‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு
நிதியாண்டு! எல்ஜிடி குளோபல் ஹாஸ்பிடாலிட்டி லிமிடெட்
சென்னை:
LGT குளோபல் ஹாஸ்பிடாலிட்டி லிமிடெட் (முன்பு ‘எல்ஜிடி பிசினஸ் கனெக்ஷன்ஸ் லிமிடெட்’), மார்ச் 2026-ல் முடிவடைந்த நிதியாண்டிற்கான (FY26) நிதி முடிவுகளை அறிவித்துள்ளது. பயணங்களுக்கான தேவை அதிகரிப்பு, சிறப்பான வணிக ஒருங்கிணைப்பு மற்றும் கார்ப்பரேட், சுற்றுலாப் பிரிவுகளில் கிடைத்த வரவேற்பால் நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை எட்டியுள்ளது.
இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் வாடிக்கையாளர்களைச் சென்றடைதல், சேவைத் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட கூட்டணிகள் மற்றும் கையகப்படுத்துதல்கள் மூலம், ‘ஒருங்கிணைந்த பயண மற்றும் ஹாஸ்பிடாலிட்டி சேவை நிறுவனம்’ என்ற தனது நிலையை இந்நிறுவனம் மேலும் வலுப்படுத்தியுள்ளது. MICE சேவைகள், டெஸ்டினேஷன் திருமணங்கள், கண்காட்சிகள் மற்றும் அனுபவப்பூர்வ சுற்றுலாக்களுக்கான தேவை அதிகரிப்பு நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது.
நீண்டகால வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதும் முக்கிய பிராந்திய சந்தைகளில் LGT குளோபல் ஹாஸ்பிடாலிட்டி லிமிடெட் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. நாகர்கோவில், கோயம்புத்தூர், புனே மற்றும் விஜயவாடா ஆகிய நகரங்களில் செயல்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. பெருநகரங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகர விரிவாக்கத் திட்டத்தின் கீழ், அடுத்தகட்டமாக அகமதாபாத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில், உலகளாவிய வாடிக்கையாளர் தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் துபாய் மற்றும் மலேசியாவை மையமாகக் கொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மேலும், ஆன்மீக மற்றும் சமயச் சுற்றுலாவை அதிக வளர்ச்சியடையும் பிரிவாகக் கருதி, அதில் பிரத்யேக கவனம் செலுத்துகிறது.
செயல்பாட்டு திறனில் மேம்பாடுகள்
கீழ்க்கண்ட முக்கிய வணிகப் பிரிவுகளில் நிறுவனம் தனது சேவைத் திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்தியுள்ளது:
- கார்ப்பரேட் பயண மேலாண்மை
- MICE (கூட்டங்கள், ஊக்கத்தொகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்)
- ஹோட்டல் முன்பதிவுகள் மற்றும் விருந்தோம்பல் சேவைகள்
- சொகுசுக் கப்பல் மற்றும் ஓய்வு நேரச் சுற்றுலா
- டிக்கெட் முன்பதிவு மற்றும் விசா செயலாக்கச் சேவைகள்
- பிரத்யேக உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பயணப் பேக்கேஜ்கள்
- ஆன்மீக மற்றும் சமய சுற்றுலாச் சேவைகள்
- கண்காட்சிகள்
- வர்த்தக கண்காட்சிகள்
- டெஸ்டினேஷன் திருமணங்கள்
LGT குளோபல் ஹாஸ்பிடாலிட்டி லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. வில்ஃபிரட் செல்வராஜ் கூறுகையில்: “பயணத் தேவை அதிகரிப்பு மற்றும் புதிய பயண அனுபவங்கள் மீதான ஆர்வத்தால் சுற்றுலா மற்றும் ஹாஸ்பிடாலிட்டி பிரிவுகளில் நாங்கள் சிறப்பான வளர்ச்சியைக் கண்டு வருகிறோம். கூட்டணிகள் மற்றும் கையகப்படுத்துதல்கள் மூலம் ஒருங்கிணைந்த பயணக் கட்டமைப்பை உருவாக்குவதே எங்கள் முக்கிய நோக்கமாகும். Yaja, Travflix மற்றும் Holiday One இணைப்பு எங்களின் செயல்பாட்டுத் திறன்களை வலுப்படுத்த முக்கிய முன்னேற்றமாக அமைந்துள்ளது. இந்தியா மற்றும் துபாய், மலேசியா போன்ற சர்வதேச சந்தைகளில் தொடர்ந்து விரிவடைந்து வரும் நிலையில், சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கி நீண்டகால வளர்ச்சியை உறுதி செய்வதில் நாங்கள் முழு கவனம் செலுத்தி வருகிறோம்” என்றார்.
‘காட்டாளன்’ விமர்சனம்
க்யூப்ஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில், பால் ஜார்ஜ் இயக்கத்தில், ஆண்டனி வர்கீஸ் பெப்பே, சுனில், கபீர் துஹான் சிங், துஷாரா விஜயன், பார்த் திவாரி, ஹரிசங்கர் நாராயணன், அல்போன்ஸ் புத்ரன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் ‘காட்டாளன்’
விமர்சனம்:
கேரளா-தமிழ்நாடு எல்லையில் உள்ள ‘ஆனக்கொள்ளி’ என்ற கிராமத்தில், காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து மக்களைக் காப்பாற்ற வரும் மாரி (ராஜ் திரன்தாசு -இளமைப் பருவத்து மாரியாக) என்பவரைச் சுற்றித் தொடங்குகிறது. ஆனால், மக்களின் பயத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் மாரி, அந்தப் பகுதி முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கிராம மக்களை அடிமைகளாக்கி, ஒரு மாபெரும் சட்டவிரோத கடத்தல் கும்பலின் கொடூரமான தலைவனாக மாறுகிறான். யானைகளைக் கொன்று அதன் தந்தங்களை வெட்டி எடுத்து சர்வதேச அளவில், குறிப்பாக இலங்கைக்கு கடத்தி கோடிகளை குவிக்கும் மாபியா சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறான். அவனுக்கு கீழே 40-க்கும் மேற்பட்ட ஏழை பழங்குடி மக்கள் அடிமைகளாக வேலை செய்கிறார்கள். இந்த சூழலில், மாரிக்கு போட்டியாக ‘எடி’ (கபீர் துகான் சிங்) என்ற புதிய தொழில் எதிரி உருவாகிறான்.
