கோவை தெற்கு மாவட்டம் திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பாக பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் காசு.நாகராஜ் அவர்களின் தலைமையில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப்படங்களுக்கு கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வில் பொள்ளாச்சி வடக்கு நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், பொள்ளாச்சி தெற்கு நகர செயலாளர் அமுதபாரதி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சூலூர்.R.பிரபு, மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் அவினாஷ் கார்த்திக், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் அரவிந்த் வசந்த்ராம், பொள்ளாச்சி இளைஞர் அணி அமைப்பாளர் யுவராஜ், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.