கண்மணி ரங்கநாதன் மற்றும் வெங்கல் லிங்கேஸ்வரன் தயாரிப்பில், தண்டர் மீடியா மற்றும் எல் வி என்டர்டைன்மெண்ட் சார்பில் குரு சோமசுந்தரம், அனு மோள், நயனா சாய், சாய் விக்கி, விஜய் விஷ்வா அர்ச்சனா நடிப்பில் சரஜ் சீலன் எழுதி இயக்கி இருக்கும் படம் தான் ‘பாரிஸ் கஃபே’
விமர்சனம்
மருத்துவரான குரு சோமசுந்தரம் மனைவி அனுமோல் மீது பெரும்பாசம் கொண்டவர். சமூகநலனுக்காக குரல் கொடுக்கும் அனுமோலும் கணவன் மீது பாசம் கொண்டவர் தான். குரு சோமசுந்தரம் சூழ்நிலை அழுத்தம் காரணமாக ஒரு காதல் ஜோடியின் கொலையை தற்கொலை என போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கொடுத்து விடுகிறார்.
அதில் கோபப்படும் அனுமோல் கணவரை விட்டுப் பிரிகிறார். இவர்களைச் சேர்த்து வைப்பதற்காக மகள் அர்ச்சனா அவரின் காதலன் விஜய் விஷ்வா இருவரும் வருகிறார்கள். பெரிய ஜோடியை சின்ன ஜோடி சேர்த்து வைத்ததா? அந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் ரீ ஓப்பன் ஆகி என்ன விளைவுகளை ஏற்படுத்தியது? என்பதே படத்தின் கதை.
குருசோமசுந்தரம் குற்றவுணர்ச்சியை சுமக்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். அனுமோல் பெரியார் அம்பேத்கர் வழிமொழிந்த பெண்ணாக நடித்து கவனம் ஈர்க்கிறார். விஜய் விஷ்வா ஒரு சப்போர்ட்டிங் ஹீரோவாக அசத்துகிறார். அர்ச்சனா கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட ஒரு காதல் ஜோடி இயல்பாக நடித்துள்ளனர். இயக்குநர் சராஜ் சீலன் ஒரு சோசியல் கன்டென்ட்-ஐ கையிலெடுத்துள்ளார். அந்தக் கன்டென்டில் கொஞ்சம் கமர்சியல் சேர்த்து ஓரளவு இன்ட்ரெஸ்டிங்காகவே கதை நகர்கிறது. படம் முழுக்க ஆங்காங்கே காமெடிகள் வைத்து முக்கிய திருப்பத்துக்குள் கதை போனதும் எமோஷனலாக சீரியசாக முடிய வேண்டிய படம் இது. மாறாக, கடைசி நேரத்தில் வில்லனை எல்லாம் காமெடி ஆக்கி குரு சோமசுந்தரம் கையில் துப்பாக்கி கொடுத்து காமெடி செய்து படத்தை சற்று நீர்த்துப் போகச் செய்து விட்டார்கள். கிளைமேக்ஸ் ரசிக்க வைக்கிறது.
பாரிஸ் கஃபே- ஜோடியின் கருத்து.
















