பொள்ளாச்சி, பி.ஏ.பி, அலுவலகத்தில் போராட்டம் நடந்து வருவது சம்பந்தமாக தமிழக நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள், அது சமயம் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர், ஈஸ்வர சாமி, மற்றும் பொள்ளாச்சி, எம். எல்.ஏ, நித்தியானந்தன், அவர்களும் கலந்து கொண்டார்கள். பேச்சுவார்த்தையில்
நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
உப்பாறு ஆணைக்கு தண்ணீர் திறக்கும் திட்டம் கைவிடப்பட்டது, எனவும், பி ஏ பி, வாய்க்கால் கடைமடை வரை கால்வாய் தூர்வார ஒதுக்கப்பட்ட நிதி நீர்வளத் துறைக்கு வந்துவிட்டது, மேலும் சட்டமன்றத் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் ஆணையத்திடம் தடை இல்லா சான்று பெற்று அரசாணை வெளியிடப்படும், அதன் பிறகு குறுகிய கால டெண்டர் வைக்கப்பட்டு கால்வாய்களை தூர் வாரும் பணி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது, மேற்கண்ட கோரிக்கைகளை விவசாயி இடம் தெரிவித்தார்கள், இதை ஏற்றுக் கொண்ட விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றார்கள்.
















