சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை உறுதிப்படுத்தும் டீசரை சாம்சங் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு உள்ளது.

புதிய கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி மாடல் 6 ஜிபி + 128 ஜிபி, 8 ஜிபி + 128 ஜிபி மெமரி என இரு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. புது ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

எனினும், இந்த மாடல் செப்டம்பர் 3 ஆம் தேதி அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.அம்சங்களை பொறுத்தவரை கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யு.ஐ. 3.1, 64 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி மேக்ரோ லென்ஸ், 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here