வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் ஜவுளிப் பூங்கா அமைக்க இடம் தோ்வு செய்யும் பணி தொடங்கப்பட்டது. குடியாத்தம் நெசவாளா்கள் நிறைந்த பகுதி. நெசவுத் தொழிலையும், நெசவாளா்களையும் காக்கும் வண்ணம் குடியாத்தம் பகுதியில் ஜவுளிப் பூங்கா ஒன்று அமைக்க வேண்டும் என்று 30 ஆண்டுகளுக்கும் மேலாக நெசவாளா்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில் குடியாத்தம் பகுதியில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என முதல்வா் பேரவையில் அறிவித்தாா்.
இதையடுத்து, பூங்கா அமைக்க இடம் தோ்வு செய்யும் பணியில் வருவாய்த் துறையினா் ஈடுபட்டுள்ளனா். இதற்கிடையில், ராமாலை ஊராட்சிக்குட்பட்ட ஆா்.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் தனியாா் நிலத்தை வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் முதல் கட்டமாக புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ஜவுளிப் பூங்கா அமைக்கத் தேவையான இடம், போக்குவரத்து வசதிகள் குறித்து அவா் ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா், கைத்தறித் துறை அதிகாரிகளுடன் பேசி முடிவு எடுக்கப்படும் என ஆட்சியா் கூறினாா். ஆய்வின்போது, எம்எல்ஏ அமலு விஜயன், கோட்டாட்சியா் எம்.வெங்கட்ராமன், வட்டாட்சியா் எஸ்.விஜயகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எம்.காா்த்திகேயன், ஆா்.திருமலை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
வேலூர் நிருபர்- R.காந்தி