Friday, July 24, 2026
Blog

தொடர் அமளி! சபாநாயகர் ஒத்திவைப்பு!!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அடுத்தடுத்து பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. மக்களவை 12 மணிக்கு பின்னர் மீண்டும் கூடியபோதும் அமளி நீடித்ததால், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 5-ம் நாளான இன்று காலை 11 மணிக்கு வழக்கம் போல இரு அவைகளும் கூடின. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியதும், கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, கார்கில் போரில் வீரமரணம் அடைந்த தியாகிகளின் வீரத்தைப் போற்றும் வகையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, கேள்வி நேரம் தொடங்குவதாக ஓம் பிர்லா அறிவித்தார். 

எனினும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷங்களை எழுப்பினர். அவர்களை சமாதானப்படுத்த ஓம் பிர்லா தொடர்ந்து முயன்றார். “கேள்வி நேரத்துக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். எந்த விஷயம் தொடர்பாக விவாதிக்க நீங்கள் விரும்பினாலும் அதற்கான அனுமதி உங்களுக்கு வழங்கப்படும்.

நேற்றும்கூட இதை நான் தெரிவித்தேன். அவையின் செயல்பாடுக்கு இடையூறு விளைவிக்காதீர்கள். என ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார். எனினும், எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை தொடர்ந்து நடக்க நீங்கள் விரும்பவில்லை என்பதால் அவையை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கிறேன்” என அறிவித்தார்.

நீட் தேர்வு போராட்டம்! சென்னை மெரினா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு!!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என டெல்லியில் இளைஞர்கள் போராடி வருகின்றனர். அதன்படி அவர்களுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையிலும் இளைஞர்கள் போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவல்களின் அடிப்படையில் நேற்று சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள இணைப்பு சாலைகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதன்படி அனைத்து இணைப்பு சாலைகளிலும் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் கடற்கரை பகுதிக்கு உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றயை தினம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள இணைப்பு சாலைகளில் பொதுமக்கள் வழக்கம் போல் நடைபயிற்சி மேற்கொண்டனர். நேற்று போல இன்றும் காலை 10 மணி பிறகு கடற்கரை பகுதிக்கு செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது என காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மெரினா கடற்கரை இணைப்பு சாலைகளில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

நேற்றைய தினம் போல் இன்றும் காலை 10 மணிக்கு பிறகாக சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள இணைப்பு சாலைகள் மூடப்படும் என அறிவித்த நிலையில் எந்த நுழைவாயில்களும் மூடாமல் அனைத்து நுழைவாயில்களும் திறக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மெரினா கடற்கரை பகுதிகளில் உள்ள இணைப்பு சாலைகளில் காவலர்கள் ஆங்காங்கே பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி டெல்லியில் இளைஞர்கள் போராடி வரும் நிலையில் சென்னை மெரினா கடற்கரையிலும் மாணவர்கள் போராட்டம் மேற்கொள்ளவார்கள் என்பதால் நேற்று மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்று மெரினா கடற்கரை பகுதிகளில் வழக்கமாக பொதுமக்களும் வாகனங்களும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

ஜனநாயகன் விமர்சனம் RATING 2.9/5

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

விமர்சனம்:

கைதியாக சிறையில் இருக்கிறார் தளபதி வெற்றிக் கொண்டான் (விஜய்). காவல்துறைக்கு அவர் செய்யும் உதவிக்கு கைமாறாக, மரண தருவாயில் இருக்கும் அவரது தாயை சந்திக்க ஏற்பாடு செய்கிறார் அதிகாரி ஸ்ரீகாந்த் (கௌதம் வாசுதேவ் மேனன்). அதனால் அவர் சஸ்பெண்ட் ஆகிறார். விபத்தில் ஸ்ரீகாந்த் இறந்துவிட, அவரது மகள் விஜியை தனது மகளாக எடுத்து வளர்க்கிறார் தளபதி வெற்றிக் கொண்டான். விஜியை ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்ற அவரது தந்தையின் கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் தளபதி. இதனிடையே அரசியல்வாதிகளுடன் சேர்ந்து தன் சுயலாபத்துக்காக தமிழ்நாட்டை அழிக்க நினைக்கிறார் சர்வதேச குற்றவாளி ஜான் ஹிம்லர் (பாபி தியோல்). இப்படியான சூழலில், அவர்களின் சதித்திட்டத்தை முறியடித்து, தமிழகத்தை தளபதி வெற்றிக் கொண்டான் எப்படி மீட்டார்…? விஜி ராணுவ அதிகாரி ஆனாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை….

