பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சித்தா மருத்துவர்களுக்கான நோயாளிகள் பகுதி கட்டடம் திறக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் ஆகியோர் கட்டடத்தை திறந்து வைத்தனர்.
தொடர்ந்து, தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட பேட்டரி கார் அரசு மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்பட்டது. மேலும், தனியார் நிறுவனம் சார்பில் பொள்ளாச்சியில் அமைக்கப்பட்ட காந்தி சிலை, ரேக்ளா சிலை மற்றும் தென்னை மரம் சிலைகளையும் அமைச்சர் சம்பத்குமார் திறந்து வைத்தார்.
நமது நிருபர் P.பிரேமா
















