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படுவதோடு, தேவையற்ற தாமதங்களும் சிக்கல்களும் உருவாகலாம். தொழில் அல்லது வணிகம் நடத்துபவர்களுக்கு கணக்குப் புத்தகங்களை முறையாக பராமரிப்பதும் மிகவும் அவசியம். சட்டப்படி வைத்திருக்க வேண்டிய நிதி பதிவுகள் இல்லாதபட்சத்தில், அதற்கும் தனியாக அபராதம் விதிக்கப்படும். அதேபோல், வரித்துறையிலிருந்து வரும் அறிவிப்புகளை அலட்சியப்படுத்துவது அல்லது செலுத்த வேண்டிய வரியை தாமதப்படுத்துவது போன்ற செயல்களும் கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும்.


ITR தாக்கல் செய்த பிறகும் வேலை முடிந்துவிடாது என்பதும் பலருக்குத் தெரியாத உண்மை. தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை e-Verification செய்யாமல் விட்டால், அது முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாது. அதாவது, ITR தாக்கல் செய்திருந்தாலும், சரிபார்ப்பு செய்யப்படாததால் அது செல்லுபடியாகாமல் போகும் அபாயம் உள்ளது. எனவே தாக்கல் செய்த பிறகு e-Verification முடிந்ததா என்பதை உறுதி செய்வதும் மிகவும் முக்கியம். இன்றைய டிஜிட்டல் காலத்தில் வருமான வரித்துறையின் கண்காணிப்பு முறை முற்றிலும் மாறிவிட்டது. வங்கிகள், பங்குச் சந்தைகள், மியூச்சுவல் ஃபண்டுகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு நிதி அமைப்புகள் வழங்கும் தகவல்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு AI தொழில்நுட்பத்தின் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. இதனால் முரண்பட்ட தகவல்கள், மறைக்கப்பட்ட வருமானங்கள் அல்லது தவறான கழிவுகள் மிக விரைவாக கண்டறியப்படுகின்றன. முன்பு கவனிக்கப்படாமல் போன சிறிய தவறுகள்கூட இன்று வரித்துறையின் கவனத்திற்கு எளிதாக வந்துவிடுகின்றன.


வருமான வரி தாக்கல் என்பது வெறும் சட்டப்பூர்வ கடமையாக மட்டுமல்ல; அது எதிர்கால நிதி நடவடிக்கைகளுக்கும் முக்கிய ஆவணமாக விளங்குகிறது. வீட்டு கடன், கல்விக் கடன், தொழில் முதலீடு, வெளிநாட்டு விசா விண்ணப்பம் போன்ற பல செயல்முறைகளில் ITR முக்கிய ஆதாரமாக பயன்படுத்தப்படுகிறது. எனவே, அவசரமாக தாக்கல் செய்வதை விட, ஒவ்வொரு தகவலையும் சரிபார்த்து, சரியான படிவத்தைத் தேர்வு செய்து, அனைத்து வருமானங்களையும் வெளிப்படையாக குறிப்பிடுவது மிகவும் அவசியம். சில நிமிட அலட்சியம் கூட ஆயிரக்கணக்கான ரூபாய் அபராதத்திற்கும், தேவையற்ற சட்ட சிக்கல்களுக்கும் காரணமாக மாறக்கூடும். அதனால், ITR தாக்கலில் வேகத்தை விட துல்லியத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதே ஒவ்வொரு வரி செலுத்துபவருக்கும் பாதுகாப்பான மற்றும் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

ட்ரெயின் படத்தின் இசை வெளியீட்டு விழா!

வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஷ்ருதி ஹாசன், ஐரா தயானந்த, ப்ரீதி கரன், மாளவிகா, தியா ஷர்மா, நாசர், கே எஸ் ரவிக்குமார், சம்பத் ராஜ், நரேன், கலையரசன் மற்றும் பலர் நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் ட்ரெயின் (Train) படத்தின் இசை  மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சத்தியம் சினிமாஸில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது இதில் மடோன் அஷ்வின், பி எஸ் வினோத் ராஜ், தமிழரசு பச்சைமுத்து, அருண் மாதேஸ்வரன், அமீர், விக்னேஷ் சிவன், சசி, ஆர் பார்த்திபன், ராம், வெற்றிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 
*தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு* அவர்கள் பேசும்பொழுது இன்ப நாள் இது இனிய நாள் இது. மிஷ்கின் பற்றி சொன்னால் நான் ஈன்று எடுக்காத பிள்ளை. எல்லா படத்திற்கும் நான் கதை கேட்பேன் இந்த படத்திற்கு நான் கதை கேட்கவே இல்லை. இந்த படம் கால தாமதம் ஆனதற்கு நான் காரணம் இல்லை. இந்தப் படத்திற்கு தான் முதல் முறையாக பெரிய 8 கம்பார்ட்மென்டம் அமைத்திருக்கிறோம்.  விஜய் சேதுபதி அயராது உழைத்தார். மனிதநேயத்தின் மறுபக்கம் உள்ளவர் அதிகமான அறிவு கொண்டவர். நாசர் மிக அடிமையாக நடித்திருக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும். 63 நடிகர் நடிகைகள் நடித்திருக்கிறார்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
 
