மதுரை நாராயணபுரத்தை சேர்ந்தவர் சபீர் காசிம், 32 ஏற்றுமதி தொழில் செய்பவர். தபால்தந்தி நகரில் இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் உள்ளது. தங்கள் இடத்தில் கட்டுமான பணியை துவங்க ஒப்புதல் கேட்டு நீர்வளத்துறை பாசன உதவி பொறியாளர் மாயகிருஷ்ணன், 47, ஆய்வாளர் தியாகராஜன் ஆகியோரை அணுகினார்.

அவர்கள் ஒப்புதல் தர, 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டனர். முன்பணமாக, 1 லட்சம் ரூபாய் கேட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்தியசீலனிடம் சபீர் காசிம் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுரை படி,  தல்லாகுளம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மாயகிருஷ்ணன், தியாக ராஜனிடம் 1 லட்சம் ரூபாய் லஞ்சத்தை சபீர் காசிம் வழங்கினார். அப்போது, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here