விஜயின் கடைசி படத்தை தன்னால் முடிந்த அளவுக்கு மாஸ் தருணங்களை நிரப்பி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்திருக்கிறார் ஹெச்.வினோத். மகளாக குறும்புத்தனங்களுடனும், இறுதியில் ஆக்‌ஷன் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார் மமிதா பைஜூ. பூஜா ஹெக்டேவுக்கு சொல்லிக்கொள்ளும்படி காட்சிகள் இல்லை. சர்வதேச வில்லனாக முரட்டுத்தனத்தில் மிரட்டுகிறார் பாபி தியோல். பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், ஸ்ரீநாத் தேவையான நடிப்பை வழங்குகின்றனர். தனது வழக்கமான முக பாவனைகள், உடல்மொழிகள், ரசிக்க வைக்கும் சின்ன சின்ன ரியாக்‌ஷன்களால் கவரும் விஜய், ‘ஒன் லாஸ்ட் டான்ஸ்’ என நடனத்தில் மிரட்டுகிறார். எம்ஜிஆர் புகைப்படத்துடன் விஜய்க்கு கொடுக்கும் இன்ட்ரோ, மாஸான இன்டர்வல் காட்சி, ‘நான் ஆணையிட்டால்’ பாணியில் சாட்டை சுழற்றும் காட்சி, பஞ்ச் வசனங்கள், ஆக்‌ஷன் என தெறிக்கவிடுகிறார் விஜய். 

பகவந்த் கேசரி படத்தின் மைய சரடையும், பல காட்சிகளையும் சேர்த்து தன்னுடைய கற்பனையையும், அரசியலையும் கலந்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் ஹெச்.வினோத். சூப்பர் மார்க்கெட்டில், பூஜா ஹெக்டேவை சந்தித்து ஆன்டி என நக்கலடிக்கும் காட்சி, மமிதாவுக்கான ராணுவ பயிற்சி, காவல்துறை அதிகாரியின் தவறான நடத்தை, சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிரான வசனம், பெண்களை மட்டுப்படுத்தும் காட்சிகள் பகவந்த் கேசரியின் ரீமேக். “பொண்ணுங்களுக்கு பயம் இருக்க கூடாது..”, “புலி மாதிரி வளர்க்கணும்..” என பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசுகிறது படம். 

மைனஸ்: லாஜிக் இல்லாத கிளைமேக்ஸ் காட்சிகள்…. காதல் காட்சிகள் ஒன்னும் இல்லை….

மொத்தத்தில் இந்த ‘ஜனநாயகன்’ ஒரு போராட்டக்காரன்.

 

EEMAGINE 2026

சென்னை:

‘ஈவென்ட்ஸ் அண்ட் என்டர்டெயின்மென்ட் மேனேஜ்மென்ட் அசோசியேஷன்’ (EEMA) தனது முதன்மை வருடாந்திர மாநாடான ‘EEMAGINE 2026’-க்கு முன்னதாக, சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தனது ‘விஷன் 2030’ வரைபடத்தை இன்று வெளியிட்டது. நேரடி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், குறிப்பிட்ட இடங்களைத் தேர்ந்தெடுத்து நடத்தப்படும் திருமணங்கள் (destination weddings), வணிக நிகழ்வுகள், கண்காட்சிகள் மற்றும் கலாச்சாரச் சுற்றுலா ஆகியவற்றிற்கான தேவை அதிகரித்து வருவதால், இந்தியாவின் அனுபவச் சார்ந்த பொருளாதாரம் நாட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாக உருவெடுத்து வரும் வேளையில் இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