*மிஷ்கின்*
நந்தலாலா கதை சொல்லும் போது தானு சார் மீட் பண்ணினேன் ஆனா சார்க்கு கதை ஒண்ணுமே புரியல ஆனால் விக்ரமுக்கு அந்த கதை ரொம்ப பிடிச்சது பட் எங்களால் அப்பொழுது ஒன்னா சேர்ந்து படம் பண்ண முடியல அது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு அதற்கு பிறகு தான் தானு சாரை மீட் பண்ணி ஒரு கதை பண்ணலாம்னு சொன்னேன் அவர் விஜய் சேதுபதி வைத்து பண்ணலாமுன்னு சொன்னார் விஜய் சேதுபதி என்கூட ரெண்டு நாள் வொர்க் பண்ணி இருக்காரு ஒரு பத்து வருடத்திற்கு முன்னாடி நான் அவருக்கு நோ சொல்லிட்டு அதுக்கப்புறம் பெரிய நடிகராக வளர்ந்துட்டாரு என்னுடைய சைக்கோ படம் பாத்துட்டு என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் விஜய் சேதுபதி அவரை மிக சிறந்த மனிதனாக நான் பார்த்தேன் இந்தப் கதையை எழுதும் போது விஜய் சேதுபதிக்காக நான் பார்த்து பார்த்து எழுதினேன் இந்தப் படத்தை விஜய் சேதுபதி தவிர வேறு யாராலும் பண்ணி இருக்கவே முடியாது கமல் சார் கூட பண்ணிருக்க முடியாது விஜய் சேதுபதி ஒரு எரிமலை மாதிரி என்னோட படத்தை பத்தி நான் பெருமையா பேசல படம் நல்லா இல்லைனா என்னை செருப்ப கழட்டி அடிங்க விஜய் சேதுபதி நடிப்பை என்னால மறக்கவே முடியாது எல்லாமே முதல் டேக் ஓகே பண்ணிட்டாரு ஒரு காட்சி ஒரு டைம் சொன்னாலே அதை புரிஞ்சு மனசுல இருந்து நடிக்சு முடிச்சுருவாறு நான் நாசர் நரேன் கூட ஒர்க் பண்ணி இருக்கேன் ஆனால் விஜய் சேதுபதி நடிக்க வைத்தது எனக்கு மிகப்பெரிய சந்தோசம் நான் பெருமைப்படுகிறேன் தானு சார்க்கும் ரொம்ப நன்றி உங்க மேல மிகப்பெரிய நம்பிக்கை இருக்கு பிசாசு 2 தயாரிப்பாளருக்கும் என்னுடைய நன்றி அந்தப் படம் வரும் அதுக்காக நான் காத்திருப்பேன் சினிமா அப்படித்தான் இருக்கும் தானு சாருக்கு ரொம்ப நன்றி உங்க காலத் தொட்டு வணங்குகிறேன் இளையராஜா போன்று சுறுசுறுப்பான மனிதராக உங்களைப் பார்க்கிறேன் ரொம்ப நன்றி.
 
*விஜய் சேதுபதி*
இன்னைக்கு எங்களை வாழ்த்த வந்த அத்தனை பேருக்கும் ரொம்ப நன்றி எனக்கு பேசறது நிறைய வார்த்தை இல்ல நான் ரொம்ப கவனிச்சுட்டு இருந்தா இது எல்லாமே எனக்கு கிடைத்த பெருமை இல்லை மிஷ்கின் சாருக்காக தான் நீங்க எல்லாரும் வந்து இருக்கீங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி இந்த படம் எப்ப வரும்னு நாங்க காத்துட்டு இருந்தோம் தானு சார் ஆகஸ்டுல கொண்டு வரேன்னு சொன்னதுக்கு ரொம்ப நன்றி நான் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக இருக்கும்போது இவர் கிட்ட ஆடிஷன் போயிருக்கும் நான் ஹீரோ ஆனதுக்கப்புறம் ஒரு டைம் என்னை கூப்பிட்டாரு கொஞ்சம் சைக்கோ மாதிரி இருப்பார் நான் டேட் இல்லைன்னு சொல்லிட்டு வந்துட்டேன் சைக்கோ படம் பார்த்ததுக்கு அப்புறம் இவரை எனக்கு ரொம்ப புடிச்சுசு சைக்கோ படம் பார்த்து முடிச்சுட்டு மிஷ்கின் கிட்ட எட்டு மணி நேரம் பேசினேன் எனக்கு ஒரு வாட்ச்  கொடுத்தார் பிசாசு 2 படத்துல ரெண்டு நாள் வொர்க் பண்ணினேன் அதுக்கு அப்புறம்தான்  ட்ரெயின் மூவி நடிச்சேன் செட் கலகலனு இருக்கும் மிஷ்கின் சார் நல்லா நடிக்கிறவங்களுக்கும் நல்லா வேலை செய்றவங்களுக்கும் ஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது அதனால எல்லோரும் சந்தோஷமா வேலை செஞ்சாங்க இவரை சுத்தி இருக்குற எல்லாருக்கும் சந்தோஷமா வச்சு பாரு அறிவு அன்பு இரண்டையும் பகிர்ந்து கொள்வார்கள் இந்தப் படம் உங்களுக்கு திர்லரா இருக்கும் ஆனா எனக்கும் மிஷ்கின் சார்க்கு ரொம்ப ரொமான்டிக் ஐ லவ் யூ மிஷ்கின் சார் என் கூட அடிச்சா எல்லாருக்கும் ரொம்ப நன்றி எல்லாரும் பத்திரமா வீட்டுக்கு போங்க.
 
