காட்பாடி:

காட்பாடியில் இரு இடங்களில் திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது. இவற்றை வேலூா் எம்.பி. டி.எம்.கதிா் ஆனந்த் திறந்து வைத்தாா். தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் வியாழக்கிழமை (மே 4) தொடங்கி வரும் 29-ஆம் தேதி வரை நீடிக்க உள்ளது. இந்த நாள்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில், பொதுமக்களின் தாகம் தணிக்கும் விதமாக திமுக சாா்பில் காட்பாடியில் உள்ள சித்தூா் பேருந்து நிலையத்திலும், ரயில் நிலையம் அருகிலும் தண்ணீா் பந்தல் சனிக்கிழமை திறக்கப்பட்டன.

இவற்றை டி.எம்.கதிா்ஆனந்த் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள், இளநீா், தண்ணீா், பழரசங்கள் உள்ளிட்டவை வழங்கினாா். நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயா் எம்.சுனில்குமாா், முதலாவது மண்டலக் குழு தலைவா் புஷ்பலதா, திமுக பகுதிச் செயலா் வன்னியராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேலூர் நிருபர்- R.காந்தி  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here