“இந்தியாவை உலகின் ‘அனுபவச் சார்ந்த பொருளாதாரத்தின் தலைநகராக’ (Experience Capital of the World) நிலைநிறுத்துவதே எங்கள் நோக்கம்,” என்று EEMA-வின் தலைவர் சமித் கார்க் கூறினார். “இந்தியா எப்போதும் கதைகள், கொண்டாட்டங்கள் மற்றும் மறக்க முடியாத அனுபவங்களின் பூமியாகத் திகழ்ந்து வருகிறது. இன்று, அந்த வலிமைகள் ஒரு சக்திவாய்ந்த பொருளாதார வாய்ப்பாக உருவெடுத்துள்ளன. அனுபவச் சார்ந்த பொருளாதாரம் என்பது இனி வெறும் பொழுதுபோக்கு சார்ந்தது மட்டுமல்ல; அது சுற்றுலா, தொழில்முனைவு, வேலைவாய்ப்பு மற்றும் இட மேம்பாடு ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்கிறது. உலகின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 18 சதவீதத்தைக் கொண்டிருந்தாலும், உலகளாவிய அனுபவச் சார்ந்த பொருளாதாரத்தில் இந்தியா வெறும் 2 முதல் 4 சதவீத பங்களிப்பை மட்டுமே கொண்டுள்ளது; இதுவே நமக்கு முன்னால் உள்ள மிகப்பெரிய வாய்ப்பை எடுத்துக்காட்டுகிறது.”

EEMA வின் முதன்மை வருடாந்திர மாநாடான ‘EEMAGINE 2026’, இந்த ஆண்டு ஆகஸ்ட் 7 முதல் 9 வரை சென்னையில் உள்ள ‘ஐடிசி கிராண்ட் சோலா’ (ITC Grand Chola) ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்காகச் சென்னை தேர்ந்தெடுக்கப்பட்டதே ‘விஷன் 2030’ திட்டத்தின் ஒரு பகுதியாகும். சங்கத்தின் கூற்றுப்படி, இது வெறும் ஒரு நிகழ்விடமாக மட்டும் தேர்ந்தெடுக்கப்படவில்லை; மாறாக, ‘விஷன் 2030’ தேசிய அளவில் முன்மொழிந்துள்ள அதே மாற்றத்தை, தமிழ்நாடு மாநில அளவில் ஏற்கனவே செயல்படுத்திக் காட்டி வருவதாலேயே இச்சிறப்புமிக்க இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சென்னை ‘EEMAGINE 2026’ நிகழ்வை நடத்தவிருப்பது குறித்து கருத்து தெரிவித்த EEMA-வின் தெற்கு மண்டல துணைத் தலைவர் வினோத் கோபால், “சென்னையில் முதன்முறையாக ‘EEMAGINE’ நிகழ்வை நடத்துவது இப்பகுதியின் நிகழ்வுத் துறை சார்ந்த சூழலமைப்பிற்கு (events ecosystem) ஒரு முக்கிய மைல்கல்லாகும். உலகத்தரம் வாய்ந்த நிகழ்வுகளை நடத்துவதற்குத் தேவையான உள்கட்டமைப்பு, படைப்பாற்றல் மிக்க திறமையாளர்கள் மற்றும் கலாச்சாரச் செழுமை ஆகியவற்றைத் தமிழ்நாடு கொண்டுள்ளது. 800-க்கும் மேற்பட்ட நிகழ்வுத் துறை வல்லுநர்கள், துறை சார்ந்த தலைவர்கள் மற்றும் முடிவெடுப்பவர்களை இந்நகருக்கு அழைத்து வருவதன் மூலம், சென்னையின் திறன்களை வெளிப்படுத்தவும், புதிய கூட்டு முயற்சிகளை ஊக்குவிக்கவும், உள்ளூர் வணிகங்கள் மற்றும் நிகழ்வுத் துறை வல்லுநர்களுக்கு நீண்டகால வாய்ப்புகளை உருவாக்கவும் நாங்கள் விரும்புகிறோம்,” என்று கூறினார்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள மாநாடு குறித்துப் பேசிய EEMA-வின் நிறுவன உறுப்பினரான சித்தார்த் கனரிவாலா, “இந்தியாவின் ‘அனுபவப் பொருளாதாரத்தின்’ (experience economy) எதிர்காலத்தை துறை சார்ந்த தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உலகளாவிய நிபுணர்கள் ஒன்றிணைந்து வடிவமைக்கும் ஒரு தளமாக ‘EEMAGINE 2026’ உருவாக்கப்பட்டுள்ளது. இம்மாநாடு வணிக வளர்ச்சி, கொள்கை, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI), நிலைத்தன்மை, திறன் மேம்பாடு மற்றும் உலகளாவிய சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்; அதேவேளையில், இத்துறை எவ்வாறு பொறுப்புடன் வளர்ச்சியை எட்டலாம் மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கலாம் என்பது குறித்த அர்த்தமுள்ள கலந்துரையாடல்களுக்கும் இது வழிவகுக்கும்,” என்று தெரிவித்தார்.

மகளிர் உலக கோப்பை ஹாக்கி பட்டியல்!