படத்தில் நடித்த *நடிகை ப்ரீதி கரன்* அவர்கள் பேசும் பொழுது எல்லாருக்கும் வணக்கம் ட்ரெயின் படம் வெளியாக போகிறது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.  ஹார்டுவேர் எல்லாம் விரைவில் திரையரங்கில் பார்ப்பீர்கள். என்ன தேர்ந்தெடுத்ததற்கு மிஷ்கின் சாரிக்கு நன்றி. எந்த இடையூறும் இல்லாமல் படத்தில் நடித்திருக்கிறேன்  நான் ரொம்ப என்ஜாய் பண்ணி நடித்தேன். விஜய் சேதுபதி எனக்கு மிகவும் பிடித்த நடிகர்  யுகி சார் நடிப்பு என்னை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு தானு சாருக்கு நன்றி. 
 
படத்தில் நடித்த *நடிகை ஐரா தயானந்த்* அவர்கள் பேசும் பொழுது எல்லோருக்கும் நன்றி ட்ரெயின் என்னுடைய முதல் படம். நான் இங்கே மிகவும் பயத்திலிருந்து இருந்தேன் ஆனா மிஷ்கின் சாரும் அவர்களின் டீமு என்ன சௌகரியம் செய்தார்கள். என்னுடைய இரண்டாவது வீடு மாதிரி இருந்தது. விஜய் சேதுபதி சார் கூட நடிக்கும் போது மிகவும் நடுக்கமா இருந்தது அவர் என்ன சௌகரியம் செய்தார்.  விஜய் சேதுபதி அவர்களுடன் நடித்தது கனவு பலித்தது மாதிரி இருந்தது. எனக்கு தமிழ் தெரியாது என்னை இந்தப் படத்தின் நடிக்க வைத்ததற்கு  தானு சாருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  நாசர் சார் கூட நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கல ஆனாலும் அவர் வீட்டில் இருந்து சாப்பாடு எனக்கு கட்டிக்கொண்டு வந்தாரு பவுசியா மேடம்க்கு என்னுடைய நன்றி. 
 
*நடித்த நடிகை மாளவிக்க சுந்தர்* அவர்கள் பேசும் பொழுது மிஷ்கின் சார் என்னை அழைத்த போது பாடல் பாடுவதற்கு என்று நினைத்தேன் இங்கே வந்த பிறகு தான் தெரிந்தது நடிப்பதற்காக என்று மிஷ்கின் சார் ரொம்ப நன்றி இந்தப் படத்தில் நடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது
 
*இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்* அவர்கள் பேசும் பொழுது மிஷ்கின் இயக்கத்தில் நான் நடிப்பது எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது.  பல பரிணாமங்கள் பார்த்தேன் இவர் இயக்கத்தில். நான் நிறைய நல்ல வார்த்தைகள் பேசுவேன் என்று கூறுவார்கள் என்னை விட சுத்தமான வார்த்தைகள் பேசுபவரிடம் அடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. நிறைய கற்றுக் கொடுத்தார். எவ்வளவு கோபம் இருந்தாலும் அடுத்த நிமிடம் மறந்து விடுவார். சூட்டிங் முடிந்ததும் 2000 ரூபாய் கொடுப்பார்.  உள்ளத்தில் ஒரு குழந்தை மிஷ்கின்.  ட்ரெயின் படம் வெற்றி அடைய என்னுடைய கடவுளை வேண்டி வாழ்த்துக்கள் சொல்கிறேன். 
 
*நடிகர் அஜய் ரத்னம்* அவர்கள் பேசும் பொழுது
இந்தப் படத்தினுடைய தாய் தானு. பெரிய தயாரிப்பார்கள் என்னை தேர்ந்தெடுப்பதற்கு நன்றி. மிஷ்கின் ஒரு மாஸ்டர் கடினமான மனிதர் அதிக புத்தகங்கள் படிப்பார். ஆஃபீஸ் நிறைய புத்தகங்கள் தான் இருக்கும். இப்பொழுது அவர் இசை அமைப்பாளர் இந்தப் படத்தில்.  விஜய் என்றால் வெற்றி தான் விஜய் சேதுபதி ரொம்ப வித்தியாசமாக நடித்திருக்கிறார்.  படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றி.
 
*நடிகர் சுரேஷ் மேனன்* அவர்கள் பேசும் பொழுது இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் 
 
*நடிகர் ஷாஜி* அவர்கள் பேசும்பொழுது  இந்தப் படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நிறைய கதாநாயகர்கள் இந்த படத்தில் இருக்கிறார்கள். உயிரை கொடுத்து படம் எடுத்து இருக்கிறார் மிஷ்கின். என்னை தேர்வு செய்ததற்கு நன்றி.
 
*நடிகர் செல்வா* அவர்கள் பேசும்பொழுது மிஷ்கின் சார் உடன் இது எனக்கு மூன்றாவது படம். யூதம் செய், முகமூடி, இப்போ ட்ரெயின். மிஷ்கின் எனக்கு ஒரு டிக்கெட் கொடுத்து இருக்கிறார் அவருக்கு ரொம்ப நன்றி. தானு சார் ரொம்ப நன்றி.
 