எடி-யுடன் ஏற்படும் மோதலால் மாரியின் தந்தம் கடத்தல் தொழில் முடங்கும் நிலைக்கு வருகிறது. அதிலிருந்து தப்பிக்கவும், பறிபோன தனது கோடிக்கணக்கான மதிப்புள்ள தந்தங்களை மீட்டெடுக்கவும் மாரி, எடி-யின் பலத்தை அடக்கவும், தனது தந்தங்களை ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு பாதுகாப்பாக கடத்தவும் ஆண்டனி (ஆண்டனி வர்கீஸ் பெபே) என்ற துணிச்சலான இளைஞனைத் தனது வலதுகரமாக பயன்படுத்திக் கொள்கிறான்.
ஆண்டனி, மாரியின் கடத்தல் நெட்வொர்க்கை தன் கட்டுப்பாட்டில் எடுத்து மிக சாதுரியமாக பிண உடல்களுக்குள் தந்தங்களை ஒளித்து வைத்து கடத்தி மாரியின் நம்பிக்கையை பெறுகிறான். ஆரம்பத்தில் மாரிக்கு விசுவாசமாக செயல்பட்டு எதிரிகளை அழிக்கும் ஆண்டனி, கதையின் போக்கில் மாரியின் சுயரூபத்தை உணர்ந்து அவனுக்கே எதிராக திரும்புகிறான். மாரியின் கொடூரமும், அவன் காட்டின் (கிராம மக்கள்) அடிமைகளை நடத்தும் விதம் எல்லை மீறும் போது ஆண்டனிக்கும் மாரிக்கும் இடையே மோதல் வெடிக்கிறது.
மாரியை தீர்த்துக்கட்ட கிராமத்து மக்களும், அலி (ஜெகதீஷ்) போன்ற பெரியவர்களும் ஆண்டனியின் உதவியை நாடுகிறார்கள். கோபமடையும் மாரி, ஆண்டனியும் அவனுக்கு பின்னால் இருக்கும் ஒட்டுமொத்த கிராமத்தையும் அழிக்க துணிகிறான். இறுதியில், ஆண்டனி அந்தப் பெரிய கடத்தல் சாம்ராஜ்யத்தை ரத்தக் களரியாக்கி தடம் தெரியாமல் அழிக்கிறான் என்பதே மீதிக்கதை…..
ஆனைகொல்லி காடுகளின் தந்தம் கடத்தல் சிண்டிகேட்டின் பிரதான வில்லனாக வரும் சுனில், நரி குணம் கொண்ட கடத்தல் கார்டெல் தலைவனாக தந்தத்திற்காக காட்டு யானைகளை கொல்லும் சைக்கோத்தனமான வில்லனாக மிரட்டியுள்ளார். படத்தின் நாயகனாக வரும் ஆண்டனி வர்கீஸ் பெப்பே, அதிரடி இமேஜுக்கு கச்சிதமாகப் பொருந்திப் போகிறார். அவரது உடல் மொழி, காடுகளுக்குள் பாய்ந்து பாய்ந்து சண்டை செய்யும் காட்சிகள், ஸ்டண்ட் பிளாக்குகளில் அசாத்திய வேகம் கொடுத்து மிரட்டியுள்ளது. ஹரிசங்கர் நாராயணன், சந்தீப் ரவிராஜ், ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டெர் உட்பட அனைவரும் கொடுத்த வேலையை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள்.
பிரபல இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ‘மெண்டிஸ்’ என்ற ரகசியமான, புதிரான பாத்திரத்தில் எதிர்பாராத கேமியோ என்ட்ரி கொடுத்து ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.
மைனஸ்: ஒரே சண்டை ரத்தம்…. பல காட்சிகள் லாஜிக்கே இல்லை…
மொத்தத்தில் இந்த ‘காட்டாளன்’ அலறல், குமுறல்.
புற்றுநோய் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை!
சென்னை:
ரோபோடிக் உதவியுடனான புற்றுநோய் சிகிச்சையில் முன்னணியில் திகழும் சென்னை அப்போலோ மருத்துவமனை, ஹியூகோ ரோபோடிக்-அசிஸ்டெட் சர்ஜரி (ஆர்ஏஎஸ்) அமைப்பைப் பயன்படுத்தி, பக்கவாட்டு அணுகுமுறை மூலமாக உலகின் முதல் வீடியோ எண்டோஸ்கோபிக் இங்வினல் லிம்பாடெனெக்டமி (விஇஐஎல்) அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளது. இது தொடையின் நடுப்பகுதிக்கு பதிலாக பக்கவாட்டுப் பகுதி வழியாக இடுப்பு இடுக்கில் உள்ள நிணநீர்முடிச்சுகளை அணுகும் ஒரு மிகக் குறைந்த ஊடுருவல் தொழில்நுட்பமாகும். ஆண்குறி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த 40 வயதுள்ள நோயாளிக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் எந்தவொரு பெரிய பக்கவிளைவுகளும் இன்றி அவர் மிக விரைவாகவும், முழுமையாகவும் குணமடைந்துள்ளார்.
ஆண்குறி, பெண்குறி வெளிப்பகுதி, யோனி போன்ற புற்றுநோய்கள் இடுப்பு இடுக்குகளில் உள்ள நிணநீர்முடிச்சுகளுக்குப் பரவும் போது, இந்த இங்வினல் நிணநீர்முடிச்சு அகற்றும் முறை ஒரு வழக்கமான நடைமுறையாக மேற்கொள்ளப்படுகிறது. பாரம்பரியமாக, இந்த அறுவை சிகிச்சையானது இடுப்புப் பகுதியில் பெரிய கீறல்களை ஏற்படுத்தி திறந்தநிலை அறுவை சிகிச்சை மூலமாகவே செய்யப்படுகிறது. இது சில நேரங்களில் சருமம் மற்றும் நிணநீர் நாளங்களை சேதப்படுத்தி, காயம் ஆறுவதில் சிக்கல்களையும், அறுவை சிகிச்சைக்குப் பின் நிணநீர் கசிவையும் ஏற்படுத்தக்கூடும்.