லக ஹாக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் 16-வது எஃப்ஐஎச் (FIH) மகளிர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர், வரும் ஆகஸ்ட் 15 முதல் 30-ஆம் தேதி வரை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. 16 நாடுகள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்ட தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணியை ஹாக்கி இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சலிமா டெடிக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு

இந்திய அணியை அனுபவம் வாய்ந்த நடுகள வீராங்கனை சலிமா டெடி வழிநடத்த உள்ளார். அணியின் துணை கேப்டனாக மூத்த கோல்கீப்பர் சவிதா நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைப் பயிற்சியாளர் ஸ்ஜோர்ட் மரிஜ்னே தலைமையில் இந்திய அணி பெங்களூருவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

பெரிய மாற்றம் இல்லை… அதே கூட்டணிக்கு நம்பிக்கை

உலகக்கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக தேர்வு செய்யப்பட்ட அதே வீராங்கனைகளுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற FIH நேஷன்ஸ் கோப்பையை வென்ற அணியின் பெரும்பாலான வீராங்கனைகள் இந்த உலகக்கோப்பை அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 20 வீராங்கனைகள்

கோல்கீப்பர்கள்:

சவிதா, பிச்சுதேவி கரிபாம்

டிஃபெண்டர்கள்:

இஷிகா சவுத்ரி, சுஷிலா சானு, லால்தன்ட்லுவாங்கி
ஜோதி, ஷில்பி தபாஸ்

மிட்ஃபீல்டர்கள்:

நிக்கி பிரதான், சாக்ஷி ராணா, சுனேலிதா டாப்போ, சலிமா டெடி (கேப்டன்)
நேஹா, தீபிகா சோரெங்

ஃபார்வேர்டுகள்:

லால்ரெம்சியாமி, ருதுஜா தாதாசோ பிசல், நவ்னீத் கவுர்
தீபிகா, இஷிகா, பல்ஜீத் கவுர், பியூட்டி டங்டங்
 

இந்தியா இடம்பெற்றுள்ள குரூப் எது?

இந்திய அணி ‘பூல் டி’ பிரிவில் இடம்பிடித்துள்ளது. இதில் சீனா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் இந்தியா மோதவுள்ளது.

இந்தியாவின் லீக் போட்டி அட்டவணை
 

  • ஆகஸ்ட் 16 – இந்தியா vs சீனா
  • ஆகஸ்ட் 18 – இந்தியா vs தென்னாப்பிரிக்கா
  • ஆகஸ்ட் 20 – இந்தியா vs இங்கிலாந்து

இந்த அனைத்து போட்டிகளும் நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீனில் உள்ள வாகேனர் ஹாக்கி மைதானத்தில் நடைபெற உள்ளன.

இந்தியாவின் இலக்கு என்ன?

சமீபத்தில் FIH நேஷன்ஸ் கோப்பையை கைப்பற்றி சிறப்பான ஃபார்மில் இருக்கும் இந்திய மகளிர் அணி, அதே உத்வேகத்துடன் உலகக்கோப்பையிலும் சிறப்பாக செயல்பட்டு பதக்கம் வெல்லும் இலக்குடன் களமிறங்குகிறது. அனுபவம் மற்றும் இளமை கலந்த இந்த அணி உலகின் முன்னணி அணிகளுக்கு கடும் சவால் அளிக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

விண்ணில் பாய்ந்த ராக்கெட் ‘விக்ரம்-1’!

ந்தியாவின் விண்வெளித் துறையில் இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள். இதுவரை விண்வெளிக்கு ராக்கெட்டுகளை அனுப்பும் பணியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போது முதல் முறையாக ஒரு இந்திய தனியார் நிறுவனம் உருவாக்கிய ஆர்பிட்டல் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) நிறுவனம் உருவாக்கிய ‘விக்ரம்-1’ ராக்கெட், ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று நண்பகல் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த ஏவுதலுக்கு ‘மிஷன் ஆகமன்’ (Mission Aagaman) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் ஏவுதல் என்பதால் உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

35 நிமிட பதற்றம்… பின்னர் கிடைத்த வெற்றி!

முதலில் காலை 11.30 மணிக்கு ராக்கெட்டை ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இறுதிக்கட்ட தொழில்நுட்ப பரிசோதனையின் போது வழிசெலுத்தல் (Navigation) அமைப்பில் சில விஷயங்களை மீண்டும் சரிபார்க்க வேண்டியிருந்ததால் கவுண்டவுன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் சுமார் 35 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது.