*இயக்குனர் மற்றும் நடிகர் சிங்கம் புலி* அவர்கள் பேசும் பொழுது அனைவருக்கும் வணக்கம் சைக்கோ நடிச்சேன் இப்போ ட்ரெயின். இது தானு சார் படம் மிஷ்கின் படம் தானு சார் பாலா சார் தயாரிப்பில் நான் மாயாவி படம் இயக்கினேன். நிறைய கற்றுக் கொண்டே இருக்கிறேன். மிஷ்கின் முதலில் கேமரா படித்தால் பிறகுதான் டைரக்ஷன் படித்தார். அடுத்ததாக நான்கு லட்சம் ரூபாய்க்கு துணி வாங்கி கொடுத்தார். நல்ல மனிதர் இவருடைய உயரத்திற்கு காரணம் அவர் நல்ல குணம். இந்த படத்தில் பணியாற்றியஅனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். என்னுடைய தம்பி விஜய் சேதுபதிக்கு இது மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கும். 
 
*நடிகை ஜனனி* அவர்கள் பேசும் பொழுது எல்லோருக்கும் வணக்கம் ஐயோ படம் நடிக்கும் பொழுதே என்னிடம் கூறினார் இந்த படத்தில் நடிக்க வைப்பேன் என்று. இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் பொழுது பயமாக இருந்தது இயக்குனர் அதை சரி செய்தார். படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துக்கள் கூறுகிறேன். 
 
*நடிகர் நரேன்* அவர்கள் பேசும் பொழுது எல்லாருக்கும் வணக்கம் மிஷ்கினுடன்  இது என்னுடைய நான்காவது படம். தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் அனைத்து திறமைகளும் உள்ளது. அவருடைய வெற்றி என்னுடைய வெற்றி மாதிரி. விஜய் சேதுபதி மாதிரி ஒரு நடிகர் தானு மாதிரி ஒரு தயாரிப்பாளர் மிஷ்கின் இந்த பயணத்தில் கடைசி நடிகர் நான் தான் மிஷ்கின் எப்பொழுதும் தெளிவான ஒருத்தர் அனைவருக்கும் நன்றி 
 
*நடிகர் கணேஷ் வெங்கட்ராம்* அவர்கள் பேசும்பொழுது டிரெயின் பிரேம் எல்லா புதுமையாக இருக்கும். இவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன் ரொம்ப நன்றி சார் 
 
*நடிகர் அன்பு ராஜா* அவர்கள் பேசும் பொழுது 
இந்த படம் இந்திய மக்களுடைய மனசாட்சி ஆகவும், இந்தியா மக்களுடைய மேன்மைகளை பேசக்கூடிய மிக முக்கியமான படம். சேது அண்ணன் ரொம்ப அருமையா நடித்து இருக்கிறார். இந்த படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 
 
*நடிகர் நாசர்* அவர்கள் பேசும்பொழுது உண்மையாகவே ஒரு தந்தை மகனை பார்த்து சந்தோஷப்படுவது போல் எனக்கு இருக்கிறது. சில சமயம் இப்படி ஒரு மகன் பிறந்ததற்காக கோபமும் வருகிறது. இந்தப் படம் உருவாக உதவியாக இருந்த தானு அண்ணன் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள். ஏனென்றால் இந்த படம் வழக்கமான படங்கள் போன்று இல்லை.  இந்தப் படத்தை புரிந்து கொண்டு ஒத்துழைப்பதற்கு எங்கள் படக்குழுவின் சார்பாக நன்றி. மிஷ்கின் பற்றி பேசினால் பல மணி நேரம் பேசலாம் மேடை நாகரிகம் கருதி இப்பொழுது கூறுகிறேன் ஐ லவ் யூ மிஷ்கின். எனக்கு மிஸ்கியிடம் மிகவும் பிடித்தது அவருடைய ப்ரொபஷனலிசம். கதை எழுதி முடித்ததும் நான்கு பேரிடம் கொடுத்து படிக்க சொல்வார் அதில் நானும் ஒருவன். நிறம் இரண்டு நல்ல விஷயங்கள் உள்ளது ஒன்று நடிகர்களுக்கான அழகான பாதை போட்டு வைத்திருப்பார் மற்றொன்று நம் விருப்பம் போல் நடிக்க வைப்பார். மிஷ்கின் கவிதைகளை கேட்டு மைக் கண்ணீர் விட்டது. இதுவரை தமிழ் சினிமா பார்க்காத பிரேம் இந்த படத்தில் இருக்கும். எல்லாருக்கும் என்னுடைய நன்றி 
 