இருப்பினும், ரோபோடிக் தளங்களில் மிகக் குறைந்த ஊடுருவல் மற்றும் கேமரா வழிகாட்டுதலுடன் கூடிய விஇஐஎல் (VEIL) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும் போது முடிவுகள் பெரும்பாலும் சிறப்பாக அமைகின்றன. ரோபோடிக் விஇஐஎல் அறுவை சிகிச்சையில், மருத்துவர்கள் மிகவும் துல்லியமான ரோபோடிக் கருவிகள் மற்றும் மேம்பட்ட விஷுவல் கண்ட்ரோல் உதவியுடன் மிகச் சிறிய கீறல்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்கிறார்கள். இதனால் சருமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைகின்றன. மேலும், இந்த அணுகுமுறை வழக்கமான திறந்தநிலை அறுவை சிகிச்சையுடன் ஒப்பிடும்போது, அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய நிணநீர் கசிவை கணிசமாகக் குறைக்கிறது.
புரோஸ்டேட், சிறுநீரகம், சிறுநீர்ப்பை தொடர்பான பல்வேறு வகையான ரோபோடிக் சிறுநீரகப் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளுக்கு அப்போலோ மருத்துவமனை ‘ஹியூகோ ஆர்ஏஎஸ்’ அமைப்பைப் பயன்படுத்தி வருகிறது. தற்போது நிணநீர்முடிச்சை அகற்றுவதற்கான இந்த விஇஐஎல் செயல்முறையையும் இணைத்ததன் மூலம், இந்த மருத்துவமனை இந்த அமைப்பைப் பயன்படுத்தி அனைத்து வகையான ரோபோடிக் சிறுநீரகப் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளையும் முழுமையாக நிறைவு செய்துள்ளது.
இந்த வரலாற்று மைல்கல் குறித்து சென்னை மண்டல அப்போலோ மருத்துவமனையின் சிஇஓ டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார், “மேம்பட்ட மருத்துவத் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான அப்போலோவின் உறுதிப்பாடு ஒவ்வொரு நாளும் புதிய உயரங்களை எட்டி வருகிறது. மருத்துவ மேன்மைக்கும், உலகத்தரம் வாய்ந்த பராமரிப்பின் மூலம் நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் எப்போதும் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் ஒரு முற்போக்கான மருத்துவ நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன் மேலும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.”
சென்னை அப்போலோ மருத்துவமனையின் சிறுநீரகவியல், சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கான மூத்த ஆலோசகர் டாக்டர் என். ராகவன் அவர்கள் கூறியதாவது: “இந்த சாதனை பல மாத கால நுணுக்கமான திட்டமிடல், மருத்துவத் துல்லியம், ஒருங்கிணைந்த குழுப்பணி ஆகியவற்றுக்கு கிடைத்த வெற்றியாகும். ஹியூகோ ஆர்ஏஎஸ் தளத்தைப் பயன்படுத்தி பக்கவாட்டு அணுகுமுறை மூலம் உலகின் முதல் ரோபோடிக் விஇஐஎல் அறுவை சிகிச்சையை மேற்கொண்டது சவாலாகவும் அதே நேரத்தில் திருப்திகரமாகவும் இருந்தது. மேம்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சையின் ஒவ்வொரு மைல்கல்லும் தொடர்ச்சியான கற்றல், அர்ப்பணிப்பு மற்றும் மருத்துவ மேன்மையின் எல்லைகளை விரிவுபடுத்துவதில் உறுதியாக இருக்கும் திறமையான குழுக்களின் கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியமாகிறது. இந்த வெற்றி நோயாளிகளின் குணமடையும் விகிதத்தை மேம்படுத்த உதவுவதுடன், மிகக் குறைந்த ஊடுருவல் புற்றுநோய் சிகிச்சையின் எதிர்காலத்தை மேலும் வலுப்படுத்தும் என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.”
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சிறுநீரகவியல், சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர், ஆலோசகர் டாக்டர் மாதவ் திவாரி அவர்கள் மேலும் கூறியதாவது: “நோயாளி குணமடைந்த விதம், இந்த அணுகுமுறையின் ஆற்றலையும் அதன் செயல்திறனையும் காட்டுகிறது. இடுப்பு இடுக்கு நிணநீர்முடிச்சு அகற்றம் தேவைப்படும் ஆண்குறி புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஒப்பீட்டளவில் அரிதானவை என்றாலும், அவற்றிற்கு பெரும்பாலும் மிகவும் சிறப்பு வாய்ந்த அறுவை சிகிச்சை தலையீடுகள் தேவைப்படுகின்றன. விஇஐஎல் போன்ற மேம்பட்ட ரோபோடிக் உதவி நடைமுறைகள் பக்கவிளைவுகளைக் குறைப்பதன் மூலமும், அறுவை சிகிச்சை காயங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், விரைவாக குணமடைய வழிவகுத்து நோயாளிகளின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுகின்றன. சிறந்த சிகிச்சை விளைவுகளைப் பெறுவதற்கு விழிப்புணர்வை அதிகரிப்பதும், சரியான நேரத்தில் நோயைக் கண்டறிவதும் தொடர்ந்து அவசியமாக உள்ளது.”
டாக்டர் என். ராகவன், டாக்டர் மாதவ் திவாரி ஆகியோரின் தலைமையிலான பல்துறை நிபுணர் குழுவினரால் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இதற்கு டாக்டர் பிரதீப் சிருவர் தலைமையிலான குழுவினர் மயக்க மருந்து ஆதரவை வழங்கினர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி மிகச் சிறந்த முறையில் குணமடைந்துள்ளார். இந்த வெற்றிகரமான சிகிச்சை, துல்லியம் சார்ந்த மற்றும் தொழில்நுட்ப உதவியுடனான புற்றுநோய் சிகிச்சையின் எதிர்காலத்தை நோக்கிய மற்றொரு முக்கிய படியாகும்.
டபுள் ஆக்குபன்சி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!
“உயிரிணையே” இசை வெளியீட்டு விழா!
டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் சார்பில் கிளாடி ஜெராடு அவர்கள் தயாரிப்பில், “உறவுகள்” என்ற தலைப்பில் “உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப்பில் நடைப்பெற்றது.
