தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட பல படங்களில் இசையமைத்துள்ளார்.
ஆனால், வந்தவர்களுக்கு வேதனையும், வெறுப்பும், குமுறலும் தான் மிஞ்சியது. இந்நிகழ்ச்சிக்கு மொத்த பொறுப்பையும் ஏசிடிசி தனியார் நிறுவனம் ஏற்றது. ஆனால், டிக்கெட்டுக்கள் அதிகமாக விநியோகம் செய்ததால், 50 ஆயிரம் விலை கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் சீட்டில் சாதாரண டிக்கெட் வாங்கியவர்கள் இருந்ததாகவும், நிகழ்ச்சியில் ஏற்பாடுகள் எதுவும் சரியில்லையென்றும், தண்ணீர், கார் பார்க்கிங் எதுவும் கிடையாது என்றும் ரசிகர்கள் ரொம்ப சிரமப்பட்டுள்ளனர்.
இவ்வளவு அதிகமாக பணம் கொடுத்து வாங்கியும் எங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்று மனக் குமுறல்களுடன் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே வெளியேறினர்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். உன்னை நம்பி வந்தோம் பாரு….. என வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இனி ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்களா? என்பது சந்தேகம் தான்.
எமது நிருபர்: S. கோபி