*இயக்குனர் மற்றும் நடிகர் யுகி சேதூ* அவர்கள் பேசும்பொழுது தானு சாருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தானு தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைக்கும் ஒருவர். இந்த ட்ரெயின் நல்ல ஓடும் மிக்க நன்றி சார். மிக சிறந்த தயாரிப்பாளர் நீங்க உங்களுக்கு ஆயுள் உயர்ந்த கட்டவுட் நாங்கள் வைக்க வேண்டும். நாசர் சுயசரிதை எழுத நான் தான் சரியான ஆள்.  நாசர் என்னுடைய மிக நெருங்கிய நண்பர். என்னுடைய எல்லா படங்களிலும் நாசர் தான் கதாநாயகன்.  விஜய் சேதுபதி உடைய வெற்றிக்கு காரணமும் அவருடைய உழைப்பு தான். படிப்படியா முன்னுக்கு வந்தவர் கமலஹாசன் படியிலேயே முன்னுக்கு வந்தவர் ரஜினி.  மிஷ்கின் என்னை சைக்கோ படம் நடிக்க சொன்னார் நான் மறுத்து விட்டேன். மீண்டும் இந்த படத்தில் நடிக்க சொன்னார் நான் ஏற்றுக் கொண்டேன். விஜய் சேதுபதி மிக சிறந்த நடிகர் மிகச்சிறந்த ஆளுமை. அவருடன் நடித்ததில் மகிழ்ச்சி.
 
*படத்தின் ஒளிப்பதிவாளர் ஃபௌசியா* அவர்கள் பேசும்பொழுது மிஷ்கின் சார்க்கு என்னுடைய முதல் நன்றி. முதலில் எனக்கு பயமாக இருந்தது பிறகு அதை மிஷ்கின் சரி செய்தார்.  இந்தப் படத்தின் கதையும் கதாபாத்திரங்களும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். இந்தப் படத்தில் வேலை செய்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு ஒளிப்பதிவாளரின் பெயரை பதிவு செய்த முதல் படம் இது. 
 
*இயக்குனர் அருண் மாதேஸ்வரன்* அவர்கள் பேசும்பொழுது எல்லாருக்கும் வணக்கம் மிஷ்கின் சார் உங்களுடைய படம் பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளது.  விஜய் சேதுபதி சார் நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன். நீங்கள் நடிக்கும் படம் அனைத்தும் எனக்கு பிடிக்கும்
 
*இயக்குனர் தமிழரசு பச்சமுத்து* அவர்கள் பேசும் பொழுது எல்லாருக்கும் வணக்கம் என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி மிஷ்கின் சார். உங்களுக்கு ஒரு மனு மட்டும் வைத்துக் கொள்கிறேன் தயவு செய்து எங்களையும் படங்களை பாருங்கள். 
 
*இயக்குனர் PS வினோத் ராஜ்* அவர்கள் பேசும்பொழுது
அனைவருக்கும் வணக்கம் எனக்கு விஜய் சேதுபதி மிஷ்கின் இவர்கள் இரண்டு பேரையும் சிறந்த மனிதர்களாக எனக்கு ரொம்ப பிடிக்கும்.  விஜய் சேதுபதி என் மேல் ரொம்ப அக்கறையா இருப்பார். நான் தொடர்ந்து நன்றி சொல்ற மாதிரி மிஷ்கினிக்கும் மிக்க நன்றி இவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன் 
 
*இயக்குனர் ராம்குமார் பாலசுப்பிரமணியம்* அவர்கள் பேசும் பொழுது
மிஷ்கின் சார் இந்த விழாவிற்கு என்னை அழைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. அவர பார்த்து வளர்ந்து தான் இந்த இடத்திற்கு வந்து இருக்கேன். நான் உங்களுடைய பெரிய ரசிகன். இந்தப் படத்தின் மேல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. விஜய் சேதுபதி உங்கள பார்க்கவும் எதிர்பார்ப்பாய் இருக்கிறது. எல்லாருக்கும் ரொம்ப நன்றி.
 
*இயக்குனர் மடோன் அஷ்வின்* அவர்கள் பேசும் பொழுது எல்லாருக்கும் வணக்கம் மிஷ்கின் சார் ஒன்று கூறினார் இப்பொழுது படங்கள் நடிக்கிறேன் நிறைய சம்பாதிக்கிறேன் ஆனால் வருத்தமாக உள்ளது காரணம் என்னுடைய படங்கள் வெளிவரவில்லை. ஆனால் இப்பொழுது இவருடைய படைப்பு வெளிவர போகிறது எனக்கு இது மகிழ்ச்சியாக உள்ளது. விஜய் சேதுபதி அண்ணாக்கு என்னுடைய வாழ்த்துக்கள், படத்தில் நடித்த எல்லோருக்கும் வாழ்த்துக்கள் 
 
*நடிகை மற்றும் பாடகி ஷ்ருதி ஹாசன்* அவர்கள் பேசும்பொழுது மிஷ்கின் கிரியேட்டிவ் மைண்ட் உள்ள ஒருத்தர். அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன்.  இந்த வாய்ப்புக்கு நன்றி சார். 
 
