சென்னை: 

பிராட்வே, திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில், புரட்டாசி மாத பிரமோற்சவத்தின்போது, ஏழுமலையானின் கருட சேவைக்கு, தமிழக பக்தர்கள் சார்பில், வெண்பட்டு திருக்குடைகள் காணிக்கையாக செலுத்தப்படுவது வழக்கம். 

அதன்படி, இந்தாண்டிற்கான திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம், பிராட்வே, சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து, நேற்று காலை 10:30 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. திருக்குடைகள் ஊர்வலத்தை, திருக்குறுங்குடி ஜீயர் மட மடாதிபதிகள் ஸ்ரீஸ்ரீ பேரருளாள ராமானுஜ ஜீயர் சுவாமிகள், கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சென்னை அயனாவரம், வில்லிவாக்கம், திருமுல்லைவாயில், திருவள்ளூர் வரை திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பப்பட்டு, அக்., 7ல், திருமலையை சென்றடையும். திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம், திருக்குடைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here