நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என டெல்லியில் இளைஞர்கள் போராடி வருகின்றனர். அதன்படி அவர்களுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையிலும் இளைஞர்கள் போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவல்களின் அடிப்படையில் நேற்று சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள இணைப்பு சாலைகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதன்படி அனைத்து இணைப்பு சாலைகளிலும் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் கடற்கரை பகுதிக்கு உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றயை தினம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள இணைப்பு சாலைகளில் பொதுமக்கள் வழக்கம் போல் நடைபயிற்சி மேற்கொண்டனர். நேற்று போல இன்றும் காலை 10 மணி பிறகு கடற்கரை பகுதிக்கு செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது என காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மெரினா கடற்கரை இணைப்பு சாலைகளில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

நேற்றைய தினம் போல் இன்றும் காலை 10 மணிக்கு பிறகாக சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள இணைப்பு சாலைகள் மூடப்படும் என அறிவித்த நிலையில் எந்த நுழைவாயில்களும் மூடாமல் அனைத்து நுழைவாயில்களும் திறக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மெரினா கடற்கரை பகுதிகளில் உள்ள இணைப்பு சாலைகளில் காவலர்கள் ஆங்காங்கே பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி டெல்லியில் இளைஞர்கள் போராடி வரும் நிலையில் சென்னை மெரினா கடற்கரையிலும் மாணவர்கள் போராட்டம் மேற்கொள்ளவார்கள் என்பதால் நேற்று மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்று மெரினா கடற்கரை பகுதிகளில் வழக்கமாக பொதுமக்களும் வாகனங்களும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here