இதனால் சில நிமிடங்கள் பதற்றம் ஏற்பட்டாலும், அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து நண்பகல் 12.06 மணிக்கு விக்ரம்-1 ராக்கெட் விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்தது. ஏவுதளத்தில் இருந்த விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

என்ன சிறப்பு இந்த ‘விக்ரம்-1’ ராக்கெட்டில்?

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை டாக்டர் விக்ரம் சாராபாய் நினைவாக இந்த ராக்கெட்டுக்கு ‘விக்ரம்-1’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட்டின் முக்கிய அம்சங்கள்:

  • சுமார் 24 மீட்டர் உயரம் (7 மாடி கட்டட உயரம்)
  • 4 நிலைகளைக் கொண்ட (Four-stage) ராக்கெட்
  • கார்பன் காம்போசிட் தொழில்நுட்பத்தில் 
    உருவாக்கப்பட்டது
  • 3D பிரிண்டிங் மூலம் தயாரிக்கப்பட்ட இன்ஜின்கள்
  • 350 கிலோ வரை எடையுள்ள சிறிய செயற்கைக்கோள்களை 450 கி.மீ. உயரத்தில் உள்ள குறைந்த புவி சுற்றுப்பாதையில் (LEO) நிலைநிறுத்தும் திறன் கொண்டது.
     

இந்த ராக்கெட்டில் என்னென்ன அனுப்பப்பட்டது? விக்ரம்-1 வெறும் சோதனை ராக்கெட் மட்டுமல்ல. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல தொழில்நுட்ப பேலோடுகள் (Payloads) இடம்பெற்றுள்ளன.

அவற்றில் முக்கியமானவை:

  • Skyroot நிறுவனத்தின் SCOPE செயற்கைக்கோள்
  • Grahaa Space நிறுவனத்தின் நானோ செயற்கைக்கோள்
  • விண்வெளி குப்பைகளை அகற்றும் தொழில்நுட்பத்தை சோதிக்கும் Cosmoserve நிறுவனத்தின் பேலோடு
  • ஜெர்மனி நிறுவனமான DCUBED-ன் தொழில்நுட்ப சாதனம்
  • பிரதமர் நரேந்திர மோடி தனது கைப்பட எழுதிய “வந்தே மாதரம்” அஞ்சல் அட்டையும் இந்த ராக்கெட்டில் விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
     

ஏன் இந்த சாதனை இந்தியாவுக்கு முக்கியம்? இதுவரை இந்தியாவில் இருந்து ஆர்பிட்டல் ராக்கெட்டை உருவாக்கி விண்ணில் செலுத்துவது ISRO-வின் பொறுப்பாக இருந்தது. ஆனால், தற்போது தனியார் நிறுவனமும் அந்த திறனை நிரூபித்துள்ளது. இதன் மூலம், 

  • இந்திய விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்கு அதிகரிக்கும்.
  • உலக நாடுகளின் சிறிய செயற்கைக்கோள்களை இந்தியாவில் இருந்து ஏவும் வாய்ப்பு உருவாகும்.
  • இந்தியாவின் விண்வெளி வர்த்தக சந்தை வேகமாக வளர வாய்ப்புள்ளது.
  • உலக விண்வெளி சந்தையில் இந்தியாவின் போட்டித்திறன் மேலும் உயரும்.
     

5 ஆண்டுகளின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி! 2018-ஆம் ஆண்டு முன்னாள் ISRO விஞ்ஞானிகள் பவன் குமார் சந்தனா மற்றும் நாகா பரத் தாகா ஆகியோர் Skyroot Aerospace நிறுவனத்தை தொடங்கினர். பல ஆண்டுகள் ஆராய்ச்சி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உழைப்பு மற்றும் நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் ஒத்துழைப்பின் பலனாக இன்று விக்ரம்-1 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்துள்ளது.

பிரதமர் மோடி வாழ்த்து: இந்த வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் இது ஒரு புதிய வரலாற்று எல்லை. இளைஞர்களின் திறமைக்கும், தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் இது மிகப்பெரிய எடுத்துக்காட்டு” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த இலக்கு என்ன? விக்ரம்-1 வெற்றி பெற்றதன் மூலம், எதிர்காலத்தில் வணிக ரீதியாக பல நாடுகளின் செயற்கைக்கோள்களை இந்தியாவில் இருந்து விண்ணில் செலுத்தும் திட்டத்தில் Skyroot நிறுவனம் கவனம் செலுத்தவுள்ளது. இதன் மூலம் விண்வெளித் துறையில் இந்தியா உலகின் முக்கிய மையங்களில் ஒன்றாக உருவாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நண்பன் என்பதற்காக பதவியா? விளக்கம்!