*இயக்குனர் அமீர்* அவர்கள் பேசும்பொழுது
அனைவருக்கும் இறைவன் இடத்திலிருந்து சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். மிஷ்கின் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்ட ஒருத்தர். எந்த விமர்சனத்தையும் கடந்து வருவார். எது செய்தாலும் அது என்னுடைய ஸ்டைல் என்று சொல்லுவார். நம்ம எல்லாரும் பாக்கியராஜ் பாரதிராஜா பாலச்சந்தர் படங்கள் எல்லாத்தையும் பார்த்து வளர்ந்திருக்கும் இவர் படம் ஒரு ஸ்டைல் கிரியேட் பண்ணும் அப்படி தனக்கான ஒரு ஸ்டைல் கிரியேட் பண்ணிக்குவார். என்னை கூப்பிட்டு போய் டான்ஸ் ஆட விட்டுட்டார். விஜய் சாராய விட்டுட்டு விஜய் சேதுபதி ரசிக்க வைத்தார். TR சார் க்கு பிறகு மிஷ்கின் தான். மிஷ்கின்ஒரு செல்ல கிறுக்கன் அவருக்கு எந்த விமர்சனம் பற்றியும் கவலை இல்லை போலி இல்லை. மிஷ்கினை நான் ரசித்துக்கொண்டே இருந்தேன். வாழ்த்துக்கள் மிஷ்கின். விஜய் சேதுபதி மாதிரி மரியாதையா பேசுவதற்கு இனை யாருமே இல்லை. விஜய் சேதுபதி படம் என்றாலே நம்பிக்கை. தானு மிகை படுத்தி சொல்ல மாட்டாரு. இந்தப் படம் வெற்றி பெற என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். 
 
*இயக்குனர் சசி* அவர்கள் பேசும் பொழுது
இந்த படத்தை நான் பார்க்கப் மிக முக்கியமான காரணம் மிஸ்கின் உடைய இசை. மிஷ்கின் நடிகர்கள் கிட்ட நடிப்பை வாங்குவது வித்தியாசமா இருக்கும். மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி பார்ப்பதற்கு ஆர்வமாக உள்ளது. தானு சார் இந்த படம் நீங்கள் நினைப்பது போல் வெற்றி படமாக அமையும். 
 
*இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன்* அவர்கள் பேசும்பொழுது தமிழகத்தை ஆண்டு கொண்டு இருப்பது விசில் சத்தம் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமா நடக்கறதுக்கு காரணம் ரசிகர்கள் உங்களுடைய விசில் சத்தம். ரயிலர் பார்க்கும் பொழுது ஆங்கிலம் படம் பார்ப்பது போல் இருந்தது.  ஒவ்வொரு மனிதனும் உள்ளே ஒரு மாதிரி வெளியே ஒரு மாதிரி இருப்பார்கள் ஆனால் மிஷ்கின் எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பார். என்ன நினைக்கிறாரோ அதை தான் பேசுவார். கொஞ்சம் கூட தயக்கம் இருக்காது. நிஜமான மனிதனா நான் அவரை ரசிக்கிறேன்.  எம் ஆர் ராதாவும் மிஷ்கினும் ஒரே மாதிரியானவர்கள். விஜய் சேதுபதி பிலாசபி ஜிலேபி மாதிரி பேசுறீங்க. தோல்வி உங்களுக்கு சந்தோசமா இருக்கும் வெற்றி பயமா இருக்குனு சொன்னீங்க, இந்த படம் உங்களுக்கு மாபெரும் பயம் கொடுக்க போகுது அவ்வளவு பெரிய வெற்றி அடையப்போகுது இந்த படம். மிஷ்கின்க்கு நன்றி சொல்லணும் பவுசியா ஒளிப்பதிவாளரா தேர்ந்தெடுத்ததற்கு. தானுக்கு எனக்கும் நிறைய இருக்கு என்னுடைய முதல் கதை இவருக்கு தான் சொன்னேன். எல்லார்கிட்டயும் என்ன பத்தி இவர் டைரக்டரா வரப்போறாருன்னு சொல்லிக்கிட்டே இருப்பார், அந்த நன்றி கடனுக்காக தான் நான் வந்திருக்கிறேன். அந்த அளவு அன்பு உங்க மேல வச்சிருக்கேன். மிஷ்கின் பயணம் மிக நீண்டது அந்த பயணம் வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்.
 
 
*இயக்குனர் விக்னேஷ் சிவன்* அவர்கள் பேசும்பொழுது எல்லாருக்கும் வணக்கம் வாழ்த்துகள் மிஷ்கின் சார் இந்த படத்தில் நடிக்க அழைத்தேன் அவர் மறுத்துவிட்டார். சார் இந்த படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் சார். நானும் ரவுடிதான் படம் இல்லன்னா நான் யாருன்னு யாருக்குமே தெரியாது. அந்த படத்திற்கு ஒரே காரணம் விஜய் சேதுபதி சார் மட்டும்தான். நான் போடா போடி படம் இயக்கிய போது எனக்கு கால் பண்ணி வாழ்த்துக்கள் கூறினார்.  இன்னைக்கு இயக்குனராக இருக்கிற பல பேர் விஜய் சேதுபதி னால தான் இயக்குனர் ஆகியிருக்காங்க அதுக்கு மிகப்பெரிய நன்றி சார்.
 
