தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஸ்ரீநாத் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு நடிகர் சஞ்சீவ் பதிலளித்துள்ளார்.
சமீபத்திய நேர்காணலில் பேசிய அவர், “நட்பு என்ற ஒரே காரணத்திற்காக யாருக்கும் பொறுப்போ, வாய்ப்போ வழங்கும் குணம் விஜயிடம் இல்லை. ஒருவரின் திறமை, மக்கள் மத்தியில் செய்த சேவை மற்றும் அந்தப் பகுதியின் தேவையை மதிப்பீடு செய்தே அவர் முடிவெடுப்பார்” என்று கூறினார்.
மேலும், தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநாத், நீண்ட காலமாக அப்பகுதி மக்களுடன் இணைந்து பல சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்ததாகவும், மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் சஞ்சீவ் விளக்கமளித்தார்.
அத்துடன், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு ஸ்ரீநாத்துக்கு உடனடியாக வழங்கப்படவில்லை என்றும், ஆரம்பத்தில் வேறு ஒருவரின் பெயர் பரிசீலிக்கப்பட்ட நிலையில், பின்னர் சூழ்நிலைகளை ஆராய்ந்து சுமார் ஒரு மாத கால ஆலோசனைக்குப் பிறகே விஜய் இறுதி முடிவு எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
சஞ்சீவின் இந்த விளக்கம் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
