மிழக வெற்றிக் கழக ஆட்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஸ்ரீநாத் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு நடிகர் சஞ்சீவ் பதிலளித்துள்ளார்.

சமீபத்திய நேர்காணலில் பேசிய அவர், “நட்பு என்ற ஒரே காரணத்திற்காக யாருக்கும் பொறுப்போ, வாய்ப்போ வழங்கும் குணம் விஜயிடம் இல்லை. ஒருவரின் திறமை, மக்கள் மத்தியில் செய்த சேவை மற்றும் அந்தப் பகுதியின் தேவையை மதிப்பீடு செய்தே அவர் முடிவெடுப்பார்” என்று கூறினார்.

மேலும், தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநாத், நீண்ட காலமாக அப்பகுதி மக்களுடன் இணைந்து பல சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்ததாகவும், மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் சஞ்சீவ் விளக்கமளித்தார்.

அத்துடன், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு ஸ்ரீநாத்துக்கு உடனடியாக வழங்கப்படவில்லை என்றும், ஆரம்பத்தில் வேறு ஒருவரின் பெயர் பரிசீலிக்கப்பட்ட நிலையில், பின்னர் சூழ்நிலைகளை ஆராய்ந்து சுமார் ஒரு மாத கால ஆலோசனைக்குப் பிறகே விஜய் இறுதி முடிவு எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

சஞ்சீவின் இந்த விளக்கம் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.

உயர் துல்லிய லைப்போசக்ஷன் மாஸ்டர்கிளாஸ்!

சென்னை:
 
உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினத்தை (ஜூலை 15) முன்னிட்டு, தேசிய அளவிலான உயர் துல்லிய (High Definition) லைப்போசக்ஷன் மாஸ்டர்கிளாஸ் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை ஸ்பெக்ட்ரா மெடிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அரங்கில் நடைபெற்றது.
 
இந்த அறிவியல் கருத்தரங்கில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்று, அழகியல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை (Aesthetic Plastic Surgery), உயர் துல்லிய லைப்போசக்ஷன் (High Definition Liposuction), உடல் வடிவமைப்பு (Body Contouring), 4D Body Sculpting, தோல் இறுக்கம் (Skin Tightening) உள்ளிட்ட நவீன சிகிச்சை முறைகள் குறித்து கலந்துரையாடினர்.
 
நிகழ்ச்சிக்கு ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் ஜே. எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் கோவை ராய் காஸ்மெட்டிக் சென்டரின் நிறுவனர் டாக்டர் ஜேம்ஸ் ராய் கஞ்சூர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.
 
சென்னை பிளாஸ்டிக் சர்ஜரி நிறுவனத்தின் ஆலோசகர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நிசார் வரவேற்புரை வழங்கினார்.
 
கருத்தரங்கில், டெல்லியைச் சேர்ந்த டாக்டர் மோனிஷா கபூர், அறுவை சிகிச்சையின்றி அல்லது குறைந்த அளவிலான அறுவை சிகிச்சையுடன் மேற்கொள்ளப்படும் 4D Body Sculpting மற்றும் Skin Tightening தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார்.
 
கேரளாவைச் சேர்ந்த டாக்டர் பிபிலாஷ் பாபு, லைப்போசக்ஷனின் அடிப்படைகள், பல்வேறு Liposuction Cannula வகைகள், மற்றும் Male High Definition Body Contouring குறித்து இளம் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பயனுள்ள வழிகாட்டுதல்களை வழங்கினார்.
 
