‘மோந்தா’ புயல் அக். 28-இல் கரையைக் கடக்கவுள்ள நிலையில், பயணிகளின் பாதுகாப்பு கருதி சென்னை சென்ட்ரல் செல்லும் ரயில்கள் 12 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

  • அதன்படி, ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில்(22825) ஷாலிமர் ரயில் நிலையத்திலிருந்து இன்று(அக். 28) பகல் 12.10 மணிக்குப் பதிலாக நள்ளிரவு 12.10 மணிக்குப் புறப்படும்.

  • ஹௌரா – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்(12841) ஹௌரா ரயில் நிலையத்திலிருந்து இன்று(அக். 28) பகல் 3.10 மணிக்குப் பதிலாக நாளை(அக். 29) அதிகாலை 3.10 மணிக்குப் புறப்படும்.

  • சந்திரகாசி – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்(22807) சந்திரகாசி ரயில் நிலையத்திலிருந்து இன்று(அக். 28) மாலை 5.55 மணிக்குப் பதிலாக நாளை(அக். 29) அதிகாலை 5.55 மணிக்குப் புறப்படும்.

  • தான்பாத் – ஆலப்புழா எக்ஸ்பிரஸ்(13351) தான்பாத் ரயில் நிலையத்திலிருந்து இன்று(அக். 28) பகல் 11.35 மணிக்குப் பதிலாக 7 மணி நேரம் தாமதமாக இன்று மாலை 6.35 மணிக்குப் புறப்படும்.

  • எஸ்எம்விடி பெங்களூரு – டானாபூர் எக்ஸ்பிரஸ்(03252) எஸ்எம்விடி பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து இன்று(அக். 28) இரவு 11.50 மணிக்குப் பதிலாக 6 மணி 40 நிமிஷங்கள் தாமதமாக நாளை(அக். 29) காலை 6.30 மணிக்குப் புறப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here