பிரபல இசையமைப்பாளரும், பாடலாசிரியரும், இயக்குநருமான கங்கை அமரன், இசையமைப்பாளர் சதா சுதர்சனம், கண்ணன், தவசீலிதன்ராஜ், சகோ கணேசன், தயாரிப்பாளர் ரவிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் பேசியதாவது…
“அப்பெல்லாம் ஏவிஎம் (AVM) ஸ்டுடியோவில் மியூசிசியன்களை மாசக்கணக்குல புக் பண்ணி வச்சிருந்த காலங்கள். ஜானகி அம்மாவா இருக்கட்டும், எம்.எஸ். ராஜேஸ்வரியா இருக்கட்டும், குழந்தைகள் பாடுறதுக்காக அவங்கள மாச சம்பளத்துக்கு அங்கேயே வச்சிருப்பாங்க. தினசரி வந்து பாடல்களைக் கத்துக்கணும், ரிகர்சல் பண்ணணும்னு மாச சம்பளம் கொடுத்து வச்சிருந்த காலம் அது.
ஆனா இந்த காலத்துல கம்ப்யூட்டர்ல போட்டா மியூசிக் வந்துடுது. தன்னுடைய பரம்பரைய நினைக்கும்போது இவங்கள மாதிரி (சதா சுதர்சனம்) அப்பாக்கள் இல்லன்னா இன்னைக்கு மியூசிக்கே டெவலப் ஆயிருக்காது. நாங்கல்லாம் இளையராஜா அண்ணன் வீட்ல போயிட்டு உட்கார்ந்து பார்த்து ரசிச்சவங்க. சதா நிறைய இது மாதிரி பண்ணனும், என்ன அப்பப்ப சாங் எழுத கூப்பிடணும்.”
“சதா பற்றி சொல்லணும்னா, அவர் எந்த பரம்பரையில இருந்து வந்திருக்கார் அப்படிங்கறத பற்றி மிகச் சிறந்த கிட்டாரிஸ்ட். நாங்கல்லாம் ஒரே மாஸ்டர்ட்ட தான் படிச்சோம், ஜி. தர்மராஜ் மாஸ்டர்ட்ட. இளையராஜா அண்ணா, நானு, சதா எல்லாமே அவரிடம்தான் கத்துக்கிட்டோம். சதா அந்த டைம்ல ரொம்ப பிஸியான ஒரு கிட்டாரிஸ்ட். தேவராஜ் மாஸ்டர், தட்சிணாமூர்த்தி சுவாமிகள், அர்ஜுன் மாஸ்டர், தெலுங்குல ராஜா நாகேந்திரா, ஜி.கே. வெங்கடேஷ்னு எல்லார்ட்டயுமே வாசிச்சவர்.
அண்ணனுடைய (இளையராஜா) ஒரு 150 படங்கள், 200 படங்களுக்கு அவர் பக்கத்துல கிட்டார் வாசிச்சவன் நான். ‘பருவமே புதிய பாடல்’ எந்த பாட்டு எடுத்தாலும் ரிதம் கேட்டா நம்மதான் பெஸ்ட். பிலிப்ஸ் அப்படிங்கிறவர் தான் இந்த திரைப்பட உலகத்துல பெஸ்ட் கிட்டார் பிளேயர். எம்.எஸ். விஸ்வநாதன் சார் பேக்ரவுண்ட் எல்லாம் அவர்தான் வாசிப்பார். அப்படிப்பட்டவரோட ஒரே மைக்ல வாசிக்கும் போது அவர் சொன்ன வார்த்தை, ‘நான் பார்த்ததுல பெஸ்ட் ரிதம் கிட்டார் பிளேயர் நீதான்பா’ அப்படின்னு சொன்னது எனக்கு அவ்ளோ பெரிய பெருமை.”
“ஒரு ரீரெக்கார்டிங் நடக்குது, எனக்கு அவ்ளோ தூரம் சோலோ வாசிக்க தெரியாது. கிட்டார்ல எத்தனை கார்டு கொடுத்தாலும் வாசிச்சிருவேன். மெலடி வாசிக்கணும், காலைல 7 மணிக்கு வந்தாங்கன்னா 1 மணி வரைக்கும் ஒரு கால் ஷீட். வாகினி ஸ்டுடியோல ஜி தியேட்டர்ல தேவராஜ் மாஸ்டர்னா எல்லாம் பயப்படுவாங்க. ஏன்னா அங்க சத்தமே இருக்காது, அண்ணன் மாதிரிதான் அமைதியா இருப்பாங்க.
அவர் படத்தை பார்த்துட்டு, ‘அமர் இந்த இடத்துல நீ சோலோ வாசிச்சுக்கோ’ அப்படின்ட்டாரு. எனக்கு கொடுத்த நோட்ஸ் கொடுத்தா வாசிச்சிருவேன். ஆனா சோலோன்னா இஷ்டத்துக்கு வாசிக்கணும். எல்லாம் எட்டு மணி ஆகுது, அந்த ரீல முடிச்சாதான் கால்ஷீட் முடிஞ்சு அவங்க வீட்டுக்கு போகணும். இந்த சீன் வந்து லாஸ்ட்ல வருது. அப்ப எல்லாம் யாராவது தப்பா வாசிச்சாங்கன்னா மறுபடியும் ஃபர்ஸ்ட்ல இருந்து வாசிக்கணும், 10 நிமிஷம் ஓடக்கூடிய ரீல மறுபடியும் முதல்ல இருந்து மியூசிக் எல்லாரும் வாசிக்கணும்.
எனக்கா கை நடுங்குது. ஒன்பதாவது நிமிஷத்துல என்னோட சீன் வருது. அந்த பொண்ணு மாடி மேல இருந்து கீழ வந்து போஸ்ட்மேன்ட்ட லெட்டர் வாங்குற வரைக்கும் நீ சோலோ வாசிச்சுக்கோன்னு சொல்லிட்டாரு. நான் வாசிக்க ஆரம்பிக்கிறேன்… ‘டாடாடாடா…’ அப்படி வாசிச்சுட்டு இருக்கேன், அதுக்கு மேல எனக்கு தெரியல. கட் ஆயி போச்சு. இதே மாதிரி மூணு தரம் போச்சு. வயலின் வாசிக்கிறவங்க எல்லாம் ‘அமர் சீக்கிரம் வாசிச்சிருப்பா நாங்க வீட்டுக்கு போகணும்’னு சொல்றாங்க. எனக்கு இன்னும் உதறுது. இந்த மாதிரில்லாம் அனுபவப்பட்டு, திட்டு வாங்கி, அடி வாங்கி கத்துக்கிட்டு வந்தவங்கதான் நாங்க.”