துபாய் மற்றும் பெங்களூருவில் பணியாற்றி வரும் டாக்டர் சுரிந்தர் டி.எஸ்.ஏ., நவீன High Definition Liposuction மற்றும் மேம்பட்ட உடல் வடிவமைப்பு முறைகள் குறித்து தனது சர்வதேச அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
 
பெங்களூருவைச் சேர்ந்த டாக்டர் கரிஷ்மா காகோடு, “பெண்களுக்கான உயர் துல்லிய கொழுப்பு உறிஞ்சும் அறுவை சிகிச்சை” (Feminine High-Definition Liposuction) என்ற தலைப்பில் விரிவான சிறப்புரையாற்றினார். மேம்பட்ட 4-பரிமாண வேசர் கொழுப்பு உறிஞ்சும் அறுவை சிகிச்சை (4D VASER Liposuction) தொடர்பான தனது அனுபவங்களையும், நவீன அறுவை சிகிச்சை நுட்பங்களையும் பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
 
சென்னை பிளாஸ்டிக் சர்ஜரி நிறுவனத்தின் இயக்குநரும் அழகியல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் கார்த்திக் ராமசாமி, உயர் துல்லிய லைப்போசக்ஷனில் பாதுகாப்பு, உடலமைப்பியல் (Anatomy), இயற்கையான தோற்றத்தை வழங்கும் நுட்பங்கள் மற்றும் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
 
உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை என்பது அழகுக்கான அறுவை சிகிச்சை மட்டும் அல்ல; தீக்காயம், விபத்து, பிறவிக் குறைபாடுகள், கை அறுவை சிகிச்சை, மைக்ரோசர்ஜரி, முக எலும்பு மற்றும் திசு மறுசீரமைப்பு போன்ற பல துறைகளிலும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை மருத்துவர்கள் வலியுறுத்தினர்.
 
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் கார்த்திக் ராமசாமி, “மருத்துவர்களுக்கிடையே அறிவைப் பகிர்வதும், பொதுமக்களிடம் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை குறித்த சரியான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இன்றியமையாதது. நோயாளிகளின் பாதுகாப்பு, அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையிலான சிகிச்சை மற்றும் தொடர்ச்சியான மருத்துவக் கல்வியே எங்கள் துறையின் அடித்தளம்,” என்றார்.
 
நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற ஆதரவு வழங்கிய ஸ்பெக்ட்ரா மெடிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட், சிறப்பு விருந்தினர்கள், மருத்துவ நிபுணர்கள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்கேற்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் ஊடக பிரதிநிதிகளுக்கு ஏற்பாட்டாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
 
இந்த நிகழ்ச்சி, அழகியல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, லைப்போசக்ஷன், உடல் வடிவமைப்பு, ரைனோபிளாஸ்டி, மார்பக அறுவை சிகிச்சை, மம்மி மேக்கோவர் உள்ளிட்ட துறைகளில் சென்னை தொடர்ந்து தேசிய அளவில் முன்னணி மையமாக திகழ்ந்து வருவதை மீண்டும் உறுதிப்படுத்தியது.

“தி ஒடிஸி” The Odyssey Movie

கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி (The Odyssey)’ என்பது முற்றிலும் புதிய IMAX® ஃபிலிம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் படமாக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான அதிரடி புராணக் காவியமாகும். முழுமையாக IMAX® ஃபிலிம் கேமராக்களைக் கொண்டு எடுக்கப்பட்ட உலகின் முதல் முழுநீளத் திரைப்படம் என்ற பெருமையுடன், ஹோமரின் புகழ்பெற்ற கிரேக்க காவியமான ‘ஒடிஸி’யை, இப்படம் உலகளாவிய திரைகளுக்குக் கொண்டு வருகிறது. நோலனின் முந்தைய படைப்புகளான ‘தி டார்க் நைட்’ முத்தொகுப்பு, ‘இன்செப்ஷன்’, ‘இன்டர்ஸ்டெல்லார்’, ‘டன்கிர்க்’, ‘ஓப்பன்ஹைமர்’ போன்ற படங்களைத் தொடர்ந்து, 6 நாடுகளில் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் இந்த வருடத்தின் மிக ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஒரு திரைப்படமாகும்! இது நோலனின் 13 ஆவது முழுநீளத் திரைப்படமாகும். மேலும் இது பார்வையாளர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான மற்றும் மறக்க முடியாத சினிமா அனுபவத்தை வழங்கவுள்ளது.
 
