ருசக்கர வாக​னத்தை திருடி அதில் சென்று திருட்​டில் ஈடு​பட்ட இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர். புழல் ஆசிரியர் காலனியில் வசித்து வருபவர் சிதம்​பரம் (23). இவரது விலை உயர்ந்த பைக் கடந்த 19-ம் தேதி திருடு​போனது.

இது குறித்து புழல் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில் பைக் திருட்​டில் ஈடு​பட்​டது ஐயப்​பன்​தாங்​கல் தண்​டலம் பகு​தி​யைச் சேர்ந்த சூர்யா என்ற சூர்​யமூர்த்தி (19), செங்​குன்​றம் காந்தி நகரைச் சேர்ந்த மணி​கண்​டன் என்ற காரைக்​கால் மணி (20) என்​பது தெரிய​வந்​தது. இவர்​கள் இரு​வரை​யும் போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர்.

விசா​ரணை​யில் இரு​வரும் திருடிய வாக​னத்​தில் சென்று மேலும் சில இருசக்கர வாக​னங்​களை திருடியதோடு, புழல் சக்​திவேல் நகரில் உள்ள கோயில் உண்​டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்​றது தெரிய​வந்​தது. மேலும், நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் சூர்​யமூர்த்தி மீது 20 திருட்டு வழக்​கு​களும், மணி​கண்​டன் மீது 13 திருட்டு வழக்​கு​களும் ஏற்கெனவே பல்வேறு காவல் நிலையங்களில் இருப்பது தெரிய​வந்​தது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here