“இப்ப நம்ம ஒரு லைனை எடுத்தோமா, அது எங்க வாசிக்கிறோம்னு எல்லாம் பீட் பண்ணி இனிமே ஏஐ (AI) தொழில்நுட்பத்துல கொடுத்தாச்சுன்னா அதுவே போட்டு கொடுத்துடுது. நம்ம கால தூக்கவே முடியாது. ஏஐ பண்ணி கொடுத்த பாட்டுலதான் நிறைய போயிட்டு இருக்கு. நிஜமாவே ஏஐ ஒர்க் நம்ம சிந்தனையை கெடுத்துட்டு இருக்கு அப்படிங்கறதை நான் உறுதியா சொல்றேன்.
அதை நம்பி நம்ம வேலை செஞ்சோம்னு சொன்னா பிற்காலத்துல நமக்கு மூளை வேலை செய்யாது. ஒரு டியூனை ஏஐ-ல கொடுத்துட்டு வார்த்தை எழுதுறது, பாடுறதுன்னு பண்ணா இதுல எப்படி நம்ம பேர் போட்டுக்கிறது? ஏன்னா அதை கிரியேட் பண்ணி கொடுத்துடுது, ஆனா இசை ‘கங்கை அமரன்’னு போட்டுக்கறது மரியாதையா? வருங்கால குழந்தைகள் தன்னால் சிந்திக்க கத்துக்கொள்ளணும், சிந்திக்க எழுதிக் கொள்ளணும். வளர்ற குழந்தைகளை நீங்க அப்படி வளங்க, ‘உனக்கு இருக்கிற சுயரூபத்தை வெளியே கொண்டு வா’ அப்படிங்கற மாதிரி சொல்லணும்ங்கறது என் மனசோட ஆசை.”
“நிஜமாவே இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்ததற்கு, கிளாடி அவர்களை பாராட்டணும். ஏன்னா நமக்கு ஒரு நல்ல புரொடியூசர் கிடைச்சிருக்காரு. உங்களோட எண்ணம் நிச்சயமாக ஆழமாக இருக்கும், ஒரு நல்ல கதையை தேர்ந்தெடுத்து அதை சினிமா படமாக கொண்டு வரணும்னு மனசுல இருக்கறது எனக்கு தெரியும்.”
பயில்வான் ரங்கநாதன் சர்ச்சை மற்றும் இளையராஜா குறித்த விளக்கம்
“பிரஸ் நண்பர்கள் எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன். நல்லவைகளை மட்டும் எழுதுங்கள். பயில்வான் ரங்கநாதன் மாதிரி, ‘அவருக்கு இட்லிக்கு வழி இல்ல, தோசைக்கு வழி இல்ல’ அது மாதிரில்லாம் எழுதாதீங்க தயவுசெய்து. கூப்பிட்டு பயல்வான்ட்டே சொல்லிட்டோம், ‘ஏன்யா இந்த மாதிரில்லாம் எழுதுறீங்க, இல்லாத பொல்லாததெல்லாம் எழுதுறீங்க’ன்னு. இந்த ஸ்டேஜ்ல சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கு. இல்லாத பொல்லாததெல்லாம் சொல்லி எழுதுறதுக்கு, அவ்வளவு பெரிய ஆளா வளர்ந்த ஆட்களை நம்ம திட்டணுமா?
அவங்க கஷ்டப்படுறாங்க, குழந்தைகள் எல்லாம் ஒண்ணா இருக்காங்க வீட்ல. வேணும்னா எங்க வீட்ல ஒரு வாரம் வந்து இருந்து பாருன்னு சொன்னேன். யுவன் துபாயில செட்டில் ஆயிட்டான், கார்த்திக் அவனும் அங்கதான் இருக்கான். ‘அண்ணன் இதெல்லாம் இல்லாம அனாதையா இருக்காரு’ அப்படி என்னத்தையோ கிரியேட் பண்ணி இளையராஜாவை எதுக்கு இறக்குறீங்க? 50 வருஷம் ஒருத்தர் ஆளுமையா நிலையா நின்றுருக்காரு, அப்படிப்பட்ட ஆளை இறக்கணுமா? நல்லா யோசிச்சு பாருங்க, பயல்வான் எழுதினது கரெக்டா? பயல்வான் அவர்கள் அதற்கு மன்னிப்பு கேட்டே ஆகணும்.
எங்களை நேசிச்சு கொண்டு போங்க. ஏன்னா 50 வருஷம் வாழ்ந்துருக்கோம், அண்ணனுக்கு 82 வயசுக்கு மேல ஆகுது. ஆகவே எங்களை காப்பாத்துறதுக்காக எழுதுங்க. நாங்க இதுவரைக்கும் வேலை செஞ்சுட்டு இருக்கோம்யா. பயில்வான் அவர்களுக்கு போன் பண்ணி சொன்னப்ப ‘ஸாரி’ன்னு சொல்லி சொன்னாரு, ‘ஐயோ இது தெரியாம யாரோ சொன்னதை நான் போட்டுட்டேங்க தயவு செய்து மன்னிச்சிருங்க’ன்னாரு.
இளையராஜா தனிமையை நாடிக்கொண்டு இருக்கிறார், நான் போனாலே பேசாமல் எழுதிட்டு இருப்பாரு, அவ்வளவுதான் அவர் வேலை. அவரை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன், அவரை அவரா இருக்க விடுங்க. எங்க கனவும் நினைவும் இசையே, இசை இருந்தால் மரணமேது என்று பாடுன மாதிரி இன்னைக்கு வரைக்கும் மியூசிக் லேனை தவிர வேற எங்கயாவது போயிருவோமா? எங்களுக்கு இருக்கற பணத்துக்கும் வசதிக்கும் பில்டிங் கட்டி வாடகைக்கு விட்டு நல்ல லாபம் சம்பாரிச்சு ஒரு பெரிய பில்டர்ஸ் ஆயிருக்கலாம், ஆனா அந்த மாதிரி எல்லாம் எண்ணம் வரல. இசையிலேயே இருக்கிறோம், ஆகையால் எங்கள் மேல் தவறுகளை எழுத வேண்டாம்.”
“இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு மிக ஆதாரமாக இருந்த நமது பாபு அவர்களுக்கு, டைமண்ட் பாபு அவர்களுக்கு ரொம்ப நன்றி. பாபு தான் அண்ணனுக்கும் (இளையராஜா) சரி, எங்களுக்கும் சரி ரொம்ப பக்கத்து துணையாக இருப்பவர். எந்த வேலைனாலும் நிமிஷத்துல அரேஞ்மெண்ட் பண்ணி கொடுப்பார். நாங்க அந்த காலத்துல நாடகத்துல வாசிக்கும் போது இவங்க அப்பாவோட எங்களுக்கு பழக்கம், அவங்க அப்பாதான் எங்களை அப்ப தூக்கி வளர்த்தவர். இன்றைக்கு பார்த்தால் அவங்க அப்பா எப்படி இருந்தாரோ அதே மாதிரி இவரும் எல்லாரோடையும் சேர்ந்து அரவணைப்பாக இருக்கிறார், ரொம்ப நன்றி பாபு” என்று கங்கை அமரன் தனது உரையை நிறைவு செய்தார்.
இவ்விழாவில் இசையமைப்பாளர் சதா சுதர்சனம் பேசியதாவது…
எல்லாருக்கும் வணக்கம். இந்த சாங் வந்து எனக்கு ஆப்பர்சுனிட்டி கொடுத்த கிளாடி ஜெராடு சாருக்கு ரொம்ப நன்றி. அதுல ரொம்ப ஹைலைட் கங்கை அமரன் அண்ணன் பாட்டு எழுதினதுதான். நான் அவர்கிட்ட, நாங்க கார்ல போயிட்டு இருக்கோம்… நான் டியூன் போட்டேன், அப்படியே உடனே கேட்டுட்டு ஒரு 10 நிமிஷத்துக்குள்ள பாட்டை எழுதி எனக்கு கொடுத்துட்டாரு. இந்த சாங் இவ்வளவு சூப்பரா வந்துருக்கு, நீங்க பார்த்தீங்களா இந்த பாட்டை?
அப்புறம் நான் இவ்வளவு தூரம் மியூசிக் பண்றதுக்குக் காரணம் இளையராஜா சார்தான். அவர்கிட்ட ஒர்க் பண்ண எக்ஸ்பீரியன்ஸ்… அவர் பார்த்தீங்கன்னா எனக்கு சேலபோன், வைப்ரோபோன், எலக்ட்ரிக் கிட்டார், அக்வாஸ்டிக் கிட்டார்னு எல்லா இன்ஸ்ட்ருமெண்ட்டையும் வாசிக்க என்கரேஜ் பண்ணிருக்காரு. அவர்கிட்ட ஒர்க் பண்ண அந்த எக்ஸ்பீரியன்ஸ இந்த ஜென்மம் இல்லை, எந்த ஜென்மத்திலயும் என்னால மறக்க முடியாது. இளையராஜா, ஐ லவ் யூ…

இவ்விழாவில் தயாரிப்பாளரும் இயக்குநருமான கிளாடி ஜெராடு (Claude Gerard) பேசியதாவது…
“இங்கு வந்திருக்கும் பத்திரிகை, ஊடகம் மற்றும் இணையதள நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கங்கள். இந்த மேடையில் என்னோடு அமர்ந்திருக்கும் மதிப்பிற்குரிய அண்ணன் கங்கை அமரன் அவர்களுக்கும், மூத்த இசைக்கலைஞர் மாஸ்டர் சதா சுதர்சனம் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசித்து வந்தாலும், தமிழ் மொழியின் மீதும், தமிழ் கலை-கலாச்சாரத்தின் மீதும் எனக்கு எப்போதுமே மிகப்பெரிய காதலும் பற்றும் உண்டு. அதன் வெளிப்பாடாகத்தான் இந்த ‘Drums Jerry Entertainment’ நிறுவனத்தைத் தொடங்கி, அதன் மூலம் இந்த ‘உயிரிணையே’ இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளோம்.”
“இன்றைய நவீன காலகட்டத்தில், பெரும்பாலான பாடல்கள் மற்றும் இசையமைப்புகள் கணினி மயமாக்கப்பட்ட (Computerized Loops) சூழலில் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், நான் ஒரு காலத்தால் அழியாத, மென்மையான மற்றும் தூய்மையான காதல் மெலடி பாடலை உருவாக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்கு உண்மையான இசைக்கருவிகளை (Acoustic and Natural Instruments) மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
இசைஞானி இளையராஜா அவர்களின் குடும்பத்தின் மீதும், அவர்களின் இசைப் பயணத்தின் மீதும் எனக்கு எப்போதுமே அலாதியான மரியாதையும் அன்பும் உண்டு. அந்த வகையில், இந்த ‘உயிரிணையே’ பாடலுக்கு வரிகள் எழுத அண்ணன் கங்கை அமரன் அவர்களை அணுகியபோது, அவர் உடனடியாகச் சம்மதித்தது எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம். அவர் மிக அழகான, ஆழமான தமிழ் வரிகளை இந்த ஆல்பத்திற்காக எழுதிக் கொடுத்துள்ளார்.
அதேபோல், தமிழ் சினிமாவின் மிக மூத்த கிட்டார் கலைஞரும் இசையமைப்பாளருமான சதா மாஸ்டர், தனது அசாத்திய திறமையால் இந்த ஆல்பத்திற்கு மிக அற்புதமான மெல்லிசை அமைத்துக் கொடுத்து, பாடலுக்கு உயிர் சேர்த்துள்ளார்.”
“இந்த ‘உயிரிணையே’ பாடலை வெறும் தமிழ்நாட்டோடு மட்டும் நிறுத்தாமல், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, துபாய் என உலகம் முழுவதும் வாழும் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். உலக ரீதியாக தமிழ் இசை இன்னும் பெரிய உயரங்களை எட்ட வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம்.
இந்த இசை ஆல்பம் என்பது எனது கலைப் பயணத்தின் ஒரு ஆரம்ப முயற்சிதான். உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள் மற்றும் தமிழக ஊடகங்கள் எங்களுக்குத் தரும் ஆதரவை மூலதனமாகக் கொண்டு, மிக விரைவில் தமிழ் சினிமாவில் ஒரு முழு நீளத் திரைப்படத்தை (Feature Film) தயாரித்து இயக்கத் திட்டமிட்டுள்ளேன். அதற்கான ஆரம்பக்கட்ட கதைக் களப் பணிகள் தற்போதே தொடங்கிவிட்டன. அதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.”
