சென்னை மெரினா கடற்கரையில் 2.75 ஏக்கர் பரப்பளவில் கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் பாய்மர படகு விளையாட்டு தளம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விண்ணப்பம் செய்துள்ளது.

இந்த விளையாட்டு தளம், கீழ் மற்றும் முதல் தளம் என்று இரண்டு தளங்கள் கொண்ட கட்டிடமாக கட்டப்பட உள்ளது. கீழ் தளத்தில் பயிற்சி அறை, படகு நிறுத்தும் இடம், மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்டவைகள் அமைய உள்ளது. முதல் தளத்தில் திறந்தவெளி வகுப்பறை, யோகா அறை, நூலக அறை, ஜிம், விளையாட்டு அறிவியல் பயிற்சி அறை, வரவேற்பு அறை உள்ளிட்டவைகள் அமைய உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here