*இயக்குனர் ராம்* அவர்கள் பேசும்பொழுது
ஒரு ஆறு வருடம் கழித்து மிஷ்கின் காக நடக்கிற ஒரு இசை வெளியீட்டு விழா. இந்த ஆறு வருஷத்துல இரண்டு படம் எடுத்து முடிச்சிட்டான். ஒரு இயக்குனர் எவ்ளோ கஷ்டப்படணுமோ அதை எல்லாமே அவர் பட்டு இருக்கிறார். இந்த ஆறு வருஷத்தில் அவருடைய அவமானங்கள் அவதூறுகள் எல்லாத்தையும் நான் நேர்ல பார்த்திருக்கேன். எல்லாத்தையும் தாங்கிக் கொண்ட ஒரு மனிதர். ஏமாற்றங்கள் நம்பிக்கை துரோகங்கள் அத்தனையும் ஒரு மனிதனுக்கு ஒரே நேரத்துல தாக்கினால் காணாமல் போயிடுவார். மிஷ்கின் இடது கையில் தள்ளிவிட்டு நிற்கிறார். அது அவர் மனிதர்கள் மேலே வைத்துக் கொண்டிருக்கும் நம்பிக்கை. மிஷ்கின் படம் குற்றம் நம்பிக்கை இரண்டும் இருக்கும். தமிழ் சினிமாவின் திரில்லர் படத்தினுடைய தந்தை இவர்தான் நீங்க எவ்வளவு நல்லவராக இருந்தாலும் இந்த உலகத்தில் நடக்கிற தீமைக்கு உங்களுக்கும் பங்கு இருக்கு. மிஷ்கின் கொலையை ரசித்து ரசித்து எடுப்பார் அவர் படத்தில் அவர்களுடைய நியாயம் புரிய வைக்கும்.  செத்துப் போவதற்கு காரணம் அவர்களாகவே இருப்பா இறுதியில் அவர்கள் மீது கருணை வரும் அதுதான் மிஸ்கின் உடைய மொத்த உலகம். விஜய் சேதுபதி நகைச்சுவை கதாபாத்திரங்களை மிக சிறப்பாக கையாளுகிறார், கமல் சாருக்கு பிறகு நல்ல கையாண்டு இருக்கிறார். அவருடைய படம் பார்க்கவும் ஆர்வமா இருக்கேன். தானு எல்லாத்துக்குமே ரெடியா இருக்கக் கூடிய புலி தான் ட்ரெயின் படம் வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள். 
 
*இயக்குனர் வெற்றிமாறன்* அவர்கள் பேசும் பொழுது
மிஷ்கின் இசையமைப்பாளர் அதைப்பற்றி தான் பேசணும். அவர் எப்பொழுதும் புதிதாக கற்றுக்கொண்டே இருப்பார். மிஷ்கின்க்கு என்னுடைய வாழ்த்துக்கள். மிஷ்கின் உடைய ஸ்பெஷல் உங்களுக்குள்ளையும் ஒரு கிரேட் இருக்கும் அதை எதிர்பார்க்காத இடங்களில் காட்டுவார். எல்லா படங்களிலும் தொடர்ந்து அது இருக்கும். நாம் அவர் படங்களை பார்க்கும் போது அதை எதிர்பார்த்துக் கொண்டே இருப்போம். பெரிய திரைக்கதை எழுத்தாளர் அவருடைய படங்களுக்கு 100% உழைப்பை கொடுப்பார். தானு சார் மிகப்பெரிய ரிஸ்க் எடுத்து இருக்கிறார். சேது என்னுடைய பயணங்களில் ஒரு அங்கமாக இருக்கிறார். இவர் நடிகர் மட்டும் இல்ல ஒரு நல்ல மனிதர். மிஷ்கின் அன்பை வெளிப்படுத்தக்கூடிய ஒருவர்,சேதுவும் அப்படித்தான் ரெண்டு பேரும் சேர்ந்து ஒர்க் பண்ற செட்டு எப்படி இருந்திருக்கும் என்று தெரியவில்லை. எல்லாரும் என்ஜாய் பண்ணி இருப்பார்கள். இந்த படம் வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்.

கொட்டாமல் அரிசி போட்ட முதல்வர்! வியந்த விற்பனையாளர்!!

மிழக முதல்வர் விஜய், எங்கு சென்றாலும் அவரின் செயல்கள், இணையத்தில வைரலாகி வரும் நிலையில், இன்று அவர் தனது சொந்த தொகுதியான பெரம்பூரில், புதிய ரேஷன் அட்டை வழங்குவது மற்றும் ரேஷன் கடைகளில் ஆய்வுகள் மேற்கொண்ட நிலையில், ரேஷன் கடைசியில், அவர் மக்களுக்கு பொருட்கள் வழங்கியது குறித்து ரேஷன் கடை ஊழியர் ஒருவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

தமிழக முதல்வரும் த.வெ.க தலைவருமான விஜய், இன்று, தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு சென்றிருந்தார். அங்கு புதிய ரேஷன் அட்டை வழக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், 50-க்கு மேற்பட்டோலுக்கு தனது கையால் ரேஷன் அட்டை வழங்கினார்.  தொடர்ந்து ரேஷன் கடைசியில், பொருட்கள் எப்படி எடை போடுகிறார்கள் என்பதை ஆய்வு செய்த விஜய், தனது கையால் மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். 

இந்த ஆய்வின்போது அவர் காரில் வருவதை பார்த்து அப்பகுதி மக்கள் அனைவரும் அவரை வரவேற்க குவிந்தனர். சாலையின் இரு பக்கமும் மக்கள் நின்றுகொண்டு மலர் தூவி அவருக்கு வரவேற்பு அளித்தனர். பெரம்பூர் மட்டும் இல்லாமல், மற்ற பகுதிகளில் இருந்து மக்கள் முதல்வர் விஜயை பார்க்க திரண்டிருந்தனர்.  இந்த சந்திப்பில் விஜய் நடந்துகொண்ட விதம் குறித்து பலரும் மகிழ்ச்சியாக பாராட்டி வரும் பலரும் அவரை பார்ப்பதற்காக வந்ததாக கூறியுள்ளனர். 