“இந்த ஆல்பத்தில் மிக அற்புதமாகப் பாடியுள்ள இளம் பாடகர்கள் தவசீலன், ஃபர்ஹான் நவாஸ் மற்றும் இதில் உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்.
அதேபோல், இந்த இசை வெளியீட்டு விழாவை இவ்வளவு பிரம்மாண்டமாகவும் நேர்த்தியாகவும் ஒருங்கிணைத்துக் கொடுத்த மக்கள் தொடர்பாளர் (PRO) டைமண்ட் பாபு அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களைப் போன்ற சுயாதீனக் கலைஞர்களுக்கும் (Independent Artists), புதிய முயற்சியோடு வரும் தயாரிப்பாளர்களுக்கும் ஊடக நண்பர்களாகிய நீங்கள் எப்போதுமே பேராதரவு தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்,” என்று கிளாடி ஜெராடு தனது உரையை நிறைவு செய்தார்.
Shree Jain Sahayak Samiti Announces “WeBe Mela 2026”
Chennai:
Shree Jain Sahayak Samiti proudly announces the launch of “WeBe Mela 2026” (Women Empowerment Beyond Entrepreneurship), a grand initiative dedicated to promoting women entrepreneurship, business empowerment, and community development. The much-awaited Maha Mega Mahila Mela will be held at YMCA, Royapettah, Chennai.
Shree Jain Sahayak Samiti provided 400 free stalls exclusively to women entrepreneurs spanning all communities. From vibrant clothing boutiques, handlooms, and creative games to artisanal food stalls, the venue transformed into a bustling, dynamic commercial hub. Women entrepreneurship stood out as the ultimate highlight of the day, offering these business owners a massive, rent-free platform to showcase their talents, network with industrial think-tank leaders, and scale up their brands. The response from the public was nothing short of historic, with an estimated 15,000 people streaming through the gates throughout the day, creating an energetic and electrifying atmosphere.
The day featured an enlightening Tech-Talk panel consisting of industrial and financial think-tank leaders. Following this, the prestigious Shashaktham Stree Awards ceremony commenced to celebrate inspiring female achievers. The award ceremony was graced by Esteemed Guests, Thiru Shankar, I.P.S. (A.D.G.P, Prisons, Tamil Nadu) and Mr. Manjit Singh (Gen. Secretary & Correspondent, Guru Nanak College and School). Shri C. Murugesan, I.R.S. and Shri P.K. Senthil Kumar, I.R.S.
A special Tech-Talk Session will feature an eminent panel of industry leaders, government officials, financial experts, and business mentors who will guide aspiring women entrepreneurs on business growth, finance, compliance, innovation, and scaling opportunities. The panel includes representatives from EDII-TN, MSME, NSIC, SIDBI, WEWA, and leading industry experts.
Speaking about the initiative, Shri.K.Subhashchand Ranka, President, Shree Jain Sahayak Samiti, shared that WeBe Mela is designed not only to encourage entrepreneurship among women but also to build confidence, economic independence, leadership, and social inclusion. The event will also showcase vibrant shopping, food, and entertainment zones, an exclusive Sponsors’ Pavilion, business support and networking opportunities, and the recognition and selection of outstanding “WeBe Yashashvini” women entrepreneurs. Shree Jain Sahayak Samiti warmly invites citizens, families, entrepreneurs, business leaders, and members of the media to attend and support this landmark initiative for women empowerment.
This grand execution was steered by the dedicated core leadership of the Samiti, including President Shri Subashchand Ji Ranka, Vice-President Shri Sampatraj Ji Bhandari and Shri Gautham Ji Kankariya, Secretary Shri Dhanpatraj Ji Sanklecha, Joint Secretary Shri Lalith Ji Ranka, Treasurer Shri Basanth Ji Baradiya, Joint Treasurer Shri Mahaveer Ji Gadiya and Project Chairman Shri Rajendraji Kumar Sanklecha. The managing committee extended their deep appreciation to all other trustees, associate members, lady co-ordinators, and youth delegates of Shree Jain Sahayak Samiti, whose tireless, round-the-clock efforts and meticulous planning ensured a flawless and exemplary experience for all.
The SHASHAKTHAM Stree – EMPOWERED WOMEN Awards will honor distinguished achievers including Smt. Nupur Jain, Squadron Leader, Indian Air Force; Smt. Rupa Rathod, Lady Jockey and World Championship participant; Dr. Priti Udhay Khetan, MS, DNB, FRCS, Oculoplastic & Aesthetic Surgeon; Smt. Meena Dadha of Mukti M.S. Dadha Foundation; Smt. Lalitha Jangra of Khushi Foundations; Smt. Pooja Dugar, Sound Healing Therapist; and Adv. Sheela Bhandari, Senior Counsel & SPP for Direct & Indirect Taxes at the Madras High Court.
ஆப்ரேஷன் தியேட்டரில் 20 வயது பெண்ணை சீரழித்த டாக்டர்!
உத்திர பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக்கின் இந்த வழக்கில் தலையிட்டத்தை அடுத்து, சுகாதாரத்துறை மருத்துவமனைக்கு சீல் வைத்தது. மருத்துவரின் உரிமத்தை இடைநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளையும் தொடங்கியது. லக்னோவின் பக்ஷி-கா-தலாப் பகுதியில் உள்ள இந்தௌரபாக் என்ற இடத்தில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில், வலிப்பு நோய்க்கான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளி ஒருவரிடமிருந்து இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மே 21 அன்று அறுவை சிகிச்சை அறைக்குள் மாணவிக்கு மயக்க ஊசி செலுத்திய பின்னர், குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் விஜயகுமார் கிரி அவரைக் கற்பழித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவரின் தந்தையின் கூற்றுப்படி, அவரது மகள் மீண்டும் மீண்டும் ஏற்படும் வலிப்பு நோய் தொடர்பான சிக்கல்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக மே 19 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மே 21 ஆம் தேதி பிற்பகல் சுமார் 3 மணியளவில் தனது மகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும், அதன் பிறகு டாக்டர் கிரி, ஆக்சிஜன் உதவி அளிப்பதாகக் கூறி அவரை அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் கூறினார்.