கதைச்சுருக்கம் – இத்தாகா (Ithaca) என்ற பாறைகள் நிறைந்த கிரேக்கத் தீவின் அரசனான ஒடிசியஸ், தனது புகழ்பெற்ற ‘ட்ரோஜன் குதிரை’ தந்திரத்தின் மூலம் அகமெம்னானுக்காகப் போரை வென்று தருகிறார். அவரது மகன் டெலிமக்கஸ், ஒடிசியஸ் போருக்குச் சென்றபோது ஒரு கைக்குழந்தையாக இருந்தவன், தற்போது வாலிபனாக வளர்ந்து நிற்கிறான். போர் முடிந்து ஒடிசியஸ் தாயகம் திரும்பும் வழியில், அவரது பயணத்திற்குக் கடவுள்களாலும், அசுரர்களாலும், பெரும் புயல்களாலும், பேரழிவு நிகழ்வுகளாலும் இடையூறு ஏற்படுகிறது. இத்தாகாவில், டெலிமக்கஸ்க்கும், அவனது தாயார் பெனிலோப்பிற்கும் ஒரு பெரும் அச்சுறுத்தல் உருவாகிறது. தந்தை இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு டெலிமக்கஸ் அவரைத் தேடுகிறான். அதே நேரத்தில், ஓநாய்களைப் போன்ற கொடூர குணம் கொண்ட இளவரசர்களும் பிரபுக்களும், டெலிமக்கஸின் அரண்மனையை ஆக்கிரமித்துக் கொண்டு, ஒடிசியஸ் திரும்புவார் என்ற நம்பிக்கையைக் கைவிட்டு, தங்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு புதிய அரசனாக்குமாறு ராணி பெனிலோப்பைத் தொடர்ந்து வற்புறுத்தி நெருக்கடி கொடுக்கின்றனர்.
 
நடிகர்கள்:
 
மேட் டாமன் – ஒடிசியஸ், இத்தாகாவின் அரசன்
டாம் ஹாலண்ட்  – டெலிமக்கஸ், ஒடொசியஸின் மகன்
ஆன் ஹாத்வே – பெனிலோப், இத்தாகாவின் அரசி
ராபர்ட் பேட்டர்சன்
லூபிடா நியாங்கோ
சம்ந்தா மார்டன் 
 
தொழில்நுட்பக் குழு:
 
ஒளிப்பதிவு – ஹாய்டே வான் ஹாய்டெமா 
இசை – லுட்விக் கோர்டான்சன் 
படத்தொகுப்பு – ஜெனிஃபர் லேம்
ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மேற்பார்வையாளர் – ஸ்காட் ஃபிஷர்
விஷுவல் எஃபெக்ட்ஸ் மேற்பார்வையாளர்-  ஆண்ட்ரூ ஜாக்சன்
உடை வடிவமைப்பு – எலன் மிரோஜ்னிக்
 
யுனிவர்சல் பிக்சர்ஸ் வெளியீடு

தஞ்சை பெரிய கோவில் திருவிழா ஜீலை 23-ம் தேதி வரை நடக்கும்!

ஞ்​சாவூர் பெரிய கோயி​லில் உள்ள வராகி அம்​மனுக்​கான ஆஷாட நவராத்​திரி விழா நேற்று தொடங்​கியது. இதையொட்​டி, காலை கணபதி ஹோமம், கணபதி அபிஷேகம், வராகி அம்​மன் சிறப்பு அபிஷேகம் நடை​பெற்​றது. பின்​னர், அம்​மனுக்கு இனிப்பு அலங்​காரம் செய்​யப்​பட்​டது. மாலை​யில் பரத​நாட்​டிய இசை நிகழ்ச்சி நடை​பெற்​றது.இந்​நிகழ்​வில், ஏராள​மானோர் கலந்​து​கொண்​டு, வராகி அம்​மனை தரிசனம் செய்​தனர்.

இதைத் தொடர்ந்​து, ஜூலை 23-ம் தேதி வரை தின​மும் அம்​மன் பல்​வேறு அலங்​காரங்​களில் அருள் பாலிக்க உள்​ளார். விழா நாட்​களில் தின​மும் காலை 8 மணிமுதல் 10 மணி வரை வராகி ஹோமம், காலை 10 மணி முதல் 11 மணி வரை சிறப்பு அபிஷேகம், மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்​காரம், மாலை 6.30 மணிக்கு இசை நிகழ்ச்​சிகள் நடை​பெறுகின்​றன.

விழா​வின் நிறைவு நாளான ஜூலை 23-ம் தேதி தென்னக பண்​பாட்டு மையம் சார்​பில் நாகசுரம், கரகாட்​டம், ஒயி​லாட்​டம், செண்டை மேளம், வாணவேடிக்கை ஆகிய​வற்​றுடன் நான்கு ராஜவீ​தி​களில் வராகி அம்​மன் வீதி​யுலா நடை​பெறுகிறது. விழா ஏற்​பாடு​களை அரண்​மனை தேவஸ்​தான பணி​யாளர்​கள் செய்து வருகின்​றனர்​.