அருகில் இருந்து பார்த்தது பெரிய மகிழ்ச்சியாக உள்ளது என்றும் பலரும் தெரிவித்துள்ள நிலையில், ரேஷன் கடைசியில், விஜய் மக்களுக்கு பொருட்கள் வழங்க, எடை போட்டு கொடுத்த பெண் ஊழியர் ஒருவர்

இது குறித்து பேசுகையில், அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை. எடை போட்டோம். அதை அவர் எடுத்து மக்களுக்கு கொடுத்தார். முதலில் சர்க்கரை போட்டோம். அதடுத்து பருப்பு, அதன்பிறகு ஆயில் அவர் கையில் கொடுத்து கொடுக்க சொன்னோம். அதன்பிறகு இறுதியாக அரிசி எடை போட்டோம். 

அந்த அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் கீழே கொட்டாமல், மக்களுக்கு அழகாக வழங்கினார். அவர் கொட்டும்போது சிறிதளவு கூட கீழே சிந்தவில்லை. இது எதிர்பார்க்காமல் நடந்த நிகழ்வு. அவர் பக்கத்தில் இருக்கும்போது பதற்றம் அதிகமாக இருந்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ளார்.

 

 

சூடு பிடிக்கும் கரூர் சம்பவம்! விடாமல் துரத்தும் திமுக!!

ரூர் சம்பவம் தொடர்பான சாட்சிகளை அச்சுறுத்தும் வகையில் பேசியுள்ளதால், முதலமைச்சர் விஜய் மீது சிபிஐ புதிதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என திமுக சார்பில் உச்சநீதிமன்றக் குழுவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவுக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு அனுப்பியுள்ளார்.


கடந்த 10ஆம் தேதி கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியுள்ள முதலமைச்சர் விஜய், கரூர் துயரச் சம்பவத்திற்கு காவல்துறையே பொறுப்பு என்றும், அரசியல் சதி இருப்பது போலவும் பேசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.தவெகவினரின் திட்டமிடப்படாத செயல்பாடுகளும், விதிமீறல்களுமே உயிரிழப்புக்கு காரணம் என தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர், காவல்துறை டி.ஜி.பி. ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்துள்ள நிலையில், அதே உள்துறையைத் தற்போது தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர் முற்றிலும் முரணாக பேசி சாட்சிகளைத் திசை திருப்ப முயன்றுள்ளதாக திமுகவின் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் கரூரில் பேசியது குறித்து சிபிஐ தனியாக புகார் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும், அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோருடன் மதியழகன் மற்றும் ஜெகதீஷ் ஆகியோரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சாட்சிகளை அச்சுறுத்தக் கூடாது என பிணைப் பத்திரம் எழுதி வாங்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு!

ன்​னி​யாகுமரி மாவட்​டம் வடக்​கு ​தாமரைகுளம் அருகே நாராயணன்​புதூர் பகு​தி​யைச் சேர்ந்​தவர் சபரிவர்​மன் (33). இவர் அப்​பகு​தி​யில் கடை நடத்தி வந்​தார். கடந்த 9-ம் தேதி மதி​யம் 1.30 மணி​யள​வில் இவரது கடை​யில் தென்​தாமரகுளம் போலீ​ஸார் சோதனை நடத்​தினர். அரசால் தடை செய்​யப்​பட்ட குட்கா பொருட்​கள் இவரது கடை​யில் இருந்​த​தாகக் கூறி, சபரிவர்​மனை கைது செய்து நாகர்​கோ​வில் சிறை​யில் அடைத்​தனர்.

கடந்த 4 நாட்​களாக அவர் விசா​ரணை கைதி என்ற நிலை​யில் இருந்​துள்​ளார். சிறை அறை​யில் நேற்று அதி​காலை​யில் சபரிவர்​மன் மயங்​கிய நிலை​யில் கிடந்​த​தாகக் கூறப்​படு​கிறது. போலீ​ஸார் அவரை ஆசா​ரிபள்​ளம் அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். அங்கு மருத்​து​வர்​கள் பரிசோ​தித்​த​போது சபரிவர்​மன் ஏற்​கெனவே உயி​ரிழந்​தது தெரிய​வந்​தது. இத்​தகவல் அவரது குடும்​பத்​தினருக்கு தெரிவிக்​கப்​பட்​டதும் அவர்​கள் அதிர்ச்சி அடைந்​தனர்.

சபரிவர்​மனை போலீ​ஸார் பலமாக தாக்கி உள்​ள​தாக​வும், அவருக்கு எந்​த​வித நோய் பாதிப்​பும் கிடை​யாது எனவும் உறவினர்​கள் குற்​றம்​சாட்​டினர். மருத்​து​வ​மனை வளாகத்​தில் திரண்டு அவர்​கள் போராட்​டம் நடத்​தினர். போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​வர்​களிடம் எஸ்​.பி. ஸ்டா​லின் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். இதையடுத்​து, போராட்​டம் கைவிடப்​பட்​டது.