ஆரம்பத்தில் நோயாளியின் மூத்த சகோதரியும் ஒரு செவிலியரும் அவருடன் அறுவை சிகிச்சை அறைக்குள் சென்றனர், ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு மருத்துவர் அவர்கள் இருவரையும் வெளியே செல்லுமாறு கேட்டுக் கொண்டார். காவல்துறையிடம் அளித்த புகாரில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, மருத்துவர் அவரது கையில் பொருத்தப்பட்டிருந்த நரம்புவழி ஊசி மூலம் மயக்க மருந்தைச் செலுத்தியதாகவும், அதன் பிறகு அவர் சுயநினைவை இழந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தின்படி, சிறிது நேரம் கழித்து அவருக்குப் பகுதி சுயநினைவு திரும்பியதும், மருத்துவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டி அழுதுகொண்டே அறுவை சிகிச்சை அறையிலிருந்து வெளியே ஓடினார். தனது உடல்நிலை காரணமாக பாதிக்கப்பட்டவர் சில ஆண்டுகளாகப் பள்ளிக்குச் செல்லாமல் இருந்ததாகவும், தற்போது 12-ஆம் வகுப்பில் படித்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
பாலியல் வன்கொடுமைக்காக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஏடிசிபி (வடக்கு) ட்விங்கிள் ஜெயின் உறுதிப்படுத்தினார். துணை முதல்வர் பிரஜேஷ் பதக் இவ்விஷயத்தை கவனத்தில் கொண்டு, மருத்துவமனை மற்றும் மருத்துவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் பதக், “மாநில அரசு பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உறுதுணையாக நிற்கிறது, மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை உறுதி செய்யப்படும்” என்று கூறியுள்ளார். மருத்துவமனைக்கு சீல் வைக்கவும், குற்றம் சாட்டப்பட்டவரின் மருத்துவ உரிமத்தை இடைநீக்கம் செய்யவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
10வயது சிறுமியின் சடலம்! கோவையில் பரபரப்பு!!
கோவை சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த மே 21 அன்று மாலை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமாகியுள்ளார். இருட்டியும் சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. எனவே அச்சமடைந்த பெற்றோர்கள் உடனடியாக சூலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கண்ணம்பாளையம் குளக்கரை பகுதியில் அந்தச் சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததால், அவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சூலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) பவன் குமார் ரெட்டி, சூலூர் காவல் நிலையத்திற்கு நேரில் வருகை தந்து விசாரணையைத் தீவிரப்படுத்தினார். போலீஸார் தனிப்படை அமைத்து நடத்திய அதிரடி விசாரணையில், வழக்கு பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அதே பகுதியை சேர்ந்த 2 சந்தேக நபர்கள் பிடிபட்டனர். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த, தற்போது சூலூர் பள்ளபாளையம் பகுதியில் வசித்து வரும் 33 வயதுடைய கார்த்தி என்பவன் சிறுமியைக் கடத்திக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டான். மேலும், அவனுக்கு உதவியதாக மோகன்ராஜ் என்பவனையும் போலீசார் பிடித்துள்ளனர். இருவரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
முதற்கட்ட விசாரணையில் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த முன்பே குழந்தைக்கு அறிமுகமான கார்த்திக் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றதும், அவருடன் மோகன்ராஜ் இருந்தது தெரியவந்துள்ளது. இதற்கிடையே, படுகொலை செய்யப்பட்ட குழந்தையின் பெற்றோரும், உறவினர்களும், பொதுமக்களும் திரண்டு சூலூர் காவல் நிலையத்தின் முன்பாக விடிய விடியத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். “குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் அல்லது என்கவுண்டர் செய்யப்பட வேண்டும்” என்று அவர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்து முழக்கங்களை எழுப்பினர்.
இரவு முழுவதும் நீடித்த இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்தது, அங்கு குவிக்கப்பட்டிருந்த உயர்தர போலீஸ் அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் நள்ளிரவிலும், அதிகாலையிலும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர். “குற்றவாளிகள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சூலூர் காவல் நிலைய முன்பாக இன்னமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் கோவை பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய அமைச்சர்கள் பற்றி ஓர் பார்வை!
ஏ.ஸ்ரீநாத் – தமிழக முதல்வர் விஜய்யின் நண்பரான இவர், தூத்துக்குடியில் திமுக அமைச்சர் கீதாஜீவனை தோற்கடித்து வெற்றி பெற்றார். 52 வயதான இவர் விஜய் நடிப்பில் 1992-ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஆவார். இவர் 12-ம் வகுப்பு படித்துள்ளார். இவருக்கு மீன்வளத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
எஸ்.கமலி – நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த எஸ்.கமலி, அவிநாசி சட்டப்பேரவை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார். அத்தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை தோற்கடித்தவர். இவர் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். தமிழக அமைச்சரவையின் இளம் அமைச்சர்களில் கமலியும் ஒருவர். இவருக்கு வயது 28. இவருக்கு கால்நடை வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
சி.விஜயலட்சுமி: தமிழ வெற்றிக் கழகத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவராக அறியப்படுகிறார் சி.விஜயலட்சுமி. இவர் நாமக்கல் மாவட்ட குமாரபாளையம் தொகுதியில் வெற்றி பெற்றார். அங்கு அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் பி.தங்கமணியை வீழ்த்தினார். இவர் 12-ம் வகுப்பு படித்துள்ளார். சுயதொழில் செய்துவந்தார். இவருக்கு பால்வளத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆர்.வி.ரஞ்சித்குமார் – இவர் காஞ்சிபுரம் தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். 50 வயதான இவர் வேளாண், ரியல் எஸ்டேட் தொழில்களை செய்துவருகிறார். இவருக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
பி.ராஜ்குமார் – கடலூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பி.ராஜ்குமாருக்கு வயது 46. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்துள்ளார். இவருக்கு வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
பி.மதன்ராஜா – தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற இவர் பொறியியல் பட்டதாரி. இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவருக்கு குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
எஸ்.ராஜேஷ் குமார் – காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான எஸ்.ராஜேஷ் குமார் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் இந்தத் தொகுதியில் 3-வது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவராகவும் உள்ளார். இவர் சட்டம் பயின்றுள்ளார். இவருக்கு சுற்றுலா துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சராகப் பதவியேற்றபோது, “காமராஜ், ‘ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி வாழ்க’ என அவர் முழக்கமிட்டதை ஆளுநர் கண்டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

















